வடக்கு வீதி சதாசிவ இல்லமே களை கட்டியது வீட்டுக்கு முன் பந்தலிட்டு,வாழை மரம் கட்டி,மாவிலை தோரணம் வாயிலில் தரித்துக் கோலாகலமாக இருந்தது.அதற்கு மாறாக இருந்தது வீட்டில் உள்ள மக்களின் நிலை.
நாளை சொந்தம் அனைத்தும் கூடி விடும் என்ற நிலையில். ஈஸ்வர்- வானதி அருணகிரி- அகிலா நால்வரும்,
அவர்கள் எண்ணியதை போலச் சொத்தை பிரித்து எழுதி வைத்திருந்தனர்.அதனை குடும்பத்தார்க்கு தெரிவிக்க எண்ணி அனைவரையும் அழைத்திருந்தார்கள் போலும்.
கன்னிகா, சித்ரா , அவர்களது கணவன் மார்கள் மற்றும் பேரன், பேத்திகளென வீடே நிறைந்து போனது.
கன்னிக்காவின் பெரிய மகன் மது கிருஷ்ணன். அவன் மனைவி அனுவும் திருமணத்திற்காக இந்தியா வந்திருந்தனர்.
இளையவன் மெதுவாகப் பசுபதியை நெருங்கி “குட்டி மாமா என்ன பேசவே மாட்டேங்கற” தன்னிடம் பேச மறுக்கும் பசுபதியை பார்த்து கேட்டு வைத்தான் மது.
“என் கல்யாணத்துக்கு வராதவனோட என்ன பேச்சு வேண்டி இருக்கு எனக்கு?”
“நீ வேற லீவு கிடைக்கல மாமா எனக்கும் சேர்த்து என் பொண்டாட்டி வந்தா தானே”
“வக்கனம் பேசாதடா” எரிச்சலாக சாடிய பசுபதி திரும்ப, சித்ரா மகன் சங்கரன் பசுபதியை முறைத்துக் கொண்டு நின்றான்.
“உனக்கு என்னடா”.
“கல்யாணமாகி குழந்தையும் ஆகி போச்சு. நீ இன்னும் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வர. என் பொண்டாட்டி எத்தினி தரம் அம்மாச்சி கிட்ட பேசுனா தெரியுமா? எதாவது காரணம் சொல்லுறாங்க அம்மாச்சி”.
“அட! ஏன் டா? நீ வேற நிலைமை புரியாம இங்க அமோகமா போகுது.மறு வீடே பத்து நாள் சென்டு தாண்டா போனேன்” பசுபதியின் பேச்சில் கோபம் போயி கவலை வந்தது சங்கருக்கு.
எப்படி இருந்த வீடு? அவனுக்குப் பிடித்த இடமென்றால் அது சதாசிவ இல்லம் அம்மாச்சி தாத்தா வீடு தான். நண்பர்கள் கூடக் கேலி பேசியது உண்டு. அந்த வடக்கு வீதியில் என்ன இருக்கோ? என்று தெருவிலே விளையாண்டு கிடப்பார்கள்.
ஆனால் திருமணம் முடிந்த பிறகு வாழ்க்கை வேலையென்று ஓட்டமிருக்க இங்கு வந்து போக முடியவில்லை.
“என்ன ஆச்சு மாமா அம்மாவும் வறுத்த பட்டாங்க, ஆனா ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாங்க”
“பேச கோடி இருக்கு இரு அப்புறம் பேசுவோம். இப்போ இந்தப் பஞ்சாயத்தைப் பார்ப்போம்” என்றான் பசுபதி.
கிருஷ்ணன், சங்கரன், பசுபதி மூவரும் சற்று நெருக்கம் என்பதால் இயல்பாக பேசி கொண்டனர்.இளசுகள் பேச்சை கலைத்தது வணங்காமுடியின் குரல்.
“அண்ணே!… என்ன வேலை இது? இதுக்கு என்ன அவசரம் இப்போ?..”
“வணங்கா கொஞ்சம் பொறுமையா இரு நான் பேசி முடிச்சுகிறேன்” என்ற ஈஸ்வர் அனைவரையும் பொதுவாகப் பார்த்துவிட்டு.
“நானும் என் மனைவியும் பேசி ஒரு மனசா எடுத்த முடிவு இது. இதுல என்ன சங்கடம் இருந்தாலும் சொல்ல என் பிள்ளைகளுக்கும், பேரன் -பேத்திகளுக்கு உரிமை இருக்கு” என்றவர் சொத்தை யார்யாருக்கு பங்கிட்டு உள்ளார் என்பதை விவரமாகச் சொல்ல தொடங்கினார்.
என்னோட ஜவுளி கடை முதல் பணம் சதாசிவ கடையில இருந்து எடுத்தது.அந்தக் கடை மொத்தமும் மூனு பங்கு.எனக்கு, அருணகிரிக்கு, வணங்காமுடிக்கு.
சமபங்கா எங்க அப்பார் எழுதி வச்சாரு அதில என் பங்கை எடுத்து தான் ஜவுளி கடை தொடங்கினேன்,
ஆனா இன்ன வரை சதாசிவ கடையிலிருந்து லாபத்துல பங்கு வருது இதை மனுசுல வைங்க எல்லாரும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
ஜவுளி கடை கொண்டு நான் ஈட்டிய பணம் அம்புட்டும் சொத்தா என் பொண்ணுக்கு எழுதி வச்சு இருக்கேன்.என் பொஞ்சாதி நகை அம்புட்டும் அவங்களுக்குத் தான்.
அது போக எங்க அம்மா நகையில பத்து பவுன் பொண்ணுக்கு தான்” என்றவர் சில பத்திரங்களை எடுத்து கன்னிக்காவின் கையில் கொடுத்தார்.
“இதுல மூனு வீடு, தோப்பு, கொஞ்சம் காலி இடம் இருக்கு எல்லாமே திருச்சிய சுத்தி தான்” கூடுதல் தகவல் தர அனைத்தையும் மௌனமாகக் கேட்டு கொண்டனர்.
“ஜவுளி கடை முழுமையும் ஸ்வாமிநாதனுக்கு அது போக எங்க அம்மா நகையில மீதம் இருக்க அஞ்சு பவுன் ஸ்வாமி பொண்டாட்டிக்கு” என்று முடிக்க ஸ்வாமிநாதனும் மீனுவும் அதிர்ந்து போனார்கள் ஸ்வாமிநாதன் எதுவோ பேச வர.
“பேச்சே இல்லை ஸ்வாமி இது எங்க முடிவு” என்று தடுத்தவர். கன்னிகா கணவனைப் பார்த்து “மாப்பிள உங்களுக்கு இதுல எதாவது நெருடல் இருக்கா?”
“ஐயோ!… இல்லங்க மாமா இன்னைய வரைக்கும் சீர், செய் முறைக்குக் குறையில்லை எனக்கும் எந்தக் குறையும் வைக்கலை” என்று தன்மையாக பதில் அளித்தார்.
மது கிருஷ்ணனை பார்த்து “அப்பு உங்களுக்கும் உங்க சம்சாரத்துக்கும்”
“என்ன தாத்தா? எங்களுக்கு எந்த விதமான யோசனையும் இல்லை” என்றதும் தனது பெண்ணிடம் திரும்பி.
“அம்மாடி!…” கன்னிகாவை கேட்க எண்ணி அவர் அழைக்க.
“அப்பா கேட்கவே வேண்டாம் உங்க இடத்தை இனி வரும் காலம் என் தம்பிகளைக் கொண்டு தான் நான் கடக்கனும். எனக்குக் கஷ்டம் வந்தா, தயங்காம தம்பிங்க கிட்ட கேட்பேன்” என்றதும் சிறு புன்னகை வணங்காமுடியிடம் இத்தனை நேரமிருந்த நெருடல் சற்று அடங்கியது போலும் .
ஈஸ்வர் வழியில் அருணகிரியும் சொத்தை விசுவுக்கு எழுதி வைக்கச் சித்ரா, சித்ரா கணவன், சங்கர் என்று அனைவரும் ஒப்புதல் தந்தனர்.
அவர்களுக்கு அசையும் சொத்து அசையா சொத்து என்று குவித்து வைத்திருந்தனர் ஈஸ்வரும், அருணகிரியும்.
விசுவும் – விமலாவும் உணர்வின் பிடியில் மௌனம் கொண்டனர்.இது எதிர்பாராத நிகழ்வு ஆண் பிள்ளையென்று கடையைக் கொடுக்க வில்லை. இது வணங்காமுடியின் உழைப்புக்கு செய்யும் மரியாதை.
சதாசிவ கடையைக் கொண்டே இவர்கள் தொழில் வளர்ந்தது. அதனால் மூலதனமிட்டவனுக்கு என்ன செய்ய? என்றதற்கு விடையே இந்த முடிவு அவர்கள் செய்யும் மரியாதையும் கூட.
பானுமதி அனைத்தையும் மௌனமாகப் பார்த்திருந்தார். வானதி, அகிலா வாய் மொழியாக இதனை அடிக்கடி கேட்டதுண்டு, அதனால் அவருக்கு அத்தனை அதிர்ச்சி இல்லை போலும்.
பேரிளம் பெண்ணின் எண்ணமெல்லாம் வணங்காமுடியின் மௌனம் தான். இரு நாட்களுக்கு முன்பு சண்டை கட்டியவர், இன்று வரை மௌனம் கொண்டு வதைக்கிறார் அல்லவா அதனால் எண்ணம் முழுமையும் அவரிடமே.
அதன் பின் அனைவரும் சிறு வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்தனர்.ஆண்கள் அனைவரும் சேர்ந்து நின்று பேச, பெண்கள் குழு தனியாக நழுவி சென்றது.
சிறு கேள்வியும் பெரும் விவாதமாகச் சொத்தை பிரித்துக் கொடுத்து விட்டனர் ஈஸ்வரும், அருணகிரியும்.இனி அவர்கள் காலம் இம்மூன்று ஆண்களைக் கொண்டு தான் என்ற செய்தியும் இதில் ஒளிந்து நின்றது.அதனை ஸ்வாமி,விசு,பசுபதி மூவரும் கண்டு கொண்டனர்.
பசுபதிக்கு குல தொழில் என்பதால் அவனுக்குச் சதாசிவ கடை தான் என்று முடிவாகி போனது. இது அப்பனை கொண்டு வளர்ந்த பிள்ளை அல்லவா, இந்த கடை குட்டி லாபத்தை மூன்றாகத் தான் போடுகிறது. இது தனிக் கதை, வணங்காமுடி மட்டுமே அறிந்த கதை.
******************
கல்யாண வீடு களை கட்ட, நாளை இந்நேரம் வீடு முழுமையும் நிறைந்து விடும். நாளை மதிய உணவை முடித்துக் கொண்டு சதாசிவ இல்லத்திலிருந்து பேருந்து திருக்கடையூரை நோக்கி கிளம்புகிறது.
அதனால் ஒவ்வொரு பொருளையும் பெண்கள் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர்.அரிவை பெண்களான மீனு,விமலா,கன்னல்,மது கிருஷ்ணன் மனைவி, சங்கர் மனைவி.
அது போக இந்து, மது, அனு என்று பட்டாளம் அனைத்தும் உடை, நகை, பரிசு, பாட்டு, நடனம் என்று ஆர்வமாக இருக்க.
பெரியவர்கள், கன்னிகா, சித்ரா, அகிலா, வானதி அவர்களுடன் பானுமதி அனைவரும் வேண்டிய பொருள்கள் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர்.
கடையில் இருந்து வந்த வணங்காமுடி மாலை தேனீருக்கு வந்து கூடத்தில் அமர. அவர் தலையைக் கண்டவுடன் பானுமதி செய்யும் வேலையை வைத்து விட்டு. அவர் தேவையைக் கவனிக்கச் சென்றார்.
கூடத்தில் இருக்கும் பெரிய பித்தளை குடங்களைப் பார்த்தவர் கேள்வியாக யோசித்து கொண்டே “அண்ணி!” என்று வானதியை அழைக்க.
அவரோ சொல்லுங்க “கொழுந்து”
“எதுக்கு அண்ணி இத்தினி குடம்”
“என்ன கொழுந்து இப்படி கேக்குறீங்க? 13 கலசம் வச்சு பூஜை பண்ணனும் தானே”
“அது தெரியும் அண்ணி அதுக்கு இத்தினி பெரிய குடமா?” என்றவர் முகத்தில் அத்தனை கவலை.
“என்ன பேசுற கன்னிகா? இது எல்லாம் சாஸ்திரம் இந்தக் காலத்துல நீங்க சில விஷயம் கடை பிடிக்காட்டியும், நம்பளால செய்ய முடிஞ்சதை செய்யலாம் தானே?” என்றவர் வணங்காமுடியை பார்த்து அவருக்கு விளக்கும் பொருட்டு.
“கொழுந்து நீங்க வளர்ந்து, பெரியவனாகி, கல்யாணம் பண்ணி போற வரைக்கும், உங்க நல்லது அல்லது எல்லாம் பெற்றவர்களை சாரும்.அதன் பின் தான் உங்களைக் கொண்டு செயல் படும்.
அப்படி நீங்க பண்ண பாவம், புன்னியம், தீட்டு, தொடக்கு எல்லாம் இந்த அறுபது வயதுல நம்ம ஆயுளை நெருங்காம இருக்க வேண்டி தான் அறுபதாம் கல்யாணமே.
13 கலசத்தை வச்சு அதில் தண்ணீர் நிரப்பு பிள்ளைங்க, பேரன், பேத்திங்க, கொள்ளு பேத்திங்க சூழ சல்லடை வச்சு உங்களுக்கு அபிஷேகம் பண்ணுறது.
கணபதி,
பிரம்மா,
விஷ்ணு,
உருத்தின்,
மார்க்கண்டேயன்,
திக்பலகர்கள்,
ஆயுள் தேவதை,
அதி தேவதை,
ப்ரதீயதி தேவதை,
சப்தசீரஞ்சீவிகள்,
வருஷம்,
நட்சத்திரம்,
நவக்கிரகம்.
இந்த 13 பேருக்கும் பூஜை செய்து ஓமம் வளர்த்து தோஷம் நிவர்த்தி மாதிரி நமக்கு அபிஷேகம் பண்ணுறது என்று சொல்லி முடிக்கப் புருவம் உயர்த்தினாள் கன்னிகா.
“இதுல இத்தனை இருக்கா”
“ஆமாம் இன்னும் இருக்கு அதைச் செய்யத் தான் நமக்கு முடியல, ஆனா முடிஞ்ச சடங்கை நிறைவா செய்யலாம் தானே” அகிலாவும் சொல்ல.
ஒத்துக்கொள்ள தானே வேண்டும் பெரியவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தமுண்டு அல்லவா.
“எல்லாம் சரிதாங்க அண்ணி, ஆனா அவங்களுக்குத் தண்ணீ சேராது,இதுல குடம் பெருசு தண்ணியும் குளிரா இருக்குமே” என்று உண்மையான காரணத்தை சொல்ல.
“அதானே பார்த்தேன்” என்று சிரித்த வானதி “கொழுந்து கவலைய விடுங்க குடம் அளவு சொல்லுங்க நான் வாங்கிட்டு வந்துறேன்” என்றவரிடம்.
“இல்ல அண்ணி நானே போயி வாங்கிட்டு வந்துறேன். 13 தானே இதோ போறேன்” என்றவரிடம் தேனீரை நீட்ட பானுமதியை கண்டு கொள்ளாமல் அதனை வாங்கி ஒரே மூச்சில் குடித்தவர் வேகமாகக் கிளம்பி விட்டார் குடம் வாங்க.
போகும் அவரைக் கண் வெட்டாமல் பார்த்து வைத்தார் பானுமதி அவருக்கும் பேசியது கேட்டதே. பானுமதியின் நிலை அறிந்த அகிலா.
“சரி!.. சரி!… பானு வேலை நிறையா இருக்கு. நாளைக்குக் கல்யாணம் முடியட்டும் பிறகு வச்சக் கண்ணை எடுக்காம பார்த்துகிட்டே இரு” அகிலா சொல்ல கன்னிகாவும் சித்ராவும் குலுக்கி சிரித்தனர்.
“அக்கா பிள்ளைங்க முன்னாடி” பானுமதி சினுங்க.
“அம்மாடி இதுகளுக்கு என்ன தெரியாம இருக்குச் சின்னதுங்களுக்குப் பொழுதுக்கும் பேச்சே உங்களைப் பத்தி தான் ஓடுது.சின்ன மருமக கொழுந்துக்கு என்ன பெயர் வச்சு இருக்கா தெரியுமா?” கண்ணில் குறும்பு பொங்க வானதி கேட்க .
“என்னக்கா சொல்றீங்க” பானுமதி அலற.
“சும்மா கேளு காதல் மன்னன்…. அசால்ட்டா அன்னைக்குக் கேட்குறா விமலா பொண்ணு கிட்ட,‘எங்க நம்ப வீட்டு காதல் மன்னனை காணோம்னு’
அடுப்படில வேலை பார்த்துகிட்டே நின்னவ முழிக்கிறேன் ‘யாரை சொல்றா இந்த பொண்ணுன்னு’ அப்புறம் தான் அகிலா சொன்னா ‘அக்கா கன்னல் நம்ப கொழுந்த தான் சொல்றான்னு’.
“கெட்டது குடி”, பானுமதி.
“இந்தக் கல்யாணம் முடியிற வரை உங்க இரண்டு பேரையும் என்ன செய்யக் காத்திருக்குதுங்களோ தெரியல பானு” சிறு கேலியுடன் அகிலாவும் சேர்ந்து கொள்ள.
“என்னக்கா பயம் காட்டுறீங்க” பானுமதி பதறினார்.
“ஏய்!.. உண்மையா தான் சொல்றேன். நீ நயிட்டி போட்டது கூடப் போட்டோ எடுத்து உன் புருசனுக்குக் கொடுக்க ஆல்பம் போட்டு வச்சு இருக்குங்க”
“ஐயோ!.. அது எப்படி தெரியும்?”
“அது உன் பெரிய மருமக கைங்கரியம் சாமி” அகிலா.
“அக்கா என்னக்கா இது? எல்லார் முன்னாடியும் சங்கடமா போயிடும். அவர் எதிர்வினை எப்படியோ” என்று பானு தன் கணவனை எண்ணி கவலை கொள்ள.
“அதெல்லாம் நேக்கா பேசி சரி கட்டிடுங்க. இந்தக் காலத்து பிள்ளைங்க அம்புட்டும் கள்ள பிள்ளைங்க சாமி” அகிலா செல்லமாக அலுத்துக் கொண்டார்.
அதன் பின் மல மலவென வேலைகள் நடந்தது. இரவு சதாசிவ வீடே ஜெக ஜோதியாக இருந்தது.
*****************
இரவு சில உறவுகள் வர அவர்களது உணவு கவனிப்பு நாளை பொழுதுக்கு திருமண மாலை, அபிஷேக பொருட்கள், திருமண உடை,நகை என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அடுக்கி வைத்தனர்.
மாலை கிளப்புவதாக இருந்த பேருந்து இன்னும் சில உறவினர் வருகைக்குக் காத்து நின்றது.
இரவு அனைவரையும் உணவை முடிக்க வைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தார் ஈஸ்வர்.அனைவரும் ஏறி ஜோடிகளாக அமர்ந்து கொண்டனர்.
முன்னாள் அமர்ந்திருந்த கன்னல் “எங்க? மாமா அத்தையைக் காணோம்?” என்று அகிலாவிடம் கேட்க.
“சாமி கும்பிடுறாங்க வருவாங்க” என்றார் பெரியவர். மேலும் சில நிமிடங்கள் கடக்கக் குறும்பாக அகிலாவை பார்த்த கன்னல்,
“அத்தை நானும் சாமி கும்பிட்டு வரேன்” என்று அவர் தடுக்கும் முன்பே வண்டியில் இருந்து இறங்கி சென்று விட்டாள் அவளைத் தொடர்ந்து விமலாவும்.
“ஏய்!… எங்க போற” விசு கேட்க அதற்கு பதில் சொன்னது என்னவோ வானதி தான்.
“விசு நீ என்ன சொன்னாலும் இந்தப் பிள்ளைங்க கேட்காதுங்க நீ உட்காரு வருவா” என்றவரை பார்த்து அப்படி ஓர் சிரிப்பு.
கை பேசியுடன் உள்ளே சென்ற கன்னல் மற்றும் விமலா அங்கே கண்ட காட்சியில் ஒரு நிமிடம் லயித்து நின்று விட்டார்கள். கன்னலுக்கு கண்ணில் உணர்வின் பிடியில் சிறு கண்ணீர் எட்டி பார்க்க, விமலா சத்தமில்லாமல் அழுதே விட்டாள்.
அப்படி என்ன காட்சியோ?
இது புனிதமான காட்சி சொக்கனும் சொக்கியும் சேர்ந்து சொக்கி நின்ற காட்சி.
அங்கே வணங்காமுடி பானுமதியை இறுக்க அனைத்திருந்தார். வம்பு செய்யவென்று வந்த அரிவை பெண்களுக்கு இவர்களது அணைப்பு ஏனோ பெரும் கண்ணீரை தர வந்த வழியே சென்று விட்டார்கள்.
சொல்ல முடியாத உணர்வு குவியல் என்பார்களே.அது போலப் பெண்களுக்குச் சொல்ல தெரியவில்லை. இது போல் ஓர் வாழ்க்கை என்ற ஏக்கமிருந்தாலும்.
இன்னும் பல ஆண்டுகள் அவர்களுக்கு ஆயுளை கொடு என்று கடவுளிடம் வேண்டி நின்றது அரிவை பெண்களின் மனம்.
இரு ஆண்களுக்கும் இவர்களது மௌனம் புரியவில்லை என்றாலும் மௌனமாகப் பார்த்திருந்தனர்.
************
இருவரும் சாமி கும்பிட்டு முடிக்கப் பானுமதி கண்ணில் நீருடன் வணங்காமுடியை பார்க்க.அதற்கு மேல் எங்குக் கோபம் கொள்ளப் பேரிளம் பெண்ணை இறுக்கி அனைத்துக் கொண்டார்.
சில மணி நேரம் இருவரும் தங்களைத் தொலைத்து நின்றனர்.தன்னிடமிருந்து மெதுவாகப் பானுமதியை பிரிந்தவர்.அவரது கண்ணீரை துடைத்து சிறு எச்சில் கொண்டு வெகு அழுத்தமாகக் கன்னம் தீண்டி “வாங்க போலாம்” என்று அழைக்க பெரும் நிறைவாக அவர் கை கோர்த்தார் பானுமதி.
இருவரும் பேருந்து வரையில் கை கோர்த்து வந்தவர்கள் அதன் பின் ஒருவர் பின் ஒருவராக வண்டியில் ஏற இளைய பட்டாளம் ஓ !…………. வென்று கத்தி அவர்களை அதிர வைத்தது…
அதன் பின் கேலியும் கிண்டலுமாக பேருந்து திருக்கடையூரை நோக்கி கிளம்ப.