வடக்கு வீதி வணங்காமுடி – 13.1
பெரியவன் பேச்சை முடித்தவர் அடுத்த நடுவரிடம் திரும்பி,
“உங்க வசதி எப்படி?” அவரது கேள்வியில் ஒரு நிமிடம் மௌனம் கொண்டவன் சிறு பிள்ளை போல் புகார் வாசிக்க தொடங்கினான்.
“என்கிட்ட சொல்லாம வந்துட்டா… இவளால ……………”
“நிறுத்துங்க அந்தப் பொண்ணு மேல குறை சொல்ல ஒன்னுமே இல்லை நானும் பார்த்துகிட்டு தான் வரேன்.பொண்ணு எடுத்த முடிவு நல்லது தான் இங்க இருந்து உடம்பை பார்த்துகிறேன்னு சொல்லிட்டாங்க.
உங்க பெரியம்மா அம்மா கவனிப்புல இருக்கட்டும். நீங்க வாரம் வந்து போங்க. இல்லையா மாசம் வந்து போங்க.உடம்பு தேறி வரட்டும் பிறகு பார்ப்போம்” என்று பேச்சை முடிக்க அவரை எதிர்த்து பேச திராணியின்றித் தலையை ஆட்டி வைத்தான் விசு.
பேச்சை முடித்தவர் எழுந்து கொண்டே “இனி இது போலக் கூட்டம் கூடாதுனு நம்புறேன். இத்தோட பேச்சை விட்டு நாளைக்கி வேலைய பாருங்க என்றவர் பெரியவரே என்கூட வாங்க” என்று ஸ்வாமிநாதனை அழைத்துச் சென்றார்.
அதன் பின் அனைவரும் களைந்து செல்ல விமலா மீனுவை இழுத்து கொண்டு மாடிக்கு சென்றாள்.
அகிலா, பானுமதி, வானதி நாளை பாட்டை பார்க்க செல்ல அருணகிரியும் ஈஸ்வரும் வெளியில் சென்றனர்.
அகிலா வேலன் வீட்டுக்கு போன் செய்து பெண்களை அழைத்துக் கொண்டார். இது கன்னிகாவின் ஏற்பாடு,
‘அனைவரையும் வைத்துக் கொண்டு தம்பியின் கதையைப் பேச வேண்டாம். எங்கள் இருப்பையும் கவனத்தில் கொள்ளாமல் நீங்களே பேசி முடித்து விடுங்கள் அது தான் சரி’ அன்று பெண் சொல்லி சென்றது.
இது தான் இவர்களின் வளர்ப்பு. நாத்திகள் என்றாலும் கணவன் மனைவி என்ற எல்லை கோட்டை தீண்டவில்லை அது நாகரிகமற்ற செயல் என்று எண்ணி தனது தாயிடம் சொல்லி சென்றாள். அதன்படி பெண் பிள்ளைகளை அனுப்பி வைத்தனர்.
பசுபதியும் தனது மனைவியிடம் இதே போல் சொல்லி வைக்க அவளும் அவர்களுடன் கிளம்பி விட்டாள்.ஆக அவரவர் இடத்தை மரியாதையாகத் தக்க வைத்து கொண்டனர்.
*******************
ஸ்வாமிநாதனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்து விட்டார் வணங்காமுடி. மனம் விட்டு பேச தோதான இடமென்றால் அது திருவானை கோவில் தான்.
வழமை போல் அவர் அமருமிடம் சென்று அமர்ந்து கொண்டவர் தனது மகனையும் தன்னுடன் அமர்த்தி கொண்டார்.
அமைதியான சூழலில் மனம் சற்று அமைதி கொள்ளப் பெரிய மகனிடம் திரும்பி “என்னங்க யோசனை உங்களுக்கு? நீங்க பேசுற பேச்சு சரியா?”
“அப்பா இன்னும் இறங்கி போக முடியாதுப்பா”
“என்ன பேச்சு இது பொண்டாட்டிகிட்ட எதுக்கு இறங்கி போகனும்….. நீயே சதம்னு விழுந்துடனும்” என்க தந்தையை அதிர்ந்து பார்த்தான்.
தாயிடம் தந்தையின் அன்பு எத்தகையது என்பதை அறிந்தவன் தான் இருந்தாலும்.அவர்களின் அன்பு ஆழத்தை கண்டதில்லை,
பொதுவான கணவன் மனைவி போல் தான் அவர்களும், ஆனால் தண்டல் காரர் டைப்பிஸ்டாம்மாவின் அன்பு அடிமையெனப் பிள்ளைகளுக்குத் தெரியாதே.
அது சரி அக்காலத்தின் காதல் இலை மறை கனி கண்ணனுக்குப் புலப்படாத கண்ணிய காதல் அல்லவா.
“என்னப்பா இப்படி சொல்லறீங்க”
“நான் அப்படித்தாங்க இருக்கேன் இனியும் இருப்பேன், ஏன்னா நானும் உங்க அம்மாவும் வேற இல்ல,
கண்ணாடி முன்ன நிக்கிற மாதிரி தான் புருஷன் பொஞ்சாதி உறவு. நீங்க என்ன செஞ்சாலும் திரும்பி செய்யும் அதுவும் உங்க விம்பம் கொண்டு” என்றவரை இமைக்காது பார்த்து வைத்தான் அனுபவத்தை விட சிறந்த ஆசான் யாராக இருக்க முடியும்.
“உங்க கிட்டையும் நியாயம் இருக்கு தான் பிள்ளையைக் கொண்டு நீங்க பேசுறது சரிதான். அதுவும் பொம்பள புள்ள காலம் கெட்டு கடக்கு கேக்குற செய்தியும் பார்க்கிற சங்கதியும் பயந்து தான் வருது அதுக்கு ஒரு வழி செய்வோம்”
“ஹ்ம்ம்….” என்று தலையாட்டிய மகனை சில நொடி பார்த்தவர்
“எடுத்த முடிவுல என்னைக்கும் பின் வாங்க கூடாது. இந்தக் கல்யாண முடிவு நீங்க எடுத்தது கொஞ்சம் சுயத்தை எதிர் பார்க்குது பொண்ணு.வேற ஒண்ணுமில்லை நீங்க சொல்லி குடுங்க கத்துக்குவாங்க அதுக்கும் தயாரா இருகாங்க அது போதும்”
“சரிங்கப்பா”
“சரி வாங்க” அம்பாளை பார்த்துட்டு போவோம் வேலை இருக்கு” என்றவர் மகனை அழைத்துக் கொண்டு சென்றார்.
அதன் பின் இரவு வேளை உணவு கேலியும் கூத்துமாகச் செல்ல அனைத்தையும் ஓர் சிரிப்புடன் கடந்தாள் மீனு.விமலாவை போல் இல்லையென்றாலும் தனது இயல்பு கொண்டு உறவை பேணி நிற்க முயற்சித்தாள்.
இதுவே அவள் வளர்ந்த சூழலுக்குப் பெரிய செயல் என்று பெரியவர்கள் எண்ணினார்கள் போலும் அவளைக் கொண்டு எந்த வித பேச்சுகளும் இல்லாமல் பார்த்து கொண்டனர்.
**********
மாலையில் தான் வந்ததில் இருந்து கண்ணாமூச்சி ஆடிய விமலா இரவில் அதனை தொடர முடியாமல் வசமாகச் சிக்கி கொள்ள முடிந்த மட்டும் அவளைப் படுத்தி எடுத்து விட எண்ணினான் விசு.
பெரும் பயம் கொண்டு சிறு தடுமாற்றத்துடன் அறைக்குள் வந்தவள் அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அமைதியாக வந்து படுத்துக் கொள்ள அவளது செயலை பார்த்தவன் பொங்கி விட்டான்.
“ஏய் என்னடி நேத்து கட்டி இன்னக்கி வந்தவ மாதிரி முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேங்குற” என்றதும் கண்ணை இறுக்க மூடி கொண்டு பெண் மௌனம் கொள்ள.
அவளை நெருங்கியவன் வேகமாக அவளை எழுப்பி அமர வைத்துக் கோபமாக பேச வர கண்ணில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் அதில் பதறியவன்.
“எதுக்குடி அழுது வைக்கிற” என்றதும் இன்னும் சத்தம் வர அவளது வாயை பொத்தியவன்.
“அம்மா தாயே ஊரை கூட்டிடாத உங்க மாமனார் கிட்ட என்னால வாங்கிக் கட்டிக்க முடியாது ஏற்கனவே போதும் போதுங்கிற அளவுக்கு வாங்கியாச்சு” என்றதும் தான் அழுகையைச் சற்று குறைத்தால்.
“என்னடி பிரச்னை உனக்கு”
“விசு நமக்கு குழந்தை வேணும் மாமா சொல்லுற மாதிரி வாரம் இல்லனா மாசம் வந்து போங்க”
“ஏய்! என்ன விளையடுறியா?”
“எனக்கு இங்க நல்ல இருக்கு”
“அது சரி”
“இப்போதான் மூணு வேளையும் டைம் படி சாப்பிடுறேன் தெரியுமா டென்ஷன் இல்ல நைட் நல்லா தூக்கம் வருது.சின்ன அத்தை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க” அதுவரை அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருந்தவன் கடைசி வார்த்தையில் சற்றுக் கவனம் கூட.
“என்ன சொன்னாங்க”
“எல்லா ஓகே வெயிட் பண்ணா கிளிக் ஆகுமாம் டென்ஷன் இல்லாம இருந்தாலே சரி ஆகிடும் சிலருக்கு உடல் வாகுனு சொன்னாங்க”
“ஹ்ம்ம் அப்போ முடிவு பண்ணிட்ட”
“ஹ்ம்ம்” அவள் சொன்ன காரணம் உண்மை என்றாலும் மனம் முரண்டியது.
“நீ நல்லா தாண்டி இருக்க நான்தான் பைத்தியம் பிடிச்சு திரிய போறேன்” என்றதும் அவனை நெருங்கியவள்
“விசு!…. ப்ளீஸ் விசு இதை ட்ரை பண்ணி பார்க்கலாம் கொஞ்ச நாள் ப்ளீஸ்… ப்ளீஸ்…” தாடையைப் பிடித்துக் கொஞ்சிய மனைவியைக் கண்கள் கிறங்க பார்த்தவன்
“சத்தியமா இது நீயாடி எல்லாமே புதுசா இருக்கே. துணில தொடங்கிக் கெஞ்சல் வரை” என்றதும் வெட்கம் கொண்டு விலகப் பார்க்க அவளைத் தடுத்தவன்.
“இந்த வெட்கம் கூடப் புதுசு தாண்டி இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்றவன் மனைவியை இதமாக அனைத்துக் கொண்டான்.
தங்களுக்குக் குழந்தை என்ற வரம் இருக்கோ இல்லையோ அதற்கான முயற்சியைப் பெரியவர்களுடன் கை கோர்த்து கடக்க முதல் படியை எடுத்து வைத்தனர் விசு – விமலா தம்பதியினர்.
*******
மகன்கள் உரசல் முடிவு கொள்ளா விடிலும் பிழையைச் சுட்டி காட்டிய நிம்மதியுடன் படுத்திருந்தார் வணங்காமுடி.
கணவனது முகத்தைப் பார்த்துக் கொண்டே நெருங்கியவர் வழமை போல் ஆஸ்தான இடமான அவரது வலது புஜத்தில் படுத்துக் கொண்டு “தண்டல் காரரே பெரியவன் கூடப் போயி கொஞ்ச நாள் இருந்துட்டு வரவா”
“ஹ்ம்ம் போயிட்டு வாங்க டைப்பிஸ்ட்டம்மா”
“சரிங்க பசுபதியை மறு வீடு அனுப்பிட்டு நான் பெரியவன் கூடக் கிளம்புறேன் இரண்டு மாசம் கழிச்சு வரேன்” என்றதும் தூக்கி வரி போட
“என்னங்க சொல்றீங்க இரண்டு மாசமா?”
“ஆமா தண்டல் காரரே பிள்ளையை வச்சுட்டு ரொம்பச் சிரமம். இங்கிருந்து என்ன பண்ண போறேன்?” என்றதும் கோபம் வந்து விட்டது.
“என்னங்க இது அதெல்லாம் முடியாது வேணா ஒரு வாரம் போயி இருந்துட்டு வாங்க” என்றதும் புருவத்தைச் சுருக்கியவர்
“தண்டல் காரரே சூழ்நிலை புரியுதா இல்லையா? பிள்ளைங்க கஷ்ட படுது பேத்தியை பார்த்துகிற கடமை நமக்கும் உண்டு”
“எல்லாம் புரியுதுங்க, ஆனா என்னால முடியாதுங்க” ஒரு வித பிடிவாதத்தோடு சொல்ல இப்போது கோபம் வந்து விட்டது பானுமதிக்கு
“இது என்ன பொறுப்பில்லாத பேச்சு”
“எனக்குப் பொறுப்பே இல்லங்க என்னங்கீறீங்க” சரிக்கு சரி நின்றார் மனிதர்.
“அதெல்லாம் முடியாது தண்டல் காரரே நான் கிளம்புறேன். இங்க அக்காங்க, மாமா, அது போகப் பசுபதி, கன்னல் இருக்காங்க அங்கன பிள்ளைங்க தனியா தவிக்குது அதுங்களுக்கு நம்பத் துணை வேணும்”
“எல்லாம் சரிதான் ஆனா அத்தினி நாள் என்னால முடியாது” மீண்டும் அதே பல்லவியில் கடுப்பான பானுமதி.
“பேசுறது சரியான்னு நீங்களே யோசிங்க பெரியவன் கவலை பட்டத்தை கேட்டீங்க தானே”
“இப்பவும் சொல்லுறேன் போறதுல பிரச்சனை இல்ல, ஆனா அத்தினி நாள் முடியாது”
“உங்களை………… நான் போறது உறுதி” என்றவர் கோபமாகத் திரும்பி படுக்க வெடுக்கென எழுந்து வெளியில் சென்று விட்டார் வணங்காமுடி.
அவர் கதைவை அடித்துச் சாத்தியது காதில் கேட்க கண்ணை இறுக்க மூடி கொண்டவர் “ப்பா… இளசுல கூட இந்தப் பிடிவாதம் பிடிக்கல.
காலம் போன கடைசில தண்டல் காரர் லொள்ளு தாங்க முடியல சாமி என்ன செய்யக் காத்திருக்காரோ!..” என்று புலம்பியவர் வணங்காமுடிக்காக வெகு நேரம் காத்திருந்து தூங்கி போனார்.