“அதுக்கு மாமா என்ன பண்ண முடியும்? உங்க பொண்ணுங்களை செட்டில் பண்ண நீங்களும் உங்க வீட்டுக்காரரும் தானே உழைக்கனும். அடுத்தவங்க முதுகில சவாரி ஏற முயற்சி பண்ணினா நல்லாவா இருக்கும்?…” என்றவன்,
“பல்லவன் இந்த இடத்துல நீங்களா இருக்க போய் அமைதியா இருக்கீங்க. நானா இருந்தா மனவுளைச்சலுக்கு ஆளாக்கறாங்கன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருப்பேன்…” என சொல்லி சந்திராவை பார்த்தான்.
“போலீஸா?…” சந்திராவிற்கு உயிரே போய்விட்டது.
விட்டால் இவனே தன்னை உள்ளே தள்ளிவிட யோசனை சொல்லுவான் போல என பார்த்தவர்,
“பெரிய இடம் பெரிய மனசு இருக்கும்ன்னு நினைச்சு வந்தேன்ல. எனக்கு தேவை தான்…”
“இன்னுமா தேவைன்னு கேட்கறீங்க?…” அதிரன் சிரிக்க,
“இது கூட சொத்த பத்தி தான் போல? இந்தா போடறேன் போலீஸ்க்கு போனை…” மோனி மொபைலை எடுக்க,
“இந்தா செத்த இருடி…” என பதறி போனார் சந்திரா.
“என் மாமனாரும், மாமியாரும் கேஸ் குடுக்க மாட்டாங்க. நான் குடுப்பேன். அதுவும் இப்ப என் அண்ணனுக்கு கமிஷனர் எல்லாம் தெரியும்…” மோனிகா அதிரனை பார்க்க,
“அவங்க என்ன சொன்னாலும் நாம என்னன்னு நமக்கு தெரியுமே? பேசறவங்க இதுக்குத்தான் பேசறாங்கன்னு தெரியும் போது அசிங்கம்ன்னு ஏன் நினைக்கறீங்க? இப்ப சந்திராம்மா அவங்களோட குணம் இதுன்னு காமிச்சுட்டு போறாங்க. அது அவங்களுக்கு தான் அசிங்கம்…” என்றவன்,
“ஒரு குடும்பத்துக்குள்ள இத்தனை நன்றி தேவை இல்லை…” என்றான்.
“ஆனாலும் அண்ணா பெரிய நடிகனான உங்கட்டையே எப்படி ஒரு பெர்பாமென்ஸ் போட்டாங்க பாருங்களேன்…” மோனிகா நினைத்து நினைத்து சிரிக்க,
“மோனி சொன்னா சந்திராம்மாவுக்கு என் மூவில ஒரு ரோல் குடுத்திருவோமே?…” என்றான் அதிரன் சிரித்தபடி.
“உங்களுக்கு நேரம் சரியில்லைண்ணா…” மோனிகா கிண்டல் பேசினாள்.
மலர் மனது நிறைந்து போனது. பரமசிவம் பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல இப்போது முழுதாய் பூரித்து போனார் அவர்.
என் மகள் வாழ்க்கை எப்போதுமே சந்தோஷமாக இருக்கும் என்னும் நம்பிக்கை அசைக்கமுடியாமல் வந்துவிட்டது பெற்றவர்கள் மனதில்.
தேவராஜும், சுபத்ராவும் வந்துவிட அதன் பின்னர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள் அமுதினியன் குடும்பத்தினர்.
“மேகா வர வரைக்குமாவது இருக்கலாமே?…” என அதிரன் சொல்ல,
“எங்களோட சந்தோஷத்துக்கு இப்ப அளவே இல்லை மாப்பிள்ளை. இதே நிறைஞ்ச மனசோட கிளம்பறோம். இன்னொரு நாள் வரோம்…” என்று கிளம்பினார்கள்.
அவர்கள் சென்றதும் வசந்த்திற்கு அழைத்த அதிரன் இன்னும் எவ்வளவு நேரம் என கேட்டவன் தேவரஜிடமும், சுபத்ராவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
மேகா பரிட்சை முடிந்து வெளியே வர அதிரன் காத்திருந்தான். தான் வேண்டாம் என சொல்லியும் வந்திருகிறானே என்று பார்த்துக்கொண்டே வர பின்னிருக்கையில் இருந்தான் அதிரன்.
ட்ரைவரும், வசந்த்தும் முன்னால் இருக்க ஒன்றும் பேச முடியவில்லை அதிரனிடம்.
போதாததற்கு அவன் காதில் ஹெட்போனை போட்டிருக்க அவள் வந்ததும் கை காண்பித்து புன்னகைத்தவன் ஒருபக்க காதில் இருந்த போனை லேசாய் விலக்கி,
“எக்ஸாம் எப்படி பண்ணியிருக்க மேகா?…” என்றான்.
“நல்லா எழுதியிருக்கேன்…” என சொல்லவும் மீண்டும் ஹெட்போனில் கலந்து போனான்.
காதில் கேட்ட இசைக்கேற்ப அவனின் இதழ்கள் முணுமுணுக்க இப்போதைக்கு பேசவும் முடியாமல் போனது.
பரீட்சை முடியவும் தான் களைப்பை உணர்ந்தவள் கண்ணை மூடிக்கொள்ள உறக்கம் தழுவியது.
கார் வந்து நின்றதும் தெரியவில்லை. எங்கே இருக்கிறோம் என்றும் தெரியவில்லை.
திடீரென்று உப்புக்காற்று முகத்தில் அறைய விழி திறந்தவள் கார் கண்ணாடி இறக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிரன் எங்கே என தேடினாள்.
அவள் பார்க்கும் முன் காரிலிருந்து இறங்கி இருந்தவன் அந்த கதவை அடைத்துவிட்டு மறுபக்கம் காரை சுற்றிக்கொண்டு வந்தான்.
“இறங்கு மேகா…” என சொல்ல,
“எங்க வந்திருக்கோம் அதி?…” என்றாள் இறங்காமல்.
புதிதாய் இருந்தது அந்த இடம். கடற்கரையை ஒட்டிய பங்களா. கேட்டில் இருந்து சுற்றிலும் பூச்செடிகள் பூத்துக்குலுங்க அதற்கு நடுவே அழகாய் ஒரு சிறிய மாளிகை.
“ஹ்ம்ம், சாதிக்கிறீங்க நீங்க?…” என்று இறங்கிக்கொண்டாள்.
“இடம் எப்படி இருக்கு?…” என கேட்க மதிய வெயில் என்றாலும் கூட மிதமான வெப்பமும், காற்றில் கலந்த உப்பும் கூட புத்துணர்ச்சியை தந்தது.
அந்த வெப்பத்தையும் உணரமுடியாத விதத்தில் அவ்விடத்தில் அத்தனை குளுமை.
“அழகா இருக்கே. யார் வீடு?…”
“நம்மோடது தான்…” என்று சொல்லி உள்ளே நடக்க மேகா நின்றுவிட்டாள்.
“உன் பர்த்டே அன்னைக்கு தான் இங்க உன்னை அழைச்சுட்டு வரனும்னு தான் இதுவரைக்கும் சொல்லாம இருந்தேன் மேகா…” என்று சொல்லி உள்ளே அழைத்து வர அங்கே வீடு அழகாய் அலங்காரத்துடன் இருந்தது.
“எப்படி இருக்குடா பொண்ணே?…” என்றான் அவற்றை காண்பித்து மேகாவிடம் கேட்க,
“மூச்சு முட்டுது அதி…” என்றாள் அவனிடத்தில்.
உடல்நிலை சரியில்லையோ என்று அதிரன் திகைத்து பரபரப்புடன் அவளை பார்க்க,
“இத்தனை அன்பை வைக்காதீங்க. என்னால சுமக்க முடியல…” என கண்கள் கலங்க அவனை அணைத்துக்கொள்ள அதிரன் ஒன்றும் பேசவில்லை.
ஆனால் அவன் மௌனத்தின் பின்னால் ஆயிரமாயிரம் ஆலாபனைகள் ஒளிந்திருந்தது.
தான் எல்லாவிதத்திலும் தன் காதலை காட்டிக்கொண்டிருக்க அவள் ஒரே நாளில் அவள் மனதிலிருக்கும் தன் மீதான நேசத்தை மொத்தமாய் இறக்கி இருந்தாளே அவனிடத்தில்.
“மேகா…” என சுதாரித்தவன்,
“வா கேக் கட் பண்ணலாம்…” என்று அவளை விலக்க பார்க்க,
“ம்ஹூம் எதுவும் வேண்டாம். வேண்டாம்…” என்றாள் அவனின் அணைப்பிலிருந்து விலகாமல்.
“ஹேய் என்னடா இது? அதுக்காக தானே ஏற்பாடு பண்ணேன்…”
“இது எதுவும் வேண்டாம்…”
“வேற என்ன வேணுமா?…” என்று லேசாய் அவளுடன் அசைந்தபடி கேட்டவன்,
“அதி…” என்றான் குறும்பாய்.
“சொல்லமாட்டேன்…” மேகா இன்னும் அவனின் நெஞ்சில் அழுத்தமாய் முகம் புதைத்து.
“சரி சொல்ல வேண்டாம். கேக் வேண்டாம். செலிபரேஷன்?…”
“அது அதியோட…”
“ஜஸ்ட் வாவ் மேகா…” என்றவன் சட்டென கைகளில் அவளை அள்ளிக்கொண்டான்.
“மெதுவா அதி…” அவன் கழுத்தை கைகளால் கோர்த்துக்கொண்டவள்,
“ஒன்னும் மறந்துட்டேன்…” வேகமாய் சொல்ல,
“என்னாச்சுடா?…”
“கொலுசை கழட்டனும்…” என்று சீரியஸான பாவனையில் சொல்ல,