அடுத்த வாரம் upsc mains தேர்வை எழுதுவதற்காக ஆராதனா யாழி இருவரையும் அதிரும், ப்ரித்வியும் அழைத்து சென்றிருந்தனர்..
தேர்வு முடிந்து புன்னகையுடன் வெளியில் வந்த இருவரின் முகத்திலும் அத்தனை நம்பிக்கை அதிர் கேட்கவும் அடுத்து நேர்முக தேர்விற்கு தயாராக வேண்டும் என்று ஒருசேர கூறி இருந்தனர்.
மெயின்ஸ் முடித்ததுமே சுந்தரலிங்கம் ஆராதனாவிடம் ஏற்கனவே வரன்கள் வந்து கொண்டிருப்பதையும் தேர்ச்சி பெற்று ட்ரைனிங் முடிந்த பிறகு என்றால் தாமதமாகி விடும் என்று கூறிட சூழலை புரிந்து கொண்டவளும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.
அதை அறிந்த அதிர்துடியன் அடுத்த நாளே முரளியின் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்திருந்தான்.
ஆம் முரளியின் தம்பி வசீகரனும் upsc தேர்வை வெற்றிகரமாக முடித்து இப்போது போஸ்டிங் எதிர்பார்த்து காத்திருப்பவன் என்பதாலும் சிறு வயதில் இருந்து அவன் பார்த்து வளர்ந்தவன் கிட்டதட்ட முரளியை போலவே பொறுப்பானவன், நிதானமாக செயல்படக்கூடியவன் என்று அவனை பற்றி ஆதியந்தமாக தெரிந்து வைத்திருப்பதாலேயே அவனை தன் தங்கைக்கு வரனாக அதிர்துடியன் தேர்ந்தெடுத்து இருந்தான்.
அவன் பெற்றோர் முதற்கொண்டு அனைவருக்குமே மாப்பிள்ளையை பிடித்து போக, ‘உனக்கு ஓகேவா ஆரு..??’ என்று அதிர் ஆராதனாவிடம் கேட்டதற்கு,
‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
‘நிஜமாவா…??’ என்று ஆச்சர்யமாக தங்கையை பார்த்தவன்.., ‘இன்னும் வசி கிட்ட நீ பேசவே இல்லையேடா அதுக்குள்ள ஓகே சொல்லிட்ட..??’ என்று கேட்க,
‘அண்ணா சின்ன வயசுல இருந்தே எனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து என்னை சரியா வழிநடத்துற நீங்க கண்டிப்பா என்னோட எதிர்பார்ப்பு புரிந்து எனக்கான பெஸ்ட் தான் தேர்ந்தெடுத்து இருப்பீங்கண்ணா அதுல எனக்கு சந்தேகமே இல்லை..’ என்று கர்வத்தோடு தமயனை பார்க்க,
“ஒன்னும் அவசரமில்லை ஆரு ரெண்டு மாசம் டைம் எடுத்துக்கோ வசி கூட பேசி பாரு உங்க ரெண்டு பேரோட டேஸ்ட், பிடித்தம்…” என்றவனை இடையிட்டவள்,
“அண்ணா அண்ணியை உங்களுக்கு அம்மா தான் தேர்ந்தெடுத்தாங்க.., இங்க எத்தனையோ வருஷ காதல் திருமணங்கள் கூட ரொம்ப ஈசியா தோற்த்துடுது லவ் மேரேஜ்ஜா இருந்தாலும் அரேன்ஜ்ட் மேரேஜா இருந்தாலும் நாம வாழற விதத்துல தான் வெற்றி தோல்வி அடங்கி இருக்கு… எனக்கு நீங்க எப்படி விட்டு கொடுத்து, அன்பா, அனுசரணையா, அதே நேரம் சுயமரியாதையோட வாழனும் சூழலை எதிர்கொள்ளனும்ன்னு சொல்லி கொடுத்து இருக்கீங்க…,”
‘அதனால என் வாழ்க்கையை எப்படி நேர்த்தியா கொண்டு போகணும் என்ற புரிதல் எனக்கு இருக்கு போதாததுக்கு அவரும் என்னோட துறையை சார்ந்து இருக்கிறதால நிச்சயம் அதில் இருக்க கூடிய சேலன்ஜஸ் புரிஞ்சிப்பாரு என்ற நம்பிக்கை இருக்கு’ என்று பேசிக்கொண்டு இருந்த ஆராதனாவை கண்ட வசீ தனக்கும் சம்மதம் என்றும் விரைவாக திருமணத்திற்கு ஏற்ப்பாடு செய்யுமாறு சொல்லி இருந்தான்.
அதை கேட்ட பெரியவர்கள் இருவரையும் பேச சொல்லி தோட்டத்திற்கு அனுப்பி விட்டு போக்குவரத்து, நிச்சய நாள், திருமண நாள் என்று இருதரப்பினருக்கும் ஏற்ற வகையில் கலந்து பேசி அடுத்த மூன்றாவது மாதம் வசீகரன் ஆராதனாவின் திருமணம் என்று முடிவு செய்திருந்தனர்.
*****************************************
அன்று இரவு அதிர்துடியன் அவளுக்கான பாலை நீட்ட ‘வேண்டாம்’ என்று மறுத்தாள் யாழி.
‘அது தான் எனக்கே தெரியுமே அதுக்கு ஏன்டி பால் வேண்டாங்கிற..??’
‘நீங்க முதல்ல குழந்தைக்கு ஒத்துக்கோங்க’
‘குழந்தையா..?? என்ன திடீர்ன்னு..??’
‘திடீர்ன்னு எல்லாம் இல்ல.., முதல்லையே உங்க கிட்ட சொல்ல தான் நெனச்சேன்’
‘என்னன்னு..??’
‘அது நான் அப்போ எதையும் யோசிக்காம உங்க கிட்ட பைவ் இயர்ஸ்க்கு குழந்தை வேண்டாம் சொல்லிட்டேன் ஆனா அது ட்ரெண்டை பொறுத்து இல்லாம தனிப்பட்ட தம்பதிகளின் சூழலை பொறுத்து தீர்மானிக்கபட வேண்டியதுன்னு அப்போ புரியல அதான்..’
‘இருக்கட்டும் ஆனா நமக்கென்ன இப்போ குழந்தைக்கு அவசரம் நீ கலெக்டர் ஆன பிறகு பார்த்துக்கலாம்’ என்று அதிர்துடியன் கூற,
‘என்னங்க விளையாடாதீங்க..???’
‘நான் சும்மா தானேடி உட்காந்திருக்கேன்.., இன்னும் ஆரம்பிக்கலையே’ என்றவனின் குரலில் குறும்பு கூத்தாடியது.
‘அச்சோ அதில்லை’ என்று முகம் சிவந்தவளை இழுத்து மடியில் அமர்த்தி இருந்தான் கணவன்.
யாழியோ இடையில் ஒருவித லயத்தோடு நர்த்தனமாடிய அவன் கரத்தின் ஆதிக்கத்தில் பேச்சு மறந்திருக்க அதிர்துடியனோ தன் முகத்தை மறைத்த கூந்தலை ஒதுக்கி அவள் தோள் வளைவில் நாடி பதித்து ‘இப்போ சொல்லு’ என்றான்.
“என்னங்க அப்பா அம்மால இருந்து அத்தை மாமா வரை எல்லாரும் எதிர்பார்ப்பாங்க இல்ல”
‘மத்தவங்க எதிர்பார்ப்புக்கு குழந்தையா..??’
‘ஏன் இருக்க கூடாதா..?? நாம மட்டுமே தனியா வளர்த்திட முடியுமா எப்படி பார்த்தாலும் அவங்களும் தானே நம்ம குழந்தையை வளர்க்க போறாங்க இப்போ ஆரோக்கியமா குழந்தையை பார்த்துக்க தயாரா இருக்கப்போ நமக்கும் எந்த கமிட்மென்ட்டும் இல்லாதப்போ அனாவசியமா ஏன் நாம தள்ளி போடணும்..’ என்று கேட்டவளுக்கு இப்போது எந்த பியர் ப்ரெஷரும் கிடையாது ட்ரென்ட்ங்கின் கட்டாயமும் கிடையாது குழந்தையின் வரவு பற்றி முழுக்க முழுக்க அவள் சூழலை கொண்டு அவளே தீர்மானித்த ஒன்று..!!
‘கண்டிப்பாஆஅ… மாட்டேன் தான் சொல்லுவேன்’ என்று அவன் உறுதியாக கூற,
‘என்னங்க ஏன் இப்படி..??’ என்று அவள் சிணுங்கவும்,
‘புரிஞ்சிக்கடி’
‘என்ன புரிஞ்சிக்கணும் எல்லாம் புரிஞ்சி தான் பேசுறேன் எனக்காக நீங்க காத்திருந்தது எல்லாம் போதும் இனியும் உங்களை எந்த விதத்திலும் எங்கேயும் விட்டு கொடுக்க மாட்டேன் உங்களை விட எனக்கு …’ என்று அவள் பேசிக்கொண்டே செல்ல,
‘அப்போ நான் தான் காரணம்..!!’ என்று கண்கள் இடுங்க தலை சாய்த்து அவளை பார்த்தவன்,
‘எனக்காக யோசிச்சு தான் மேடம் திடீர்ன்னு குழந்தை வேணும் சொல்லி தேவை இல்லாம எல்லாரையும் இழுத்து விட்டிருக்கீங்க அப்படி தானே..!!’ என்று கேட்க,
‘தன்னை கண்டுகொண்டானே..’ என்று ஒரு நொடி மருண்டவள்,
“ஏன் நீங்க எனக்காக யோசிக்கும் போது நான் உங்களுக்காக யோசிக்க கூடாதா..??” என்று அவள் உரிமை கொடி ஏந்த..,
‘எவ்ளோ பேசுறடி நீ..??’ என்று அவள் இதழ்களை சுண்டி இழுத்து முத்தம் வைத்தவன்,
“நீ எவ்ளோ பேசினாலும் என்ன சொன்னாலும் இப்போ குழந்தை வேண்டாம்ன்னா வேண்டாம்..!!” என்று தன் முடிவை தீர்க்கமாக கூறி இருந்தான்.
********************************************
‘இல்ல முடியாது..!! முடியவே முடியாதுங்க..’ என்று யாழி அடம் பிடிக்க,
‘ஏய் சொன்னா கேளுடி அடுத்து உனக்கு இன்டர்வியூ இருக்கு அப்புறம் ட்ரைனிங் அதுவே எப்படியும் ரெண்டு வருஷம் ஆகிடும் அடுத்து போஸ்டிங்ன்னு எல்லாம் பெரிய ப்ராசஸ் யாழி அதனால எல்லாம் முடிஞ்சு நீ கலெக்டரா பொறுப்பு எடுத்துக்கோ அப்புறம் குழந்தை பத்தி யோசிக்கலாம்’.
‘அது தான் நீங்களே சொல்றீங்களே அது லாங் ப்ராசஸ்ன்னு எனக்கு மட்டும் தெரியாதா என்ன..?? எப்படியும் இன்டர்வியூ முடிஞ்சு ரிசல்ட் வரவே அடுத்த வருஷம் மே மாசம் ஆகிடும் இப்போ இருந்து பார்த்தாலும் இன்னும் ஏழெட்டு மாசம் இருக்கு தானே ‘ என்று கேட்க,
‘ஆம்’ என்றான்.
‘அப்போ அதுக்குள்ள நாம குழந்தை பெத்துக்கலாம் அதுக்கு அப்புறம் மெட்டெர்னிட்டி லீவ் ஆறு மாசம் இருக்கே ‘
‘ஆனா லீவ் முடிஞ்சு இடையில போய் நீ ஜாயின் பண்ண முடியாது யாழி அடுத்த வருஷ பேட்ச்ல தான் நீ ட்ரைனிங் போக முடியும் உனக்கு சீனியாரிட்டி பாதிக்கும் தேவை இல்லாம எதுக்கு ..??
‘என்னங்க பேசுறீங்க நீங்க…?? குழந்தையை விட சீனியாரிட்டி முக்கியமா..?? இப்போ என்ன என் பேட்ச்மெட்ஸ்ல இருந்து ஒன் இயர் நான் பின் தங்கி இருக்க போறேன் அவ்ளோதானே..?? போனா போகட்டும்ங்க இதனால நான் என் குழந்தை கூட இன்னும் ஆறு மாசம் சேர்ந்து இருக்க போறேன் அது எவ்ளோ சந்தோஷமான விஷயம்…!! நான் இன்னும் எத்தனை எக்ஸாம் பாஸ் பண்ணினாலும் எத்தனை ட்ரைனிங் போனாலும் அந்த ஆறு மாசம் திரும்ப கிடைக்காது, நீங்க புரிஞ்சிக்கோங்க’
‘அதை விட்டுட்டு இன்னும் மூணு வருஷம் கழிச்சி நான் போஸ்டிங்ல ஜாயின் பண்ணின பிறகு குழந்தை பெத்துக்கலாம் சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை… இங்க பாருங்க கேரியர்க்காக வாழ்க்கையை அதனுடைய அழகியலை முக்கிய தருணங்களை எல்லாம் இனியும் தொலைக்கிற முட்டாள் தனத்தை செய்ய நான் தயாரா இல்லை’
‘சொன்னா கேளுடி நீ ஜாயின் பண்ணி ஆறுமாசம் போகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அதிர் விடாபிடியாக நிற்க,
‘அதெல்லாம் முடியாது அன்னிக்கு என்ன சொன்னீங்க..??’
‘என்னைக்குடி..??’
‘நான் அஞ்சு வருஷம் கழிச்சு தான் குழந்தைன்னு சொன்னதுக்கு நீங்க என்ன சொன்னீங்க..??’
‘ஓகே சொன்னேன்’
‘அதில்ல அடுத்து என்ன சொன்னீங்க..??’
‘என்ன சொன்னேன்..??’ என்று யோசித்தவன் பின் நினைவு வர, ‘முதல் குழந்தை வளரட்டும் சொன்னேன்’
“அது தான் அதேதான் இப்போ தான் நான் வளர்ந்துட்டேனே”
‘ஏதே..!!’
“ஆமா பாப்பாவா இருந்த நான் உங்க பொண்டாட்டியா ஆனதோட இப்போ கலெக்டரா மாறும் அளவு வளர்ந்திருக்கேனே அது போதாதா..?? இன்னும் எதுக்கு டிலே..?? சும்மா ட்ரைனிங் போஸ்டிங்ன்னு சாக்கு சொல்லாதீங்க.., அது அப்போ புத்தி கெட்டு போய் ட்ரென்ட்டிங் அது இதுன்னு என்னென்னமோ பேசினேன் ஆனா இப்போ உங்களுக்காகவே எனக்கு குழந்தை வேணும்” என்று அவள் உறுதியாக நிற்க
‘யாழி ..’
‘எனக்கும் வார்த்தை ரொம்ப முக்கியம்ங்க..!!’ என்று அவன் வார்த்தையை அவனுக்கே திருப்பி படிக்க அதற்கு மேலும் மனைவியின் ஆசையை மறுக்க முடியாது அடுத்த நான்கு மாதத்தில் பிரஷாந்தியின் மருத்துவமனையில் நின்றிருந்தான் அதிர்துடியன்.
*************************************
“எனக்கு தெரியும் மேன் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் சொல்றவங்க எல்லாம் கடைசில இப்படி தான் புள்ளகுட்டியா பெத்து தள்ளுவாங்க…” என்று தன் எதிரே இருந்தவனை பிரஷா நக்கலடிக்க,
“டேய் இப்போ உன் பொண்டாட்டிக்கு என்ன வேணுமாம்..?? ஒழுங்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொல்லு …” என்று அதிர்துடியன் நண்பனை முறைக்க,
‘பிரஷா ஏன்டி இப்படி பிபி ஏத்துற அவனே லேபர்ஸ் ப்ராப்ளம் முடிச்சிட்டு வந்திருக்கான் தேவை இல்லாம வெறுப்பேத்தாத ஸ்கேன் பண்ணியே குழந்தை எப்படி இருக்குசொல்லு’
‘குழந்தை இல்ல குழந்தைங்க’ என்று பிரஷா புன்னகைக்க..,
‘நிஜமாவா எத்தனை..??’ என்ற அதிர்துடியனின் கேள்விக்குப்ரஷாவோ அவனை நோக்கி ஐந்து விரல்களை நீட்டி இருந்தாள்.
‘வாட்ட்ட்டட்ட்ட்…’ என்று அதிர்ச்சியோடு அவன் பார்க்க,
‘என்னடி சொல்ற நிஜமாவா..??’ என்று முரளி..
ப்ரஷாவோ பேயறைந்தது போலிருந்த அதிர்துடியனின் முகத்தை கண்டு அடக்கமாட்டாமல் சிரிக்க,
‘எதுக்குடி சிரிக்கிற..??’
‘டேய் என்ன நெனச்சிட்டு இருக்கா..??’ என்று அதிர்துடியன் பல்லை கடிக்க,
“இரு இருடா டென்ஷன் ஆகாத..” என்று மனைவி புறம் திரும்பியவன்
“ப்ரஷா விளையாடாதடி ஒழுங்கா பதில் சொல்லு” என்றான்.
அவளோ சிரிப்பை மெல்ல கட்டுபடுத்தி அதிர்துடியனை பார்த்தவாறே ஒரு விரலை மடக்க,
‘நாலா..??’ என்று கேட்ட முரளிக்கு இப்போதும் அதிர்ச்சி குறையவில்லை.
‘இல்லை’ என்பதாக தலை அசைக்க,
“ஏய் என்னடி விளையாட்டு இது..?? எத்தனை குழந்தைங்க வாயை திறந்து சொல்லு” என்று நண்பனின் கலக்கத்தை கண்டு முரளி மனைவியிடம் சிடுசிடுக்க,
ப்ரஷாவோ ‘அப்போ சார் வாயாலா நான் டாக்டர்ன்னு ஒத்துக்க சொல்லுங்க சொல்றேன்…’ என்று கிடுக்கிபிடி போட்டு நிறுத்த,
பொறுமை இழந்து கொண்டிருந்தவனோ “டேய் இப்போ அவ சொல்ல போறாளா இல்லையா..?? என்று அடிக்குரலில் சீறி இருந்தான்.
*****************************************
‘துடியா நீ டென்ஷன் ஆகாத நான் பேசுறேன்’ என்று நண்பனை சாந்தபடுத்தியவன்,
‘பிரஷா கோபத்தை கிளப்பாத ஒழுங்கா பதில் சொல்லு’ என்றான்.
அவ்ளோ இப்போதும் நேரடியாக பதிலளிக்காமல் மீண்டும் ஒரு விரலை மடக்கி ‘மூன்று ‘என்று காட்ட,
நாற்காலியை தள்ளிக்கொண்டு எழுந்த அதிர்துடியன், “போடா ஊருல வேற டாக்டரா இல்லை நான் என் பொண்டாட்டியை அங்க கூட்டிட்டு போய் ஸ்கேன் பண்ணி தெரிஞ்சிக்கிறேன்” என்று கிளம்ப முயல,
‘ஹே நில்லு நில்லு மேன் உடனே கோபம் வந்துடுமே, நிறைய எல்லாம் இல்ல ட்வின்ஸ் அதி..!! ஆண் ஒன்னு பெண் ஒன்னு ஓகே தானே..??’ என்று அவனை கேட்க,
அதற்குள் அறைக்குள் வந்து நின்ற யாழியை தலை முதல் கால் வரை கணவன் வருடிட அவன் பார்வை புரிந்தவளும்,
“நாங்க மூணு பேரும் ஓகேங்க எந்த ப்ராப்ளமும் இல்லை ஜூலை பர்ஸ்ட் வீக்ல டேட் கொடுத்து இருக்காங்க…” என்றதும்
‘வாழ்த்துக்கள் துடி’ என்று முரளி நண்பனை அணைத்து கொள்ள அவனும்
‘தேங்க்ஸ் மச்சி’ என்று அணைத்து கொண்டான்.
‘ஸ்கேன் பண்ணினது நான் தேங்க்ஸ் அங்கயா..??’ என்று அவன் முன் நின்ற பிரஷா ‘பிரசவம் நான்தான் பார்க்கணும் நியாபகம் வச்சிக்கோ..’ என்றிட,
‘ஊருல டாக்டரா இல்ல’ என்று அவனும் எள்ளலாக பார்க்க,
‘என்னை மீறி வேற டாக்டர் கிட்ட போயிடுவியா மேன் நீ..??’
‘டாக்டர் ரெண்டு சண்டை போட்டுக்காதீங்க’ என்று யாழி தான் இருவரிடையே வந்து சமாதனம் செய்ய முயல,
‘ஏன் போகாம..?? அதுக்கு முன்ன நீ போலி டாக்டர்ன்னு ப்ளெக்ஸ் வைக்கணும் நகரு’ என்றான் அதிர்துடியன்.
‘என்னது நான் போலியா..??’ என்று பிரஷா பல்லை கடிக்க,
‘டேய் மச்சி இன்னைக்கு தான் இந்த உண்மையை நீ கண்டுபிடிச்சியா..??’ என்று முரளி சிரிப்போடு அவனுடன் ஹைபை போட்டுக்கொள்ள,
‘என்னங்க நீங்களுமா..??’ என்று ப்ரஷா முரளியை முறைத்திட,
‘நீங்க கவலை படாதீங்க டாக்டர் கண்டிப்பா நீங்க தான் எனக்கு டெலிவெரி பார்க்கணும் அவர் எப்படி முடியாதுன்னு சொல்றாரு நான் பார்த்துக்குறேன்’ என்று பெண்கள் கூட்டணி அமைக்க,
‘அப்படி சொல்லு யாழி !! இத்தனை அவார்ட் வாங்கி இருக்கேன் எத்தனை டெலிவரி பார்த்திருக்கேன் ஆனா இன்னும் என்னை இவன் டாக்டர்ன்னு ஒத்துக்க மாட்டேங்கிறான் சோ உன்னோட டெலிவரிக்கு முன்ன அவனுக்கு டிவோர்ஸ் கொடு…’ என்றிட அதிர்துடியனோ,
‘அப்புறம்’ என்றான் நக்கலாக ,
‘ஏதோ யாழி வாழ்க்கை கொடுத்ததால இப்படி இருக்க இல்ல நம்ம ஊர் ஆஞ்சநேயர் பக்கத்துல தான் குடி ஏறி இருப்ப அதை மறந்துடாத போ மேன்’ என்று புன்னகைத்தவள் யாழியிடம்..,
‘பிரசவ காலத்தில் பின்பற்ற வேண்டியதை கூறியவள் இரவு பகல் பாராமல் எந்த நேரமென்றாலும் தனக்கு அழைத்து எந்த சந்தேகத்தையும் கேட்க தயங்க வேண்டாம்’ என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தாள்.