வருண் கிருஷ்ணா சொல்ல சொல்ல வர்ஷாவின் கண்கள் அகல விரிந்து கொண்டே சென்றது.. அவன் சொல்லி முடித்ததும்..
“வருண் உனக்கு எப்படி இது தான் என்று தெரியும்..?”
அவனை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு கேட்டவளிடம் வருண் கிருஷ்ணா. “ம் மூன்று நான்கு பெண்களை நானே இது போல் ஆக வைத்து இருக்கேன் போடி..” இந்த கிண்டல் பேச்சில் வர்ஷா வருண் கிருஷ்ணாவை முறைத்தாலுமே, அவன் சொன்ன செய்தியில் அது தான் முக்கியம் என்பது போல் செந்தூராவிடம் மெல்ல..
“உனக்கு கடைசியா எப்போ டேட் வந்தது..?” என்று கேட்டாள்..
பாதி மயக்கத்தில் இருந்த செந்தூராவுக்கு முதலில் வர்ஷா என்ன கேட்கிறாள் என்று கூட புரியவில்லை.. பின் புரிந்து என்ன இது கேள்வி என்று யோசிக்கும் போது தான் அவளுக்குமே பல்ப் எரிந்தது.. எரிந்த பல்ப் பிரகாசத்தில் அவளுக்கு கிடைத்த விடை அவள் கண்ணுக்கும் எட்டி விட..
அவளையே பார்த்திருந்த இரண்டு பேருக்குமே விடை கிடைத்ததி. வருண் மீண்டும் வர்ஷா காதில் ஏதோ சொல்ல வர்ஷா அதை செந்தூராவிடம் கேட்க. அவள் தலை குனிந்து கொண்டு சம்மதமாக தலையாட்டவும்.. வருண் கிருஷ்ணா அந்த மருத்துவனையின் மருந்தகம் நோக்கி விரைந்தவன் மீண்டும் அவர்கள் முன் அமர்ந்து இருந்தவன் கையில் கற்பத்தை உறுது செய்யும் அந்த சின்ன கருவி இருந்தது..
அது மீண்டும் வருண் கையில் இருந்து வர்ஷா வைக்கு இடம் மாறி மீண்டும் செந்தூராவின் கை வந்து சேர்ந்தது..
திரும்ப செந்தூரா பின் வர்ஷா அந்த வாஷ் ரூம் நோக்கி சென்றவர்கள் வரும் போது இருவரின் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி கூடுதலாக செந்தூராவின் முகத்தில் ஒரு வெட்கம்.. நிமிர்ந்தும் பாராது மீண்டும் முன்பு அமர்ந்து இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டவளின் கையில் அந்த சாதனத்தை கெட்டியாக பிடித்து கொண்டு இருந்தாள்..
இப்போது முன் இருந்த அந்த சோர்வு கூட உடம்பில் இல்லை.. ஏதோ சாதித்த ஒரு உணர்வு அவள் மனதில்.. இந்த திருமணம் ஜாதகம்.. இந்த குழந்தை கொண்டு தான் நடத்தப்பட்டது என்று எல்லாம் மறைந்து அவள் மனதில் வம்சியோடு காதலோடு தான் கூடியதற்க்கு தங்களுக்கு கிடைத்த பரிசு… இப்போது அவள் மனதை இதை தான் நினைத்தது..
மனதில் அவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலுமே,இப்போது அதை வெளிக்காட்டலாமா என்று ஒரு தயக்கம். மாமியார் இது போல் இருக்கையில் என்ன செய்வது சொல்வது என்று,,
ஆனால் அந்த தயக்கம் எல்லாம் வருண் கிருஷ்ணாவுக்கு இல்லை போலும், வாஷ் ரூமில் இருந்து வர்ஷாவோடு கன்னம் சிவக்க நடந்து வந்து கொண்டு இருந்த செந்தூராவை தன் பேசியின் மூலம் வீடியோவாக எடுத்து அதை சேகரித்து வைத்து கொண்டான்..
இது எல்லாம் ஒரு லைப் லாங் ஸ்வீட் மெமரி அல்லவா. இதை அண்ணன் இருந்து பார்த்து ரசித்து இருக்க வேண்டிய காட்சி.. நேரில் பார்க்க அண்ணாவுக்கு கொடுத்து வைக்கவில்லை.. குறைந்த பட்சம். அதை நிழலிலாவது காட்டலாம் என்று தான் தன் கை பேசியில் செந்தூராவின் ஒவ்வொரு முக மாற்றத்தையும் மிக துள்ளியமாக வீடியோ எடுத்து இருந்தான்.
வர்ஷா தான் வருணின் இந்த செயலில் அவனை என்ன என்று முறைத்து பார்த்தாள்.. ஆனால் வருண் அவள் முறைப்புக்கு எதிர் முறைப்பு கொடுக்காது.. காதல் பார்வை பார்த்தவன்..
“இது எல்லாம் ஆண்களுக்கு ஒரு கர்வமடி.. பெண்களுக்கு தாய்மை என்பது வரம் என்றால், ஆண்களுக்கு கர்வம்.. அது உனக்கு புரியாது.. செந்தூராவை இப்படி அண்ணன் பார்க்கனும்.. ஆனா இல்ல. அது தான் இதை அவர் கிட்ட காட்டுவேன்..” என்று தான் எடுத்து முடித்த வீடியோவை வர்ஷாவிடம் காட்ட..
“சரி வருண் அது எல்லாம் விடு.. இப்போ வம்சி அத்தான் கிட்ட சொல்லனும் தானே… அங்கு போய் சொல்லலாமா இல்ல அத்தானை இங்கு கூப்பிட்டு.” என்று இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது இடையில் பேச்சை கவனித்த செந்தூரா..
“இல்ல இல்ல இப்போ யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம்..” என்று வேகமாக மறுத்த செந்தூராவை தான் இருவரும் ஏன் என்பது போல் பார்த்தனர்.
“இல்ல வேண்டாம். “ செந்தூரா சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாது தயங்க.. அதை இருவரும் புரிந்து கொண்டவராக சரி என்று அமைதியாகி விட்டனர்.
மூன்று பேரும் அமைதியாக மருத்துவமனையை நோக்கி செந்தூராவின் மெல்ல நடக்கை ஈடு கொடுத்த படி மூன்று பேரும் சென்ற போது கோசலையை அறைக்கு மாற்றி விட்டார்கள் என்ற விசயம் அவர்களுக்கு சொல்லப்பட்டது..
அந்த மருத்துவமனை கிருஷ்ணா குடும்பத்தினருக்கு தெரிந்த மருத்துவமனை.. இந்த மருத்துவமனை கட்ட கிருஷ்னா குடும்பத்தினர் தான் இடம் கொடுத்தது.. அதனால் அவர்கள் குடும்பத்தினருக்கு இங்கு சிறப்பு சலுகைகள் சிலது கொடுக்கப்பட்டது..
அந்த சலுகையில் இவர்கள் குடும்பத்தினருக்கு என்று மூன்று நாட்களாக ஐந்து அறைகள் தனிப்பட்டு ஒதுக்கி கொடுத்தது போல் அறைக்கு மாற்றப்பட்டது..
மருத்துவர் கூட.. “குடும்ப உறுப்பினர் பேசலாம்.. ஆனால் அவங்களை ஸ்டெயின் பண்ணாம பார்த்து கொள்ளுங்கள்.. இப்போ பேச உங்களை அனைவரையும் அனுமதிக்க காரணம் கூட. அவங்க மன உளைச்சலில் இருக்காங்க.. உங்க கிட்ட பேசுனா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. என்று தான்..” என்றதினால் தான் அந்த பெரிய அறையில் குடும்ப உறுப்பினர் இருந்தனர்.
மருத்துவமனை கேண்டினில் இருந்து மருத்துவமனையின் உள் வளாகத்திற்க்குள் நுழைந்த செந்தூரா வர்ஷா வருண் கிருஷ்ணாவுமே விசயம் அறிந்து கோசலை இருந்த அறைக்குள் சென்றனர்.
இவர்கள் போகும் போது கோசலை மகன் கணவனின் கை பற்றி..
“எனக்கு எதுவுமே வேண்டாம்.. நீங்க இரண்டு பேரும் முன் போல பேசுனா கூட போதும்.. வம்சி நீ வீட்டுக்கு கூட வர தேவையில்லை கண்ணா… ஆனா என் கிட்ட பேசாம மட்டும் இருக்காதே கண்ணா..
இனி நான் செந்தூரா குழந்தை இது பற்றி எல்லாம் கூட பேச மாட்டேன் கேட்க மாட்டேன்.. செந்தூராவுக்கு குழந்தை பிறக்காது போனாலும் பரவாயில்லை கண்ணா… ஆனா என் கிட்ட பேசாம..” என்று சொல்லி கொண்டு வந்தவரால் அதற்க்கு மேல் பேச முடியாது போய் விட்டது..
ஏற்கனவே குற்றவுணர்வில் இருந்த வம்சியும் கிருஷ்ண மூர்த்திக்கு கோசலையின் இந்த பேச்சில் மனதளவில் இன்னுமே நிலை குலைந்து தான் போய் விட்டனர்.
“கோசலை.” என்று கிருஷ்ண மூர்த்தியும்..
“ மா..” என்று வம்சி கிருஷ்ணாவும் கோசலையின் இரு கைகளையும் ஆளுக்கு ஒன்றாக பற்றி கொண்டு பேச முடியாது தன் கை அழுத்தம் கொடுத்து தைரியம் கொடுக்க..
எப்போதும் விளையாட்டு போல பேசும் வருண் கிருஷ்ணாவுக்கு இந்த அழுவாச்சி காட்சி பிடிக்காது.
தன் கை அழுத்தம் பிடியில் வைத்து இருந்த செந்தூராவின் கையில் இருந்த அந்த சாதனத்தை பறித்தவன்.. கோசலையிடம் காட்டி.
“அப்போ பெரியம்மா இந்த குழந்தையை என் கிட்ட கொடுத்துடுங்க.. உங்களுக்கு தான் செந்தூராவுக்கு குழந்தை இல்லை என்றாலும் பரவாயில்லை என்று சொல்லிட்டிங்கலே..” என்ற அந்த செய்து அனைவருக்கும் இனிய அதிர்வை கொடுத்தது .
அதுவும் அன்னையின் கை பிடித்து கொண்டு இருந்த வம்சியின் நிலை இன்னும் மோசம் என்று தான் சொல்ல வேண்டும்.
தனித்து இருக்க மனைவி இந்த இனிய செய்தியை சொல்ல கேட்டு அதற்க்கு அடுத்து ஒரு கணவனாக அவள் சொன்ன விசயத்திற்க்கு பதில் தந்து என்று நிகழ வேண்டிய நிகழ்வு இது..
ஆனால் மருத்துவமையில் தன் அன்னையிடம் தன் கை கொடுத்து சிறிது எட்ட மனைவி நின்று இருக்க.. தம்பி சொல்ல கேட்ட நிலை ஒரு மாதிரியாக இருந்தாலுமே, தெரிந்த விசயம்… மனைவியின் அருகில் இல்லை.. கை பிடிக்க வில்லை.. ஆனால் செந்தூராவை வம்சி பார்த்த அந்த பார்வை.. ஓராயிரம் கதை சொன்னது..
கோசலைக்கு சொல்லவே தேவையில்லை.. அப்படி ஒரு மகிழ்ச்சி அவர் முகத்தில் மின்னியது.. ஆனால் அதை உடனே மறைத்து கொண்டார்.. தவறாக நினைத்து விடுவானோ மகனும் கணவனும் என்று நினைத்து..
மனைவியின் முக பாவனையை கவனித்து இருந்த கிருஷ்ண மூர்த்தி..
“இது நீ சந்தோஷிக்க வேண்டிய தருணம் தான் கோசலை.. உன் கோபத்தை காட்டும் முன் யோசிக்க சொன்னேன்.. உன் சந்தோஷத்தை யாரும் தடை செய்யவில்லையே.” என்ற கணவனின் பேச்சில் கோசலையின் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தாலும், அதில் சிறிது தயக்கமும் தெரிந்தது.
கோசலையின் தயக்கத்தை பார்த்த தாரகராம் தான் என்ன கோசலை என்று கேட்டது. அப்போதும் ஒன்றும் சொல்லாது கோசலையின் கண் ஒரு வித தயக்கத்தோடு செந்தூராவை பார்க்க.
செந்தூரா தன் அத்தையின் பக்கம் வந்து நின்றும் கோசலை ஒன்றும் சொல்லவில்லை.. அதே தயக்க பார்வையோடு தான் அவளை பார்த்திருந்தார்..
செந்தூரா தான்.. “என் கிட்ட ஏதாவது சொல்லனுமா அத்தை.” என்று கேட்டது..
செந்தூரா கேட்கவும் தான்.. “ நம்ம வீட்டுக்கு வந்துடுறியா செந்தூரா… இது போல சமயம் தனியா எல்லாம் இருக்க கூடாது.. இதை நான் குழந்தைக்காக மட்டும் சொல்லலே. இது போல சமயம் உடல் உபாதை ரொம்ப கொடுக்கும். ஒரு சில நேரத்தில் இருக்கும் மனநிலை.. இன்னொரு சமயம் இருக்காது.. பிடித்த உணவு கேட்கும் சாப்பிட்டா வாந்தி வரும்.. இது போல நிறைய.” என்று தயக்கத்துடம் சொல்ல கோசலையின் பேச்சுக்கு செந்தூரா சிரித்து கொண்டே.
“ஓ என்னைய விட்டு விட நினச்சிட்டிங்கலா.” என்ற செந்தூராவின் பதில்.. அங்கு இருந்தவர்களுக்கு அப்படி ஒரு ஆசுவாசத்தை கொடுத்தது.
வம்சிக்கு அன்னையின் நிலையையும் பார்க்க முடியவில்லை.. அதற்க்கு என்று எந்த ஒரு கட்டாயத்தை கொண்டும் தன் மனைவியை அந்த வீட்டிற்க்கு அழைக்க மனம் இல்லை. அதே சமயம் மனைவியின் இந்த நிலையில் பெண் துணை இல்லாது தனித்து விடவும் மனது இல்லை.