வதனியின் வளைபூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேறி இருந்தன.
நாகலெட்சுமி தான் அத்தனை ஏற்பாடுகளும்… வதனியின் பெரியம்மாவிற்கு ஏகபோக மகிழ்ச்சி தான். எனினும் தங்கை உயிரோடிருந்திருந்தால் நினைக்கையிலையே நெஞ்சம் விம்மியது அவருக்கு.
மொத்தமாய் ஒழிந்து போயிருந்த கிங்கரா எனும் அழைப்பு வதனிக்கு இளைப்பாறுதல்.
ஒவ்வொருவராய் வளையல் போட்டுவிட, சுமித்ராதேவிக்கு அண்டை அயலார் போன்ற வரவேற்பு தான்.
அத்தனை புலம்பியிருந்தார் மகேந்திரனிடம்.
“அண்ணன் இடத்தில் நானிருந்திருந்தா உங்களை பார்த்திருக்கவே மாட்டேன்.” என்றான் தெளிவாக.
விஷ்வநாதன் பேசுவதே இல்லை. அவருக்கும் தெரியும் தான் செய்தது தவறு என்று. அவரால் மகிழனை சண்முகவேல் பிள்ளையாகத் தான் பார்க்க முடிந்தது. மகிழனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இளமையில் இல்லை தான். முதிர்ச்சி பெற பெற மகிழனிடம் உறவு பாராட்ட நினைத்தாலும் சண்முகவேலின் செய்கை தடுத்தது. சுமித்ராவின் பிடிவாதத்தில் தான் மகிழனின் சொத்துக்களை கூட அவர் பெற்றுக் கொண்டது. ‘என் தந்தையும் இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க உழைத்திருக்கிறார் அவர் உழைப்பை ஏன் நான் மறுக்க வேண்டும்’எனக் கேட்டே மகிழனிடம் இருந்து வாங்கிக் கொண்டார். தந்தை, மகனுக்கும் இதில் துளியும் விருப்பம் இல்லை எனத் தெரிந்தும்.
மகிழன் மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டான்.
விழாவிற்கு ஒவ்வொருவராய் வந்த வண்ணமிருக்க, மரகதநாயகி தன் பிள்ளைகளோடு வந்தார்.
பழைய மிடுக்கு, ஆணவம், திமிர் எதுவும் இல்லை. வயதுக்கேற்ற முதிர்வு தெரிந்தது முகத்தில்.
வதனியின் வளைபூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேறி இருந்தன.
நாகலெட்சுமி தான் அத்தனை ஏற்பாடுகளும்… வதனியின் பெரியம்மாவிற்கு ஏகபோக மகிழ்ச்சி தான். எனினும் தங்கை உயிரோடிருந்திருந்தால் நினைக்கையிலையே நெஞ்சம் விம்மியது அவருக்கு.
மொத்தமாய் ஒழிந்து போயிருந்த கிங்கரா எனும் அழைப்பு வதனிக்கு இளைப்பாறுதல்.
ஒவ்வொருவராய் வளையல் போட்டுவிட, சுமித்ராதேவிக்கு அண்டை அயலார் போன்ற வரவேற்பு தான்.
அத்தனை புலம்பியிருந்தார் மகேந்திரனிடம்.
“அண்ணன் இடத்தில் நானிருந்திருந்தா உங்களை பார்த்திருக்கவே மாட்டேன்.” என்றான் தெளிவாக.
விஷ்வநாதன் பேசுவதே இல்லை. அவருக்கும் தெரியும் தான் செய்தது தவறு என்று. அவரால் மகிழனை சண்முகவேல் பிள்ளையாகத் தான் பார்க்க முடிந்தது. மகிழனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இளமையில் இல்லை தான். முதிர்ச்சி பெற பெற மகிழனிடம் உறவு பாராட்ட நினைத்தாலும் சண்முகவேலின் செய்கை தடுத்தது. சுமித்ராவின் பிடிவாதத்தில் தான் மகிழனின் சொத்துக்களை கூட அவர் பெற்றுக் கொண்டது. ‘என் தந்தையும் இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க உழைத்திருக்கிறார் அவர் உழைப்பை ஏன் நான் மறுக்க வேண்டும்’எனக் கேட்டே மகிழனிடம் இருந்து வாங்கிக் கொண்டார். தந்தை, மகனுக்கும் இதில் துளியும் விருப்பம் இல்லை எனத் தெரிந்தும்.
மகிழன் மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டான்.
விழாவிற்கு ஒவ்வொருவராய் வந்த வண்ணமிருக்க, மரகதநாயகி தன் பிள்ளைகளோடு வந்தார்.
பழைய மிடுக்கு, ஆணவம், திமிர் எதுவும் இல்லை. வயதுக்கேற்ற முதிர்வு தெரிந்தது முகத்தில்.
“இல்லம்மா எம்மேல கோவமா இருப்பா” என்று அமைதியாக அமர்ந்து கொண்டார். மரகதநாயகிக்கு பார்வை எல்லாம் கணவன் மீதே… ஸ்வீகாவிடம் அத்தனை பொருமல் ,”இந்த மனுசனைப் பாருடி, என் தொல்லை இல்லாம ஒரு சுத்து பெருத்துப் போயிருக்காரு. நான் தான் கவலையா கெடக்கேன். பாரேன் பார்த்துட்டு மூஞ்சியை திருப்பிக்கிட்டதை.” என அதற்கும் நொடித்துக் கொள்ள ,ஸ்வீகாவிற்கு சிரிப்பு தாளவில்லை.
“வந்து பேசுவார் மா.” என்றவள் பிறகு வதனியிடம் சென்று விட்டாள்.
********
இரணியன் அறைக்குள் அமர்ந்திருந்தான். அவனது கையில் ஆறாம் விரலாய் இடம்பிடித்திருந்த சிகரெட் மெல்ல மெல்ல உயிரை விட்டுக் கொண்டிருந்தது.
“சாப்பிட்டு தூங்கு. யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க.” என்றவன்,”ட்ரெஸ் போட்டுக்கோ!” என்றபடி வெளியேறினான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்!” என்றவள் அயர்வில் கண்ணசர அவளது கைபேசி அழைத்தது.
சலிப்பாய் எடுத்தவளிடமிருந்து கைபேசியை பிடுங்கியவன்,” அவ எனக்கு இன்னைக்கும் வேணும். பேமண்ட் டபுள் பண்ணிக்கோ” என்று இணைப்பைத் துண்டித்தான்.
“சார் !”என்று அதிர்ந்தவளை,” நீ தூங்கு நான் தொல்லை பண்ண மாட்டேன். கிளம்பறதுக்கு முன்னாடி சொல்லு, கேப் புக் பண்றேன்” என்றான்.
‘ஹப்பா!’ என்றவளுக்கு ஏகபோக மகிழ்ச்சி. நிம்மதியாக உறங்கலாம் என்ற சந்தோஷம் அது.
‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாய்?’ என்றெல்லாம் கேட்கவில்லை அவன். அது அவனுக்குத் தேவை இல்லாத ஒன்று.
“குடும்ப கஷ்டம் சார் எங்கப்பன் வரிசையா ஏழு பொட்டைப்பிள்ளையை பெத்துப் போட்டுட்டான். எங்கம்மா என் தங்கச்சியை பெத்ததும் கடமை முடிஞ்சதுனு செத்திடுச்சு . அதுகளை கரை சேர்க்க வழி தெரியல. உழைச்சு சம்பாதிக்க நினைச்சேன் எவன் விட்டான். தொழில் பாக்க வந்துட்டேன். ஏழுல ஒண்ணு நாட்டுக்குனு தந்தாச்சு,அஞ்சை கட்டித் தந்துட்டேன் சார் ,கடைசி குட்டி படிக்கணும்’னு சொல்லிட்டா. டாக்டருக்கு படிக்கிறா சார். இது கடைசி வருஷம் ஒரு சின்ன ஆஸ்பத்திரி வச்சு குடுத்தா கடமை முடிஞ்சதுனு என்னையவும் முடிச்சுக்குவேன் சார். நம்ம அக்கா இந்த தொழில் தான் பார்த்து நம்மளை வளத்தான்னு தெரியகூடாது பாருங்க” என்றவள் பேசிமுடித்து விட்டேன் என்ற பாவனையில் உறங்கிப் போனாள்.
இரணியன் சிரித்துக் கொண்டான்.
‘ஒவ்வொரு இடத்திலும் ஒரு கதை இருக்கத் தான் செய்கிறது ‘என்றபடி அவளது கைபேசியை இருந்த இடத்தில் வைத்தான்.
அடுத்ததாய் ஓர் அழைப்பு. மகிழனிடமிருந்து வந்தது.
அழைப்பை ஏற்கவில்லை அவன். மீண்டும் மீண்டுமாய் அழைத்துக் கொண்டிருக்க சலிப்பாய்,” ப்ம்ச் என்னடா எதுக்கு இம்சை பண்ற…?நான் வரலை!” என கடித்து விட்டு வைத்தான்.
மறுபடியும் அவனிடமிருந்து தான் அழைப்பு.
“டேய்! உன்னை கொன்றுவேன்” என்று கத்த எதிர்முனையில் என்ன கூறினானோ அடித்துபிடித்து ஓடினான் குளியலறைக்கு.
சற்று நேரத்தில் தயாராகி வந்தவன், அங்கிருந்த வேலையாளிடம் உறங்குபவளை தொல்லை செய்யாதே என்று சொல்லி விட்டு வெளியேறினான்.
தன் வெள்ளைநிற ஐடென் வண்டியை பார்க் கூட செய்யாமல் மருத்துவமனைக்குள் ஓடினான்.
வேகமாக ஓடியதில் எதிரே வந்தவளை மோதி தள்ளிவிட்டு மகிழனை நெருங்கி விட்டான்.
மூச்சிரைக்க ,”ப்ரகி எங்க?” என்றான்.
“உள்ளே இருக்கா!” என்று ஐசியூவை காண்பித்து விட்டு,” பயமா இருக்குடா ரணி!” என அதுவரை அடக்கி வைத்திருந்த பயம், கலக்கம் எல்லாம் கண்ணீராய் வெளியே வந்து விட்டது மகிழனுக்கு .
“ஒண்ணும் ஆகாது ஆகாது வந்திடுவா. ப்ப்ச் சின்ன குழந்தையாட்டம் அழாதே. இன்னும் டைமிருக்கேடா அதுக்குள்ள எப்படி?”
என்றான் சந்தேகமாக.
“எதுவும் கேட்காதயேன் கொஞ்ச நேரம்” என்றவன் இரணியன் அணைப்பிலிருந்து வெளியே வரவில்லை.
இன்னும் சிவப்பு விளக்கு தான் எரிந்து கொண்டிருந்தது.
“இது ஹாஸ்பிடல் எதுக்கு கத்தறீங்க. சைலண்டா இருந்தா நில்லுங்க, இல்ல கெட்லாஸ்ட் வரும்போது ஏதோ ரேஸ்ல வர்ற மாதிரி ஓடி வர்றீங்க” என இளம்பெண்ணொருத்தி சத்தமிட்டாள்.
வெண்மைநிற கோட் அவளது உடலை போர்த்தியிருக்க, கழுத்தில் இருந்த ஸ்டெதஸ்கோப் அவளை மருத்துவர் எனக் காட்டியது.
“இப்ப நீங்க என்ன பண்றீங்களாம்?” என்றதும் அவள் இரணியனை முறைத்து விட்டு,” இடியட் !”என முணுமுணுத்தபடி ஐசியூவிற்குள் சென்றாள்.
‘இதென்னடா அரைக்காப்படி மாதிரி இருக்கா இது டாக்டரா?’ என்று நினைத்துக் கொண்டான் இரணியன்.
மீண்டும் கவனத்தை மகேனிடத்தில் வைக்க,” பேசிக்கலாம் ண்ணா!” என்றான் அமைதியாக.
உள்ளே சென்ற பெண்ணவள் மீண்டும் வெளியே வந்தாள்,” பீநெகட்டிவ் ப்ளட் தேவைப்படுது. ஹாஸ்பிடல்ல இல்லை. ப்ளட் பேங்க்ல அரேஞ்ச் பண்றிங்களா.?இல்லை உங்கள்ள யாராச்சும் அந்த குரூப் இருந்தா குடுங்க இட்ஸ் எமர்ஜென்சி! ஏற்கனவே சொல்லி இருந்தோமே ” என்றதும் மகிழன் இரணியனைப் பார்க்க அவன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.
அவனை எரிக்கும் பார்வை பார்த்த மருத்துவரோ,” எமர்ஜென்சி சீக்கிரம் உள்ளே மூணு உயிர் அல்லாடிட்டு இருக்கு” என்றாள் கோபமாய்.
மகிழன் யாரிடமாவது கேட்கலாம் என அலைபேசியை எடுத்து கொண்டு நகர
“நா… நான் அரேஞ்ச் பண்றேன். ஐம்சாரி ப்ளீஸ் கோஅகெட்” என்ற இரணியன் யாரை கேட்கலாம் என்று யோசிக்கையிலேயே ஸ்வீகாவும், பிரபுவும் வந்து விட்டனர்.
மகேந்திரன் விஷயத்தைக் கூறவுமே,” நான் அந்த குரூப் தான்ணா நான் தரேன் “என ஸ்வீகா செல்ல
உடனேயே அவளை அழைத்துச் சென்று விட்டனர்.
நிமிடங்கள் மணித்துளியாய் வடிவெடுக்க, நல்ல செய்தி தான் வந்தபாடில்லை.
இரணியனுக்கு வேறு மனம் ஒருநிலையில் இல்லை. கைநடுங்கியது. சிகரெட் இல்லாவிட்டால் மது வேண்டும் என்று மூளை கட்டளையிட்டது.
பட்டென எழுந்து கொண்டான். அங்குமிங்கும் நடந்தே களைத்தான்.
ஒருவிதமான பதற்றம் அவனை ஆட்டுவிக்க, ஊஃப் என்று காற்றை ஊதி தன்னைக் கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.
“என்னண்ணா?” மகேன் அவன் பரபரப்பு கண்டு வாய்விட்டேக் கேட்டுவிட்டான்.
“முடியலடா ஐநீட் சிகரெட் இல்லாட்டி ஆல்கஹால் வேணும். இட்ஸ் இரிட்டேட்டிங் மேன். ஊஃப் எவ்வளவு நேரம் ஆகும்?”. கடுகடுத்தான்.
“சரி வெளியே போயிட்டு வாங்க, பிரபு கூட்டிட்டு போ!” என்று மகேன் அவன் நிலையைக் கண்டு சொல்லிவிட
“நோ நோ… ப்ரகி ஃபர்ஸ்ட். அவளை பார்க்கணும். ப்ரகி ப்ரகி இல்ல இல்ல பார்க்கணும் பேபி ஐவான்ட் டூ ஸீ. ஃபர்ஸ்ட் ப்ரகி”என்று புலம்பித் தள்ளினான்.
மகிழன் ஸ்வீகாவோடு வந்தவன் ஐசியூவை பார்த்திட,” வந்திடுவாங்கண்ணா.ப்ளீஸ் அமைதியா இருங்க.” என மகேன் தான் இருவரையும் தேற்றிக் கொண்டிருந்தான்.
மரகதநாயகி சுசீந்திரன் கையைப் பிடித்தபடி அமர்ந்தவர் கண்ணை மூடி வேண்டிக் கொண்டிருந்தார். ப்ரகாவின் பெரியம்மா அங்கிருந்த கோவிலில் சென்று அமர்ந்துவிட்டார் மகள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு.
‘தருணியின் வீட்டில் யாராவது வந்தால் அங்கேயே போலீஸில் புகார் அளிப்பேன்’ என எச்சரித்து விட்டே வந்திருந்தார்.
அவர்களுக்கு வரும் தைரியமும் இல்லை. தருணி செய்த வேலைக்கு எங்கே தங்களையும் சிறையில் தள்ளி விடுவார்களோ என்று பயந்து போயினர்.
ஐசியூவில் எரிந்து கொண்டிருந்த சிவப்புவிளக்கு அணைந்தது.
அந்தப் பெண்ணும், ஒரு செவிலியும் முகம்நிறைந்த புன்னகையுடன் குழந்தைகளுடன் வெளியே வந்தனர்.
மகிழன் ப்ருஹா எனவும் இரணியன் ப்ரகி எனவும் கேள்வியாக பார்க்க ,”நல்லா இருக்காங்க ஸ்டிச்சிங் பண்ணிட்டு தான் வேற ரூம் மாத்துவோம் ஒரு கேர்ள் ஒரு பாய்” என்று காட்ட இரணியன் கை தன்னைப் போல குழந்தையை வாங்க நீண்டது.
அந்த மருத்துவரோ அவனுக்கு தர மறுத்து குழந்தையை உள்ளிழுத்துக் கொண்டாள் கோபத்துடன்