வடக்கு வீதி வணங்காமுடி – 6
அறையின் வாசலில் நின்று வணங்காமுடி பானுமதியை அழைக்க ஓர் நொடி அவருக்குத் தூக்கி வாரி போட்டது.
ஒரு நாளும் மனிதன் இத்தனை பெருங் குரலெடுத்து அழைத்ததில்லை அதுவும் தனது பெயர் சொல்லி எச்சில் கூட்டி விழுங்கி நின்றவரை நெருங்கினார் வணங்காமுடி.
மாமனார் குரல் கேட்டதும் விமலாவின் அழுகை இருந்தயிடம் தெரியாமல் ஓடியது விந்தையிலும் விந்தை தான்.பெண்கள் இருவருக்கும் மாமனார் என்றால் கோபக்காரர் முசுடு என்ற விம்பம் மனதில் உண்டு.
அதுவும் அவர் இன்று சற்று உரக்க மாமியாரை அழைக்கப் பெண்களின் எண்ணம் வலுப்பெற்றது போலும்.
******************
மனைவியிடம் நெருங்கியவர் அவரது கண் பார்த்து “காலையில உங்ககிட்ட என்னங்க சொன்னேன்” என்றவரை புரியாமல் பார்த்தார் பானுமதி.
அவர் பலவற்றைச் சொன்னார் அவர் எதைச் சொல்கிறார் என்று பாவம் புரியவில்லை அவருக்கு. அவரும் என்னதான் செய்வார் மகன் அடித்த லூட்டியில் கணவனிடம் ஒரு மூச்சு வாங்கிக் கட்டி கொண்டார், அது போதாதென்று பெரிய மகன்கள் கவலை, இதற்கிடையில் கல்யாண வேலை வேறு.
“அ…து! அது…ங்க!….” டைப்பிஸ்ட்டம்மாக்கு வார்த்தை வஞ்சம் செய்தது (அது பங்கு போலும்).
“என்னங்க பேச்சு பழகுறீங்க!…என்ன சொன்னேன் நான்? நடுவர் பொண்டாட்டிய பக்கத்துல வச்சு வேலை பாருங்கன்னு சொன்னேன் தானே”
ஆம் காலையில் பானுமதியை அழைத்து ஒன்றுக்கு இரு முறை விமலாவை தன்னுடன் வைத்துக் கொள்ளச் சொன்னார்.அவர் எதற்குச் சொல்லி இருப்பார் என்ற அர்த்தம் தற்போது தான் விளங்கியது ஐயோ!… என்றானது பானுமதிக்கு.
“புரியுதுங்க”
“என்னங்க புரியுது? இப்பப் புரிஞ்சு என்னங்க செய்ய? நல்ல நாள் அதுவுமா நிறைந்த வீட்டுல வாழ வந்த பொண்ணு கண்ணைக் கசக்குதுங்களே!.. யார் பதில் சொல்லுவா?” என்றதும் தான் விமலாவிற்கு விளங்கியது தலையைக் குனிந்து கொண்டாள் தவறு அவள் மேலும் உள்ளதே விலகி போனது அவள் தானே!
மனைவியை விடுத்து “ஏன்னுங்க மருமக பொண்ணு” என்றவர் விமலாவை அழைக்கக் குனிந்து நின்றவள் கையை இடித்தாள் மீனு.
தன்னைத் தான் மாமனார் அழைக்கிறார் என்று தெரிந்தாலும் அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது இருந்தும் பார்த்தாக வேண்டுமே முயன்று அவரைப் பார்க்க.
“உங்க கிட்ட என்ன சிங்கமாவும் உங்க அத்தைய புலியாவும் சொல்லி வச்சு இருக்காரா உங்க வூட்டுக்காரர்” அவரது பேச்சில் பதறியவள்
“அய்யயோ! அப்படி இல்லை அங்கிள்!”
அவளது விழிப்பில் மலையளவு எரிச்சல் வர அதனை அடக்கியவர் “அப்புறம் ஏங்க பேச பயப்புடுறீங்க இரண்டு பொண்ணுங்களும் இந்த வீட்டு மருமக பொண்ணுங்க தானே. நீங்க முன்ன நின்னு செய்ய வேண்டாமா? யாரோ போல ஒதுங்கி ஒதுங்கி போனா என்ன அர்த்தம்?
“கல்யாணம் பண்ணி வருஷம் என்ன ஆச்சு? இன்னும் பழக்கம் வரலைனா என்னங்க இது? ஒருவேளை இந்த வீட்டு ஆளுங்க யாரும் உங்களை சரியா நடத்துறது இல்லையா.
“இல்ல இல்ல அப்படி இல்ல மாமா” இது மீனு
“பின்ன என்ன தான்மா தயக்கம் வேத்து ஆள் வீட்டுலையா இருக்கீங்க பார்த்து பார்த்து பேச”
இரு பெண்களுக்கும் பதிலே சொல்ல முடியவில்லை சொல்ல தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும் இரண்டும் குழம்பி கிடந்தது.
அவர்கள் முகம் பார்த்து நின்றவரை பார்க்க முடியாமல் பெண்கள் தவிக்க அவர்களது நிலையைக் கண்டு கொண்டவர் மீண்டும் தனது மனைவியிடமே வந்து நின்றார்.
அது என்னவோ எங்கு வழியில்லாமல் போனாலும் முட்டி நிற்பது கட்டிய பெண்ணிடம் தான் இது ஏட்டில் எழுதாத சட்டம் போலும் .
“உங்க மகனுங்க எங்க?” பேச்சே வரவில்லை போலும் பானுவிற்குக் கையை மேலே தூக்கி காட்டினார் மாடி என்பது போல்.
“என்ன வேலை மேல ஓ! அண்ணன் தம்பிங்க கதை பேசுறாங்களா” என்றதும் தலையை மட்டும் ஆட்டினார் அதில் இன்னும் கோபம் வந்து விட்டது அவருக்கு.
“அது என்னங்க அது… மகனுங்க வந்துட்டா உங்களுக்கு யாரையுமே கண்ணனுக்கு தெரிய மாட்டேங்குது ஒரு வேலையும் புரிய மாட்டேங்குது,
சரி அது போகட்டும் எனக்கு என்ன வயசு திரும்புதா? ஓடி ஆடி வேலை செய்ய? நானும் வேலனும் தான் இளந்தாரி பையலுக மாதிரி ஓடி ஆடி திரியனும் அப்படி தானே?”
“………”
“பேசுங்க”
“வந்ததே ஒரு வாரத்துக்கு முன்னாடி சரி அவங்க வேலை அப்படிப் போகட்டும் விடுங்க. வந்தவங்க அப்பா என்ன செய்யனும்? எதுவும் வேலை இருக்கா? என்ன செஞ்சு இருக்கீங்க? கேட்கலாமா? வேணாமா?
“…………” அதற்கும் பானு மௌனம்
“சொல்லுங்க”
“சரி அதையும் விடுங்க வேலை செய்ய வேணாம் நாலு பேரு கூடுற இடத்துல பேச்சுப் பொதுவாத்தான் இருக்கும் கல்யாணம் ஆனாலே அடுத்து வர கேள்வி குழந்தை தான்.
அதைச் சிலர் அன்பா கேட்பாங்க சிலர் வம்பாக் கேட்பாங்க ஆளுக்குத் தக்கன பதிலை அவங்க மனசு கோணம சொல்லிப்புட்டு வரனும்,
அந்த நாசுக்கு வந்த பொண்ணுக்கு தெரியலை சரி விட்டுருவோம். இந்த குடும்பத்துல தெரிஞ்சு, பழகி வளர்ந்த உங்க பையன் என்னங்க பண்ணுறார்?”
“………..”பானு மௌனம் கொண்டாலும் வணங்காமுடி ஒரு முடிவுடன் தான் இருந்தார் போல.
“கல்யாணம் ஆகி வருஷம் அஞ்சு போகுது கேள்வி குழந்தைனு வரத்தான் செய்யும். அது உங்க மகனுக்குத் தெரியும் தானே பிறகு எதுக்கு பொண்டாட்டிய தனியா விடனும்”
“…………..”பதிலற்ற கேள்வி போலும்
“என்னங்க நடக்குது இங்க?”
“…………..”
“இப்ப நீங்க பேச போறீங்களா என்……….” என்று பானுவை நெருங்க இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் நிலை கைமீறி விடும் எண்ணிய வானதி வேகமாக வந்து அவரை தடுத்து நிறுத்தினார்.
“கொழுந்து என்னது இது?” அவரது கண்டனம் நிறைந்த குரலிலும் பார்வையிலும் தனது கோபத்தைக் கட்டுப் படுத்த முயன்றார் வணங்காமுடி.
“நீங்க முதல கிளம்புங்க கொழுந்து எதா இருந்தாலும் பிறகு பேசிக்கலாம்” என்றதும் மறுவாதமின்றி
“சரிங்கண்ணி” என்றவர் அத்தனை வேகமாக அந்த அறையை விட்டு சென்றார். செல்லும் போதுத் தனது கோபம் அனைத்தையும் திரட்டி கதவில் காட்டி விட்டு செல்ல.
தேக்கு மரகதவு பெரும் சத்தத்துடன் சுவரில் மோதியது அதில் உடல் அதிர கண்ணை இறுக்க மூடி கொண்டார் பானுமதி.
மீனுவும் விமலாவும் பயந்து போயி நின்றனர்.
வணங்காமுடி அறைக்குள் சென்றதுமே மகள்களையும் பேத்திகளையும் வேறு அறைக்குள் இருக்கும்படி சொல்லிவிட்டு. அகிலாவும் வானதியும் அவர்கள் இருக்கும் அறைக்கு வெளியில் வந்து நின்று கொண்டனர்.
இதில் ஈஸ்வர் அருணகிரியும் அடக்கம் வணங்காமுடி பேசியது அனைத்தையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர் வணங்காமுடியின் குரல் சற்று உயரவே
‘வானதி நீ போ’ என்று அனுப்பி வைத்தார் ஈஸ்வர் அதன் பின் தான் அவர் ஓடி வந்தது.
“அகிலா!” வானதி அழைக்க அதுவரை அறைக்கு வெளியில் நின்றவர் வானதி குரலுக்கு விரைந்து வந்தார் வந்தவரிடம் பானுவை கூட்டிட்டு போ என்று கண்ணை காட்ட.
“பானு வா” மௌனமாகக் கண்ணீர் விட்டவரை அழைத்துக் கொண்டு சென்றார் அகிலா. அவர் சென்றதும் பெண்களிடம் திரும்பியவர் இருவரையும் பார்க்க இரு பெண்களுக்கும் பெண்களும் முழித்து நின்றனர்.
“அம்மாடி எதுவா இருந்தாலும் சொன்னா தான் தெரியும் உங்களுக்குள்ளையே வச்சு பேசுனா எங்களுக்கு என்னம்மா தெரியும். எங்களைப் பார்த்தா முரடான ஆட்கள் மாதிரியா இருக்கு”
“ஐயோ! இல்ல பெரிய அத்தை” விமலா பதற
“என்னவோ போங்க” என்றவர் பானுவை பார்க்க சென்று விட்டார் மேலும் இவர்களிடம் பேசி ஆகும் காரியம் எதுவுமில்லை.
இந்நிலைக்குப் பிள்ளையார் சுழியிட்டது தங்கள் மகன்கள் தானே பேச வேண்டியது அவன்களிடம் தான் எண்ணியவர் சில வார்த்தைகளுடன் நிறுத்தி கொண்டார் தற்போது அவர் கவலை எல்லாம் பானு தான்.
ஒரு நாள் ஒரு பொழுது கூட வணங்காமுடி இப்படிப் பேசியதில்லை அதுவும் அடுத்தவர் முன்னிலையில் மனைவியை இத்தனை தூரம் பேசியதில்லை.
எத்தனையோ சண்டைகள் வந்ததுண்டு சச்சரவுகள் கடந்ததுண்டு அதையெல்லாம் கணவன் மனைவி இருவருமே நான்கு சுவருக்குள் வைத்து பேசி முடித்துக் கொள்வார்களே ஒழியே வெளியில் கசிய விட மாட்டார்கள்.
ஆனால் இன்று?……….
***********
“போச்சு!.. போச்சு மீனு!… என்னால தான் அத்தைக்கும் மாமாக்கும் சண்டை சும்மாவே என் மேல கோபமா இருக்கார் இதுல இந்த பிரச்சனையும் சேர போகுது ஐயோ! கடவுளே!” என்று மீண்டும் விட்ட அழுகையைத் தொடர
மீனுவிற்கும் பயந்து வந்தது காலம் கடந்த யோசனையாக கணவன் பேசா விடிலும் இவர்களைப் பற்றிப் பேசி தெரிந்து கொண்டு இருந்திருக்கலாம்.
முதல் முறையாக மனம் முரண்டியது பெண்ணுக்கு உறவுகளைப் பேணுவது என்பது இக்காலத்தில் வேண்டாதா ஆணி ஆகிப்போக மீனுவிற்கும் அதே எண்ணம் தான்.
நீ,நான், நம் குழந்தை அதுவும் குழந்தை தான் குழந்தைகள் அல்ல.கணவனது தாய் தந்தையே எதற்கு என்ற சூழல் வரும் போது உறவுகளுக்கு என்ன வேலை அங்கே.
இவர்களைச் சொல்லியும் குத்தமில்லை தற்போது உள்ள சமுதாய அமைப்பு அப்படி ஆகி போனது. ஆனால் நாம் எண்ணினால் அதனை நம்மைக் கொண்டு நம் அளவில் சரி செய்து கொள்ள முடியும் அல்லாவா. அதை செய்ய தான் யாரும் மனம் வைப்பதில்லை.
“நீ வேற அழுது வைக்காத விமலா வா என்ன ஆச்சுன்னு பார்ப்போம்” என்றவள் அவளையும் குழந்தையையும் தூக்கி கொண்டு கூடத்திற்கு சென்றாள்.
அதற்குள் ஈஸ்வர் மற்றும் அருணகிரி அண்ணன் தம்பிகளிடம் விடயத்தைச் சொல்லி அவர்களை அழைத்து வந்துவிட்டார் அனைவரும் கூடத்தில் ஒன்று கூடினர்.
விசு விமலாவை முறைத்து வைக்க அதனை கண்டு கொண்டு அவனது முதுகில் சுள்ளென ஓர் அடி போட்ட ஈஸ்வர் “அந்தப் புள்ளைய என்னடா முறைக்கிற பண்ணுற காரியமெல்லாம் நீ பண்ணிட்டு!…… பேச நேரமில்லை முதல போயி உங்க அப்பனை பாரு” என்று விரட்ட மூன்று தெய்வங்களும் ஓடியது தனது கோவிலை தேடி.
ஓடி என்ன பயன் கடையில் தான் வணங்காமுடி இல்லையே அவருக்கு இருந்த கோபத்தில் எங்கே வார்த்தை எல்லை மீறி விடுமோ என்று பயந்தவர் வேலனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்
கடையில் வேலை செய்யும் மணிகண்டனிடம் தனது தந்தையை விசாரிக்க “அவர் இப்போதான் வேலன் தாத்தா கூடப் போனார் ண்ணே!” என்றதும் மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தனர். (rpmtriad.com)
வீட்டுக்கு வந்ததும் பெரியவன் பானுவை நெருங்கி “மா!” என்றழைக்க அவருக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. அனைத்தும் இந்த வீட்டில் புதுமையாக நடந்தது வழமைக்கு மாறான கோபம், பேச்சு, அழுகையென்று கல்யாண கலை ஓடி கலக்கம் சுமந்து நின்றது சதாசிவ பிள்ளை இல்லம்.
விசு, பசுபதி, ஸ்வாமி, மூவரும் அன்னையைச் சுற்றி அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் பேசி பேசி அவரை ஒரு நிலைக்குக் கொண்டு வர மணி மாலை ஏழு என்று காட்டி நின்றது.
கன்னிகா, சித்ரா, இந்துமதி, மதுமிதா, விமலா, மீனுயெனப் பெண்கள் அனைவரும் தூணுக்கு ஒன்றாக அமர்ந்திருந்தனர் .ஒருவரும் மதிய உணவை சீண்டி கூடப் பார்க்கவில்லை வீடு முழுமையும் அப்படி ஓர் அமைதி.
அனு குட்டி தான் தனக்குத் தெரிந்த மொழியில் பேசி விளையாண்டு கொண்டு இருந்தது அதன் சத்தம் மட்டுமே வீட்டில் ஒலித்தது.
இரவு வெகு நேரம் சென்று வணங்காமுடி வீட்டுக்கு வர அவரை முதலில் பார்த்தது விமலா தான் அவசரமாக அவள் எழுந்து நிற்க. அவளைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்றனர் ஈஸ்வர் அருணகிரி உட்பட.
“வணங்கா என்னடா” ஈஸ்வர் தாங்க முடியாமல் கேட்டு வைக்க அமைதியாக அவருடன் வந்து அமர்ந்து கொண்டார் வணங்காமுடி.
அவரது மௌனம் வதைக்க அருணகிரி மகன்களைக் கண்களால் அழைத்துப் பேசுமாறு செய்கை செய்ய மூவரும் அவருக்கு எதிரில் வந்து நின்றனர்.
அவர்கள் அரவம் கேட்டு நிமிர்ந்தவர் மூவரையும் நேர் கொண்டு பார்க்க ஒன்று போல் தலையைக் குனிந்து கொண்டனர்.
அவர்களது செயலில் மூச்சை இழுத்து விட்டவர் சற்று தளர்வாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு “அம்மாடி மருமக பொண்ணுகளா இப்படி என் முன்னுக்கு வாங்க” என்றதும் மீனுவும் விமலாவும் நல்ல பிள்ளையாக வந்து நிற்க.
இருவரையும் பார்த்து பேச தொடங்கினார் “போனது போகட்டும் இனி கல்யாணம் முடியுற வரை நீங்க தான் முன்ன நின்னு செய்யனும் செய்வீங்களா?”என்றதும் இரண்டும் தலையைத் தலையைப் பலமாக ஆட்டியது.
“பேச மனசுக்குள்ள அத்தினி சங்கதி இருக்கு ஆனா பேச கூடிய நேரம் இன்னும் வரல உங்க கொழுந்தன் கல்யாணம் முடியட்டும் பிறவு பேசிக்கலாம் என்ன?”
“சரிங்க மாமா” மீனு பவ்வியமாக பதில் கொடுக்க ஸ்வாமிநாதன் பல்லை கடித்தான்.
“நல்லது” என்றவர் மகன்களிடம் திரும்பி
“தம்பி கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே எனக்கு ஒரு நல்ல முடிவா பெரியவரும், நடுவரும் சொல்லிட்டு போயிட்டிங்கனா வசதியா போகும்”
“அப்பா!..” ஸ்வாமிநாதன் பேச வர
“தயவு செஞ்சு எதுவும் பேசிடாதீங்க நான் கேட்குற நிலையில இல்ல என் கடமையை நான் முழு மனசோட முடிச்ச பிறகு பேசுங்க சரியா” என்றதும் வாயை மூடி கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு.
முடிந்த மட்டும் மூவரையும் முறைத்தவர் “அண்ணி சாப்பிட்டாங்களா அவங்க”
“இல்ல கொழுந்து” என்றதும் அவரது அறைக்குச் செல்ல போனவர் சில அடி தூரம் சென்று திரும்பி தனது மகன்களைப் பார்த்து விரல் நீட்டி எச்சரிப்பது போல
“இனி உங்களால அவங்களுக்கும் எனக்கும் இடையில உரசல் வந்துச்சு அப்புறம் என்ன மனுசனா பார்க்க மாட்டிங்க சொல்லிட்டேன்,
அது போக கண்ணுல காட்டாம அவங்களை எங்கயாவது கூட்டிட்டு போயிடுவேன்” என்று பலமாக ஒரு குண்டை வீசி விட்டு போக கலங்கி நின்றது மீசை வைத்தக் குழந்தைகள்.
அருணகிரி “அகிலா பிள்ளைங்களுக்குச் சாப்பிட எடுத்து வை” என்றவர் அங்கு உள்ள கனத்தை குறைக்க முயற்சித்தார் “டேய் வணங்கா பார்த்துப்பான் பானுவை நீங்க வாங்க ” என்று மூவரையும் அழைத்துச் சென்றார் .
ஸ்வாமியும், விசுவும் பெரியப்பாக்களுடன் செல்ல பசுபதி தனியே தனது அறைக்குச் சென்றான் மனம் முழுதும் ஓர் குற்ற உணர்வு.
சில நாட்களாகத் தாய் தந்தையின் உரசல் அவனுக்குச் சற்றுப் பயத்தைக் கொடுத்தது அதுவும் இன்றைய நிகழ்வு பெரும் அதிர்வை கொடுக்க ஓய்ந்து போனான்.
அவனது நிலையை அறியாத அவனது கைபேசி கதறிக் கொண்டு அழைக்க திரையைப் பார்க்காமல் பொத்தனை அமுக்கி காதில் வைக்க “யோவ் கறுவா குஞ்சு” என்றழைப்பில் தூக்கி வாரி போட எழுந்தமர்ந்தான் பசுபதி.