“அக்கா உங்க நிலைமை எனக்குப் புரியுது ஒருமுறை முயற்சி பண்ணி பார்ப்போமே” கன்னலுக்கு விமலாவின் நிலை புரிந்தாலும் அவர்களின் வாழ்வில் ஓர் வானவில் வந்துவிடாத என்ற தவிப்பு இருந்தது.
‘இது தான் கூடி வாழ்ந்தால் கோடி நன்மையோ’ ப்பா!…… ஆன்றோர் கூற்றுக்கு நித்தம் ஓர் அனுபவம் சான்று வைக்கிறது.
“ம்!….. சரி கன்னல் முடியுமான்னு பார்க்கிறேன், ஆனா இவர் எப்படி வந்தார்?” சந்தேகமாக கேட்டு வைத்தாள் விமலா.
“சரி கன்னல் காலையில பார்ப்போம் நாளைக்கி அத்தாச்சி, இந்து எல்லாரும் வாரங்கள்ல”
“ஆமா அக்கா!”
“ஹ்ம் சரி குட் நைட்!”
“இரவு வணக்கம்” இரு பெண்களும் சிறு புன்னகையோடு அவரவர் அறைக்குச் சென்று அடைந்து கொண்டனர்.
***********
அறைக்குள் நுழைந்த விமலா விசுவிடம் நெருங்கி கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.அவளது வரவை உணர்ந்தவன் கையில் உள்ள கை பேசியை வைத்துவிட்டு அவளைப் பார்த்தவாறு அமர்ந்தான்.
“என்ன விசு திடீர்னு வந்து இருக்கீங்க எதுவும்?……”
“அதெல்லாம் ஒன்னுமில்லை…… நீ செக் அப் போனதை அம்மா ரெகார்ட் பண்ணி வச்சு இரண்டு நாள் முன்னாடி என்கிட்ட கொடுத்து கேட்க சொன்னாங்க” எந்த ஒளிவு மறைவும் அற்று உண்மையை பேசி வைத்தான் விசு.
“ஓ!…” மாமியாரின் இந்தச் செயலை விமலா எதிர் பார்க்கவில்லை போலும். பெண்ணுக்கு மிதமான அதிர்ச்சி,
ஆனாலும் மனம் ஒன்றை எண்ணி வியந்து கொண்டது. திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் இவ்வீட்டு மக்கள் தன்னிடம் குழந்தையைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லை. அவரிடம் பேசி இருக்கலாம் என்ற எண்ணம் வந்தாலும்,
அந்தக் காரணி கொண்டு தங்களைக் காயம் செய்யவில்லையே இந்த இடத்தில் பெண்ணுக்கு வியப்பு தான்.
“ஹ்ம்ம்!… எனக்கு உங்ககிட்ட சொல்ல ஒரு மாதிரி இருந்தது விசு. எப்படி சொல்லுறது…………” தடுமாறி நின்றாள். சரியான காரணம் சொல்லில் வடிக்க வேண்டும் இல்லையென்றால் அர்த்தங்கள் அனைத்தும் அனர்த்தங்கள் ஆகி விடும் அல்லவா.
“எனக்குப் புரியுது விமலா பட் நான் அன்பு செய்யும் போது இத்தனை நாளுல இந்தப் பீல் வந்துருக்கா?” மனைவியின் சங்கடம் உணர்ந்து கேட்டு வைத்தான்.
உண்மை தானே இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு பொழுதும் அவளைக் காயம் செய்ததில்லை. அன்பை கொஞ்சல் மொழி கொண்டு உணர்த்தா விடிலும் செயலில் தாங்கி நிற்பான் விசு.
“எஸ் விசு ஐ பீல் குட்”
“தென்?”
“ஹ்ம்ம்!…” ஒருவார்த்தையில் பேசி வைத்த மனைவியிடம் ஆற்றாமை வர.
“என்னம்மா கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு.. இந்த ஹ்ம்ம்!…. எதுக்கு?” என்றவன் அவளை இழுத்து அனைத்து கொண்டான்.
குழந்தைக்காக ஒரு கூடல் என்ற நிலை முரண்டி நின்றது, ஆனால் இக்காலத்தில் நூறில் தொன்னூறு சதவீத மக்களின் வாழ்வு இது தான்.
மருத்துவர் சொல்லிய நாட்களில் ஓர் கூடல் அதுவும் மருந்துண்டு எண்ணி பார்க்கவே கவலை கொள்கிறது.ஊன் உருகி உதிரம் கலந்து நீ!… நான்!.. என்ற எண்ணமற்று நாமாகி நின்று அன்பு செய்து உருவாகும் வரத்தை இழந்து வருவது சாபமே.
“எதுவும் யோசிக்காத இப்போ இங்க சந்தோசமா இருக்கியா? அதை மட்டும் யோசி”
“உண்மையா கொஞ்சம் நிம்மதியா இருக்கு .நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மனசு தெளிவை சொன்னேன் விசு”அவனது பிரிவை நிம்மதி என்று தான் சொல்வதாக எண்ணி விடுவானோ என்ற பயம் பெண்ணுக்கு
“எனக்கு புரியுது , ஆனா என்ன நீ இல்லாதது ரொம்பக் கஷ்டமா இருக்கு விடு சமாளிச்சுகிறேன்”
“சாரி”
“ப்ச் எதுக்கு?” என்றவன் மனைவியை இறுக்கி கொண்டான்.
மனம் தெளிவு கொண்டாலே போதும் வரம் கொடுக்க நினைப்பவன் அவன் எண்ணம் போல் செய்யட்டும் என்ற நிலையில் கணவனும் மனைவியும்.
******
காலை பொழுது அழகாகப் புலர தஞ்சையில் இருந்து விடியலில் கிளம்பி திருச்சிக்கு வந்து விட்டனர் பெண்கள்.
இந்து, மது, கன்னிகா, சித்ரா வென வடக்கு வீதி கலை கட்டியது விசுவும் இருக்க அருமையான காலை பொழுது தான் அவர்களுக்கு.
வெகு நேரம் சென்று முழித்து வந்த விசு கூடத்தில் கேட்கும் கூச்சலில் தூக்கம் தெளிய அங்கு விரைந்தான்.
அங்கே பெண்கள் அனைத்தும் உச்ச பட்ச சத்தத்தில் வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்தனர்.
“அதெல்லாம் ஒத்துக்க முடியாது அண்ணி”கன்னல் குதிக்க அவள் தலைமையில் விமலா, இந்து, மது.
“ஏய்! பொண்ணுங்களா கத்தி வைக்காதீங்க மெதுவா பேசுங்களேன்” இடையில் இருந்து வானதி கெஞ்சி கொண்டிருக்க.
அகிலா இரு காதுகளையும் பொத்தி கொண்டு அமர்ந்திருந்தார். கன்னிகாவும், சித்ராவும் சரிக்கு சரி மல்லுக்கட்டி கொண்டிருந்தனர்.அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தவன் பார்வை பசுபதியிடம் நிலைத்தது.
இந்த ஒரு மாதத்தில் இது எனக்குப் பழக்கம் தான் என்பது போலத் தேனீர் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தான். அவனிடம் நெருங்கிய விசு பசுபதி பக்கத்தில் அமர்ந்து கொண்டு.
“என்னடா இது சந்த கடை மாதிரி இருக்கு.. என்ன சத்தம் வீடே அலறது டா”
“இருங்க அண்ணே!.. இன்னும் இருக்கு இதுக்கே பதறாதீங்க” என்ற பசுபதி யோசனை போல “சாரி அண்ணா” என்றதும் அவனை புரியாமல் பார்த்தான் விசு.
“எதுக்குச் சாரி?”
“சத்தமே இல்லாம வந்து போற அண்ணி இன்னைக்குக் குழாயடி சண்டைக்கு நிக்கிறாங்கன்னா அதுக்குக் காரணம் என் பொண்டாட்டி தான்.
உங்க வாழ்க்கைல விளையாண்ட என்ன மன்னிச்சு விட்டுரு அண்ணா” போலி வருத்தம் கொண்டு பேசியவன் முதுகில் தட்டியவன்,
“ஹா!… ஹா!….” என்று சிரிக்க அவனது சிரிப்புச் சத்தத்தில் தான் பெண்கள் சத்தம் ஓய்ந்தது.விசுவின் தலையைக் கண்டதும் வானதி அவனுக்கு குடிக்க எடுத்துவர உள்ளே செல்ல பெண்கள் அனைவரும் அவனைப் பிடித்துக் கொண்டனர்.
“அக்கா என்னது இது?, விசு”
“டேய் தம்பன் நான் தாண்ட நாத்தனார். நான் சொல்றதை மதிச்சு கேட்க மாட்டேன்னு நிக்குதுங்க டா” கன்னிகா பாவம் போல் சொல்ல கேட்டிருந்த விசுக்கு சிரிப்பாக வந்தது.
“என்னக்கா நீ நாத்தனார் போஸ்டிங்னா சும்மாவா?… நீ என்னனா டம்மி பீஸா இருக்க போ”
“அடப்போட” சித்ரா சலித்துக் கொண்டார்.
“என்னதான் பிரச்சனை?” பசுபதி
“நாங்க எளிமையா கல்யாணம் பண்ண யோசிக்கிறோம். இதுங்க எல்லாம் முடியாதுனு சொல்லுதுங்க.
“என்னடி இது?” பசுபதி கன்னலை பார்த்து கேட்டு வைக்க.
“நம்ப வீட்டு காதல் மன்னன் கல்யாணம் சும்மா அதிர வேணாம்” கன்னலின் பேச்சில் அதிர்ந்த பெரியவர்கள்.
“ஹே!… யாரை சொல்ற?” தெரிந்தும் அகிலா
“வேற யாரை சொல்ல போறேன்? எல்லாம் உங்க கொழுந்தனாரை தான்” தைரியமாக வம்பு பேசினாள்.
இவளது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த வானதி அடுக்கலைக்குள் இருந்து வேகமாக வந்து “அடிப்பாவி கொஞ்சமாவது பயம் இருக்கா? நாங்களே பயந்து தான் பேசுவோம் அவர்கிட்ட”
“நான் என்ன அத்தை தப்பா பேசுறேன்” கிராமத்து வெகுளி பேச்சு சற்று விளையாடியது அவள் பேச்சில்.
“அதை விடுங்க இப்போ என்ன யோசனை சொல்லுங்க” எங்கே பெரியம்மா கன்னலை திட்டி விடுவாரோ என்று பேச்சை திசை திருப்பினான் விசு.
“மாமாக்கு நல்லா பண்ணனும் எனக்குத் தெரிஞ்சு அவங்களை மாதிரி ஜோடி எல்லாம் இப்போ சான்சே இல்ல லவ் அண்ட் கேரிங்கா…” மாமனார் மாமியாரை ரசித்துச் சொல்ல பெரும் கவலை அகிலாவிற்கு.
“அக்கா பானு வந்த உடனே கொழுந்துக்கும் பானுக்கும் சுத்தி போட்டுரனும்”
“ஆமா இதுங்களுக்கு அவங்களைக் கவனிக்கிறது தான் வேலையே போல அகிலா”
“என்னக்கா சொல்லுறீங்க”
இந்தப் பொண்ணுங்க அறையைச் சுத்தம் பண்ண போன்னேன். கட்டில் முழுக்கக் கொழுந்து பானு போட்டோ தான். நம்ம கண்ணுல படாதது அதுங்களுக்குச் சிக்கி இருக்கு பாரு”
“விளையாட்டு பிள்ளைங்க”
“அது சரி ஆனா கொழுந்தனுக்குப் பிடிக்கனுமே அவங்க அண்ணன்களை மாதிரி இக்காலப் பிள்ளைங்களுக்கு வளைஞ்சு கொடுக்க மாட்டார். கோபம் போல எதாவது பேசிட்டா பிள்ளைங்க முகம் வாடி போகும்” கொழுந்தனை எண்ணி கவலை கொண்டார் வானதி.
“அதுவும் சரிதான் இருங்க பக்குவமா பேசிடலாம்” என்ற அகிலா அரிவை பெண்களை நோக்கி.
“இப்போ என்ன க்ராண்டா கல்யாணம் பண்ணனும் அதானே?” அகிலா கேட்க அனைத்து பெண்களும் ஒன்று போல் தலையை ஆட்டி வைத்தது.
“எங்களுக்கு எப்படி பண்ணாலும் சந்தோஷம் தான். சாஸ்திரம் சடங்கெல்லாம் நாங்க பார்த்துகிறோம். உங்களுக்கு என்ன செய்யணுமோ செய்ங்க,ஆனா கொழுந்தன் சம்மதத்தோட செய்யனும்” பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.
“ஐயோ!…” அலறியது பெண்கள் கூட்டம்
“என்ன ஐயோ!….? இதுக்கு மேல உங்க இஷ்டம்” என்றதும் கன்னிகா சித்ரா இருவரும் பெண்களைச் சீண்டி நமுட்டு சிரிப்பு வைக்க. அதனைப் பார்த்த அண்ணன் தம்பி இருவரும் சிரித்தனர்.
**********
இங்குச் சென்னையில் ஸ்வாமிநாதன் அறையில் ..
“ஏங்க? மாமாவை பார்த்தீங்களா எப்படி அத்தையைப் பார்த்துக்குறார். எங்க அப்பாவும் பார்த்துக்குவார் தான்,
ஆனா இவரை மாதிரியில்ல ஹ்ம்ம்!…. ரசிக்கிற மாதிரி இருக்கு இவர் அன்பு” கனவில் மிதப்பவள் போல் பேசி வைத்த மனைவியைப் பார்த்து.
ஓ!…போட்டான் ஸ்வாமிநாதன்
“என்ன ஓ!…?”
“வேற என்ன சொல்லனும்”
“நீங்க உங்க அப்பா மாதிரி இல்லை” என்றதும் ‘இது என்னடா வம்பு. அடேய்!… ஸ்வாமி இந்த பேச்சை வளரவிடாதே மனம் அலற’
“அவர்.. அவர்..தான்.. நான்.. நான் தான் .அவரை மாதிரி என்னால இருக்க முடியாது. என்னை மாதிரி அவரால இருக்க முடியாது” எங்கே அவரைப் போல் அதை செய் இதைச் செய் என்று சொல்லி விடுவாளோ என்ற பயத்தில் உளறிக் கொட்டினான் பெரியவன்.
“என்ன உளறி வைக்கிறீங்க”
“மீனு குட்டி இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்டு வைக்காதம்மா. சத்தியமா எனக்குப் பதில் தெரியாது அப்புறம் இது போல தான் உளறி வைப்பேன்.
அதுக்குப் பதில் இப்படி இருன்னு…. சொல்லு இருக்குறேன்” எதோ வெகு ஆண்டுகள் கழித்து இந்த ஒருவாரம் தான் வாழ்க்கை தெளிவு கொடுத்தது. அதுவும் இந்த பேச்சால் கலைந்து விட கூடாதே என்ற பயம் அவனுக்கு.
பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொன்ன கணவனை பார்த்து சிரிப்பு வர “ஏன் ஸ்வாமி இப்படி இறங்கிடீங்க?”
“எல்லாம் குரு வாக்கு… பொண்டாட்டி கிட்ட இறங்கி போகாத.அதுக்குப் பதில் காலுல விழுந்து வைனு சொல்லிட்டார் எங்க அப்பா” என்றதும் இன்னும் சிரிப்பு பெண்ணுக்கு.
அவளது சிரிப்பை பார்த்துக் கொண்டே இருந்தான் ஸ்வாமி. தந்தை சொன்னதின் பொருள் இதோ கண் முன்.
*****************
அங்கு காவிய தலைவன் தலைவியைப் பற்றிக் குடும்பமே அலசி கொண்டு இருக்க. அதை அறியாத இருவரும் அவர்கள் உலகில் உலா சென்றனர்.
அனு தாத்தனை கண்ட முதல் அவரைச் சுற்றியே திரிந்தது .அது போக இன்று அவருடன் ஒட்டி கொண்டு தூங்க வர. அந்தக் குட்டியை போலியாக வம்பு செய்து கொண்டு இருந்தார் பானுமதி.
“ஒய்!.. அவர் என் வீட்டுக்காரர் இறங்குடி” என்றவர் தாத்தனது நெஞ்சில் படுத்துக் கொண்டு இருந்த பேத்தியை மென்மையாக உலுக்க.
அது தாத்தனை இறுக்கப் பற்றிக் கொண்டு இன்னும் அவருள் ஆழமாகப் புதைந்தது.அதன் செயலில் நெகிழ்ந்தவர் தானும் கட்டி கொண்டு.
“போ எங்க மாத்தேன்…. நானு தாத்தா” மழலை கொண்ட ஒருமையில் சொல்ல மனம் அள்ளி கொண்டு தான் போனது இருவருக்கும்.
“கொழுப்பு தானே என் தண்டல் காரர்டி அவர். வா!.. வா!… நாளைக்கி சாக்கி, பொம்மை கேட்பில அப்போ பார்த்துக்குறேன்” என்றவரை
“டைப்பிஸ்ட்டம்மா என்ன சின்னப் புள்ள கூடச் சண்டை கட்டுறீங்க”
“அது என்ன தண்டல் காரரே உங்க கிட்ட மட்டும் ஒட்டிக்கிது பொல்லா குட்டி” போலியாக கேட்டு வைத்தார்.
“உங்களுக்கு உங்க மகனுங்க மாதிரி எனக்குச் சிட்டுக் குருவி” சமயம் பார்த்து அடித்தார் மனிதர் அதற்கு மேல் பேச முடியுமா என்ன? அமைதியாகி விட்டார் பானுமதி.
விளையாட்டுக்கு பேச போயி அது வினையாகி நிற்கும். அது போக அவரிடம் மல்லு கட்ட முடியாது என்று எண்ணியவர் அமைதியாகி போக அதற்கு அவர் விட வேண்டுமே.
“என்னங்க பேச்சே காணோம்”
“தண்டல் காரரே இந்தப் பேச்சுக்கே நான் வரல நான் தூங்கிட்டேன்” என்றவர் வேகமாக படுத்து கண்ணனை இறுக்க முடி கொள்ள.
வணங்காமுடி உரக்க சிரித்தார் தாத்தனது சிரிப்பில் களிப்புக் கொண்ட குட்டியும் தனக்கிருக்கும் இரு பற்களை காட்டி சிரித்து வைத்தது அதன் சிரிப்பில் திரும்பிய பானுமதி.
“என்ன உனக்குச் சிரிப்பு ஹ்ம்ம்!….” என்றவர் அதன் கன்னத்தைப் பல் படாமல் கவ்வி முத்தம் வைக்க அதனை கிறங்கி போயி பார்த்து வைத்தார் மனிதர்.
முத்தம் வாங்கிய பேத்தியை விட அதனைப் பார்த்துக் கொண்டு இருந்த தாத்தனுக்குத் தான் அத்தனை மயக்கம்.அவரது எண்ணம் புரியாமல் பேத்தியை கொஞ்சி கொண்டு இருந்தார் பானுமதி.
நேரம் செல்ல செல்ல தூக்கம் சொக்கிய அனு .ஒரு கட்டத்தில் தூங்கி போக. அவளை வாகாகப் படுக்க வைத்தவர்.
பானுவை எட்டி பார்த்தார் கண்ணை மட்டும் மூடி தூக்கத்தை அழைத்துக் கொண்டு இருந்தார் அவரது நிலையைக் கண்டு கொண்ட வணங்காமுடி.
“ஏங்க டைப்பிஸ்ட்டம்மா தூக்கம் வரலைங்களா?” அவரது கேள்வியில் திரும்பியவர் தூங்கும் பேத்தியை ஓர் பார்வை பார்த்துவிட்டு.
“இல்ல தண்டல் காரரே மதியம் நல்ல தூக்கம் அதான் இப்போ வரல போல”
“ஓ!… இங்க வாங்களேன் உங்க பேத்திய தூங்க வச்ச மாதிரி தூங்க வைக்கிறேன்” மல்லாக்க படுத்துக் கொண்டு மனைவியை அழைத்தவரது கள்ளம் பிடிபட.
“ரொம்ப மோசம் தண்டல் காரரே நீங்க…. அதுவும் வர வர ரொம்பவே மோசம்” அங்கலாய்த்து கொண்டார் பானுமதி.
“இது என்னங்க வம்பா இருக்கு. நீங்க தான் பிள்ளை கிட்ட சண்டை கட்டுனீங்க. இப்போ தூக்கம் வரலன்னு சொன்னீங்க.
சரி பொண்டாட்டிக்கு ஒத்தாசை செய்வோமேனு நல்ல எண்ணத்துல கேட்டேங்க நான். நல்லதுக்கே காலம் இல்ல டைப்பிஸ்ட்டம்மா”.
“அடேயப்பா என்ன ஒரு நல்ல எண்ணம் உங்களுக்கு தண்டல் காரரே” என்றவர் அவரை நெருங்கி புஜத்தில் தலையை வைக்க அவரும் வாகாகப் பிடித்துக் கொண்டார்.
“ஊரே நம்புதுங்க நீங்க தான் என்ன நம்பலை” வம்பை விடாது தொடர்ந்தார்…
“உங்களை…….. குசும்பு குசும்பு ஜாஸ்த்தி யா போச்சு” என்று புஜத்தில் கிள்ளி வைக்க மனைவியின் செயலில் வாய் விட்டு சிரித்தார் வணங்காமுடி.
கணவன் நல்ல மனநிலையில் இருப்பதைக் கண்டு கொண்ட பானுமதி மெதுவாகப் பேச்சை தொடங்க எண்ணினார்.
‘மாலை பொழுதில் வடக்கு வீதி சதாசிவ இல்லமே அவரிடம் போன் பேசியது. நீ, நான் என்ற அடிதடியுடன் விடயம் சொல்ல பட.
அவர்கள் ஆர்வமிகுந்த அன்பில் நெகழ்ந்தாலும் இதனை யார் கணவனிடம் பேசுவது என்று அவர் தயங்கி, அதை வாய் வழியாகக் கூற அவரது சின்ன மருமகளோ
‘என்னது தலை கீழ நிற்பாரா’ என்று அலறியது மனம். இதுங்க கற்பனைக்கு அளவே இல்லையா? தண்டல் காரர் கறார் பேர் வழி.
புத்திக்கும், மனதுக்கும் அது போக நடப்புக்கும் இடம் கொடுத்து யோசித்துச் செய்பவர்.அவரிடம் தான் சொன்னால் எல்லாமே நடந்து விடாது இந்தப் பெண்களுக்கு எப்படி சொல்வது.
‘அத்தை ஒரு ஐ லவ் யு சொல்லுங்க மாமா உடனே ஓகே சொல்லிடுவார்’ கன்னல் தேவலை என்று எண்ணியது விமலாவின் பேச்சு.
‘அம்மாச்சி நான் சொல்லுற மாதிரி செய்ங்க’ என்று மது எதுவோ சொல்ல வர அலறியே விட்டார் பானுமதி.
‘அம்மா பொண்ணுங்களா என்னங்கம்மா இப்படி பேசி வைக்கிறீங்க’ என்றவர் ‘இப்போ என்ன கல்யாணம் உங்க விருப்ப படி பண்ணனும் அதானே’
‘ஆமாம்!…’ அனைத்தும் கோரஸ் பாடி வைக்க.
‘கேட்டு சொல்லுறேன்’ என்றவர் அடுத்து அவர்கள் பேசும் முன்னே போனை அணைத்துவிட்டார் ப்பா!… என்ன வாய் பேசுதுங்க மனதுக்குள் முனகி கொண்டார்.
அதனை தற்போது எண்ணியவர் கணவனிடம் பேச இதுவே தருணம் என்று எண்ணி.
“ஏங்க இந்த பிள்ளைங்க நம்ப அறுபதை கொஞ்சம்………..” பேச வந்தவரை பேச விடாமல் செய்தவர் செயலில் அதிர்ந்து விட்டார்.
சில நொடிகளுக்குப் பிறகு அவரை விட்டார் வணங்காமுடி. பேச வந்த அனைத்தும் பின்னால் செல்ல முன் நின்று காதல் செய்யும் கணவனைப் பார்த்து முழித்து வைத்தார்.
எதிர்பாராமல் அவர் செய்த செயலில் முழித்து நின்றவர் நான் என்ன கொடுத்தேன் என்று மேலும் முழிக்க.
“ப்ச் என்னங்க முழிக்கிறீங்க”
“என்ன தண்டல் காரரே” குரல் சற்று சாரலக வீச
“உங்களுக்கு விளக்கமா சொன்னா தாங்கப் புரியும் அலுத்து கொண்டவர். அதாங்க கொஞ்சம் நேரம் முன்னாடி இதோ இப்படி கவ்வி என்று சிறு சுருக்கம் கண்ட கன்னத்தைக் கவ்வி,
இதோ இப்படி முத்தி வச்சீங்களே என்று முத்தம் வைக்க அவரது செயல் முறை விளக்கத்தில் அவரை அடித்துக் குத்தி வைத்தார் பானுமதி.
அவரது அடிகளை போலியாக தடுத்து கொண்டே “டைப்பிஸ்ட்டம்மா புருஷனை அடிக்கக் கூடாதுங்க அது வன்முறை”
“புருஷனை தான் அடிக்க கூடாதுங்க,ஆனா இந்தக் கோக்கு மாக்கு மனுஷனை அடிக்கலாம் இது வன்முறையில் சேராது” என்றவர் மேலும் சில அடிகளை வழங்கிய ஓய்ந்தார் மீண்டும் பானுமதியை இழுத்து அனைத்தவர்.
“சின்னச் சின்ன ஆசைக்குக் கூட ரொம்பக் கெஞ்ச விடுறிங்க டைப்பிஸ்ட்டம்மா” பாவம் போல் சொல்லி வைக்க.
உடனே அவரை நெருங்கிய பானுமதி அவரது கன்னத்தைப் பக்கவாட்டில் திருப்பி அவர் சொன்னதைச் சற்று மாற்றிச் செய்து வைக்க வலியில் கத்தி விட்டார்.
அவரது கத்தலில் அனுவும் முழித்துக் கத்தி வைக்க பெரியவர்கள் இருவரும் திடுக்கிட்டு முழித்தனர்.
அதன் பின் தெளிந்து அழும் பிள்ளையை ஏந்தி சமாதானம் செய்து மீண்டும் தூங்க வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது.
மோகம் வடிந்து, ஆர்வம் குன்றி, தாகம் தகர்ந்து, முடி நிரைத்து,தோல் சுருங்கி, உடல் முதுமை கொண்டாலும் உண்மையான அன்பு என்றும் உயரிப்புடன் தான் இருக்கும்.
சிறு இன்பம் கொண்டு பெரும் காதல் செய்து இதோ பிழை கொண்ட மழலைகள் போல் இருவரும் முழித்து நிற்பதே காதல் காவியம் தானே.