உன்னுடைய பத்து வயசுல நான் உன்னைப் பார்த்திருந்தாலும் அப்போ எதுவும் எனக்கு தோணிணதில்லை ப்ருஹா. ஜஸ்ட் ஒரு குட்டிப் பொண்ணு, வாண்டு இப்படி தான் கடந்தேன் “என்றதும் ப்ராகவின் முகத்தில் தெள்ளியதோர் அரும்புசிரிப்பு.
“
மறுபடியும் உன்னை ஆறு வருஷம் கழிச்சு அந்த ஹாஸ்பிடல்ல உன் தாத்தா இறந்தப்ப தான் பார்த்தேன். அப்பவும் பெருசா எதுவும் தோணலை. நீ அழுதுட்டு இருந்த. விசாரிச்சுப் பார்த்தா நான் பேனா வாங்கித் தந்த குட்டி வாண்டு. உன் அழுகை ஒரு மாதிரி சங்கடத்தை தந்தது. அதுவும் நீ கீழே விழுந்துட்ட யாருமே தூக்கலைன்னதும் சட்டுனு கோபம் வந்திடுச்சு, அதான் வேகமா வந்தேன். அப்புறம் தண்ணி தந்தேன் அவ்வளவு தான். உங்க வீட்டுக்கு இறப்பில் கலந்துக்கணுமேன்னு முறைக்காக வந்தது தான். அப்போ உன் பெரியம்மாவை பார்த்தேன்.”என்றான் அமைதியாக.
“
பெரியம்மா!” என்று தடுமாறியவளை அன்பொழுக பார்த்தவன்,” எஸ் அவங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க.”என்றான்.
“
புரியவே இல்லை” என்றாள் பாவமாக.
“
ஹாஹாஹா… நீ இனி படிக்க முடியாது, தாத்தா தான் படிக்க வைக்கிறேன்னு சொன்னாங்கனு அழுதியே நினைவிருக்கா ?”என்றதும் , “ஆமாம்” என்றாள்
“
ஹ்ம்ம்… நீ அழுதது பாவமா இருந்துச்சு. பெரும்பாலும் வசதி இல்லாத வீட்டு பிள்ளைங்களுக்கு ட்ரஸ்ட் மூலமா படிக்க உதவி செய்வேன். அதுபோல உனக்கும் ஹெல்ப் பண்ண நினைச்சேன். அந்த விஷயமா உன் பெரியப்பா கிட்ட பேச ,அவரு உங்க பெரியம்மா முகத்தை முகத்தைப் பார்த்தாரு. அவங்க அவளை படிக்க வைக்கணும் தான் தம்பி ஆனா எங்களுக்கு அந்த அளவு வசதி கிடையாது. அதான் ஏதாவது மாப்பிள்ளை வந்தா கட்டிக் குடுக்க நினைச்சிருக்கோம்’னு சொல்லிட்டாங்க. “
“
ஓஓஓ!” என தலையாட்டினாள்.
“
உன் மார்க்கை கேட்டா ஆயிரத்தி ஐம்பது’னு சொல்றாங்க, எனக்கு ஜெர்க் ஆகிடுச்சு இவ்வளவு மார்க் எடுத்த பொண்ணுக்கு கல்யாணமானு நினைச்சா உன் கலங்கின முகம் வந்து நிக்குது எனக்கு. கண்டிப்பா ஹெல்ப் பண்ணனும்’னு நினைச்சு உதவி செய்ய முன்வந்தேன். செஞ்சேன். நீயும் அழகா படிச்ச, நான் எதிர்பார்த்ததை விட நல்ல மார்க் ஸ்கோர் பண்ணி திகைக்க வச்சுட்ட. பேசாம ஏதாவது ஐஐடியில் மேற்படிப்பு படிக்க வைக்கலாமானு கூட நினைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது தருணியோட பேரண்ட்ஸ் உனக்கு ஒரு சூப்பரான மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை” என்றதும் அதிர்ந்து அவனைப் பார்த்தாள் வதனி.
“
நிஜம்டா பொண்ணே… உன் ப்ராப்பர்டீஸை அனுபவிக்கிறதால, உன் பெரிம்மா சண்டை போட்ருக்காங்க. அவளோடதை திருப்பி தந்திடுங்க இல்ல கோர்ட்ல கேஸ் போடுவேன்னு சொல்லி மிரட்டவும், அவங்க பயந்து போய் உனக்கொரு அருமையான மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. நல்ல தரமான குடிகாரன் ,யாராவது குவாட்டர் வாங்கித் தந்தா கொலை கூட செய்வான் அப்படி ஒரு நல்லவன்”எனும் போதே கோபத்தில் முகம் சிவந்து போனான் மகிழன்.
ரிலாக்ஸ்டா பொண்ணே. !”என அணைத்தபடி மேலும் பேசினான்.
“
விஷயம் என் கிட்ட வந்தது. ஏதாவது செஞ்சு இதை தடுத்துட முடியுமா தம்பி’னு கேட்டாங்க உங்க பெரியம்மா. நானும் சரின்னு சொல்லிட்டேன். அந்த சமயத்தில் தான் தருணி அவங்க அம்மா அப்பா கிட்ட உனக்காக சண்டை போட்டா. இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு உன்னை கட்டித்தரக் கூடாது’னு அவ்வளவு பிரச்னை பண்ணி இருந்தா. அவங்க கேட்கவே இல்லை. அப்புறம் தான் நான் உன்னை மேலே படிக்க வைக்க நினைச்சு பேச வரும் போது மேடம் எனக்குள்ள காத்து போல புகுந்துட்டிங்க. நிஜமா அந்தக் குட்டி வாண்டு என் மனசை கொள்ளையடிச்சுட்டா.”என அப்போது நடந்தது போல சிலாகித்தான்.
“
ஏதோ உங்க காலேஜில் பங்ஷன் அதுக்காக மேடம் தாவணி பாவாடை போட்டிருந்தீங்க. லாவெண்டர் கலர் பாவாடை, வெள்ளை தாவணி. வாவ்டா பொண்ணே! மனசை அள்ளிட்ட நீ தெரியுமா.? மனோரஞ்சிதம் பூவை ஸ்மெல் பண்ணிக்கிட்டு அங்கிருந்த பெஞ்சுல உட்கார்ந்து காலை ஆட்டிட்டு இருந்தியே…?கண்ணை மூடி லயிச்சு ரசிச்சு ப்பா கண்ணெடுக்க முடியல என்னால. என்னடா பண்ற நீ அந்தப் பொண்ணுக்கும் உனக்கும் பத்து வருஷம் வித்தியாசம் இது தப்பு’னு கண்டிச்சேன் பட் என் மனசும் கண்ணும் என் பேச்சை கேட்கவே இல்லை “என உதடு பிதுக்கிட சிரிப்புதான் வதனியிடத்தில்.
“
சிரிக்காத பொண்ணே. என்னை தவிக்க விட்ட நீ தெரியுமா?”
“
என்னை ரசிக்கவும் ஒரு ஆளான்னு நினைச்சேன், சிரிப்பு வருது” என்றாள்.
அவளை வலிக்காமல் கொட்டியவன் ,”ஏன் உனக்கென்ன கேர்ள் !அழகி நீ !”என்று அவளின் கன்னம் கிள்ளி வாயில் போட
“
என்னை எல்லாம் ஒரு ஆளா கூட மதிச்சுப் பேச மாட்டாங்க தெரியுமா? அப்படியே பேசினாலும் சில வார்த்தைகள் அவ்வளவு தான். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ஒரு நாலு பேரைத் தவிர எங்க கிளாசில் எல்லாருக்கும் லவ்வர் இருந்தாங்க. நாங்க நாலு பேரும் மத்தவங்களை விட கலர் கம்மி” என்றாள் பெரிய ரகசியம் போல
“
ப்ப்ச் கலர் பார்த்து லவ் பண்றதெல்லாம் காதலே இல்ல ப்ருஹா. பார்க்க நல்லா கலரா இருந்தா மட்டும் பத்தாது. நல்ல மனசும் குணமும் வேணும். அதுக்காக கலரா இருக்க எல்லாரும் மோசம்’னு சொல்ல வரலை. அப்படி கலர் பார்த்து பண்ற லவ் மோசம்’னு சொல்றேன்.” என்றான் தெளிவாக.
“
சரி அப்புறம் எப்படி கல்யாணம் நடந்தது அதை சொல்லுங்க?” என்று அவனை திசை திருப்ப
“
உன் பெரியம்மா கிட்ட ஸ்ட்ரெய்ட்டா பொண்ணு கேட்க அவங்க தான் சொன்னாங்க தம்பி அவங்க அவளுக்கு இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து மாப்பிள்ளை வர்றதா’னு நினைச்சு குட்டிகலாட்டா பண்ணிடுவாங்க, அதனால வேற ஏதாவது செஞ்சு அதிரடியா தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. சரி பொண்ணை தூக்கிட்டுப் போயிடுறேன்’னு சொன்னதுக்கு அவ எந்தக் கெட்டப்பேரும் வாங்காம எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணிட்டு போகணும் தம்பி, அதுக்கு ஏதாவது செய்ங்கனு கேட்டாங்க. நானும் யோசிச்சுட்டு இருந்தேன். அப்போ தான் உன் தருணிக்காவை மகேன் பார்த்துட்டு ,’அண்ணா யார் இந்த பொண்ணு?’ கேட்க நானும் எதுக்கு கேட்கிறான்னு பார்த்தேன். பையன் பார்வை ரசனையா படவுமே… சும்மா உங்க வீட்டுப் பொண்ணு’னு சொல்லிட்டு விட்டுட்டேன். அப்புறம் ஒரு நாள் யோசனை வந்தது. மகேன் கிட்ட இந்தப் பொண்ணு பிடிக்குதா மேரேஜ் பண்ணிக்கிறியான்னு சரின்னு சொல்லவும் ஏற்பாடு செஞ்சேன். தென் எனக்கும் அதே நாளில் கல்யாணம் ஆகறதைப் போலவும் அது நின்ன மாதிரியும் ப்ளான் போட்டு உன்னை அங்கே வரவழைச்சு மேரேஜை முடிச்சாச்சு” என்றான் இலகுவாக.
“
அப்போ உங்களுக்கு பார்த்த பொண்ணு ?”என்றதும் ,”அது நீ தான். அங்கே பேசின வதந்தி எல்லாம் தருணி பேரண்ட்ஸ்க்காக சொன்னது.” என்றவன் ,”அவங்களை உருட்டி மிரட்டிக் கூட உன்னை தூக்கியிருப்பேன் ப்ருஹா. பட் அது உனக்கு சங்கடமாப் போகும். நீ தயக்கமா என் கூட ஏன் பிடிக்காம கூட லைஃபை ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம், அதனால தான் செய்யலை.” என்றவன்,” இன்னொரு காரணம் மரகதநாயகி. அவங்க எனக்கு எந்த நல்லதும் நடந்திடக் கூடாதுன்றது’ல குறியா இருந்தாங்க. லாஸ்டா தான் எனக்கும் அன்றைக்கு கல்யாணம்’னு சுமித்ராதேவி மூலமா தெரிஞ்சுகிட்டு மகேன் கல்யாணத்திற்கு கூட வரவில்லை”என நீண்ட நெடிய விளக்கம் தந்தான்.
அவனின் மடியில் இருந்து எழுந்து கொண்டவள், சட்டென அணைத்துக் கொள்ள மென்புன்னகை மகிழனிடத்தில்.
“
ப்ரூஸ்லி என்ன?!” என சிரித்து வைக்க
“
இவ்வளவு நாள்ல ஒரு டைமாவது இதை சொன்னிங்களா?” என்றாள் சிணுங்கலாய்.
“
சொல்லித்தான் நான் உன் கூட வாழணுமா ப்ருஹா. நீ உணரணும், அதுதான் எனக்கு முக்கியம். உணர்ந்தியா?” வினா வாக்கியத்தில் அவன் நிறுத்திட
‘
உணர்தல் என்றால் என்ன?’ என்பதை செயலை விடையாய்த் தந்திருந்தாள் அவள்.
“
தூங்கலாம்டா!” என்று கண்கள் சுருங்கிட கேட்க அவனோடு இணைந்து கொண்டாள் படுக்கையில் மட்டும். உறக்கம் என்பது அவனுக்கு மட்டுமே உரித்தாகிற்று.
மகிழனின் ஒவ்வொரு வார்த்தைகளும் நங்கூரமாய் இறங்கியது ப்ரகாவின் இதயத்தில்.
‘
இவனுக்கு நான் என்ன செய்தேன்? எத்தனை காதல் என்னிடத்தில். இவ்வளவு திட்டமிட்டு அழகாய் நடத்தி இருக்கிறான் திருமணத்தை. பிரம்மாண்டமாய் நடந்திருந்தால் கூட இத்தனை மகிழ்ச்சி கிடைத்திருக்குமா தெரியவில்லை’ ஆனால் அவன் கூறிய செய்தியில் கிடைத்தது சொல்லொணா மகிழ்ச்சி. சந்தோஷத்தில் உறக்கம் கூட வர மறுத்தது அவளுக்கு.
காதுமடலில் மூச்சுக்காற்றை சிதறடித்தவன்,” தூக்கம் வரலையா ப்ரூஸ்லி?” ஹஸ்கியான குரலில் கேட்டு அவளை நாணமெனும் மழையில் நனைய வைத்திருந்தான்.
“
ம்ஹூம், தூங்கவேத் தோணலை” என்றாள் அவன் பக்கமாய் திரும்பிப் படுத்து.
அவளின் நெற்றியில் முட்டியவன் ,”அப்போ தூங்க வேண்டாம்”என அவளின் மூச்சுக் காற்றில் தன் சுவாசத்தை கலந்தான். மெல்லிய ஸ்பரிசங்கள் மேனி தழுவிட வன்மையின் முரண்கள் எல்லாம் அவளால் அங்கீகரிக்கப்பட்டது.
‘
தன் திருமணத்தை எப்படி நடத்தினான்’ என்பதை கூறியிருக்க சுனாமியாய் சுழற்றியடித்த எண்ணங்கள் எல்லாம் அமைதியாய் உறைந்து கிடக்கும் வானிலையாக மாறி இருந்தது.
பெரியம்மாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் வியாபித்திருந்தது.
‘
பாசத்தை வெளிக்காட்டாது எத்தனை சாதுர்யமாக செயல்பட்டு இருக்கிறார்!?’ என வியந்தாள்.
*********
இரணியன் சண்முகவேலின் அருகில் அமர்ந்திருந்தான்.
மூக்கில் ஆக்ஸிஜனுக்காக வைத்திருந்த டியூபை வைப்பதும் , அகற்றுவதுமாக விளையாடிக் கொண்டிருந்தான். அவர் ஒவ்வொரு முறையும் மூச்சுத் திணறும்போதும் அத்தனை நிறைவு அவனிடத்தில்.
“
உன்னை உடனேக் கொல்லுவேனாப்பா நான். கொஞ்சக் கொஞ்சமா சாகணும்ப்பா நீ. இப்படித்தானே என் அம்மாவை கொன்ன. அவங்க என்ன செஞ்சாங்க உன்னை. எவ்வளவு நல்லாப் பார்த்துக்கிட்டாங்க, அப்புறம் ஏன் கொன்ன…?இப்படி தானே மூச்சு வாங்கினாங்க” என மாஸ்க்கை எடுத்து விட்டான். சற்று நேரத்தில் மாட்டி விட்டவன் ,”உன்னை இப்படி செய்யிறது போர் அடிக்கிதுப்பா .வேற விளையாட்டு விளையாடுவோமா?” என்றான் வன்மமாக சிரித்தபடி .
ஒரு பாட்டிலில் இருந்த சர்க்கரை தண்ணீரை அவர் தொடையில் ஊற்றினான்.
“
சக்கரைத்தண்ணிக்கு எறும்பு வரும் இல்லப்பா?” என்று கேட்டபடி இன்னொரு டப்பாவை எடுத்தவன்,” அது எப்போ வர்றது நான் எப்போ நீ கதறும்போது ரசிக்கிறது?, டைம் எடுக்கும் ஸோ நானே எறும்பையும் அழைச்சுட்டு வந்துட்டேன்” என்றபடி சுள்ளெறும்பு நிறைந்த அந்த டப்பாவை அவரின் தொடையில் கவிழ்த்தான்.
சண்முகவேல் வலியில் கத்த முடியாமல் தவிக்க, இரணியன் சந்தோஷத்துடன் பார்த்திருந்தான்.