“நான் அந்த வைரல் பொண்ணை ஹ்ம்ம், பேர்…” என யோசித்து,
“ஆங், மேகவர்ணா அந்த பொண்ணை என்னோட நெக்ஸ்ட் ப்லிம்க்கு புக் பண்ண போறேன்னு சொன்னேன்…” என்றதும் தேவராஜ் மகனை பார்க்க அவனின் அர்த்த புன்னகையின் காரணம் விளங்கியது.
“அதை நீங்க அதிரனுக்கு தெரிவிக்கனும்னு அவசியம் என்ன உமேஷ்?…” என்றார் தேவராஜ்.
இந்த கேள்விக்கு உமேஷ் தான் திணற வேண்டியதாக போனது. தந்தை, மகன் இருவரையும் செய்வதறியாமல் நின்று பார்க்க,
“உங்க மூவிக்கான பேக்ரவுண்ட் ம்யூஸிக் நாளைக்கு தான் முடியும். நீங்க நாளைக்கு வரலாம்…” என்ற தேவராஜ்,
“இப்பதான் வளர்ந்துட்டு வரீங்க, வெஞ்சன்ஸ மனசுல வச்சு உங்களோட கேரியர்ல கேர்லஸா இருக்காதீங்க. ஜஸ்ட் ஒரு வெல்விஷரா கூட இல்லை. உங்களுக்கு ஒரு படம் பண்ணி குடுத்த அந்த ஒரு காரணத்துக்கா சொல்றேன். கிளம்புங்க…” என்றார்.
அவமானத்துடன் அங்கிருந்து அவன் சென்றதும் மீண்டும் முதலில் அமர்ந்ததை போலவே அதிரன் கண்ணை மூடிக்கொள்ள ஹர்ஷத்தை பார்த்த தேவராஜ் கண்ணை காட்ட அங்கிருந்தவர்கள் கிளம்பவும் மகனருகே அமர்ந்தார்.
“அதி…”
“உமேஷால மேகாவை நெருங்க முடியாது ப்பா. பார்த்துக்கறேன்…”
“என்ன பார்த்துக்கறேன். இதுவரைக்கும் என்ன பார்த்த? அன்னைக்கு இந்த வீடியோ?…”
“நான் முயற்சி பண்ணலைன்னு நினைக்கறீங்களாப்ப?…” என்றான் கண்ணை திறந்து நிமிர்ந்தமர்ந்து.
“அதி…”
“அப்பவே சைபர் கிரைம்க்கு பேசினேன். முடிஞ்சளவு ட்ரை பண்ணினேன். அதுக்குள்ளே அவ்வளோ பாஸ்ட்டா எல்லாமே பரவிருச்சு. இதுல என்னோட தவறு தான் இதுல மேஜர். அந்த நிமிஷம் என் கான்ஷியஸ்ல நான் இல்லை…”
“என்ன நடந்ததுன்னு யோசிக்கவே எனக்கு கொஞ்ச நேரம் ஆகிடுச்சு. அதுக்கப்பறம் தான் நான் சுதாரிச்சு இதை கிளியர் பண்ண வைக்கிறதுக்குள்ள நம்ம மக்கள்…” என்றவன்,
“இந்த மாதிரி விஷயம்ன்னா ஒரு நிமிஷம் கூட யாரும் யோசிக்கிறதில்லை. யாரோ தானே? அவங்களுக்கு இது ஒரு என்டர்டைன்மென்ட். அந்த பொழுது போக்கு இன்னொருத்தவங்களுக்கு வாழ்க்கைன்னு நினைக்காம போயிடறாங்க…”
“அதி ரிலாக்ஸ்…”
“நான் ரிலாக்ஸா தான் ப்பா இருக்கேன். எமோஷனல் ஆகி அன்னைக்கு நீங்க சொன்னது மாதிரி மறுப்பா செய்தி குடுத்திருந்தா இதுவரைக்கும் அமைதியா இருந்தவர் ஏன் இப்ப உடனே மறுப்பு செய்தி குடுக்காங்கன்னு அதை வச்சு திரிப்பாங்க…”
“புரியுது அதி, லீவ் இட். இப்ப கொஞ்சம் அடங்கி இருக்கே…”
“எங்க? இப்படியான டைரக்ட்டர்ஸ் எல்லாம் எத்தனை பேர் அந்த பொண்ணுக்கு இடைஞ்சல் குடுப்பாங்க?…” என கவலையுடன் பேசினான்.
“அதி…”
“ப்பா, பி.எஸ்க்கு பேசனும்…” என்றான்.
“இப்போ ஏன்? பேசனும். அவ்வளோ தான். அவரே வரார். இங்க உமேஷ் பேசிட்டிருக்கும் போது தான் எனக்கு அவர் பி.ஏ பேசினான்…”
“ஓகே, வந்தா எனக்கு கால் பண்ணுங்க…” என்றவன் மீண்டும் சாய்ந்துகொள்ள எழுந்துவிட்டார் பெருமூச்சுடன்.
மகன் அடுத்த முடிவு தெரிந்துவிட்டது. உமேஷை நினைத்து ஒருபக்கம் கவலையும், ஒருபக்கம் தேவையா இவனுக்கு என்றும் இருந்தது.
அரைமணி நேரத்தில் தயாரிப்பாளர் வந்ததும் அவரே அதிரனை தேடி வந்துவிட்டார் அங்கே.
துபாய் பயணத்தின் பேச்சுக்களை எல்லாம் பேசி முடித்த பின்னர் நேரடியாக விஷயத்துக்கு வந்தான் அதிரன்.
“நெக்ஸ்ட் மூவியும் என்னை ஹீரோவா கேட்டிருந்தீங்க அங்கிள்…”
“எஸ் மை பாய்…”
“ஆனா அதுக்கு பாஸிபிள் இல்லை…” என்றதும் அவர் முகம் பெரிதாய் அதிர்ந்துவிடவில்லை.
பரத் மூலம் அங்கே நடந்தவற்றை கேட்டு தெரிந்திருந்தார் பி.எஸ். அதனால் அதிரனை அதிராமல் பார்க்க முடிந்தது.
அவருக்குமே உமேஷை வைத்து இயக்குவதில் விருப்பமில்லை. ஆனால் திறமை என்று பார்க்கும் பொழுது இயக்கி தரட்டும் என ஒருபக்கம் நினைத்தாலும், பரத்தையும் மனதில் வைத்திருந்தார்.
குடைச்சலுடன் உமேஷை வைத்து ஒவ்வொன்றிற்கும் பிரச்சனையுடன் இருப்பதா என யோசித்துக்கொண்டு தான் பரத்திடமும் பேசலாம், அதற்கு முன் அதிரனை பார்க்கலாம் என வந்துகொண்டிருந்தார்.
வரும் வழியில் பரத்தை அழைக்க அவன் அங்கே தான் உமேஷுடன் இருப்பதாகவும், நடந்த விஷயத்தையும் சொல்ல ஒரு முடிவுடன் தான் வந்தார்.
“அதிரன், இந்த மூவியோட ஸ்டோரி உமேஷோடது இல்லை…”
“சோ வாட் அங்கிள். எனக்கு கம்பர்டபிள் இல்லை. யாரையும் நீக்குங்கன்னு சொல்லாய். நான் விலகிக்கறேன்…” என்றான் அப்போதும் நிதானமான முகத்தில் சிறு முறுவலுடன்.
“ரொம்ப பிரமாதமான கதை அதிரன்…”
“என்னைவிட திறமையான நடிகர்கள் இருக்காங்க அங்கிள். வேற சாய்ஸ் பார்க்கலாம். உங்க பிரடக்ஷன்ல தொடர்ந்து பண்ணிட்டேன். ஒரு கேப் எடுத்துக்கறேன்?…” அழுத்தமாக அவன் சொல்ல,
“இயக்குனர் உமேஷா இருந்தா நீ இதெல்லாம் யோசிக்கலாம். இயக்குனர் உமேஷ் இல்லை. பரத்…” என்றதும் புருவம் உயர்த்தினான்.
“எனக்குமே உமேஷ் சரிவரமாட்டான்னு தோணுது…”
“இதுதான் சரியில்லை. நான் எனக்கு ஒத்துவராதுன்னு தான் சொன்னேன். மாத்தினா தான் நடிப்பேன்னு சொல்லலையே?…” அதிருப்தியுடன் அதிரன் பேச,
“சியரப் அதிரன். நான் ஏற்கனவே யோசிச்சது தான். ஆனா ரெண்டு முடிவா இருந்தேன். நான் ஒன்னும் சேவகம் செய்யலை. போட்ட பணத்தை பல மடங்கா எடுக்கனும். ஒரு பிஸ்னஸ் இது….” என்றவர்,
“ஆனாலும் கரைச்சல் இல்லாமல் இதை நான் கையாளனுமே? படம் பண்ணும் போது பணத்தட்டுப்பாடு வேற. ஆனா மெண்டல் பிரஷர் வேற. நிம்மதியா வேலை பார்க்கனும்…”
ஒருவழியாய் அதிரனை சம்மதிக்க வைத்துவிட்டே அங்கிருந்து அவர் கிளம்பினார்.
எதையும் யோசிக்காமல் மீண்டும் அடுத்த பாடலுக்கான ஒத்திகையில் இருந்தவன் மறுநாள் மாலையாகிவிட்டது அதனை முடிக்க.
எப்போதும் இல்லாமல் அத்தனை டேக் வாங்கியிருந்தான் அதிரன். தேவராஜிற்கு மகனின் குரலில் இருந்த உணர்வுகள் போதவில்லை.
தாளங்கள் தடுமாற, லயம் சிதறியது. இப்படி எப்போதும் இல்லாதவனின் மனதின் தள்ளாட்டம் அவனை தடுமாற வைக்க,
“அதி நீ ரெஸ்ட் எடு. நாளைக்கு வேணும்னா பார்த்துக்கலாம்…” என தேவராஜ் சொல்லவும் சுரீர் என்றது.
“இல்லப்பா, டூ மினிட்ஸ்…” என சொல்லி இடுப்பில் கைவைத்தபடி அண்ணார்ந்து பார்த்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.
‘என்னை ரொம்ப தேட வைக்கிற மேகா. ஐ கான்ட்’ என்று இமைமூடி அவனின் மேகத்தை மனதால் விரட்ட முயன்றான்.
நேரில் கூட பார்த்திராதவளின் நினைவுகள் அவனின் உள்ளத்தின் ஓரிடத்தில் ஒதுங்க முடியாமல் அங்குமிங்கும் தழும்பி மோதியது மனச்சுவர்களின் எல்லா பக்கங்களிலும்.
‘என்னை என்ன பன்ற மேகா?’ என முகத்தை அழுத்தமாய் துடைத்தவனின் கைகள் தலை முடியை பிடித்துக்கொண்டது இறுக்கத்துடன்.
“அதி…” தந்தையின் அழைப்பில் விழி திறந்தவன் ஒரு நிலைக்கு வந்துவிட்டதாக பார்த்தான்.
“ஓகே, ரெடி…” என்று ஹெட்போனை மாட்டியவன் பாடலில் கலந்தான்.
இந்த முறை எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே அமைந்துவிட்டது. பாடி முடித்ததும் வந்து அங்கிருந்த ஓய்வறையில் படுத்துவிட்டான்.
கண்களை மூடினாலும் கூட அமைதியகாமல் அவனை வெகுவாய் நாடியது அவனிதயம்.
“ஓஹ் காட்…” என்று கவிழ்ந்து படுத்தான்.
அவனின் மொபைலில் அழைப்பு வர எடுத்து பார்த்தவன் யோசனையுடன் அதனை அட்டன் செய்தான்.
அதில் மறுபக்கம் சொன்ன செய்தியில் உடல் இறுக்கம் பெற்று மீண்டாலும் எங்கோ ஒரு மூலையில் சந்தோஷ சாரலட்டித்ததை தவிர்க்க முடியவில்லை.
‘வர வர வேற மாதிரி ஆகிட்டு வரேன் நான்’ என நினைத்தபடி பேசி முடித்து தன் தலையில் தட்டிகொண்டான் அதிரன்.
———————————————-
வீட்டில் யாருமில்லை மேகாவையும் மோனிகாவையும் தவிர்த்து. அறையில் மேகா உறங்கிக்கொண்டிருப்பதாக மோனிகா மகனோடு ஹாலில் அமர்ந்திருந்தாள்.
குடும்பம் உற்சாகமிழந்து போயிருந்தது. திருமணத்திற்கு சம்மதிக்கவே முடியாதென மறுத்துவிட்டாள் மேகா.
இதோ பிரதாப் வீட்டில் இருந்து சீராக தந்திருந்த நகை, புடவை இத்யாதிகளை எடுத்துக்கொண்டு கொடுக்க சென்றிருந்தார்கள் அமுதனும், மலரும். அவர்களுடன் பல்லவனும்.
மனதெல்லாம் பாரத்தை சுமந்து கொண்டு அந்த குடும்பம் நடமாடவே தடுமாறியது.
மறுநாள் வந்து பேசுகிறேன் என்றவர்கள் வந்து பேசிவிட்டு சென்ற பின்னர் முற்றிலும் இந்த திருமணத்தை வெறுத்தாள் மேகா.
“நீங்க சொன்னீங்கன்னு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா இப்பவும் இதுக்கு மேலையும் அந்த குடும்பத்துக்கு தான் என்னை அனுப்புவீங்கன்னா அதுக்கு மேல உங்க இஷ்டம்…” என்றவள்,
“ஆனா அங்க நான் நித்தமும் நரகத்தை தான் அனுபவிப்பேன். ஞாபகம் வச்சுகோங்க…” என்று சொல்லிய பின்னர் மகளின் கண்ணீரை எப்படி பார்க்க விரும்புவார்கள் பெற்றோர்.
வீட்டிற்கு பேச வருகிறேன் என்று வந்தவர்களோ வெகு நாசூக்காக மனதில் கத்தியேற்றி சென்றார்கள்.