“ஏன்டா… கிளம்பி கார்ல உக்காந்து இப்படி ராவடி பண்ணிட்டு இருக்க… அந்த கோவிலுக்கு தான் போகணும்… ஒழுங்கா காரை ஸ்டார்ட் பண்ணு…” என கடுப்பாக சொல்லி முடித்தார் விசாலாட்சி.
“நீங்க கார் ஓட்டுல… நான் தான் டிரைவ் பண்ணுறேன்… அதுனால நான் போற கோவிலுக்கு தான்…” என எதிர் வாதம் புரிந்தான் மகன் விஷ்ணு பிரசாத்.
“இப்போ என்ன தான் விஷ்ணு சொல்லவர…” என நொந்துகொண்டு கேட்டார் அன்னை.
“அதென்ன அவினாசில உள்ள கோவிலுக்கு தான் போகணும்… ஏன் இங்கயெல்லாம் கோவிலே இல்லையா…” என அவனும் விடாமல் கேக்க,
“எனக்கு அந்த கோவிலுக்கு தான் போகணும்… உங்க அப்பா அங்க தான் அவர் லவ்வை சொன்னார்… இன்னைக்கு எங்க கல்யாண நாள் வேற அதனால என் இஷ்டம் தான்…” என விசாலாட்சியும் பிடிவாதமாக அவனிடம் பேச,
“அப்போ உங்க லவ் ப்ரொபோஸ் பண்ணுன நாள் அன்னைக்கு தான் அங்க போகணும்… இன்னைக்கு எதுக்கு அங்க போகணும்?…” என விஷ்ணு அடுத்த கேள்வி கேக்க,
விசாலாட்சி, “எங்க கல்யாண நாளுக்கு, நீ ஒரு கிப்ட் கூட வாங்கி கொடுக்கல… ஆனா கேள்வி மட்டும் நல்ல வக்கணையா வரும்…” என அவனை சாட,
“நானே பொறந்ததே உங்களுக்கு பெரிய கிப்ட்… இதுக்கப்பறம் வேற என்ன கிப்ட் வேணும் உங்களுக்கு…” என இன்ஸ்டன்ட் பதில் விஷ்ணு குடுக்க,
அவனின் பேச்சில் வாயை கையால் பொத்திக்கொண்டார் விசாலாட்சி.
இவர்களின் வாதத்தில் குறுக்கிடாமல், கால் மணி நேரமாக தங்களின் கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் நாதனும், சூர்யாவும்.
இப்போது சூரியா, நாதன் காதில் “பாவம் மம்மி… வாயடிச்சி போயிட்டாங்க அந்த போலீஸ்காரன் பேச்சுல… ஏதாவது உங்க வொய்ப் சப்போர்ட் பண்ணி பேசுங்க… உங்க கல்யாண நாள் வேற…” என சூரியா, நாதனிடம் எடுத்து சொல்ல,
“டேய்… அமைதியா வேடிக்கை பாக்குற தான் நமக்கு நல்லது… அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்… இல்லனு வையேன் ரெண்டும் சேர்ந்து நம்ம தலையில மொளகாய் அரைச்சிடுவாங்க…” என மெதுவாக சூரியின் காதில் கிசுகிசுத்தார் நாதன்.
“தாங்கள் சொல்வதில் ஒரு மாற்று கருத்தும் இல்லை நாதன் அவர்களே…” என சூரியும் சலாம் போட்டு அதை ஆமோதித்தான்.
“பேசாதடா மவனே… அப்பறம் நம்மகிட்ட திரும்பிடுவாங்க…” என மீண்டும் வாயில் கை வைத்து அவனிடம் நாதன் முணுமுணுக்க,
இவர்கள் முணுமுணுப்பை கேட்ட விசாலாட்சியோ, “ஏங்க நாதன்… உங்க பையன் என்ன பேசிட்டு இருக்கான்… நீங்க என்ன ஒன்னும் பேசாம கன்னத்துல கையை வச்சிக்கிட்டு வெடிக்க பாத்துட்டு இருக்கீங்க…” என கணவனிடம் கேட்டு, ” உன் பிரெண்டை பேசவிட்டுட்டு, உனக்கென்னடா அவருகிட்ட கிசுகிசு வேண்டிக்கிடக்கு…” என சூர்யாவையும் பரய்ட் எடுத்தார்.
“இப்படி மாட்டுனோமேடா சூரி…” என அவர் சூரியாவை பார்க்க, அவனும் வாய் பொத்தி நான் இல்லை என்பது போல் மண்டையை ஆட்டினான்.
“நாதன் உங்களை தான் கேக்குறேன்… நீங்க என்ன அவனை லுக்கு விட்டுட்டு இருக்கீங்க…” என மகனிடம் போராட முடியாமல் கணவனிடம் பாய,
“க்கும்… அது வந்து விசா… நீங்க அம்மா, பையன் பேசுறதுக்குள்ள என்னைக்காவது நான் இடையில வந்திருக்கேன்னா… நீயே சொல்லு?… ஆனா நான் எப்போதும் உன் பக்கம் தான்னு உனக்கு தெரியாத என்ன?…” என கணவனாக மனைவியை குளிர்வித்து பதில் சொல்ல,
“இதை ஒன்னு சொல்லிடுங்க ஆஊன்னா…” என அவரிடம் நொடித்து, மீண்டும் விஷ்ணுவின் புறம் திரும்பினார் விசாலாட்சி.
“ஆண்டவரே… என்ன ஒரு அந்தர் பல்டி…” என நமுட்டு சிரிப்புடன் மீண்டும் நாதன் காதில் சூரியா சொல்ல,
நாதன், “டேய் அடங்குடா… இதுலாம் உனக்கு கல்யாணமானத்துக்கு அப்பறம் புரியும்… அமைதியா இரு இப்போ… திரும்ப நம்ம பக்கம் காத்து வீசிட போகுது… அப்பறம் நான் பாவம்…” என பயந்த போல் சூரியிடம் சொல்ல,
“ரைட்டு… நீங்க பாவம்…” என்று அப்பாவியாய் அவரிடம் கேக்க,
“இல்லையா பின்ன… விசா கர்ப்பமா இருக்கும் போது, நாதன் எனக்கு உங்களை மாறி தான் பையன் வேணும்னு சொன்னா, ஆனா பாரு சாட்சாத் அவளை மாறியே பெத்துட்டு இப்போ மல்லுக்கு நிக்குறா… பொண்டாட்டியைவே நம்மால சமாளிக்க முடியல, இதுல அவளோட ஜெராக்சையும் சேர்த்து எப்படி சமளிக்குறது… நீயே நியாயத்தை சொல்லு…” என நாதன், சூரியிடம் கேக்க,
“ஹா ஹா…டாடி…” என சத்தமாக சிரித்துவிட்டான் நாதனின் பேச்சில்,
அங்கே தான் பிடித்த முயலுக்கு தான் மூணு கால் என வெட்டும் பார்வை பார்த்துக்கொண்டிருந்த தாயும் மகனும், சூரியாவின் சிரிப்பில் அவர்களின் தலை தானாக அவனிடம் திரும்ப, அவனோ திருதிருவென முழித்து நாதனை பார்க்க, நாதனோ உஷாராக மனைவியை மட்டுமே கடிவாளம் கட்டிக்கொண்டு பார்த்தார்.
“என்னடா சிரிப்பு… உனக்கு நைட் டின்னர் பிரியாணி சாப்பிடணும்னா… ஒழுங்கா உன் நண்பண்ட, நான் சொல்லுற கோவிலுக்கு போக சொல்லு… இல்லனா பழைய சோறு கூட உனக்கு கிடையாது…” என விசாலாட்சி சூர்யாவிடம் பேரம் பேச,
விஷ்ணுவோ அலட்டிக்கொள்ளாமல் இருக்க,
சூரியாவோ, “கடைசில காத்து என்கிட்ட வீசிட்டே…” என சோகமாக நாதனை பார்க்க, “அநியாயமா மாடிட்டியேடா மவனே…” என்ற பார்வையை பார்த்து வைத்தார் நாதன் இப்போது சூரியாவை.
அவனின் பார்வையை பார்த்த விசாலாட்சியோ, “ஹ்ம்… சூரி சீக்கரம்… நேரமாகுது பாரு…” என அவனை விரட்ட,
“ஆட்டுக்கு மஞ்சத்தண்ணியை ஊத்திட்டு, இதுல அவசரம் வேற, வெட்டு வாங்க போறது நானு…” என கணவன், மனைவியை பார்த்து முறைத்துக்கொண்டே,
“டேய் விஷ்ணு… என்ன பிரச்சனை உனக்கு… அது தான் மம்மி ஆசை படுறாங்கள்ல அதுக்காக இல்லனாலும் உன் நண்பன் எனக்காகவாது கொஞ்சம் கருணை காமிடா ராசா… இல்லனா என் வயிறு உனக்கு சாபம் விட்டுடும்… மீ ரொம்ப பாவம்டா போலீசு… அதைவிட என் வயிறு இப்போவே பிரியாணிக்காக தவமிருக்குடா… ரொம்ப புண்ணியமா போவும் உனக்கு… கொஞ்சம் மனசு வைடா தங்கக்கட்டி…” என அவன் பாட்டுக்கு நண்பனை பார்த்து கெஞ்சியவாறு சொல்ல,
“அவங்க பிரியாணி வேணாம்… நான் உனக்கு தலப்பாக்கட்டில நல்ல பிரியாணி, லெக் பீஸ் கூட சேர்த்து வாங்கி தரேன்…” என இப்போது விஷ்ணு பேரம் பேச,
“மம்மி பேச்சை தான் கேக்கணும் சூரி…” என விசாலாட்சி மிரட்டி சொல்ல,
“டேய் என் பேச்சை கேக்கலைன்னா… அப்பறம் நீ கடலைபோடுற பொண்ணுகிட்ட எல்லாம் நான் உன்னை போட்டு குடுத்துவேன்… பாத்துக்கோ…” என விஷ்ணுவும் பதிலுக்கு பேச,
சூரியாவோ, ” டாடி எப்படியாவது காப்பாத்துங்க… மீ யுவர் பெஸ்ட் பையன்…” என நாதனிடம் சரணடைய,
“விசா அமைதியா இரு…” என மனைவியிடம் சொல்லி, “விஷ்ணு போதும் விளையாட்டு… நேரமாகுது… அப்பறம் டிராபிக் ஜாஸ்தியாயிடும்… வேணு வீட்டுல தனியா இருப்பான்…” என இவ்வளவு நேரம் இலகுவாக இருந்த நாதன், மகனிடம் இப்போது கொஞ்சம் அழுத்தமாக சொல்ல,
அதற்கடுத்து விஷ்ணுவும் திரும்பி அவரை பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் காரை கிளப்பினான்.
“பிஃராடு போலீஸ், மம்மி இவன்… உங்ககிட்ட இவ்வளோ வாய் பேசுனவன், டாடி சொன்னதும் என்னன்னுகூட கேக்கல பாருங்க…” என நண்பனை பற்றி புகார் வாசிக்க,
“ஆமாம்டா சூரி… இதுங்க ரெண்டும் கூட்டு களவாணி தான்… வெளில அப்படியே ஒண்ணுமே தெரியாத மாறி இருந்துக்க வேண்டியது…” என விசாலாட்சியும் ஒத்து ஊதினார்.
இவர்களின் பேச்சை கேட்ட தகப்பனும், மகனும் மெலிதாக சிரித்துக்கொண்டனர்.
இவர்களை நோட்டம் விட்ட சூரியா, “மம்மி ரெண்டும் வாய்க்குள்ளவே சிரிக்குறத பாருங்க…” என போட்டு குடுத்து, “இதுல டாடி வேற என்னலாம் சொன்னாங்க தெரியுமா…” என வரிசையாக நாதன் சொன்னதையெல்லாம் தனது மம்மியிடம் ஒப்பித்தான் சூரியா.
“இந்த மனுஷனை பாத்தியாடா சூரி… எவ்வளோ வாய் பாரு… இதுல இவனை என்னோட பிரதின்னு சொல்லியிருக்காரு பாரு…” என விசாலாட்சி கணவனை முறைத்து பார்க்க,
அவரோ சூரியாவை முறைத்து பார்த்தார்.
இப்படி பல கலகலப்புகளுக்கு பஞ்சமின்றி ஒரு வழியாக அவினாஷியப்பரை தரிசிக்க வந்து சேர்ந்தனர்.
—–
தரிசனமெல்லாம் திருப்பிதியாக முடித்து, பிரகாரத்தை நால்வரும் மூன்றாவது சுற்றி வர, அப்போது யாரோ தன்னை பார்ப்பது போல் இம்முறையும் தோன்ற, சுற்றியும் முற்றியும் பார்க்காமல், சில அடிகள் நகர்ந்து, போன் பேசுவது காதில் வைத்துக்கொண்டு ஒரு ஓரமாக தூணிற்கு அருகில் சென்று மறைந்தான் விஷ்ணு.
கேள்வியாக பார்த்த சூரியாவை, போனை காட்டி, பேசிவிட்டு வருவதாக சைகை செய்து காமிக்க, அவனும் தலையை ஆட்டிவிட்டு முன்னே சென்றான்.
“ஹப்பாடா… மூணு ரவுண்டு முடிஞ்சி கிளம்பிட்டாங்க…” என ஆசுவாசமாக அவன் சென்றதை உறுதிப்படுத்தி விட்டு தோழியிடம் தூணிலிருந்து வெளியில் வந்து சொன்னாள் சிந்து.
வெளியில் வந்தவளை பார்த்த விஷ்ணுவோ, “இவளா… இவ எதுக்கு இப்படி என்னை மறஞ்சி பார்த்தா?… என்ன தப்பு பண்ணுறா?…” என யோசித்துக்கொண்டே அவளை ஊன்றி கவனித்தான்.
“அவங்க பாக்கவே இல்ல… நீ தான் பயந்து ஒளிஞ்ச… சரி வா போலாம்…” என வித்யு, சிந்துவை அழைக்க,
சிந்து, “நோ நோ… நீ முன்னாடி போயி அவங்க எல்லாரும் கிளம்பிட்டாங்களான்னு பாத்துட்டு எனக்கு கால் பண்ணு… நான் அதுக்கப்பறம் வரேன்…” என சொன்னாள்.
“அவங்க பேமிலி ஆஹ் வந்திருக்காங்க… உன்கிட்ட காசெல்லாம் கேக்க மாட்டாங்க… நீ ஒழுங்கா வா… நம்ம கிளம்பலாம்… காசு இல்லனு சொன்னாலும் அவங்க ஒன்னும் சொல்ல போறது இல்ல…” என வித்யு விளக்க,
“வேணாம்… வேணாம்… ப்ளீஸ் வித்யு… பணம் தரேன்னு வீரப்பா சொல்லிட்டு இப்படி குடுக்காம அவங்களை பாத்து மறஞ்சி நிக்குறேன்… இதுவே நான் பண்ணுறது ரொம்ப தப்பு… ப்ளீஸ் நீ போயி பாத்துட்டு சொல்லு…” என கோரிக்கை விடுத்தாள் சிந்து.
“என்னோட பணத்தை குடுக்குறேன்னு சொன்னாலும், அம்மணி உடனே நோ சொல்லிடுவ… என்னமோ பண்ணு…” என திட்டிக்கொண்டே முன்னே சென்றாள் வித்யு.
இவர்களின் சம்பாஷணை புரியாவிட்டாலும், அவளின் தோழி மட்டும் தனியே செல்வதை பாத்த விஷ்ணுவும், தன்னை பார்த்து தான் விட்டு ஒளிந்திருக்கிறாள் என்பது புரிய, கொஞ்சம் சுவாரசியம் வர பெற்றவனாய், என்னவென்று தெரிந்துகொள்வதற்காக, அவள் மறைந்து நின்ற தூணின் எதிர் பக்கம் மெதுவாக வந்து நின்று, “என்னைய எதுக்கு இப்படி மறஞ்சி நின்னு பாத்துட்டு இருந்த…” என திரும்பி நின்ற அவளிடம் சத்தமாக விஷ்ணு கேக்க,
அவளிற்கு பின்னாலிருந்து வந்த சத்தத்தில், தூக்கிவாரி போட, பதறி திரும்பி பார்க்க, கைகளை கட்டிக்கொண்டு தீர்க்கமாக அவளை பார்த்து நின்றான் விஷ்ணு பிரசாத்.
அவன் இப்படி வந்து நிற்பான் என எதிர்பாராததால், என்ன சொல்லுவதென்று தெரியாமல் அதிர்ச்சியில் கண்கள் பெரிதாக விரிய முழித்து நின்றாள் சிந்து.
அவளின் நிலை புரிய, வேண்டுமென்றே “உங்கிட்ட தான் பேசுறேன்…” என்றான் விஷ்ணு.
“நீ… நீங்க… சா… சார்ர்ர்ர்….” என பேச வார்த்தை வராமல் அவள் திக்க,
“என்ன பேச்சு வர மாட்டுது… என்ன தப்பு பண்ணுற…” என அவன் விசாரணை செய்ய,
சிந்து, “சார்… நோ நோ… இல்ல இல்ல…” என பதறி பதில் சொல்ல,
விஷ்ணு, “இப்போ பேசும் போது மட்டும் வாய் திக்குது… அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அட்வான்டேஜ் அப்படி இப்படி பேசுன… அடுத்து என்னைய பாத்துட்டு, ஓடி வந்த, இன்னைக்கு எதுக்கு ஒளிஞ்சி பாக்குற…” என அனைத்தையும் கேக்க,
“சார் அது…” என பெண்ணவள் இழுக்க,
“பச்… என்ன இழுத்துட்டு இருக்க… எதுக்கு இப்போ என்னைய பாத்து மறைஞ்சு நிக்குற… என்ன தப்பு பண்ணுற ஒழுங்கா சொல்லு…” என அவன் மிரட்டி பேச,
“என்ன?…” என்று கொஞ்சம் அதிர்ந்து, அதனை காட்டாமல் அவளை ஆராய்ச்சியாய் பார்க்க,
அவனின் பார்வையில், அவளின் தலை தன்னால் கவிழ,
அவனிடம் சட்டென்று ஒரு ரீங்காரமாய் அவளின் பேச்சு காதிலொளிக்க, குறுகுறுப்பாக அவளை பாத்துகொண்டே, “போலீஸ் ஆஹ் பேசவேணாம் னா?…” என அவன் இழுத்து கேட்க,
“நீங்க என்கிட்ட ரொம்ப போலீஸ் ஆஹ் பேசுறீங்க… அதுனால தான் எனக்கு பேச்சு திக்குது…” என அவனை பார்க்காமல் அவள் பதில் சொல்ல,
“ஆஹான்… அப்போ அன்னைக்கு ஹாஸ்பிடல் பேசுனது என்னவாம்…” என அவன் சாவகாசமாக கேக்க,
“ஆஹ்… அது… அப்போ நீங்க போலிஸ்ன்னு தெரியாது…” என்றாள் பதிலாக,
விஷ்ணு, “ஏன் போலீசா இருந்தா பேச மாட்டியா?…”
“இல்ல இல்ல… அப்படி இல்ல…” என அவசரமாய் அவனை பார்த்து மண்டையை ஆட்டி சொல்ல,
“அவளின் முக பாவங்களை கவனித்துக்கொண்டே, “அப்போ… வேற எப்படியாம்…” என வினா எழுப்ப,
“நீங்க அன்னைக்கு என்னை காப்பாத்துனதுனால என்னவேனா பேசணும்னு இல்ல… நீங்க அப்படி பேசி இருக்க கூடாது தானே…” என அவள் அவனிடமே, அவன் பேசியதற்கு நியாயம் கேக்க,
“ம்… இன்டெரெஸ்ட்டிங்…” என வாய்க்குள் முணுமுணுத்து, “அப்போ எப்படி பேசணும் சொல்லி தரியா?…” என இவனும் அவளிடமே மாற்றி கேக்க,
அவனின் கேள்வியில் திருதிருவென முழிக்க,
“ஓ மை காட்… இந்த சுண்டக்கா திடுதிருன்னு முழிச்சே என்னமோ பண்ணுறாடா நம்மள…” என மனதில் நினைத்து, வெளியே “என்ன முழிக்குற… மஷ்ரூம் கண்ணை வச்சிக்கிட்டு…” என்று அவளிடம் கேக்க,
“ஹான்… சார்…” என முழித்தவாறே கேக்க,
“சார் தான்… நீ இன்னும் அன்செர் பண்ணலையே…” என்று அவன் மீண்டும் அவளிடம் கேக்க,
“என்ன அன்செர் பண்ணனும்…” என கீழே குனிந்துகொண்டு கேக்க,
அவளின் செயலில், சுவாரசியம் கூட, “க்கும்… அப்போ என் முகத்தை பாத்து பேசுனாலும், பேச்சு வர மாட்டுதோ…” என இவன் கேக்க,
அவள் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க,
“இப்படி பாத்து பேசணும்… எங்க இப்போ பதில் சொல்லு பாக்கும்…” என அவளை மேற்கொண்டு பார்த்து சொல்ல,
அவளிற்கு பேச்சு வராமல் சண்டித்தனம் செய்ய, “என்னை விடேன்…” என அவளின் கண்கள் கெஞ்ச,
என்னோவோ இன்னும் அவளிடம் விளையாடி பார்க்க தோன்ற, “ஆமா… என்னோட அக்கௌன்ட் நம்பர் வேணும்ன்னு கேட்டு விடாம ஒன்னு விட்டு ஒரு நாள் மெசேஜ் பண்ணிருந்த… அப்பறம் எங்க ஒரு வாரமா காணும்…” என விஷ்ணு அவளிடத்தில் கேக்க,
அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், அவனின் கேள்வியில் மனம் சுருங்க, அவளின் தலை தானாக கவிழ்ந்தது.
அவளின் முகத்தில் வந்து போன வருத்தத்தை பார்த்தவன், “ஒய்… என்ன மண்டைய குனியுற… இதுக்குதான் அப்போ என்னைய பாத்து ஒளிஞ்சியா?…” என அவன் சரியாக கணித்து கேக்க,
அவளின் தலை ஆமென்று ஆடியது.
“இங்க பாரு… என்னை பாக்கணும்னு இப்போதான் சொன்னேன்…” என அவன் மீண்டும் சொல்ல,
“ப்ளீஸ் சார்…” என தலையை நிமிர்த்தாமல் சொன்னாள் மாது.
அவளின் வருத்தம் நிறைந்த குரல், மனசில் பதிய, “நீ தான் பணம் தரேன்னு சொன்ன… இப்போ பணத்தை குடுக்காம மறஞ்சிக்குற… என்ன சொல்லு…” என அவன் கேக்க,
“உங்களுக்கு குடுக்க வச்சிருந்த பணம், வீட்டுல ஒரு அவசரம்னு அனுப்பிட்டேன்… இப்போ இங்க கோவிலை உங்களை பாக்கவும் எங்க பணம் கேட்ருவீங்களோன்னு ஒரு பயம்… அது தான் மறைஞ்சிட்டேன்… உங்களுக்கு கண்டிப்பா நெஸ்ட் மன்த் சேலரி வந்ததும் குடுத்துருவேன்…” என உண்மையை சொல்லிவிட்டு அவனை பரிதவிப்புடன் நம்பேன் என்ற பார்வை அவள் பார்க்க,
அவளின் விழிகளில் இருந்த பரிதவிப்பு, அவனில் பாதிக்க, என்னவோ புதிதாய் தெரிந்தது அவனின் இந்த நிலைமை அவனுக்கே, அவனிடமிருந்து பதில் வராமல் போக,
“சார்… நான் உங்க பணத்தை கண்டிப்பா குடுத்துவேன்…” என அவன் அமைதியை பார்த்து, அவள் அவனிடம் மீண்டும் சொல்ல,
“ம்ம்… கண்டிப்பா… வாங்கிட்டு தான் நானும் விடுவேன்…” என அவளின் கண் பார்த்து பதில் தந்தான்.
“கண்டிப்பா கொடுத்துடுவேன் சார்…” என உறுதியளித்தாள் பெண்ணவள்.
“ஒகே… பாக்கலாம்…” என சொல்லிவிட்டு அவன் நகர,
“சார்… அக்கௌன்ட் நம்பர் குடுத்துட்டு போங்க…” என அவசரமாய் அவள் கேக்க,
“நீ பணம் சேர்த்துட்டு கால் பண்ணு… அப்பறம் பாக்கலாம்…” என அவளிடம் சொல்லிவிட்டு அதற்கடுத்து நிற்காமல் அவன் சென்றான்.
அவன் சென்றதை பார்த்துவிட்டு, “ஹப்பா…கொஞ்சம் பரவால்ல… எப்படியோ இன்னைக்கு தான் கொஞ்சம் முசுடு போல இல்லாம கொஞ்சம் நல்லமாறி பேசிருக்காங்க ப்பா…” என நினைத்துக்கொண்டே மீண்டும் ஒருமுறை கடவுளை தரிசிக்க சென்றாள் சிந்து.
அவினாஷினாலே இந்த சுண்டக்கா மண்டையில வரான்னு தான் வேணாம்னு சொன்னேன்… இப்போ பாரு அவளே நிக்குறா… என விஷ்ணு முணுமுணுத்துக்கொண்டே கோவிலை விட்டு வெளியேவர, அவனை எதிர்கொண்ட சூரியோ, “என்னடா இவ்வளோ நேரம் எந்த காய் கூட பேசிட்டு இருந்த?…இல்லனா ஆஃபீசியல் ஆஹ்…” என கேள்வியாக வினவ,
விஷ்ணு, “என்ன காய் ஆஹ்…” என்ன புரியாமல் சூரியாவை பாக்க,