இன்றோடு வணங்காமுடியும் பானுமதியும் சென்னை விட்டு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது . அங்கே ஒரு அளவிற்கு மீனுவை பழக்கி விட்டு வந்திருந்தார் பானுமதி மேலும் தான் அவ்வப்போது வந்து போவதாகச் சொல்லி இருந்தார்.
சில தடுமாற்றங்கள் இருந்தாலும் சமாளிக்கக் கத்து கொண்டாள் மீனு. இனி வாழ்க்கை மெதுவாகப் பிடிபடும் என்ற நம்பிக்கையில் திருச்சிக்கு வந்தாயிற்று.
**************
இன்று ஞாயிறு போலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக மதிய உணவிற்கு அமர்ந்திருந்தனர்.
தொடர்ந்து விடுமுறையின் காரணமாக விசுவின் வரவு இந்த வாரம் தடை பட அவனைத் தவிர்த்து வீட்டில் உள்ள மக்கள் அனைவரும் இருந்தனர்.
சதாசிவ இல்லத்தில் ஓர் பழக்கம் உண்டு ஞாயிறு அன்று மட்டும் இட்லியும் கறி குழம்பும் சுட சுட வாழை இலையில் பரிமாறப் படும்.
இன்றும் அது போல் அனைவரும் கூடியிருக்க மயக்க நிலையில் பசுபதியிடம் வந்து அமர்ந்தாள் கன்னல்.
ஈஸ்வர்,அருணகிரி,வணங்காமுடி அவருக்கு அடுத்துப் பசுபதி தூண் ணை ஒட்டி அமர்ந்திருக்க யார் கண்ணையும் கருத்தையும் கவராமல்,
மிதமாகப் பசுபதியின் மீது சாய்ந்து கொண்டாள் கன்னல்.சற்று முன் உண்ட அனைத்தையும் வெளியேற்று விட்டு வந்தாள் போலும் அத்தனை சோர்வு பெண்ணுக்கு.
“என்னம்மா” வாஞ்சையாக சிறு குரலில் கணவன் கேட்க.
“ஒன்னுமில்லை” என்றவள் மேலும் சில நிமிடங்கள் மௌனத்தில் கழித்து மீண்டும் தெளிந்து, பக்கவாட்டில் இருந்து ஓர் இலையை எடுத்து போட்டு சாப்பிட அமர,
சத்தமாகச் சிரித்து விட்டான் பசுபதி அவளது செயலை பெரியவர்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.
“தம்பு பிள்ளையைக் கிண்டல் பண்ணாத டா பாவம்” கால் தரையில் படாமல் ஓட்டமெடுக்கும் பெண் தற்போது தாய்மையின் சோர்வை சுகிக்கப் பாவமாகி போனது அகிலாவிற்கு.
“அகிலாம்மா கொஞ்சம் நேரம் போயி சாப்பிட்டா என்ன?” முகத்தில் சிரிப்பிருந்தாலும் மனம் முழுக்கக் கவலை தான். இதோ உண்டு முடித்து எடுத்து மீண்டும் உண்டு என்று படுத்தி வைத்தது பசுபதியின் வாரிசு அது சரி இது அப்பனை கொண்டோ..
மீண்டும் உண்ண ஆரம்பித்தவள் அந்த சோர்விலும் சேட்டையை தொடங்கினாள்.தனக்கு எதிரில் நின்ற விமலாவை பார்த்து ஸ்ஸ்.. ஸ்…. செய்யகை செய்து அழைக்க அவளோ இந்து, மதுவை பார்த்துக் கை அசைக்க,
இதை எதர்ச்சையாக பசுபதியின் கண்ணில் பட அதிர்ந்து போனான் கடைக்குட்டி ‘இன்னைக்கு யாருனு தெரியலையே’ அதிர்ச்சியை மறந்து மனம் மெல்ல முனு முனுத்தது.
அவன் எண்ணியது போல இன்றைய பலி வணங்காமுடி தான்.அன்று திருமண விடயத்தைப் பானுமதியிடம் கூறி அனுமதி பெற்று தர சொல்ல,
அன்று பானுவும் கேட்பதாகச் சொல்லிவிட்டுக் கணவனிடம் சொல்ல வர, அவர் எங்கு பேச விட்டார். பானுமதி பேச வந்த வார்த்தைகள் யாவையும் முழுகி அல்லவா நின்றார். பிறகு எப்படிப் பேரிளம் பெண் பேசி அனுமதி பெற.
அதனால் பொறுமை இழந்து நின்றனர் அரிவை பெண்கள். இன்று வகையாக மாட்டி வைக்க விடுவார்களா என்ன? கன்னல் முறுக்கிவிட விமலா இந்து, மது எனப் பெண்கள் வரிசை கட்டி நின்றனர்.
சாப்பிட்டுக் கொண்டே கன்னல் “ஏன் விமலாக்கா நீங்க எதுவும் பூ கொண்டு வர சொன்னீங்களா?” அறிய பிள்ளையாகக் கேட்டு வைக்க அதை விட அறியபிள்ளையாகப் பதில் சொன்னாள் விமலா.
“இல்லையே கன்னல் எப்போதும் வர பொண்ணு தான் கொடுத்துட்டு போச்சு ஏன்?”
“இல்ல பரமசிவ பூ கடையில் இருந்து ஆள் வந்தாங்க ஜாதி முல்லை கொடுத்தாங்க அதான் அதுவும் கொஞ்சமா. நீங்க சொன்னீங்களோனு…” இந்த இடத்தில் கன்னல் நிறுத்த வணங்காமுடிக்கு உணவு நாசிக்கு ஏறி நின்றது.
பெண்களின் கேலியும் தம்பியின் தடுமாற்றத்தையும் கண்டு அப்படி ஓர் சிரிப்பு பெரியவரான ஈஸ்வருக்கு, ஆனால் அதனைக் காட்டி கொள்ளாமல் தனையனுக்குத் தண்ணீர் கொடுத்துச் சமாதானம் செய்தார்.
மீண்டும் பெண்கள்………..
“இல்லையே!… ஏன் இந்து, மது நீங்க எதுவும் சொன்னீங்களா?”
“விடு விடு வேடிக்கை பார்ப்போம் அங்க பார் அவர் முகத்தை” என்று வணங்காமுடியை சுட்டி காட்ட அவரோ பெரும் தவிப்பில் இருந்தார்.பெண்கள் முன் சங்கடமாக இருந்தது வேறு.
தங்களுக்கான தனிமையில் மட்டுமே தங்களது அன்பை பகிர்ந்து கொள்ளவர்களே தவிர வெளியில் வந்தால் கண்ணியம் காத்து காதல் செய்யும் காதல் கண்ணியவான் அவர்.
தனது இருப்பை ஒவ்வொரு நொடியும் பானுமதிக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார். அதுவும் யார் கண்ணையும் கருத்திலும் பதியாதவாறு.
ஜாடிக்கு ஏத்த மூடி என்பது போல் பானுமதியும் அவரை கொண்டு தான்.அகிலா வானதி கூட அதிசயித்துப் போவார்கள்.
தங்களை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் இருவருமே பொறுப்பானவர்கள். இவர்கள் வாழும் வாழ்க்கை இனிய தாலாட்டு போலவே அவர்களுக்கு தோன்றும்.
இந்துவும் மதுவும் மறுக்கவே அகிலாவை பார்த்து “அத்தை நீங்க எதுவும்” என்றதும் அவளை முறைத்தவர்
“அது பானுக்குப் பிடிச்ச பூ” செய்தி போல் சொல்லி வைத்தார்.
“ஓ!….. சரிங்க அத்தை பூ கொடுத்த அண்ணன் ரொம்ப நொந்து போயி கொடுத்துட்டுப் போனார் அதான்” சிரிப்பை அதக்கி கன்னல்.
அட சிவனே அலறியது வணங்காமுடியின் மனம் அவரது முக மாற்றத்தை பார்த்த பானுமதிக்குச் சிரிப்பு ஒரு பக்கம் தவிப்பு ஒரு பக்கம்.
அவர் வேகமாகக் கண் கொண்டு வானதி துணை நாட அதனைக் கண்டு கொண்டவர் பெண்களைத் திசை திருப்பும் பொருட்டு.
“சரி அதை விடுங்க கல்யாணத்துக்கு என்னமோ செய்யனும் கேட்டிங்களே? இப்போ கேளுங்க கொழுந்தும் இருக்கார், இது தான் சரியான நேரம்” என்று சின்னக் கோட்டுக்கு முன் பெரிய கோட்டை போட அது சரியாக வேலை செய்தது.
மக்கு பெண்களும் பூவை மறந்து கல்யாண வைபவத்திற்குத் தாவியது அப்பொழுது தான் சற்று மூச்சை விட்டார் வணங்காமுடி.
விமலா, “மாமா கல்யாணத்துக்கு நாங்க மெஹந்தி, பாட்டு, டான்ஸ் எல்லாம் வைக்கலாம்னு இருக்கோம் மண்டபம் பார்த்தாச்சு” ஆர்வம் பொங்க பேசும் பெண்ணிடம் மறுப்பு சொல்ல முடியாமல் தடுமாறியவர் பின்பு பதமாக எடுத்து சொன்னார்.
“அம்மாடி இதெல்லாம் என்ன கேட்டா வேணான்னு தான் சொல்வேன் கோவில்ல கல்யாணம் பண்ணி மண்டபத்துல சாப்பாடு போட்டுரலாம்.
பேரன் பேத்திகள் முக்கிய உறவுகள் போதும்மா இது என் கருத்து…உங்க சந்தோஷத்துக்காக இந்த மெஹந்தி, பாட்டு, டான்ஸ் எல்லாம் வச்சுக்கோங்க”
“அம்மாடி என்னை விட்டுருங்களேன் நான் வெள்ளை வேட்டி சட்டை தான். உங்களாக வேணா கலர் சட்டை போட்டுக்குறேன்.
அதுவும் மஞ்சை, பச்சை, செவப்புனு இல்லாம கண்ணை உறுத்தாத நிறமா சொல்லுங்க” பாவம் போல் கேட்டு வைக்க என்ன முயன்றும் ஆண்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை வெடித்து சிரித்தனர்.
அதற்கு மேல் அவரை கலவர படுத்தாமல் “சரிங்க மாமா” கன்னல் யோசனையாக மனதே இல்லாமல் சொல்லி வைக்க.
விமலா, “சரி கன்னல் மாமாவை விட்டுரலாம் அத்தைக்கு பியூட்டி பார்லர் கூட்டிட்டு போயி எல்லாத்தையும் மாத்திடலாம்” சிறப்பாக அடுத்த குண்டை தூக்கி போட.
அதிர்ந்து பானுமதியை பார்த்தார் வணங்காமுடி அனைவரும் இருக்கையில் என்ன பேச? அதுவும் போக ஆசையாக கேட்கும் பெண்களிடம் மறுக்கவே அவரால் முடியவில்லை சங்கடமாக இருந்தது.
வேகமாக உண்டு முடித்தவர் விட்டால் போதுமென திகிலுடன் வெளியில் சென்று விட்டார் மனைவியை எண்ணி மனம் சன்னமாக அலறியது.
பெண்களின் கேலி புரிந்து ஈஸ்வர், அருணகிரி பசுபதி ஓர் சிரிப்புடன் கடக்க. ஆண்கள் தலை மறையவும் அரிவை பெண்களைப் பிடித்துக் கொண்டார் வானதி.
“ஏய் பிள்ளைகளா என்ன இது? ஒருத்தர் விடாம எல்லாரையும் வம்பு பண்ணுறது”
“அத்தை இது அநியாயம் நாங்க உங்க கிட்ட விஷயம் சொல்லி ஒரு வாரம் போச்சு. அது போகப் பூ கார் தான் வந்து கதறிட்டுப் போனார்.
மார்க்கெட்ல இருந்து வரேன் இந்த உள்ளங்கை அளவு பூவுக்கு கொஞ்சம் கருணை காட்டி ஒரு பத்து ரூபா சேர்த்து தாங்கம்மானு அழுகாத குறை” என்றதும்
‘தண்டல் காரரே!…” மனதுக்குள் தனது கணவனை எண்ணி பல்லை கடித்தார் பானுமதி.
“ஓ!….” இப்போது வானதியும் சேர்ந்து கொள்ள
அக்கா நீங்களுமா? வேணாமே கெஞ்சவே ஆரம்பித்து விட்டார் பானுமதி.இந்த பெண்களை எப்படிச் சமாளிக்கவென்றே தெரியவில்லை அவருக்கு. இளைய தலைமுறை அனைத்தும் அதி புத்திசாலியாக இருந்து தொலைத்தது.
அனைவரும் பானுமதியை பார்க்க அவருக்கு ஓடவும் முடியவில்லை, ஒளியவும் முடியவில்லை மருமகள்கள் அது போகப் பேத்திகள் முன் அச்சோ!… அச்சோ!.. என்று ஆனது
அவரது நிலை புரிந்த பெரியவர்கள் இருவரும் “சரி!.. சரி!… சாப்பிட்டு வேலைய முடிங்க அப்புறம் பேசிக்கலாம்” என்றதும் சிறு சல சலப்புடன் கூட்டம் சற்றுக் கலைந்தது.
**********
மாலையில் கடையில் இருந்து வணங்காமுடி பானுமதிக்கு அழைத்து, விமலாவை கோவிலுக்கு அழைத்து வருமாறு சொல்ல.அவரும் தனக்குத் துணை என்று விமலாவை அழைத்துச் சென்றார்.
சென்னையில் இருந்து வந்து வாரம் கடந்த நிலையில் விமலாவிடம் தனிமையில் பேச சந்தர்ப்பமே பெரியவர்களுக்குக் கிட்ட வில்லை.
இன்று காலையில் பானுமதியிடம் பேசி விட வேண்டுமென்று சொல்லியே சென்றார் வணங்காமுடி அதன்படி இந்த சந்திப்பு.
விசுவோடு திருமணமான புதிதில் இக்கோவிலுக்கு வந்ததுண்டு அதன் பின் இப்பொழுது தான் வருகிறாள். மாமியார் மருமகள் இருவரும் சுவாமி தரிசனம் முடித்து விட்டு அமர்ந்து கொண்டனர்.
விமலா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கப் பானுமதி தனது கணவனின் வரவை எதிர் நோக்கி நின்றார் சற்று நேரத்தில் வணங்காமுடி வர.
“அத்தை மாமா” என்று விமலா எழுந்து கொள்ள அவளது கை பிடித்து அமர்த்தியவர்,
“நம்பக் கிட்ட தான் வராங்க உட்காருடாம்மா” என்க
ஒருவித குழப்பத்தோடு அமர்ந்தாள் மனம் ஏன்? என்ற கேள்வி எழுப்பிய போதும் அமைதியாக இருந்தது அரிவை பெண்.
அவர்களிடம் நெருங்கிய வணங்காமுடி சிறு புன்னகையை மருமகளுக்குப் பரிசளித்து இயல்பு போல் மனைவியுடன் அமர்ந்து கொண்டவர். சிறு மௌனத்திற்குப் பிறகு விமலாவை பார்த்தார்.
“என்னங்க நடுவர் சம்சாரம் எப்படி போகுது திருச்சி வாழ்க்கை” என்றதும் பேச்சுத் தன்னைக் கொண்டு தான் போலும் என்று எண்ணிய விமலா தயங்காமல் பேசினாள்.
“நல்ல இருக்கு மாமா சொல்ல போனா ரொம்ப நிம்மதியா இருக்கு” என்றதும் சிரித்தவர்.
“நடுவர் என்ன சொல்லறாரு”
“நான் இல்லாம கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல, அப்பப்போ கோபம் வரத்தான் செய்து , ஆனா ஒரு குழந்தை வரும் வரை இங்கையே இருப்போம்னு முடிவு பண்ணி இருக்கோம் மாமா”
“ரொம்ப நல்ல முடிவு உங்க அத்தைங்க இருப்பாங்க பார்த்துக்கிடுவாங்க அது போக எங்க அப்பா அம்மா ஆசி உண்டு கூடிய சீக்கரம் வரம் கிட்டும்” என்றவர்.
“உங்களுக்கு ஏதும் சங்கடம் இருக்கா?” மறைமுகமாக வணங்காமுடி கேட்க பெண்ணுக்கு புரியவில்லை. அவளது முகபாவத்தை வைத்து கண்டு கொண்ட பானுமதி விளக்கும் பொருட்டு
“இல்லடா கன்னல் சின்னப் பொண்ணு அதுவும் சூட்டிகையான பொண்ணு. அதுனால அவளைக் கொஞ்சம் கண் கொத்தி பாம்பாட்டம் பார்த்து வைக்கனும்.
இனி நாள் கூடக் கூடப் பெரியவங்க கவனம் அவ மேல திரும்புறது இயல்பு, அதைத் தான் கேக்குறார் போல” கணவனை விட வார்த்தையைப் பார்த்து கோர்த்து பேசினார் பானுமதி.
பெரியவர்கள் சொல்ல வருவதைச் சில நொடிகளில் கண்டு கொண்ட விமலா சிறு அமைதிக்கு பிறகு “எனக்குச் சின்ன ஏக்கமிருக்கு அத்தை, ஆனா கன்னல் மேல பொறாமை இல்ல இது வேற மாதிரி எப்படி சொல்லுறதுனு தெரியலை”
அவர் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமே என்று பெண் தவிக்க அவளுக்குத் தகப்பன் கதப்பை கொடுத்து துணை வந்தார் வணங்காமுடி.
“சாமி நீங்க தவிக்க வேண்டாம் எங்களுக்கு சரியா புரியுது, ஆனா எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க சூழ் நிலையும் ஒரே போல இருக்காது,
மனுசங்க மனமும் தான். அதுக்கெல்லாம் நம்ப ஈடு கொடுக்கனும் அதுக்கு நம்ப மனசு தெளிவா இருக்கனும்.
உதாரணத்துக்குக் கன்னலுக்கு ஏழாம் மாசம் வளைகாப்புன்னு வைங்க வந்த சனத்துல நல்லவங்க கெட்டவங்கனு பார்க்க முடியாது.
ஒருத்தர் இல்லனாலும் ஒருத்தர் வம்பு பேச தான் செய்வாங்க. நம்மளும் மனுஷன் தானே அந்நேரம் நம்ப நிலைமை கொஞ்சம் சறுக்கல் தான்.
எங்களோட யோசனை எல்லாம் அப்போ நீங்க கண்ணைக் கசக்கிட்டு நின்னுட கூடாது. உங்க பெத்தவங்க முன்னாடி அது இன்னும் சங்கடமா போயிடும்.
பேசுறவங்களை ஒன்னும் செய்ய முடியாது, அதுக்குன்னு நம்பக் கேட்டுக்கிட்டும் இருக்க முடியாது.
அதுக்காக அவங்கள கடுஞ்சு சொல்லவும் முடியாது இது கூர்மையான வளைவு பார்த்து தான் பயணம் பண்ணனும்.
எங்களுக்கு எல்லாரும் முக்கியம் அதை விட நீங்க ரொம்ப முக்கியம். இதை நீங்க மனசுல பதிய வைக்கனும் அது போதும்” என்றதும் சிறு புன்னகையுடன்.
“மாமா நான் பார்த்த மனிதர்களும் சரி, பழகுனா மனிதர்களும் சரி உங்களை மாதிரி ஒரு எதிர்த்தமான மனுஷங்களை நான் பார்த்ததே இல்லை” என்று பெண் அகம் உணர்ந்து சொல்ல சிறு புன்னகை மட்டுமே சிந்தி.
“நீங்க பார்த்ததே இல்லை நாங்க நித்தமும் பார்த்து பார்த்து வளர்ந்து இருக்கோம். எங்க அப்பாரும் சரி அம்மாவும் சரி, அவங்க சொந்தங்களும் சரி இப்படி தான்,
ஆனா எங்களைக் கொண்டு எங்க பிள்ளைங்க இல்லங்குறது ரொம்ப வருத்தம்” இன்னும் தன் பிள்ளைகள் இப்படியே இருக்கீறார்களே என்ற வருத்தம் அவருக்கு.
“சரிம்மா அதை விடுங்க இப்போ எங்க கவனிப்பு கன்னல் என்றாலும் எங்க கவலை முழுக்க நீங்கதான்.
அதைக் கொண்டு நடந்துக்குங்க நடுவர் கிட்டையும் சொல்லிட்டேன் அவரும் பார்த்துப்பார்ன்னு நம்பிக்கை இருக்கு.
இந்த முறை பேச்சுன்னு வந்தா உங்க அத்தையைத் தாண்டி தான் உங்க கிட்ட வரனும். நான் உங்க அத்தையாவே நெருங்க விட மாட்டேன்.
அவங்க கிட்ட நெருங்காது போது உங்க கிட்ட வர வாய்ப்பில்லை, அதுனால கவலை படாதீங்க இப்போ இருக்குற மாதிரி சந்தோசமா இருங்க” என்றவர் பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்து கொள்ள அவரைத் தொடர்ந்து பெண்களும் எழுந்து கொண்டனர்.
வியப்பிற்கு மேல் எதாவது பொருள் கொண்ட வார்த்தை உண்டா என்று அலசியது போலும் அரிவை பெண்.
நிறைவு கொண்ட மௌனத்தில் மாலை வேளை தென்றல் கொண்டு வந்த தாழம்பூ குங்கும வாசனையை நாசியில் நிரப்புத் தன்னைப் புனிதம் செய்து கொண்டே நடையை கட்டியது.
என்ன மனிதர்கள் என்ற வியப்பு தேவையில்லை பெண்ணே.நாங்கள் பெரியோர் வழி காட்டுதல் கொண்டே வழி அமைத்துச் செல்கிறோம்.
எங்கள் வேர்கள் நீங்கள். ஏன்? எங்களைக் கொண்டு இல்லை? என்ற கேள்வி வணங்காமுடியிடம்.
விமலாவோ பெரும் யோசனையில் ‘ஏன் நம் உறவுகள் இப்படி இல்லை? மாற்றியது யார் சமூகமா? அசுர வளர்ச்சி கொண்ட விஞ்ஞானமா? தொலை தொடர்பா?’
இல்லை அதனைக் கொண்டு நாம் மறந்த மக்களின் தொடர்பா? எண்ணம் பல வழிகளை பிடித்துச் செல்ல பார்க்க தலையை உலுக்கி கொண்டு நடந்தாள் விமலா.