“நல்லா மழை பெய்ஞ்சிருக்கு. கொஞ்சம் முன்னாடி நடந்த கூத்துல அங்க பாருங்க ரோடு எப்படி இருக்குன்னு…” என்று காண்பித்தான்.
எப்போதும் கசகசப்பாய் இருக்கும் சாலை தான். ஆனால் இப்போது நடந்த படப்பிடிப்பினால் உண்டான குப்பையால் இன்னும் அதிகமாய் அலங்கோலமாய் காட்டியது அந்த வீதியையே.
பார்த்ததும் முகத்தை சுழித்தவர் கையை அசைத்து மகனை வண்டியை எடுத்துவர அனுப்பி வைத்தார்.
கடைகளின் ஓரங்களில் விறுவிறுவென்று நடந்தவன் சென்ற வேகத்தில் பைக்குடன் வந்துவிட்டான்.
இருவரும் வீட்டிற்கு வர இரண்டு மணியை தாண்டி இருந்தது. மேகா புக்கை வைத்து பார்த்து என்னவோ நோட்டில் எழுதிக்கொண்டு இருந்தாள்.
எதிரே பெரிய லெட்ஜர் புக் வேறு இருக்க விரித்து வைக்கப்பட்டு இருந்தது டீப்பாயில்.
“என்னடா பன்ற?…” அமுதன் மகளிடம் வந்து அமர்ந்து கேட்க,
“நம்ம பழைய லெட்ஜர்ப்பா. சும்மா பார்த்துடுட் இருக்கேன்…” என்றாள்.
“ப்பா, அடுத்த வருஷத்துல இருந்து நம்ம கதையோட ஆடிட்டிங் நம்ம வரு தான பார்க்க போறா…” என்று பல்லவனும் அமர்ந்தான்.
“ஏன் பார்க்கமாட்டேனா? கண்டிப்பா நான் தான் பார்ப்பேன்…” என மேகா சொல்லவும்,
“அதானே என் பொண்ணுதான் பார்ப்பா. அவளை விட என்ன பெரிய ஆடிட்டரு?…” அமுதனும் மகளின் கன்னத்தை தட்டி கூறினார் பெருமிதமாக.
“சரிதான், அவ இந்த எக்ஸாம் பாஸ் பண்ணிடுவா. அதுக்கப்பறம் ஒரு நல்ல ஆடிட்டர்ட்ட அசிஸ்ட் பண்ணனும். அதுக்கு முன்ன இன்னும் எவ்வளோ இருக்கு? மறந்திடாதீங்க….” என்று கிண்டலாய் சொல்ல,
“வந்தது நேரம் கழிச்சு. இங்க மகளை பாக்கவும் உக்கார்ந்தாச்சா? முதல்ல வந்து சாப்பிடுங்க ரெண்டுபேரும்…” என்று மலர் சத்தம் போட இருவரும் எழுந்து சாப்பிட சென்றனர். (Tramadol)
“மோனி எங்கம்மா? குட்டிப்பையனையும் காணும்?…” என்று கையை கழுவிக்கொண்டு உண்ண அமர்ந்தான் பல்லவன்.
“நீ வர வரைக்கும் முழிச்சிருப்பானாக்கும் உன் மகன். இந்நேரம் அவன் தூங்கற நேரம். சாப்பிட வச்சு தூங்க வைக்கிறதுக்கு இந்த மோனி படற பாரு இருக்கே?…” என்று அங்கலாய்த்தார் மலர்.
“நீ சாப்பிட்டியாம்மா?…” அமுதன் மனைவியை கேட்க,
“அப்பவே எல்லாரும் சாப்பிட்டாச்சு. இன்னைக்கு வருவும் வந்திட்டாளா. சேர்ந்தே சாப்பிட்டாச்சு…” என்று அவர்களுக்கு பரிமாறினார்.
“உக்காருங்கம்மா. நாங்க எடுத்து வச்சுக்கறோம்…” என்று சொல்லிய பல்லவன் ரசத்தை ஊற்ற மோனிகாவும் வந்துவிட்டாள்.
“இதுதான் சாப்பாட்டுக்கு வர நேரமா? கார் எடுத்துட்டு போயிருந்திருக்கலாம்ல? இல்லன்னா குடுத்து விடறோம்ன்னு சொன்னதுக்கும் கேட்கலை…” என்று வர,
“அஷு தூங்கியாச்சா?…” என மனைவியிடம் கேட்டான் பல்லவன்.
“இப்பதான். சிணுங்கிட்டே இருக்கான். நாளைக்கு டாக்டர்க்கிட்ட போகனும். வயித்துல பூச்சி எதுவும் இருக்கான்னு தெரியலை. போய் பார்த்துட்டு வரனும்…” என்றவள்,
“என்னத்தை, மாமாவுக்கு கீரை கூட்டு செஞ்சீங்க, இங்க எடுத்து வைக்கலையா?…” என கேட்டு அதையும் சூடு செய்து எடுத்துக்கொண்டு வந்தாள்.
“வர வர வயசாகுதுல, அதான் மறக்குது…” மலர் சொல்லவும் அனைவரும் சிரிக்க இங்கே மேகாவும் புன்னகைத்தாள் தாயின் கூற்றில்.
“என்ன?…” மலரும், மோனிகாவும் திகைப்பாய் பார்க்க மேகாவிற்கு காதில் விழுந்த செய்தியில் கருவிழிகள் நின்று அசைந்தது.
“அதைவிட இன்னொரு விஷயம், அதிரன் மழைக்கு நம்ம கடைக்குள்ள வந்திட்டான்…” என்றான் பல்லவன்.
“என்னங்க சொல்றீங்க?…” என்றதும் பல்லவன் நடந்ததை எல்லாம் சொல்ல சொல்ல மேகாவின் கவனம் பாடத்தில் பதியவில்லை.
பார்வைகள் எழுத்திலும் கணக்கிலும் இருந்தாலும் பல்லவனின் பேச்சில் அங்கே என நடந்திருக்கும் என்பது மனக்கண்ணில் பிம்பமாய் பிரதிபலித்தது.
‘நான் பேசும் போது பக்கத்திலையா இருந்தான்?’ என சம்பந்தமில்லாமல் தோன்ற, ‘இதென்ன இதை எல்லாம் நினைச்சிட்டு?’ என்று தன்னை கடிந்துகொண்டாள் உள்ளுக்குள்.
“நாங்க நினைக்கவே இல்லை. அத்தனை சகஜமா பேசி, எல்லாரோட போட்டோ எடுத்து. அப்பா கையை பிடிச்சு மீட் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம்ன்னு. என்ன நடந்துச்சுன்னே தெரியலை…” என்று பல்லவன் பேச பேச இங்கே திட்டு திடுக்கென ஓசைகள்.
‘தெரியாமல் அவன் வர வாய்ப்பில்லை. கூடி நின்று பேச அவசியமில்லை. எங்கே நகர்த்தி செல்கிறான் தங்களை?’ என கேள்விகள் அவளின் மூளைக்குள் வீணையின் தந்திகளாய் வேகமெடுத்து அதிர்ந்தது.
“கடையில மட்டும் தான் எடுத்தாங்களா?…” மோனிகா மீண்டும் கேட்கவும் தான் பல்லவன் அமுதனை பார்க்க அமுதனும் ஆமோதித்தார்.
“யோசிக்காம என்ன பண்ணிருக்கீங்க தெரியுமா?…” என்று மோனிகா சத்தம் போட்டபடி தனது மொபைலை எடுத்து பார்க்க அங்கே எதுவும் இல்லை.
யூடியூப்பினுள் நுழைய அங்கே ஆரம்பித்திருந்தார்கள் சங்கதியை. அதிரன் ஷூட்டிங் சம்பந்தமான செய்திகளுக்கு இடையில் இடைசெருகளாக அவன் அமுதனின் கடைக்கு சென்றதும், புகைப்படம் எடுத்துக்கொண்டதும்.
சில மாதங்களுக்கு முன் அதிரன் தேவராஜுடன் இணைந்து பேசப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் அதிரன் தேவராஜ் திடீர் சந்திப்பு.
மழையில் கடைக்குள் குடும்பத்தினரின் ருசிகர பேச்சுவார்த்தை. பேச்சுக்கள் திருமணம் சம்பந்தமானதா?
வருங்கால மாமனார், மச்சினனுடன் வீட்டு மாப்பிள்ளையின் நேரில் கலந்துரையாடல்.
ஆசை நாயகனின் படப்பிடிப்பை நேரில் கண்டுகழித்து பாராட்டிய போது எடுத்த புகைப்படங்கள். எக்ஸ்க்ளூசிவ்.
இப்படி பல இட்டுக்கட்டல்களுடன் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்திருந்தார்கள் யூட்யூப் சேனல்கள்.
“அவ்வளோ பெரிய நியூஸ் சேனல், டிவி சேனல் வச்சிருக்கறவன் கூட கம்முன்னு இருப்பான். தம்மாத்துண்டு போன்ல ஒரு மெயில் ஐடியை வச்சு நாலு போட்டோ சிக்கினா இவனுங்களுக்கு கொம்பு முளைச்சிடுது….”
“இன்னைக்கு கண்டன்ட்க்கு நாம தான் இரை போல…” என எரிச்சலோடு எழுந்தான் பல்லவன்.
“இதுக்குத்தான் கடைக்கு வந்தானா?…” என அதிரனையும் பற்களுக்குள் மென்றான் பல்லவன்.
“ப்ச், இப்படி நடக்கும்ன்னு அந்த பையன் மட்டும் என்ன கனவா கண்டான்? விடுப்பா. போடறவங்க போட்டுட்டு தான் இருப்பாங்க…” என்று சொல்லியவர் சோர்வாய் படுக்க சென்றுவிட்டார்.
“கடைக்கு வரலையாப்பா?…” என பல்லவன் கேட்க,
“கொஞ்ச நேரம் படுக்கறேன். என்னவோ சரியில்லை…” என்று சொல்லி செல்ல மேகா அத்தனையும் கவனித்தபடி தான் இருந்தாள்.
“பல்லவா உன் பெரியப்பா வீட்டுல இருந்து நம்ம வீட்டுக்கு வராங்களாம்…” மலர் வந்து சொல்ல,
“என்னம்மா திடீர்ன்னு…” பல்லவன் திகைத்தான்.
அப்போது தான் அவனும் தானாவது கடைக்கு கிளம்பலாம் என இருக்க இப்படி உள்ளே சென்ற மலர் போனுடன் வந்து கூறவும் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
“நீ இரு, இப்ப வந்திருவாங்க போல?…” என சொல்லவும் எங்கே செல்வது?
“இருக்கேன்ம்மா…” என்றுவிட்டு,
“வரு உள்ள போடா…” என தங்கையை அனுப்பினான்.
“யார் வந்தாலும் வெளில வராத நீ. நான் சொன்னாதான் வரனும்…” என கூற,
“அவ என்ன பண்ணினா எதுக்கு?…” என்றதற்கு பல்லவனின் முறைப்பை தர மோனிகா அமைதியாகினாள்.
மேகா புத்தகங்களுடன் உள்ளே சென்று கதவை சாற்றியதும் தான் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“எல்லாரும் தான் வருவை சொல்றாங்கனா நீங்களும் ஆமான்ற்றது போல அவளை போக சொல்றீங்க? அவளை பத்தி கொஞ்சமும் யோசிக்கமாட்டீங்களா?…”
“மோனி, வரவங்க என்ன பேசுவாங்கன்னே தெரியாது. தேவை இல்லாம வருவை கஷ்டபடுத்துவாங்க. அதான் உள்ள போக சொன்னேன்…”
“இப்படியே பொத்தி பொத்தி வச்சு அவளை பேசவே விடாம பண்ணிடாதீங்க. இது அவ வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இந்த சூழ்நிலை வருத்தமாவும், கஷ்டமாவும் இருந்தாலும் யார் என்னன்னு அவளும் தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்…”