உள்ளே அந்த ஹாலில் பேப்பரை படித்தபடி தேவராஜ் அமர்ந்திருக்க அவரருகே சென்றவன்,
“பிஃப்ட்டீன் மினிட்ஸ் ப்பா…” என கையை காண்பித்துவிட்டு தனதறைக்கு சென்றான்.
சொல்லியதை போல கால் மணி நேரத்தில் வந்தவன் சாப்பிட அமர சுபத்ராவும் வந்துவிட்டார்.
“ஜர்னி எல்லாம் ஓகே தானே?…”
“பர்பெக்ட் ப்பா…”
“ஹ்ம்ம்…” என்றவர் சுபத்ராவை பார்க்க அவர் இவனிடம் பேசவென்றே இருந்திருப்பது தெரிந்தது.
“சொல்லுங்க ம்மா…” என்றான் சாப்பிட்டபடி.
வேகமாய் உள்ளே சென்றவர் வரும் பொழுது பேப்பர் கட்டிங் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்து நீட்டினார்.
“யாருன்னு கேட்கறீங்களா?…” என்றதற்கு அவர் ‘ஆமாம்’ என தலையசைக்க,
“ஒரு பொண்ணு…” என்று சிரித்தான்.
இடுப்பில் கை வைத்து நின்று மகனை பார்த்து முறைக்க தேவராஜ் புன்னகையும் அதிகமாகியது.
“உங்களயும் சேர்த்து தான் என்னவோ சொல்ல நினைக்காங்க….” என்று அதி சொல்லவும் தேவராஜும் மனைவியிடம் கடிகாரத்தை காட்டினார்.
“நேரமாகிருச்சாம், போய் பாட போகனும்னு சொல்றார். பாருங்க ரெஸ்ட்டே இல்லை எனக்கு…” என சாப்பிட்டு முடித்தவன் கையை கழுவிவிட்டு தாயிடம் வந்தான்.
“இன்னைக்கு ரெண்டு சாங் முடிச்சு குடுக்கேன்னு ம்யூஸிக் டைரெக்டர் தேவராஜுக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன். சோ இப்போ போய் பாடிட்டு நாளைக்கு மார்னிங் வருவேனாம். நம்ம பேசுவோம். பை ம்மா…” என்று தாயின் கன்னத்தில் தட்டிவிட்டு அதிரன் கிளம்பிவிட்டான்.
‘என்ன இது?’ என கணவனை முறைத்தார் சுபத்ரா.
“நாளைக்கு பேசுவோம்ன்னு சொல்லியிருக்கான் தானே? பேசுவோம்…” என்று சொல்லி அவருமே சென்றுவிட்டார்.
எப்போதும் மகனை பற்றி வேறு செய்திகள் வரும். அவனின் படங்கள் சம்பந்தமானது, அதன் செய்திகள் இப்படித்தான்.
ஆனால் பெண்ணை கொண்டு வந்திருக்கும் முதல் செய்தி. தாயாய் அவரை பதட்டப்படுத்தியது.
அதிலும் யாரென்றே தெரியாத பெண். பார்க்க கவலையாக இருந்தது சுபத்ராவிற்கு.
காரில் தங்களின் ஸ்டுடியோவை நோக்கி சென்றுகொண்டிருந்தனர் தகப்பனும் மகனும்.
அதிரன் அன்றைய பாடல் குறித்த கம்போஸிங் ம்யூஸிக்கை ஹெட்போனில் கேட்டபடி அதன் வார்த்தைகளை ஹம் செய்து கொண்டே வந்தான்.
“அதி…” என்று தேவராஜ் தோளை தட்டியதும் தான் ம்யூசிக்கை அணைத்துவிட்டு அவரின் புறம் திரும்பினான்.
“ப்பா, என்ன பேசறீங்க? இதை விடுங்க. நாம சாங் கம்போஸிங் பத்தி பார்ப்போம். ஆமா இப்ப நான் முடிச்ச மூவியோட பேக்ரவுண்ட் ம்யூஸிக்ல என்னவோ சேஞ்ச் இருக்குன்னு சொன்னீங்களாம்?…”
இப்படி பேச்சை மாற்றிவிட்டாலும் மேகாவை பற்றிய பேச்சில் அதியின் முகத்தில் வந்து போன பாவனைகளில் தேவராஜிற்கு வருத்தமாக இருந்தது.
அவனாக எனக்கு பிடித்திருக்கிறது, பேசுங்கள் என்று சொல்லாமல் தான் தலையிட்டால் நிச்சயம் பொறுத்துக்கொள்ளமாட்டான்.
விதிவசம் தான் இந்த உறவின் பிணைப்பு போல என்று மனதில்லாமல் விட்டுவிட்டார்.
செய்தி வந்த அன்றே தன் மனைவி சொல்லியதை தான் இப்போதும் தனக்கும் சொல்லிக்கொண்டார்.
“அந்த பொண்ணு தான் அதிக்குன்னு ப்ராப்தம் இருந்தா எந்த சூழ்நிலையும் அவங்களை சேர்த்து வைக்கும். இப்ப இந்த மாதிரி அதி அந்த பொண்ணை பார்க்கனும்னு இருந்த மாதிரி…”
“இல்லைன்னா அதிக்கான வாழ்க்கை அது இல்லைன்னு நினைச்சுக்கோங்க. யாரோட வாழ்க்கையையும் யாரும் வாழ்ந்திட முடியாது. பார்க்கலாம்…” என சுபத்ரா சொல்லியது இப்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
ரெக்கார்டிங் தியேட்டர் வந்து சேர்ந்து பாடலுக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டு இருக்க தங்கள் படம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பின்னணி இசைக்காக உமேஷும் வந்திருந்தான் அங்கே.
ஒரு பாடலை பாடி முடித்து சற்றே களைப்புடன் ஓய்வுக்காக வந்து அதிரன் அமர்ந்திருந்தான். உமேஷ் துபாயில் பார்ட்டிக்கும் முன் பார்த்தது அதிரனை.
இப்போது உடலை தளர்த்திக்கொண்டு கால் நீட்டி கண்ணை மூடியபடி சோபாவில் சாய்ந்து இருந்தவனை நெருங்கி வந்தான்.
இதழ்களில் அப்படி ஒரு வஞ்சக சிரிப்பு. அவனை காயப்படுத்திவிட வேண்டும் முனைப்புடன் அவனெதிரே வந்தவன்,
“பரத், காபி…” என்று சத்தமாய் சொல்லியும் தன் குரல் கேட்டும் அதிரன் கண் விழிக்கவில்லை. ஆனால் உறங்கவில்லை என்பது நிச்சயம்.
‘எவ்வளவு திமிர், என் குரல் கேட்டும் எப்படி படுத்திருக்கான்?’ என கடுகடுவென்று அதிரனை பார்த்த உமேஷ் வரவழைத்துக்கொண்ட சிரிப்புடன்,
“ஹாய் அதிரன்…” என்று அழைத்தான்.
அதன் பின்னர் தான் அதிரனும் கண்ணை திறந்து பார்த்து, நேராய் அமர்ந்து புன்னகைத்தான்.
“ஹாய் உமேஷ்…” என சாதாரணமாக இருக்க,
“நான் வந்ததை கூட கவனிக்கலை போல?…” என்றான்.
“நீங்க பரத்தை தானே கூப்பிட்டீங்க? என்னை இல்லையே?…” அதிரன் கூறவும் உமேஷ் முகம் மாறியது. உடனே சுதாரித்து,
“மீடியால என்னவோ டாக் ஓடுது?…” என நேரடியாக கேட்க அதிரன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“மீடியான்னா நிறைய விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். அதுக்கென்ன?…”
“ஆனா இப்ப ஹாட் டாப்பிக்கே உங்களை யாரோ ஒரு பொண்ணை வச்சு பேசறது தானே?…”
“அதான் நீங்களே சொல்லிட்டேங்களே? பேசறாங்கன்னு. ஒவ்வொருத்தர் பேசறதுக்கு இதுவரை காது குடுத்தோமா? இல்லையே?…”
“நான் ஏன் இத்தனை கேட்கறேன்னு உங்களுக்கு புரியுதா? இல்லை…” என்ற உமேஷ்,
“நான் நேரா விஷயத்துக்கு வரேன். என்னோட அடுத்த மூவிக்கு அந்த பொண்ணை புக் பண்ணலாம்ன்னு இருக்கேன்…” என்றான் குறுகுறுப்பாய் பார்த்துக்கொண்டே.
“ஆமா, விஷ் பன்றதுல என்ன இருக்கு? ஐ மீன் விஷ் மட்டும் தான் பண்ணியிருக்கேன். உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனா அது வெற்றி பெற்றா பார்க்கலாம்…” என்றான் அதே தொனியில் புன்னகையுடன்.
“என்னால முடியும், பார்க்கறீங்களா?…” என்றான் உமேஷ் இன்னும் சூடாகி.
“நான் சவால் எல்லாம் விடமாட்டேன். எனக்கு பழக்கமும் இல்லை. ஆனா என்னை மீறி இந்த விஷயம் நடக்கவே நடக்காதுன்னு உறுதியா என்னால சொல்ல முடியும்…” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
அதற்குள் ஹர்ஷத் மூலமாக தேவராஜின் காதிற்கு விஷயம் போக அவர் வந்துவிட்டார் அங்கே.
“என்ன நடக்குது இங்க?…” என்று கேட்க,
“நத்திங் ப்பா…” என்றான் அதிரன் இலகுவாக.
“நோ ஸார், உங்க சன் என்னை ப்ரவோக் பன்ற மாதிரி பேசறார்…” என உமேஷ் சொல்ல அதனை பேரும் திகைப்புடன் தான் பார்த்திருந்தார்கள்.