எங்கு காணிலும் அமைதி, இரவு நேரம் மிதமான வாடை காற்று வீச. அதனை அனுபவித்த வாரே அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்,ஈஸ்வர் – வானதி,அருணகிரி – அகிலா தம்பதியினர்.
திருமண நிகழ்வில் போட்ட ஆட்டத்தில் இளசுகள் சோர்ந்து போயி தனது கூட்டுக்குள் சுருண்டு கொண்டது.
கடமைகள் முடிந்த களிப்பில் பெரியவர்களுக்கு உறக்கம் பிடிக்கவில்லை போலும். நால்வரும் அமர்ந்து கதை பேச தொடங்கி விட்டனர்.
“அப்பாடி நல்லபடியா எல்லாம் முடிஞ்சுது, சொத்தையும் பிரிச்சு கொடுத்தாச்சு.இனி சிவனேனு இருக்க வேண்டியது தான்” பெரும் பாரம் நீங்கிய நிம்மதியில் ஈஸ்வர்.
“நான் கூட ரொம்பப் பயந்தேன் எங்க கொழுந்து உள்ர புகுந்து பேசி வச்சுடுவாரோன்னு”, வானதி.
“அண்ணி அவன் கன்னிகா, சித்ரா கிட்ட பேசி இருக்கான்.
‘என்ன வேணுனாலும் உங்க தம்பிங்க கிட்ட கேட்கனும், இல்லாத பட்சத்துல சொத்தை உங்களுக்கே எழுதி வச்சுடுவேன்னு மிரட்டி’ இருக்கான்” அருணகிரி அலுத்துக் கொண்டார்.
“இது எப்போங்க”, அகிலா.
“நேத்து தான்… உங்க அப்பா அவர் பிரியத்துக்கு ஸ்வாமிக்கு எழுதி வச்சார். நான் என் பிரியத்துக்கு அதை உனக்கு எழுதி வைப்பேன்னு சொல்லி இருக்கான்” தம்பியை எண்ணி சிரித்த வாரே ஈஸ்வர் சொல்ல.
அனைவர் முகத்திலும் புன்னகை “சரி அவனை விடுங்க அவனைப் பத்தி தான் தெரியுமே” என்ற ஈஸ்வர்.
“என்ன வானதி விமலா பொண்ணு அம்மா அழுத மாதிரி இருந்துச்சு” காலையில் வேலையின் இடையில்.அவர் தனது மனைவியிடம் பேசியதை பார்த்துக் கொண்டு தான் இருந்தார் ஈஸ்வர்.
சரி கோபத்துல தான் வந்திருக்குனு அவங்க நெனைச்சு கிட்டாங்க, ஆனா இங்கனயே இருக்குற முடிவு தெரியாது போல விசு சொல்லி தெரிய வந்து இருக்கு அதான் சம்பந்தி ஒரே அழுகை”
“இந்தக் காலத்துப் பிள்ளைங்களை என்ன சொல்றது. பாவம் அந்தம்மா ஒத்த பொம்பள” சிறு கோபத்துடன் அருணகிரி.
“அதைச் சொல்லு அகிலா இதுங்களைக் கொண்டே கொழுந்தும் பானுவும் சண்டை கட்டிக்கிறாங்க” பெரும் கவலையாக வானதி பேசினார்.
சில நாட்களாகப் பானுமதி அதிகமே அழுது விட்டார். அதனை எண்ணி அகிலா,வானதி இருவருக்குமே வருத்தம்.
சுயத்தைக் கொண்டு நின்றாலும் உறவுகளையும், குடும்பத்தையும் தாங்கி நின்ற பானுமதியை இருவருக்குமே நிரம்பப் பிடிக்கும் அல்லவா.
“அதெல்லாம் வணங்கா பார்த்துக்குவான் வானதி. ஒரு முறை பேசிட்டான் இனி பிள்ளைங்க வாழ்க்கையை அதுங்க தான் பார்த்துக்கனும்.
இதுக்கு மேல எது நடந்தாலும் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பான் உள்ர போக மாட்டான்” தனையனை கணித்தவாறு சொன்னார் ஈஸ்வர்.
“அண்ணன் சொல்றது சரிதான் அண்ணி எங்கிட்டயும் அதே தான் சொன்னான்”அருணகிரியும் வணங்காமுடியின் நிலையைச் சொல்லி வைத்தார்.
“அவருக்கு அதிகம் கோபம் வர்றதே பானுவை கொண்டு தாங்க” அகிலா அருணகிரியிடம் சொல்ல மூவரும் அமைதியாக அதனை ஏற்றனர் உண்மையும் அது தானே.
“இரண்டு தரவ நோவு கண்டு படுத்துருச்சு பானு அதான் கொஞ்சம் பயந்துட்டான்” ஈஸ்வர் சரியாகச் சொன்னார்.
“என்னவோ அதுங்க.. அதுங்க… வாழ்க்கை அதுங்க கையில”, அருணகிரி பெருமூச்சுடன் முடித்தார்.
“நம்ப வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் இதுங்க வாழவே முடியாது” வானதி சிறு கர்வமாகச் சொன்னார்.
“கண்டிப்பா..க்கா!.. இதே வீட்டுல எத்தினி சண்டை வந்துருக்கு அதையெல்லாம் நம்பக் கடந்த மாதிரி இதுங்க கடக்குமா?” கேள்வி போல் அகிலாவும்…
“அட! ஏன்மா? பேசி பழகுனா தானே சண்டை கட்ட இதுங்க தான் பழக ஒரு எல்லை கோடு வச்சுக்கிட்டு இருக்குங்களே” என்றார் ஈஸ்வர்.
அவர் சொல்வதும் சரிதானே இப்பொழுது தான் விமலா சற்று பேசி பழகுகிறாள். மீனுவும் ஓர் எல்லைக்குள் நின்று பழக எங்கிருந்து இவர்கள் உரிமையாகப் பேச? சண்டை பிடிக்க?.
“அதைச் சொல்லுங்க” என்றார் வானதி. இவ்வாறு பேச்சு அவர்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, வாழ்ந்த கதை என்று போக இனிமையாக நீண்டது இவர்களது இரவு.
*******
ஸ்வாமிநாதன் அறையில்…….
அனு தூங்கிருக்க மீனு ஸ்வாமிநாதன் மடியில் படுத்துக் கொண்டு இன்றைய திருமண நிகழ்வை பற்றிப் பேசி கொண்டு இருந்தாள்.
“ஸ்வாமி இன்னைக்குச் செம ஜாலியா இருந்துச்சுல ? நான் இந்த மாதிரி ட்ரடிஷனல் மேரேஜ் பார்த்ததே இல்லை ரொம்ப ஹாப்பி” முகம் முழுக்கப் பிரகாசமாகப் பேசும் மனைவியை மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஸ்வாமிநாதன்.
தகப்பன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும்,அவர் பேசிய ஒவ்வொரு பேச்சுக்கும் தாய் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது.
நிறைவான செல்வம், நல்ல வேலை, கண்ணனுக்கு அழகான மனைவி, தன்னை ஆள வந்த மகளென நல்ல வாழ்க்கையை நாம் தான் சரியாகக் கொண்டு செலுத்த வில்லையோ? என்ற எண்ணம் ஸ்வாமிநாதனுக்கு சில நாட்களாக அதிகம் வந்து போனது.
“ப்ச்… ஸ்வாமி என்ன யோசனை?” என்றவள் அவன் தாடையைப் பிடித்துத் தன்னை நோக்கி திருப்ப.தனது யோசனையில் இருந்து கலைந்தவன் அவள் நெற்றி முட்டி.
“பேசவே காசு கேட்குற என் பொண்டாட்டி பேசிக்கிட்டே இருக்காளேன்னு பார்த்து வச்சேன்” கணவனது பேச்சில் புன்னகைத்தவள்.
“ஸ்வாமி உங்க அப்பா அம்மாவை பார்த்துக்குற மாதிரி என்னை பார்த்துக்கோங்க ப்ளீஸ்” என்க.
“அதெல்லாம் வர மாட்டாங்க, ஆனா இனி அடிக்கடி வந்து போவாங்க” என்றதும் அமைதியாகி போனாள்.
இருவரின் மௌனம் கொண்ட மனமோ ஏதேதோ எண்ணி ஒரு புள்ளியில் இணைந்து நின்றது.
காலம் சிறு மாற்றத்தை கொடுத்து பெரும் நம்பிக்கையை விதைத்து நின்றது இவர்கள் வாழ்வில்.
**********
விசுவின் அறையில்…..
சற்று முன் கூடிய கூடலில் பெண் களைத்து போய் கணவனது நெஞ்சில் இளைப்பாறியது “விம்மி” என்றவன்,
அவளது முகத்தை நிமிர்த்த அவனது கைகளை விலக்கி மீண்டும், அவனது நெஞ்சில் புதைந்து கொண்ட பெண்ணை பார்த்து சத்தமில்லாமல் சிரித்து இறுக்கி கொண்டான் விசு.
மணமாகி ஓர் இரு நாள் என்பது போல் இருந்தது மனைவியின் செயல் “மாற்றம் வாழ்க்கையில இருக்க வேண்டியது தான்,ஆனா இது ரொம்ப ஓவரா இருக்கே என்னால தாங்க முடியலம்மா” கணவனது கேலியை கண்டு கொண்டவள்.
படுத்த வாக்கிலே நெஞ்சில் குத்தினாள். அதில் உரக்க சிரித்தான் விசு .அவனது சிரிப்பில் எழுந்து அமர்ந்தவள் விசுவின் கையேடு கை கோர்த்து.
“நான் எதிர் பார்க்கவே இல்ல கடையை உங்களுக்குக் குடுப்பாங்கனு”
“நான் எதிர் பார்த்தேன் அகிலாம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க இனி அவங்க நம்பப் பொறுப்புன்னு”
“புரியுது விசு”
“இத்தனை நாள் விட்டாச்சு இனி அவங்களைக் கவனிக்கனும்” உணர்ந்து சொன்னான் விசு.
“கண்டிப்பா… நான் இங்கையே இருந்திடவா” பெரும் ஆர்வம் கொண்டு ஏக்கமாக கேட்டது அரிவை பெண்.
“நானே இப்போ அந்த ஐடியால தாண்டி இருக்கேன்” என்ற கணவனை இனிமையாக அதிர்ந்து பார்த்தாள் விமலா.
“என்ன விசு சொல்றீங்க” குரலில் துள்ளலோடு கேட்டாள்.
“பெரியப்பா இங்க வர சொல்றார். நான் இருக்கும் போதே உன்னை தொழிலுக்குப் பழக்கி விடுறேனு சொல்றார்”
“அப்புறம் என்ன விசு”
“உடனே எல்லாம் செய்ய முடியாதுடி. உன்ன மாதிரி சடன்னா வர முடியுமா? அங்க செட்டில் பண்ணிட்டு தான் வரனும்”
“அதுவும் சரி தான்…. அம்மாவும் இங்க வர போறாங்க பெரிய அத்தைகிட்ட பேசிட்டு இருந்தாங்க”
“நம்ப இங்க வந்துட்டா அவங்களைத் தனியா விட முடியாது. இனி அவங்க நம்பப் பொறுப்பு வீடு பார்க்க சொல்லி இருக்கேன்”
“ஹ்ம்ம்!….உங்களுக்கு நல்ல அப்பால விசு”
“கண்டிப்பா”
“ப்ச்…” எனக்கு அந்த வரம் இல்லையே” என்ற சலிப்பு பெண்ணுக்கு.
“என்னம்மா”
“குழந்தை மட்டும் இருந்தா இப்போ நம்ப லைப் செம ஹாப்பியா இருக்கும்”
“ஹ்ம்ம்!… கண்டிப்பா வரும் விம்மி” என்றவன் குரல் அத்தனை நம்பிக்கையாக ஒலித்தது.
இனி வரும் காலம் முழுமையும் நம்பிக்கை கொண்டே கடந்து இவர்கள் குழந்தை வரம் பெறட்டும்.
******
கடைக்குட்டி பசுபதியின் அறையில்………
கன்னல் ஒரே கூச்சல்…
“ஆக அப்பா மாதிரியே பிள்ளை. நீங்களும் உங்க அப்பா மாதிரி தானே பெண் பார்க்க வந்தீங்க”
“அம்மா தாயே!… நீ இதை விடவே மாட்டியா? பிள்ளையே பிறக்க போகுதுடியம்மா”
“பிள்ளை பிறந்து அவனுக்குக் கல்யாணமானாலும் சொல்லி காட்டுவேன்” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சண்டையிட்ட மனைவியைக் கைகளில் அள்ளி கொண்டவன் தனக்குள் பொதித்து.
“ப்பா…. பட்டாசு என்ன வாய் உனக்கு”
“பேச்சை மாத்தாதீங்க”
“ஏய்!… போட்டோ காட்டி எங்க அப்பா கேட்கும் போதே சரினு சொல்லிட்டேன் படிப்பு இல்லனு அப்போ தெரியாது நான் என்னடி செய்ய”
“பெரிய படிப்பு”
“காலம் அப்படி… உன் பிள்ளைக்கு நீ சொல்லி கொடுக்க வேண்டாமா?இப்போ இருக்குற பாடத்தை பார்த்து படிச்சவனே பதறி போறான்டி ”
“அதுக்கு நான் என்ன செய்ய எங்க அப்பா அம்மா படிக்க அனுப்பல”
“சொன்னாங்க மாமா உன் வீர தீர செயலை”
“அய்யயோ சொல்லிட்டாங்களா” கண்ணை மூடி சிறு வெட்கம் கொண்டது அரிவை பெண் .
“சொன்னார்!.. சொன்னார்!…” இப்பொது பெண் முகம் சிறு வாட்டத்தை கொடுக்க
“சரி சரி யோசிக்காத படிக்காட்டியும் நீ கெட்டி தாண்டி பிள்ளை பிறக்கட்டும் மெதுவா கத்துக்கலாம்”
“இப்பவே விமலாக்கா, இந்து ,மது, சொல்லி தராங்க எனக்கு வாசிக்கப் படிக்க தெரியுமே” பெருமையாக சொன்ன மனைவியை.
“ஏண்டி!… இன்னைக்கு என்ன ஆட்டம் நீ. வயித்துப் பிள்ளை காரி மாதிரியா இருந்த?” என்றதும் முத்துப் பற்கள் தெரிய சிரித்து வைத்தாள் கன்னல் மொழி.
“செம ஜாலி”
“இருக்கும்!… இருக்கும்!….” என்றவன் பெண்ணை இறுக்கி கழுத்தில் முகம் புதைத்து “ இந்த ஊரு, எங்க வீடு, பெரியம்மா ,பெரியப்பா, அம்மா, அப்பா இவங்களை விட்டுட்டு போக முடியாம தான் தொழிலை கையில் எடுத்தேன்” ஒருவரி துணுக்கு போல் கதை சொன்னான் பசுபதி.
“எனக்கு இந்த இடத்தை விட்டு வர முடியாது. அதான் அப்பாவை பொண்ணு பார்க்க சொன்னேன், படிப்பை கொண்டு தான் யோசிச்சேன்.
வேணான்னு சொன்னவன் எதுக்குடி உன்னை பார்க்க தனியா வந்தேன். இந்தச் செவத்த பொண்ணைப் பிடிச்சு போயி தான் பேச வந்தேன், ஆனா என்ன லந்து பண்ணடி நீ பாவி” என்றவன் இன்னும் இறுக்க.
“ஆ!… வலிக்குதுங்க”
“வலிக்கட்டும்டி கறுவா சொன்னில” அன்றைய நினைவில் பசுபதி சொல்ல கன்னலுக்கு அப்படி ஓர் சிரிப்பு.
“ஹா!.. ஹா!…. சிரித்தவள் தன்னவனை வளைத்துக் கொள்ள அவனும் வளைந்து கொடுத்தான்.
சூழநிலைக்கு ஏற்றவாறு தங்களை வளைத்துக் கொள்ளும் ஜோடி இவர்கள். இதனை மனதில் எண்ணி தான் வணங்காமுடி மணம் முடித்தார் போலும்.
காலம் கனிந்து நிற்கும் போது பசுபதி – கன்னல் மொழி வாழ்க்கை வணங்காமுடி பானுமதி ஜோடியை விடப் பேச படுமோ? என்னவோ?….
சதாசிவப் பிள்ளை இல்லத்தில் உள்ள முக்கிய ஜோடிகள் அனைத்தையும் பார்த்து விட்டு. அவர்களது உணர்வை கண்ணில் படித்து மனதில் சுகித்து நின்ற தருணத்தில் இரவை சற்று நீடிக்க விட்டு அடுத்த அறைக்குள்….