“பரிதாபம்னா புரியலை.. நீ பரிதாபமான நிலையில் இல்லையே அப்புறம் ஏன் இந்தக் கேள்வி… ?”
“இல்லை எனக்குத் தெரிஞ்சாகணும்…!” சொன்னால் தான் விடுவேன்’ என்பது போல தீர்க்கமான பார்வை அவளிடத்தில்.
‘இவ்வளவு பேசுவியா நீ ?’என்று எண்ணிக் கொண்டவன்,” இங்க வாடி” என்று இருகைகளையும் விரித்து நீட்ட , ‘மாட்டேன்’ என்பது போல அடமாய் நின்றாள் அவள்.
அவள் கேள்விக்கான விடையை அவள் மூலமேத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேச்சை வளர்த்தான்.
“ஆமாம் பரிதாபப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் “என அவன் கூற,வதனியின் முகம் கோபமாய் மாறியது.
“ஏன் ஏன் ஏன்…?பரிதாபம் என் மேல , எதுக்குப் பரிதாபப்படுற, வேணாம், நீ வேணாம் உன் பரிதாபம் வேணாம், பாவப்பட்டு என் கிட்ட அன்பு காட்ட வேணாம். வதனிக்கு யாரோட பரிதாபமும் வேணாம்… போயிடு போ போடா “என அவன் சட்டைக்காலரைப் பற்றி அவள் கத்திய கத்தலில் சுமித்ரா விஷ்வநாதனுடன் மேலே வந்து விட்டார். தருணிகாவும் அவர்களோடு வந்தவள், இருவரின் சண்டையைக் கண்டு முகம் மலர்ந்து பின் முகத்தை பதற்றமாக வைத்துக் கொண்டு ,”ப்ரகா என்னடி, ஏதாவது பிரச்சினையா…?ஏன் அழற? முகம் ஏன் இப்படி இருக்கு?” என அவளை உலுக்கி விட்டு பின் மகிழனிடம்,” என் தங்கையை என்ன சொன்னீங்க ?”என்று எகிறினாள்.
அவர்களைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் ,”இது புருஷன் பொண்டாட்டி பிரச்சினை. நாங்க பார்த்துப்போம்” என்றதும் சுமித்ரா தருணியை வலுக் கட்டாயமாக இழுத்துக் கொண்டு சத்தமில்லாமல் கீழே சென்று விட்டனர்.
மகிழன் அக்கணமே உணர்ந்து கொண்டான் இது தருணியின் வேலை என்று. ‘உன்னைப் பத்தின என் கணிப்பு தப்பாகிடுச்சே?’ என்று எண்ணியவன் , மீண்டுமாய் ப்ரகல்யாவைப் பார்க்க அவள் அங்கில்லை.
அதற்குள் ப்ரகா வேகமாக உள்ளே சென்று கழுத்தில் காதில் கிடந்ததை எல்லாம் கழற்றத் துவங்கினாள்.
நாகலெட்சுமி காஃபியோடு வந்தார்.
“பாப்பா கிட்ட பொறுமையா பேசுங்க தம்பி” என்றவர் காஃபியை நீட்ட,” நான் பார்த்துக்கிறேன்.” என்று சாவகாசமாக காஃபியை அருந்தத் துவங்கினான்.
கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறு மட்டும் கிடந்தது ப்ரகாவிற்கு. விருந்தன்று போட்ட தாலிச்சங்கிலியைக் கூட கழற்றி விட்டு மஞ்சள் கயிற்றில் போட்டிருந்தாள் மாங்கல்யத்தை மட்டும்.
“நான் இங்கிருந்து போறேன்” என்றாள் எங்கோ பார்த்தபடி.
“ம்ம்ம் போ” என்றான் இரு வார்த்தையில்.
விறுவிறுவென திரும்பி நடந்தவளை கைப்பிடித்து தடுத்தவன் ,”கழுத்தில் கிடக்கிற அதையும் கழட்டி வச்சுட்டு போ” என்றான் அவளை கூர்மையாக பார்த்தபடி.
“முடியாது. தர மாட்டேன்.” என்றாள் அழுத்தமாக.
“அப்போ நானும் உன்னை அனுப்ப முடியாது. முடிஞ்சா என்னை மீறிப் போ பார்க்கலாம்.” என்றான் அவளைப் பார்த்தபடி
“ஏன் என்னை பார்த்து நீ பரிதாபப்பட்ட?” மீண்டும் அதே வார்த்தையில் வந்து நின்றாள்.
“மரியாதை எல்லாம் எங்கடி ?”என்றவனுக்கு சிரிப்பு வேறு வந்தது அவளது கோப முகத்தில்.
“நீ எதுக்கு என்னைப் பார்த்து பரிதாபப்பட்ட சொல்லு… எனக்கு வேணாம், பாவப்பட்ட சோறு வேணாம் , அன்பு வேணாம் பாவப்பட்டு தர்ற பாசம் வேணாம் வேணாம். நான் நான் பெத்தவங்களை கொன்ன சனியன், எனக்கு இந்தப் பரிதாபம் எல்லாம் வேணாம். நான் வாங்க மாட்டேன், எனக்கு இது வேணாம்” என்றாள் கதறி அழுதபடி.
“ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்… போதும் போதும்… விடு விடு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் உட்கார் உட்கார் “என்று தன் மடியில் அமர்த்தியவன்,” ஏண்டா…?”என்றான் சங்கடமாக அவளின் நிலை கண்டு.
“நான் அழகா இல்ல, அசிங்கமா கருப்பா இருக்கேன். எனக்கு எதுவுமே வராது. படிப்பைத் தவிர வேற எதுவும் வராது. நான் மோசம் நான் உருப்படாதவ, என் கூட இருந்தா அவங்களும் நல்லா இருக்க மாட்டாங்க, என்னை விட்டுடு நான் போறேன்” என மீண்டுமாய் கதற, மகிழனுக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை.
அவளை தூக்கி நிறுத்தி தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
“விடு விடு என்னை விடு… ம்ம்ம் ம்ஹூம் “என்று திமிறியவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
“ப்ரூஸ் குட்டி என்னைப் பாரு… கண்ணை மட்டும் பார்க்கணும்… பேசக் கூடாது …”எனும் போதே பேச வந்தவளை ,”மூச் பேசக் கூடாது, அடி விழும்” என மிரட்டி அவளை அமைதிபடுத்தினான்.
“முகமெல்லாம் வீங்கற அளவுக்கா அழறது.?,தலைவலிக்குதுனு சொன்னேனே அதை கவனிச்சியா நீ.? உனக்கு உன் கோபம் பெருசு அப்படித் தானே…? குச்சிக் கையை வச்சுட்டு எத்தனை அடி அடிக்கிற நீ…! இவ்வளவு கோபம் வருமா உனக்கு?” என்றவனைப் பார்த்தபடி இருக்க
“என்னடி நீ பாவப்பட்டவ ஹான். பத்து வயசில் இருந்து உன்னைப் பார்க்கிறேன் நான். உன் மேல பரிதாபம் வந்திருந்தா உனக்கு பணமோ இல்லை, சாப்பாடோ தந்து இருப்பேன். உன் மேல வந்தது காதல். புரிஞ்சுதா…? முப்பத்தி மூணு வயசு வரை கல்யாணம் பண்ணாம உனக்காக காத்திருந்து கல்யாணம் பண்ணா, எவ்வளவு திமிரா எங்கிட்ட ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு கேட்ப ?”என்று கோபமாய் கேட்டு விட்டான்.
“காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டவர் தான் அவசரமா கல்யாணம் பண்ணிங்களா…?”மறுகேள்வி கேட்டாள்.
“மக்குப் பொண்ணே… காதல்னு சொல்றேனே , அது எப்படி என்னன்னு கேட்கிறியா நீ…?எல்லாம் நான் தான் சொல்லித் தரணுமாடி?” மறுபடியும் சுள்ளென விழுந்தான்.
வதனிக்கு அப்போது தான் உரைத்தது, அவன் கூறிய காதல் என்ற வார்த்தை.
“என்னை எல்லாம் யார் காதலிப்பா…?”
“ஏன் நீ மனுஷி இல்லையா… இப்போ எல்லாம் பூனைக்குட்டி ,நாய்க்குட்டியை கூட மனுஷங்க லவ் பண்றாங்க” என்றான் கிண்டலாக
“அதை எல்லாம் லவ் பண்ணுவாங்க , ஆனா மனுசன் கருப்பா குட்டையா குண்டா இருந்தா யார் திரும்பி பார்க்கறா…? இதுல எங்களை லவ் பண்றாங்கனு வேற நினைக்கணுமா நாங்க ?”என்று கடுப்பாய் கேட்க
“நீ கேட்டது நியாயம் தான். ஆனா மகிழனுக்கு பிடிச்சவ நீ தானே??”
“உண்மையாவா…?!”
“இந்த ரெண்டு மாதத்தில் எந்த நாளிலாவது அவசரக்கல்யாணம் பண்ண மாதிரி உன் கிட்ட நடந்திருப்பேனா நான் ?”
“இல்லை தான்… ஆனா …”என்றவளை பேச விடாமல் தடுத்து விட்டது அவனின் செயல்கள். பேசிய இதழ்களுக்கு வன்மையான தண்டனை, கலங்கிய கண்களுக்கு இதழொற்றலால் அர்ச்சனை. அடித்த கைகள் அகப்பட்டுப் போனது அவனது கைச்சிறையில், ஊடலுக்கு பின்னான கூடல் வன்மையின் அரங்கேற்றம். மென்மை காட்ட முயன்றாலும் விடவில்லை அவன் நினைவில் ஓடிய அவளின் பேச்சுக்கள்.
குளித்து முடித்து விட்டு வந்தவன் ,கீழே சென்றான். மகேந்திரனுக்கு கைபேசியில் அழைக்க உடனே அழைப்பு ஏற்கப்பட்டது
“மகேன் உன் வொய்ஃபை அழைச்சுட்டு தோட்டத்திற்கு வா!” என செய்தி மட்டும் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தான்.
மகேந்திரன் தருணியை பார்த்தவன்,” எழுந்து வா அண்ணா கூப்பிடுறாரு “என்றான் கட்டளையாக
“நான் ஏன் வரணும்…? நான் உங்க பொண்டாட்டி. அவர் கூப்டா போறதுக்கு நான் ஒண்ணும் அவர் வேலைக்காரி கிடையாது. “என்றாள் எரிச்சலாக.
“இனி சொந்தக்காரியா கூட இருக்க முடியாதபடி செஞ்சிடுவார் தருணி. அவர் கூப்பிடும் போதே வா. “என்றான்.
“இல்ல எனக்குப் புரியலை. அதென்ன அவர் கூப்பிட்டா உடனே போகணும், அவர் திட்டினா கேட்டுக்கணும்… இதென்ன ரூல்ஸ்
நான் உங்க வொய்ஃப். கண்டவங்க கட்டளைக்கு எல்லாம் அடிபணிய முடியாது என்னால. உங்க பேச்சை உங்க அப்பா அம்மா பேச்சைக் கேட்டு நடக்க சொல்றீங்களா செய்றேன். அவர் பேச்சை நான் ஏன் கேட்கணும்…? என்னால வர முடியாது. அவ்வளவு தூரம் என் கிட்ட பேசியே ஆகணும்னா அவரை இங்கே என் வீட்டில் வந்து மீட் பண்ண சொல்லுங்க. இன்னொரு முறை எனக்கு ரூல்ஸ் போட்டார், நான் பாட்டுக்கு என் அம்மா வீட்டுக்கு போய்கிட்டே இருப்பேன்” என்று கத்தினாள்.
மீண்டுமாய் அழைத்தான் மகிழன்.
“அண்ணா இதோ கிளம்பிட்டோம்” என்றான் மகேந்திரன்.
“ஃபோனை ஸ்பீக்கர்ல போடு” என்று சொல்ல மறுக்காமல் போட்டான்.
“தருணி, ப்ரகா கிட்ட என்ன பேசின?” என்று எடுத்ததும் கேட்க தருணிக்குள் உள்ளூர நடுக்கம் தான்.
“நா… நானா… நான் எதுவும் பேசலையே… ?”என்றாள் தடுமாற்றமாக.
“ஓகே ஃபைன்…” என்றவன் ,”இன்னொரு தடவை அவ கிட்ட நீ பேசக் கூடாது பேசினா மகிழனோட ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும். டூ யூ அன்டர்ஸ்டான்ட் . அகெய்ன் நீ பேசினா லிட்டரலி ஐ வில் பனிஷ் யூ” என கடுமையாக எச்சரித்தவன் ,”மகேன் ஸ்பீக்கரை ஆஃப் பண்ணிட்டு உன் வொய்ஃப் கிட்ட ஃபோன் குடு “என்றதும் சொன்னது போல மகேந்திரன் செய்ய, தருணி நடுங்கும் கைகளில் அதனை வாங்கிக் கொண்டாள்.
அதை கவனித்தவன்,’ எதுவோ பிரச்சினை?’ என உணர்ந்து கொண்டான் மகேன்.
இங்கே மகிழனோ, தருணியிடம் ,”நீ என் ப்ருஹா கிட்ட என்ன பேசினன்னு தெரியாது . ஆனா அவ மனசில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி இருக்கன்னு
மட்டும் தெரியுது. இப்போ உன் கிட்ட நான் ஒண்ணு சொல்லவா?” என்று ஏளனத்துடன் கேட்க
“எ.. என்.. என்னது ?”என்றாள் தடுமாற்றமாக.
“மகிழனோட பொண்டாட்டியா ப்ரகல்யவதனி வரணும்ங்கிறதுக்காக மட்டும் தான், தருணிகா சுமித்ராதேவிக்கு மருமகள் ஆகி இருக்கா… இல்லைன்னா உன்னை எல்லாம் என் தம்பிக்கு கட்டி வைக்க நான் முட்டாள் இல்லை. அவனுக்கு உன்னை விட்டுட்டு வேறு யாரையும் செலக்ட் பண்ணி , கல்யாணம் பண்ணி வைக்கத் தெரியாம இல்லை. வதனி என் வீட்டுக்கு வர தான் நீ பயன்பட்ட புரியுதா…?நீ பிறந்தது வேணும்னா உன் அப்பா அம்மாவால இருக்கலாம். ஆனா நீ வாழ்ந்தது, வாழறது எல்லாம் ப்ரகல்யாவால் மட்டும் தான். இத உன் கிட்ட சொல்லி உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுனு நான் நினைச்சேன். பட் நீ என் ப்ருஹாவை அழ வச்சுட்ட இல்ல. யூ பே ஃபார் திஸ் டெஃபனட்லி. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா… ?”என மீண்டும் கேட்டு அவளை அதிர வைத்தான்.