இரவு பதினோரு மணியைத் தாண்டி மருதனும், பாண்டியனும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.
“இந்நேரத்துக்கு எதுக்கு ஓட்டலுக்கு வர சொல்லியிருக்க? நீங்களும் ரெண்டேறும் இன்னமட்டும் இங்கன என்ன பண்றீங்க?” பாண்டியன் உள்ளே வந்ததும் மகன்கள் இருவரிடமும் கேள்வியை அடுக்கினார்.
வீரனும் லிங்கமும் அமைதியாக நின்றிருக்க…
“என்ன பிரச்சினை?” எனக் கேட்டார் மருதன்.
வீரன் கண் காட்டிட லிங்கம் அனைத்தையும், கோகுலை அடைத்து வைத்திருப்பதை வரை எல்லாம் சொல்லிவிட்டான்.
“புள்ளைக்கு ஒன்னுமில்லையே?” பாண்டியன் பதறி வினவ,
“வூட்டுலதேன் இருக்காள். கொஞ்சம் சுணங்கி இருக்காள். சரியாப்போவும்” என்ற வீரன், மருதனை பார்க்க…
“அவனையெல்லாம் நான் மறந்தே போயிருந்தேன்” என்ற வீரன், “போனுல பேசுனவர, நீங்க வந்ததும் நேரிலே போயி ஆட்டம் காட்டிடு வரலான்னு தான் இங்கட்டு வர சொன்னேன். இப்போ அதுக்கு அவசியமில்லை. வூட்டுக்கு போவும். அவரே அரண்டு வருவார்” என்ற வீரன் கையிலிருந்த அலைப்பேசியை சட்டை பையில் போட்டவனாக, வேட்டியை மடித்து கட்டியவாறு வாயில் நோக்கி நடக்க…
“அந்த பையனை எதுக்கு புடிச்சி வச்சிருக்கணும் அமிழ்தா? வுட்டுப்புடலாமே! எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்” என்ற பாண்டியனிடம்…
“அவென் என்ன பண்ணாலும் பார்த்துகிட்டு மட்டுமே இருக்கணும் சொல்றீய்ங்களா மாமா?” என்ற வீரன், “அந்த ஆளு நேரடியா வந்து பேசியிருந்தாக்கா சும்மா விட்டிருப்பேனோ என்னவோ… இதுக்குமேல கம்மின்னு இருக்க முடியாது. மொத்தமா அவென் ஆட்டத்தை முடிச்சுட்டுதேன் மத்தது” என்றான்.
எப்போது அதனை அனுப்பினானென்று வீரனுக்குத் தெரியவில்லை. இங்கு தன் கையில் சிக்கும் முன் அனுப்பியிருப்பானென்று அனுமானித்தான்.
பதினோரு மணி போல் உறக்கம் கலைந்த மீனாள் வீடே இருட்டில் இருக்கவும், தன்னறை விட்டு வெளியில் வந்து பார்க்க, முற்றத்திலும், கூடத்திலும் தன் குடும்பத்தார் படுத்து உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு மீண்டும் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.
‘நாளை கோகுல் அவனது அப்பாவோடு வந்துவிடுவானோ?’ என்று அதிலேயே உழன்றவள் காலினை கட்டிக்கொண்டு அமர்ந்திட்டாள்.
“வீரா மாமா இருக்கும் போது எனக்கென்னத்துக்கு பயம்?” என்று தன்னைத்தானேக் கேட்டுக்கொண்டவள், மனதை திசை திருப்ப அலைப்பேசியை எடுக்க கோகுலின் எண்ணிலிருந்து புலனம் வழி பல தகவல்கள் எம்பி குதித்தன.
யாருடைய எண்ணென்று தெரியாது திறந்து பார்த்தவள் தகவல்கள் யாவும் முகத்தை சுளிக்க வைத்திட, “பொண்டாட்டி” என்றதோடு, “நாளைக்கு பொண்ணு மட்டும் பாக்க வராம அப்படியே தாலியை கட்டி கூட்டிட்டு போயிடுவா?” என்றிருந்தது கோகுல் என்று காட்டிக்கொடுத்திட… இறுதியாக அவன் அனுப்பியிருந்த புகைப்படம் அவளின் கைகளை நடுங்கச் செய்தது.
கோகுல் தன்னுடைய படத்தோடு, மீனாள் படத்தை இணைத்து, மணக்கோலத்தில் இருப்பதைப்போல் எடிட் செய்து அனுப்பியிருந்தான்.
பார்த்ததும் வீரனின் கண்களில் அனல் தெறித்தது.
கை முஷ்டியை இறுக்கி மூடியவன்,
வேட்டியை மடித்துக் கட்டியவனாக, தாவி நடையை வைத்து, கோகுலை கட்டிபோட்டிருக்கும் அறையை நோக்கி அத்தனை வேகமாகச் சென்றான்.
மற்ற மூவரும் பதறியவர்களாக வீரனின் பின்னால் கிட்டத்தட்ட ஓடினர்.
நல்லவேளையாக இரவு நேரம் என்பதால், எந்தவொரு தளத்திலும் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
பிரசாத் கோகுலை ஒரு இருக்கையில் கட்டிப்போட்டு வைத்திருக்க… போதையில் இருந்தவன் தலை கவிழ்ந்த நிலையில் உறங்கியிருக்க… கோகுலின் முன்னுச்சி முடியை கொத்தாகப் பற்றி அவனின் முகம் உயர்த்தியவன் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி விடாது அறைந்தான் வீரன்.
அடியின் வலியில் போதை தெளிந்து விழித்த கோகுல்…
“ஹேய்” என்று சத்தமிட, அவனின் தொண்டையை பிடித்து ஒற்றை கையால் நெறித்த வீரன்,
“உம் போனை கொடு?” என்றான்.
கோகுல் மாட்டேனென்று நீண்ட சிரிப்போடு தலையை அசைக்க…
வீரன் தன் பிடியை இறுக்கினான்.
“அவளை எனக்கு கட்டி கொடுத்துப்புடு. அதுதேன் அவளுக்கு நல்லது” என்று அவன் கோணலாக சிரிக்க…
“அமிழ்தா என்னயிது? வுடு அவனை” என்று மருதனும் பாண்டியனும் வீரனை இரண்டு பக்கமும் ஆளுக்கொரு பக்கமாக பிடித்து இழுக்க… அவனை அசைக்கக்கூட முடியவில்லை.
“கொடுடே… இல்லை உனக்கு இங்கன இப்போவே சமாதி கட்டிப்புடுவேன்” என்று வீரன் வெறி பிடித்தவனாக மாறியிருக்க…
“டெக்னாலஜி யூஸ் பண்ணி, என் மீனுவோட எடிட்டிங்கில நான் குடும்பமே நட…” அடுத்து கோகுலால் பேச முடியாதபடி பற்களை ஒரே குத்தில் தட்டியிருந்தான் வீரன்.
கோகுல் முடிக்காத போதும் அவனது வார்த்தைகள் புரிந்திட…
மருதன் அவனை அடிக்க பாய்ந்திட…
“இதுக்குமேல அவனை அடிக்கணுமாட்டி” என்று பாண்டியன் அவரை பிடித்து இழுத்திருந்தார்.
“என்னவேணா பண்ணு. இவனுக்கு இனி நம்ம பொண்ணு நெனப்பே வரக்கூடாது” என்று வீரனிடம் சொல்லிய பாண்டியன், மருதனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு புறப்பட்டிருந்தார்.
பெரியவர்கள் இருவருக்கும் மீனாளை நேரில் பார்க்க வேண்டும் போலிருக்க கிளம்பியிருந்தனர்.
“புள்ள என்ன பாடுபடுதோ?” மருதன் புலம்பியபடி வர, பாண்டியன் அவரை தேற்றியவாறு இருந்தார்.
வீரன் கோகுலை அடி வெளுத்துவிட்டான்.
“அண்ணே ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆவப்போவுது… விடுண்ணே!” என்ற லிங்கம், “போனு அவன் பாக்கெட்டில் இருக்குதான்னு பாப்போம்” என்க,
வீரன் கோகுலை முழுமையாக ஆராய்ந்திட, தன்னுடைய ஜீன்ஸில் அலைப்பேசியை வைத்திருந்தான்.
எடுத்த வீரன் அதில் கோப்புகளை ஆராய்ந்திட…
கோகுல் சொல்லியது போன்று மீனாளுக்கு தாலி கட்டுவது, மெட்டி அணிவிப்பது போன்றெல்லாம் புகைப்படம், காணொளி என எடிட் செய்து வைத்திருந்தான்.
“வேறு எதுலையும் காப்பி வச்சிருக்கியாடா?” வீரன் அவனது தொடையிலேயே மேசையிலிருந்த முள் கரண்டியை எடுத்து ஆழமாக குத்தி கேட்க… வலியில் துடித்தவன் இல்லையென்று கத்தினான்.
“உண்மையா?” லிங்கம் கேட்டிட… “ரெண்டு நா முன்னாடித்தேன் மீனாள் என் காலேஜூன்னே தெரியும். அவள் பிரண்ட்ஸோட பேசிட்டு இருக்கும்போது எடுத்த போட்டோ வச்சு, எல்லாம் போனுலே பண்ணதுதேன்” என்ற கோகுல், “செமயா இருக்குல எங்க பொருத்தம்” என்றிட… லிங்கம் அவனது வயிற்றிலே ஓங்கி குத்தியிருந்தான்.
வீரன் சற்றும் யோசிக்காது, அந்த அலைப்பேசியை அடித்து நொறுக்கி தூள் தூளாக்கியிருந்தான்.
“சும்மா விடக்கூடாது லிங்கு” என்ற வீரன் அக்கணமே, குருமூர்த்திக்கு எதிராக கடந்து சென்ற சில மணி நேரத்தில் தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் தொழில் சங்கத்திற்கு அனுப்பி வைத்ததோடு… சிமெண்ட் தொழிற்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதையும் அதற்கு உண்டான ஆதாரங்களையும் அதற்குரிய துறைக்கு அனுப்பி வைத்தான்.
குருமூர்த்தியின் ஓட்டலில் சுற்றுலா பயணிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், அங்கு சில தவறான விடயங்கள் நடப்பதாகவும் அதற்குண்டான சாட்சியங்களை அந்த துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்தான்.
அதுமட்டுமல்லாமல் தான் அனுப்பியவற்றின் மற்றொரு பிரதியை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திட… அடுத்த பத்தாவது நிமிடம் மதுரை மாநகரமே பரபரப்பிற்குள்ளானது.
எந்த செல்வாக்கை வைத்து பொண்ணை தூக்கிவிடுவேனென்று குரு மூர்த்தி மிரட்டினாரோ… அந்த செல்வாக்கையே இரவோடு இரவாக தகர்த்திருந்தான் வீர அமிழ்திறைவன்.
அனைத்தும் முடித்து லிங்கத்துடன் வீரன் வீட்டிற்கு வந்தபோது நேரம் பணிரெண்டை கடந்திருந்தது.
மருதனும், பாண்டியனும் வந்தபோதே நாச்சி மற்றும் அங்கை தவிர்த்து மூத்த பெண்கள் மூவரும் விழித்துக்கொண்டனர்.
தன்னுடைய ஆறுதலுக்கு நடந்தவற்றை மகாவும் ஒருமுறை மருதனிடம் தெரிவித்திட… அவர் மீனாளின் அறை நோக்கிச் சென்றார்.
அதுவரை கட்டிலில் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதிருந்த மீனாள், வெளியில் கேட்ட பேச்சு சத்தத்தில் தந்தை எப்படியும் தன்னைத் தேடிவருவார் என்று அறிந்து, உடலை குறுக்கி படுத்து கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
வாயிலில் நின்று எட்டிப்பார்த்த மருதன்,
“ஆத்தா மீனாள்” என்று விளிக்க அவளிடம் அசைவில்லை.
“புள்ள அசந்து தூங்குது போல மாமா. எழுப்பி, என்னன்னு கேட்டு திரும்ப திரும்ப வெதும்பவிட வேணாமாட்டி” என்று மருதனின் பின்னோடு வந்த பாண்டியன் சொல்லியதோடு அவரை அழைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தார்.
“நீங்களும் உறங்குங்க மாமா… நம்மை மீறி எவென் புள்ளையை தூக்குறான்னு பாப்போம்” என்ற பாண்டியனின் பேச்சில் அதிர்ந்த மகா,
“என்ன தம்பி என்னமாட்டி சொல்ற. பயந்து வருதே! அவென் அப்படி சொன்னானா?” என்றி நெஞ்சில் கை வைத்து கேட்டார்.