துப்பட்டாவை எடுத்து போட்டுக்கொண்டவள் சிறு ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொண்டாள்.
“மொபைல் வரு…”
“சிம் இல்லை அண்ணி. இங்க இருக்கட்டும். வேற வாங்கிட்டு போட்டுக்கலாம். நான் வச்சு எண்ண செய்ய போறேன்?…” என எடுக்கவில்லை.
அவளை கவனித்தபடி இருந்த மோனிகாவிற்கு வருத்தமும் ஆற்றாமையும் கூடியது.
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் வரு…”
“சொல்லுங்க அண்ணி. ஏன் யோசிக்கறீங்க?…”
“பிரதாப் மேல எந்த தப்பு இல்லை. நீ இப்படி அவாய்ட் பன்றதுக்கு பேசி புரிய வைக்கலாம். அவரும் பாவம்…” என்றதுமே மேகாவின் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை.
“இதுல நான் யாரையுமே ப்ளேம் பண்ணலை அண்ணி. அதே நேரம் யாரையும் புரிய வைக்கிற நிலமையில நான் இல்லை…” என்றாள்.
பிரதாப்பின் பேச்சுக்கள் சற்றே எல்லை கடந்து இருந்தது. அத்தனை உரிமை. அத்தனை கெஞ்சலோடு சில வார்த்தைகள். மோனிகாவிடம் சொல்ல முடியவில்லை இதனை.
தான் பேசினால் தன்னிடமும் அவன் அப்படித்தான் பேச கூடும். அது இன்னுமே அவனின் மரியாதையை கீழ் இறக்கும்.
தானும் மரியாதை இன்றி பேச வேண்டியதாகிவிட்டால்? இல்லை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
சொன்னால் புரிய கூடிய நிலைமையிலும் அவன் இல்லை. பிரதாப்பின் தந்தை மோதிரத்தை கழற்றி தந்த பொழுது பிரதாப் தன்னை பார்த்த பார்வையில் இருந்த தீவிரம்?
எந்தவகையிலும் அவனை தன்னை அணுகவிடக்கூடாது என்பதில் இவள் தீவிரமாகி போனாள்.
“வரு?…” மோனியின் அழைப்பில்,
“அண்ணி, போலாம். போலாம்…”
“என்னாச்சு? திடீர்ன்னு சைலன்ட் ஆகிட்ட?…”
“இல்லைண்ணி, அந்த பேச்சு வேண்டாம். முடிஞ்சது அப்படியே போகட்டும்….” என்றவள்,
“நானும் பாவம் தானே அண்ணி? என்ன பண்ணேன்? இத்தனை அனுபவிக்கனும்னு எனக்கு ஏன் இருக்கு? சொல்லுங்க…”
முகமெல்லாம் கலங்கியிருந்தது இப்போது. மனதின் சஞ்சலம் முகத்தில் தெரிந்தது. அவளை மோனிகா அணைத்துக்கொண்டாள்.
“சரி, சரி. நான் ஒருத்தி ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன். ஓகே, நீ ஒன்னும் கவலைப்படாத…” என்ற மோனிகா,
“ரெண்டுநாள் படிக்க வேண்டாம். தூங்கி ரெஸ்ட் எடு….” என்று கட்டிலில் இருந்த புத்தகத்தை எடுத்து செல்பில் வைத்துவிட்டு,
“இன்னும் நாலு மாசம் இருக்கே எக்ஸாம்க்கு. இந்த தடவை கண்டிப்பா எல்லா பேப்பர்ஸும் கிளியர் பண்ணுவ நீ, பாரேன்…” என்றாள் உற்சாகமாய்.
மனதில் மீண்டும் அதிரன். ‘குட்லக். எக்ஸாம்ல வின் பண்ணவும், உன்னோட ஆசைல வின் பண்ணவும்’ அவனின் குரல் மனதில் எதிரொலிக்க மோனிகாவின் எதிரில் நிதானம் இழப்பதை போல உணர்ந்தாள் மேகா.
அவனை நினைக்க கூடாதென்று நினைத்து சில மணி நேரங்களில் இத்தனைமுறை ஏன் அவன் வந்து போகிறான் என் எண்ணங்களின் வழியில் என திண்டாடி போனாள்.
“என்ன வரு? நான் பேசிட்டே இருக்கேன் பதில் சொல்லலை?…” மோனிகா கேட்க,