கமிஷனர் அலுவகத்தில் இருந்து வெளியேறியவன், மீண்டும் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவரை அவரின் அறைக்குச் சென்று தனிமையில் சந்தித்தான்.
அவளை முதன் முதலில் பார்த்த நிலைமையைச் சொல்லி, “சந்தேகத்தின் அடிப்படையில அவங்களுக்கு நீங்க மெடிக்கல் டெஸ்ட் செஞ்சிடுங்க டாக்டர். அதுக்கான கமிஷனர் பெர்மிஷன் வாங்கிட்டேன். அது முடிஞ்சு ரிபோர்ட் வந்ததும், ஆபரேஷன் ஸ்டார்ட் செஞ்சிடுங்க.”
“ஓகே சர்! நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடலாம்.”
“அப்போ நான் ஈவ்னிங் வரேன்.”
அடுத்து அவன் சென்ற இடம் சம்பவம் நடந்த மனநல மருத்துவமனை. அங்கே தடவியல் துறையில் இருந்து ஆட்கள் வந்திருக்க, அவர்களைக் கொண்டு அந்தப் பகுதி முழுவதும் அலசி ஆராயப்பட்டது. அத்தோடு மின்துறையில் இருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது.
மின்துறையினர் பரிசோதித்துவிட்டு, “ஷார்ட் சர்கியுட் சர். அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கு.” என்று சுதாவிடம் சொல்ல,
“அப்படியா!” என்றவன், சிறு யோசனைக்குப் பிறகு, “எனக்கு ஒரு கேள்வி சர். வேணும்னே ஷார்ட் சர்கியுட்டை ஏற்படுத்தலாமா? அதுக்கு எதுவும் வாய்ப்பிருக்கா?”
“அப்படியும் செய்யலாம் சர். ஷார்ட் சர்கியுட் எற்படனும்னா, ஒரு கார்ட்ல இருக்கிற ரெண்டு காப்பர் வயர்ல ஒன்னு கட் ஆகி, ஒன்னோடு ஒன்னு டச் ஆகணும். அப்போ, கரென்ட் ஃப்ளோ பைபாஸ் ஆகி, அதன் மூலமா ஃபயர் ஆகும். ஆனா இந்தக் கேசை பொறுத்தவரை, சுவிட்ச் போர்ட் உள்ள வயரிங் எல்லாம் ரொம்ப வருஷம் பழசா இருக்கு. வையர்சும் நஞ்சு போய், அங்க இங்க கட் ஆகி இருக்கு. இதனால தான் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கும்ன்றது என்னோட கணிப்பு.”
“ஓஹ்! ஒகே சர். தேங்க் யு! தேவைப்பட்டா அப்புறம் காண்டாக்ட் பண்றேன்.”
அவர் சென்றதும், தடவியல் நிபுணர்களிடம் வந்தான் சுதர்ஷன்.
“ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் எதுவும் கிடைச்சுதா மிஸ்டர் பிரகாஷ்? எதுவும் அப்நார்மல் திங்க்ஸ் இல்லனா எவிடென்ஸ் எதுவும்?”
“கேட் ஹேண்டில்ல சில ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கிடைச்சு இருக்கு சர். அப்நார்மல் திங்க்ஸ் இந்த வார்டு சுத்தி எதுவும் கிடக்கல. மே பி கொஞ்சம் தள்ளி தேடினா கிடைக்கலாம்ன்னு நினைக்கிறன்.”
“ஓகே பிரகாஷ். இங்க வொர்க் பண்றவங்க கிட்ட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கலெக்ட் செஞ்சு உங்களுக்கு அனுப்புறேன். கம்பேர் செஞ்சு ரிசல்ட் எனக்கு உடனே வேண்டும்.”
“சியுர் சர்!”
“அப்போ நாளைக்கு இன்னும் கொஞ்சம் தள்ளி தேடுவோம். எனக்கு மொதல்ல ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் ரிசல்ட் கொடுத்துடுங்க பிரகாஷ்.”
சொல்லிவிட்டு, கமிஷனருக்கு போன் செய்தவன், விவரங்களைக் கூறிவிட்டு வைக்க, அவனின் அக்கா போன் செய்தார்.
“டேய்! எங்க இருக்க? நாலு மணி ஆகுது. நீ இன்னும் லஞ் சாபிட்டல, அது நியாபகம் இருக்கா? இல்லையா?”
“அதெல்லாம் நியாபகம் இருக்கு க்கா. ஒரு அரை மணி நேரத்தில வரேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சா?”
“நான் சாப்பிட்டேன். உன் மருமக தான் சாப்பிடாம இருக்கா. நீ வந்தா தான் சாப்பிடுவாளாம். வாசல்ல சேர் போட்டு உட்கார்ந்துட்டு இருக்கா!”
“அச்சோ! இதை மொதல்லையே சொல்ல வேண்டியது தானே அக்கா. இதோ உடனே வரேன். இல்லனா, சண்டி ராணி என்னை லத்திய வச்சே அடிப்பா!” சிரிப்புடன் சொன்னவன், உடனே வீட்டுக்கு கிளம்பினான்.
சுதர்ஷனின் அக்கா பெயர் மாலதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறாள். சில வருடங்களுக்கு முன்பு அவளின் கணவன் ஒரு சாலை விபத்தில் உயிரிழக்க, பத்து வயது மகளுடன் தம்பி சுதர்ஷனின் வீட்டில் அவனுடன் வசித்து வருகிறாள்.
மாலதியின் மகள் பெயர், பவித்ரா. அருகிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.
“அம்மா! மாமா வந்தாச்சு!” என்று துள்ளி குதித்தபடி சொன்ன பவி, சுதர்ஷன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் அருகில் ஓடியவள், அவன் வயிற்றில் தன் முஷ்ட்டியை கொண்டு சரமாரியாகக் குத்த ஆரம்பித்துவிட்டாள். அவனோ, சிரிப்புடன் அடிகளை வாங்கிக்கொள்ள, மாலதி தான் சின்னவளை தடுத்து நிறுத்தினாள்.
“குளிச்சிட்டியா சுதா?”
“ம்ம். ஆச்சு அக்கா. ஸ்டேஷன்லையே குளிச்சிட்டேன்.”
[the_ad id=”6605″]
“அவனை விடு பவி! சாப்பிடட்டும்.”
“விடு க்கா. முறை மாமான் கிட்ட அவ விளையாடாம வேற யார் விளையாட போறா!” என்று பதிலுக்குச் சொன்ன சுதா, அக்கா மகளுடன் ஹைஃபை கொடுக்க, அவர்களை முறைத்த மாலதி, இருவருக்கும் சாப்பாடு எடுத்து வைத்தார்.
“நியுஸ்ல பார்த்தேன் சுதா. ரொம்ப உயிர் சேதமா? யாராவது பிழைச்சாங்களா?”
“ம்ம், பத்து பேர் கொஞ்சம் சீரியஸ். நாலு பேருக்கு ஓர் அளவுக்குப் பரவால. ஆனா இந்த ஆக்சிடென்ட்ல ஏதோ மர்மம் இருக்கிற மாதிரி தோணுது அக்கா.”
“ஏன் டா? ஏதாவது க்ளூ கிடைச்சு இருக்கா?”
“க்ளூ இல்லை… ஒரு பொண்ணு.”
“பொண்ணா?! புரியல?!”
அப்படிக் கேட்ட அக்காவிடம், அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னவன், “அவ பின் மண்டையில யாரோ இரும்பு ராட் வச்சு அடிச்சு இருக்காங்க. அது தான் பெரிய சந்தேகத்தைக் கிளப்புது.”
“சரி, அந்தப் பொண்ணுக்கு வேற எதுவும் ஆபத்து எற்பட்டுச்சான்னு மெடிக்கல் டெஸ்ட் செஞ்சாச்சா? ஏனா, மெண்டல் ஹாஸ்பிட்டல்ஸ்ல அந்த மாதிரி விஷயம் நடக்கும்ன்னு கேள்வி பட்டிருக்கேன்.” மெதுவாக அவள் சொல்ல,
அக்கா எதைச் சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டவன், பவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, குரலை தாழ்த்திக்கொண்டு, “டெஸ்ட்க்கு சொல்லியாச்சு க்கா. ஈவ்னிங் போன பிறகு தான் தெரியும்.”
“மே பி அந்தப் போராட்டத்தால கூட இந்த ஆக்சிடென்ட் நடந்து இருக்கலாம். என்ன இருந்தாலும் அந்தப் பொண்ணு மெண்டலி அன்ச்டேபில் இல்லையா!”
“எனக்கும் அது தான் டௌஃட்டா இருக்கு. ஆனாலும் எங்கையோ இடிக்குது. இருந்தாலும் விசாரணை முடிஞ்சா தான் எல்லாம் தெரியும். இப்போதைக்கு அவளைப் பத்தின விஷயத்தை ரகசியமா வச்சிருக்கச் சொல்லி இருக்கார் கமிஷனர்.”
“அதுவும் ஒரு வகையில நல்லது தான். சரி, ஈவ்னிங் ப்ரெஸ் மீட் இருக்குன்னு சொன்னியே, எத்தனை மணிக்கு?”
“மொதல்ல டாக்டர பார்த்து ரிசல்ட் வாங்கிட்டு தான் பிரஸ் மீட்டுக்கு போகணும்.”
பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்த சுதர்ஷன், அரை மணிநேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.
“வாங்க ACP சர்.”
“டெஸ்ட் முடிஞ்சிடுச்சா டாக்டர். ரிசல்ட்?”
“இதோ சர்.” என்று பதில் சொன்ன மருத்துவர், ஃபைலை அவனிடம் கொடுத்துவிட்டு, “ரேப் அட்டெம்ப்ட் எதுவும் நடக்கல. ஆனா அதற்கான முயற்சி நடந்து இருக்கலாம்ன்றது என்னோட கணிப்பு. போராட்டம் நடந்ததுக்கான அறிகுறிகள் அந்தப் பொண்ணு உடம்பில இருக்கு.”
“ஓஹ்! ரேப் அட்டெம்ப்ட்டுக்கு மட்டும் தான் உடம்பில காயங்கள் இருக்குமா டாக்டர்? வேற எதுவும் காரணம் இருக்குமா?”
“நிச்சயம் வேற காரணமும் இருக்கலாம் சர். கொலை முயற்சியைத் தடுக்கும்போதும் கூட இந்த மாதிரி காயங்கள் ஏற்படும்.”
“ம்! ஒகே டாக்டர்! நீங்க அவங்களுக்கு ஆபரேஷன் ஆரம்பிச்சிடுங்க. இதோ அதுக்கான பெர்மிஷன்.” என்றவன், பாக்கெட்டில் இருந்து ஒரு காகித்தை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு வெளியே வர, பத்திரிகையாளர்கள் அவனுக்காகக் காத்திருந்தனர்.
அவர்களைப் பார்த்துவிட்ட சுதர்ஷன், ‘ஒரு நிமிடம்’ என்று சைகை செய்துவிட்டு, சற்று முன்பு மருத்துவர் கொடுத்த ரிபோர்ட் பற்றிய செய்தியை கமிஷ்னரிடம் தெரியப்படுத்தினான்.
“அப்போ ரேப் எதுவும் நடக்கல. பின்ன எதுக்காக அந்தப் பொண்ண அட்டாக் செஞ்சு இருக்காங்க?”
“அது, இனி தான் தெரியும் சர். இப்போ ப்ரெஸ் ரெடியா இருக்காங்க, நீங்க சொன்னப்படியே ஸ்டேட்மெண்ட் கொடுத்துடவா சர்?”
“அப்படியே செஞ்சிடுங்க சுதர்ஷன். மீட்டிங்கை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க.”
“ஓகே சர்!”
கமிஷனரிடம் பேசிவிட்டு, பத்திரிகையாளர்களை நோக்கி அவன் வர, அனைவரும் கேள்விகளோடு தாயார் நிலையில் இருந்தனர். முதலில் என்ன நடந்தது என்பதை அவனே சுருக்கமாகச் சொல்லி முடிக்க, ஒவ்வொருவராகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.
“சர், இந்த ஃபயர்க்கு என்ன காரணம்?”
“ஷார்ட் சர்கியுட் தான் காரணம்ன்னு டெக்னிஷியன்ஸ் சொல்லி இருக்காங்க.”
[the_ad id=”6605″]
“ஹாஸ்பிட்டலோட சரியான பராமரிப்பு இல்லாதது தான் இதுக்குக் காரணம்ன்னு ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுது. இதைப் பத்தி காவல்துறை தரப்பில என்ன சொல்றீங்க சர்?”
“அது சம்பந்தமா மருத்துவமனை கிட்ட கேட்டு இருக்கோம். கூடிய சீக்கிரம் அறிக்கை வெளியாகும்.”
“வார்ட்ல மொத்தம் எத்தனை பேர் இருந்தாங்க சர்? கேஷுவாலிட்டி டீடைல்ஸ்?”
“ஏற்கனவே சொன்ன நம்பர்ஸ் தான். இருவது பேர் ஸ்பாட் டெட். பத்து பேர மருத்துவமனையில சீரியஸ் கண்டிஷன்ல அட்மிட் செஞ்சுருக்கோம். நாலு பேருக்கு லேசான காயம். மொத்தம் முப்பத்தி நாலு பேர் வார்ட்ல இருந்திருக்காங்க.”
ஏற்கனவே கமிஷனர் மூலம், மருத்துவமனை டீனிடம் அந்தப் பெண்ணைப் பற்றிய அவர்களது திட்டத்தைத் தெரியபடுத்தி விட்டதால், எண்ணிக்கையைக் குறைத்துக் கூறினான் சுதா.
“காவல்துரையோட அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன சர்?”
“மொதல்ல, இறந்தவங்களை அடையாளம் கண்டுபிடிக்கணும். அதுக்காக வார்டுல இருந்தவங்க, எல்லாரோட ரிலேடிவ்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கு.”
அடுத்து, ‘இத்தோடு போதும்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்த நகர்ந்தான் சுதர்ஷன்.
அதன்பின், கமிஷனரை பார்த்துவிட்டு, மற்ற கேஸ்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வீடு வந்து சேர, இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. இரவு உணவை அக்கா மகளுடன் முடித்தவன், தூங்கிவிட்ட மருமகளைத் தன் நெஞ்சில் படுக்கவைத்தபடி, தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த சுதாவின் எண்ணங்கள், அந்தப் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
‘அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?!’
‘அவளை ஏன், யாரோ அடிச்சு இருக்காங்க?!’
‘அவளுக்கும் இந்தத் தீ விபத்துக்கும் ஏதாவது காரணம் இருக்குமோ? இல்லை கமிஷனர் சொல்ற மாதிரி, அவளைக் கொல்ல இந்தத் தீ விபத்துச் செட் செய்யப்பட்டதா?!’
பல கேள்விகள் அவன் மூளையைத் துளைத்தது.
இத்தனை வருட அனுபவத்தில் எத்தனையோ வழக்குகளை, விசாரணைகளைப் பார்த்து இருக்கிறான் அவன். இதைவிடக் குழப்பமான, சிக்கலான வழக்குகளும் அதில் அடங்கும். ஆனால், இந்த வழக்கு? வழக்கு என்று சொல்வதை விட, அந்தப் பெண்? அவள் யாரென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே அவனைத் தாக்கியது. அதற்குக் காரணம் என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.
அவளின் அந்த முகம்…?!
எதையோ பறிகொடுத்த முகம்!
எதையோ சொல்லத் துடிக்கும் இதழ்கள்?
அவளுக்கு என்னவோ நடந்திருக்கு. அது என்ன?
“யார் பெண்ணே நீ?!” அந்நாளில் இரண்டாவது முறையாக, தனக்குள் அந்த கேள்வியை கேட்டான்.
இந்தியாவின் மேற்கில் இருக்கும் மாநிலம் அது. ஜவுளி வியாபாரத்திற்கும், வைர தொழிலுக்கும் பேர் போன நகரை கொண்ட மாநிலம். அப்பேற்பட்ட நகரத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் கிராமம் அது. மண் சாலையும் ஓடு போட்ட வீடுகளையும் கொண்ட கிராமம். இரவு உணவை முடித்துவிட்டு எல்லோரும் தூங்க சென்றிருந்ததால், தெருக்கள் எல்லாம் இருட்டாகி இருந்தது.
அந்த ஓட்டு வீட்டில் ஒரு வயதான பெண்மணி தங்கி இருந்தார். இரவு உணவை முடித்துவிட்டு, அவர் தூங்கபோக, அவர் வைத்திருந்த பட்டன் செல் அடித்தது.
‘இந்த நேரத்தில யாரு?’ என்ற யோசனையுடன் சென்று ஃபோனை எடுத்து பேச, அவரின் மகன் தான் அழைத்திருந்தான்.
“ஹலோ! அம்மா!”
“கண்ணா!! என்னப்பா?! கொஞ்ச நேரம் முன்ன தான பேசின? என்ன விஷயம்?”
[the_ad id=”6605″]
“அம்மா! சென்னையில தங்கச்சியை அட்மிட் செஞ்சிருந்த ஹாஸ்பிட்டல்ல தீ பிடிச்சிடுச்சாம்.” பதற்றத்துடன் அவன் சொல்ல, அதிர்ந்து போனார் பெரியவர்.
“ஐயோ! என் பொண்ணு?! என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?!” அவர் குரலில் பதற்றமும், கலக்கமும் நிறைந்திருந்தது.
“அது தெரியல ம்மா. நம்மளை உடனே கிளம்பி வரச் சொல்லி ஹாஸ்பிட்டல்ல இருந்து இப்போ தான் பேசுனாங்க.”
“என் பொண்ணு?! என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகி இருக்கக் கூடாது…கடவுளே!! என் பொண்ணைக் காப்பாத்து…” என்று அவர் போக்கில் புலம்ப,
“இப்போ நான் வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன் மா. எப்படியும் நாளைக்குக் காலைக்குள்ள அங்க வந்துடுவேன். நீ தயாரா இரு. நான் வந்ததும், ரெண்டு பேரும் சென்னை கிளம்புவோம்.”
“சரி ப்பா! நீ சீக்கிரம் வா…” என்றவர் எதையோ சொல்லத் தயங்க,
“என்னம்மா?!” என்றான் மகன்.
“அது வந்து மாப்பிள்ளைக்குச் சொல்லிட்டியான்னு…” சொல்லாமல் அவர் பாதியில் நிறுத்த, அந்தப் பக்கம் மவுனம்.
“கண்ணா?!…”
“இல்லமா சொல்லல…பாசம் இருந்தா அவரே தேடி வரட்டும்.” பட்டென்று மகன் முடித்துவிட, தாயோ லேசாக விசும்பினார்.
அதைக் கண்டுகொள்ளாத மகனோ, “சரி மா…நான் வைக்கிறேன்.” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.
மகன் ஃபோனை வைத்ததும், சற்று முன்பு கேட்ட செய்தியில் ரொம்பவே பயந்து போயிருந்த அவர், உடனே கடவுள் படத்திற்கு முன்பு நின்று, வேண்ட ஆரம்பித்தார்.
“கடவுளே! என் பொண்ணை எப்படியாவது காப்பாத்து! அவளுக்கு ஒன்னும் ஆகி இருக்கக் கூடாது. உன்னைத் தான் மலை போல நம்பி இருக்கேன்.” என்றவருக்கு, மகளின் தற்போதையை நிர்கதியான நிலைமையை நினைக்கையில், கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது.