“ட்ரிங்க் பண்ணவங்க கிட்ட தரமாட்டேன்” என்ற குரல் இரணியன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இதோடு மூன்று முறை குளித்து விட்டான். பத்துமுறை பல் துலக்கி விட்டான். குளித்து கண்கள் சிவந்து வெளியே வந்தவன், அவசரமாக ஆடை மாற்றி வெளியே வர பிரபுவுக்கு அத்தனை சிரிப்பு.
“என்ன மாமா நாளைக்கு கூட பார்த்துக்கலாமே? ஏன் இவ்வளவு மெனக்கெடுறீங்க ?”என கேட்டு விட்டான்
“வருது வருது. வாய்ல பேஸ்ட் ஸ்மெல்லும், மேல நியூட்ரீஜீனோ ஸ்மெல்லும் “என்றான் சற்று எரிச்சல் கலந்த தொனியில்.
பின்னே இதோடு எத்தனை முறை அவன் முன் ஊதிக்காட்ட…
“பேபீஸ்க்கு ஸ்மெல் ஒத்துக்கும் தானே…?”
“நான் என்ன டாக்டரா…? இல்ல முன்ன பின்ன பிள்ளை பெத்துருக்கேனா, யோவ் மாமா !படுத்தாம வாய்யா “என்று இழுத்துக் கொண்டு வந்தவன், வதனியின் அறை முன்பு விட்டுவிட்டான்.
“இப்ப தான் டா ரூம்க்கு மாத்தினாங்க” என்றான் மகிழன்.
“நீ உள்ளே இருக்காம இங்க என்ன பண்ற ?”கோபத்துடன் கேட்க.
“தூங்கறா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு வந்துட்டேன்.” என்றவனை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் இரணியன் .
“குறைஞ்சது ஆறுமாசம் ஆகிடும் தம்பி “என நாகலெட்சுமி சொல்ல
“கேர்ஃபுல்லா இருந்திருக்க வேண்டாமா?”என்றவன்,” வலியை எல்லாம் நீங்களா தாங்கறீங்க இடியட்ஸ் “என்று திட்டினான்.
“ரணி!” என மகிழன் மீண்டும் அதட்ட,” பேபீஸை பார்க்கணும் “என்றான்.
“இன்குபேட்டர்ல வச்சிருக்காங்க. நாளைக்கு தான் பார்க்க முடியும். பத்து நாள் முன்ன வந்துட்டாங்க இல்ல, அதான் .”என்றவன் வதனியின் சலைன் ஏறிக் கொண்டிருந்த கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
வெளியே இருந்த ஸ்வீகாவோ,” இவர் என்ன மகிழ் மாமாவை விட ஓவரா பண்றாரு. அவரு தான் ஹஸ்பண்ட் ஃபீல் பண்றாரு ,இரணியனுக்கு என்னவாம்?” என்று எரிச்சல்பட்டாள்.
மறுநாள் தான் கண்விழித்தாள் ப்ரகா. அதுவரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தனர் மகிழன், இரணியன் இருவரும்.
இரவில் ஒருவருக்கு மேல் தங்கக் கூடாது என்று கூறிவிட, நாகலெட்சுமி இருந்து கொண்டார். ப்ரகாவின் பெரியம்மாவும் இருக்க வேண்டும் என்று கேட்க மகிழன் மருத்துவரிடம் அனுமதி வாங்கி தங்க வைத்தான்.
மகிழனும், இரணியனும் பக்கத்து அறையில் இருந்தனர் மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு.
“ஏன்டா இப்படி இருந்து தொலைக்கிற?” இரணியனைக் கண்டு மகிழன் கேட்க
“எப்படி இருக்கேன்?” என்று எதிர்கேள்வி கேட்டான் இரணியன்.
“அவ எழுந்ததும் சொல்வா உன் லட்சணத்தை” என்று பல்லைக் கடித்தவன் ,”என்ன பிரச்னை ரணி.?”
“நம்ம அப்பன் தான் பிரச்சினை. இதோ இப்ப கூட முடியல. ப்ரகிக்காக உட்கார்ந்து இருக்கேன். ஐ கான்ட் கன்ட்ரோல் மைசெல்ஃப் மகி. ப்ம்ச் என்னை விடு. என்ன நடந்தது அதைச் சொல்லு” என்றான்.
“இங்க வா.” என தன்னருகில் அமர்த்திய மகிழன் ,வளைகாப்பில் நடந்ததைக் கூறலானான்.
வளைகாப்பில் அனைவரும் இருக்க ,’இரணியன் வரவில்லையா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தாள் வதனி.
“பங்ஷன் முடியட்டும் அவனை பேசிக்கலாம். நீ காலை நீட்டி உட்கார் ப்ரூஸ்லி. வீங்கி இருக்கு பார் .”என மகிழன் அவள் பாதங்களை நீவி விட்டபடி பேசிக் கொண்டிருந்தான்.
“ம்ஹூம் கொஞ்சம் நடக்கட்டா…?சாப்டது ஒரு மாதிரி இருக்கு.” என்றதும்
“நான் ஹாட் வாட்டர் எடுத்துட்டு வரேன், அதுவரை சும்மா இங்கேயே நட சரியா… ?”
“ஏன் நாகு அக்கா?” என்றவளிடம்,” அவங்களை பிருந்தாவனத்திற்கு சாப்பாடு தர அனுப்பி இருக்கேன்.” என்றபடி ,”நான் வைக்கிறேன் ப்ரூஸ்லி. சுடுதண்ணி கூடவா போட மாட்டேன்?!” என்று சிரித்தபடி செல்ல, சுமித்ரா தருணிகாவோடு வந்தார்.
“ப்ரகல்யா!” என்றழைத்தவர்,” உன் கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு ஒரே அழுகை அதான் கூட்டிட்டு வந்தேன் ஆமா தம்பி எங்க?” என்று கேட்க
“இப்ப தான் சுடுதண்ணி வைக்க உள்ளே போனாங்க. என் கிட்ட எதுக்கு மன்னிப்பு ?”என்றபடி எழுந்தாள் ப்ரகா. பெரிதான மேடிட்ட வயிறுடன் அவ்வளவு சீக்கிரம் எழ இயலவில்லை.
“தம்பி சுடுதண்ணி வைக்கிறதா …?நான் கொண்டு வரேன், தருணி நீ பேசிட்டு இரு” என்றவர் அவசரமாய் சமையலறைக்கு ஓட, அதற்குள் ப்ரகாவை நெருங்கி இருந்தாள் தருணிகா.
“மன்னிப்பு கேட்க தான் வந்தேன். கைநிறைய வளையல் நல்லா இருக்கு ப்ரகா. விலை அதிகம் போலவே தங்கத்தில் வேற போட்ருக்க போல?”
“ம்ம்ம் என் வீட்டுக்காரர் போட்டுவிட்டார்…”
“ஃபர்ஸ்ட் டைம் தங்கத்துல வளையல் போடுற இல்ல. உன் ஹஸ்பண்ட் ரொம்ப பாசம் வச்சிருக்கான் உன் மேல இல்லையா ?”
“மரியாதையா பேசுறதா இருந்தா பேசுங்க, இல்ல இடத்தை காலி பண்ணுங்க “என்றவள் சமையலறை நோக்கி நடக்க, தருணிகா அவளின் கைப்பிடித்து இழுத்து,” நான் பேசிட்டு இருக்கேன் மரியாதை இல்லாம போற” என்று வேகமாக மறுபக்கம் விட ப்ரகல்யா அலறியபடி கீழே விழுந்து விட்டாள்.
அவள் சத்தத்தில் மகிழனும் சுமித்ராவும் ஓடி வர ,
தருணியோ மெதுவாக சென்று அவளை தூக்கி ,”உள்ள இருக்க பிள்ளை செத்துச்சா இல்லையா…?எனக்கு முன்ன குழந்தை பெத்துக்கலாமா நீ?” என்று கேட்கவும் மகிழன் ஓடி வந்து தருணியை தள்ளி விட்டு ப்ரகாவை தூக்கிக் கொண்டு,” உங்களை யார் இங்க வரச் சொன்னது?” என கத்திவிட்டு வெளியேறினான் பதற்றத்துடன் . தருணியை கொன்றுபோடும் வெறி தான் ஆனால் முதலில் முக்கியம் தன் மனைவியும் மகவும் ஆயிற்றே.
சத்தம் கேட்டு மற்றவர்களும் ஓடிவர ,தருணி பேயறைந்ததைப் போல நின்றிருந்தாள்.
சுமித்ராவுக்கு உலகமே நின்று போன உணர்வு.
“என்னாச்சு என்னாச்சு?” என்று அனைவரும் பதற, சுமித்ரா தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.
“அய்யோ தப்பு பண்ணிட்டேனே…! மன்னிப்பு கேட்கிறேன் என்னை ஒதுக்கி வைக்காதீங்கனு கேட்கவும் தானே கூட்டிட்டு வந்தேன். இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டாளே பாதகத்தி!” என்று தருணியை அடித்து துவைக்க
“ஏய் இந்தாம்மா என் பொண்ணை விடு” என்று தருணியின் அம்மா பரிந்து கொண்டு வர
“கர்ப்பவதியை பிடித்து தள்ளி விட்ருக்கா உன் மக, அவளை விடணுமா..?”என்ற சுமித்ரா தருணியின் முடியை கொத்தாக இழுத்துப் பிடித்து அடித்தார்.
தருணியோ ஆத்திரம் மேலிட சுமித்ராவை தள்ளி விட்டவள்,” அவ புள்ள செத்திடும். இனிமே நான் பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் தான் கர்ப்பம் தரிக்கணும் அவ. இல்ல அவ்வளவு தான். எவ்வளவு தைரியம் இருந்தா எனக்கு முன்னாடி குழந்தை பெத்துப்பா அவ “என்று அலற
“பைத்தியக்காரி இப்படி செஞ்சுட்டியேடி உன்னை கொல்லாம விடமாட்டேன்” என்று ப்ரகாவின் பெரியம்மா அவளை அடிக்க அவரையும் தள்ளி விட்டாள்.
“எல்லாம் உன்னால தான். வேலைக்காரியை கொண்டு வந்து மகாராணி ஆக்கினல்ல அனுபவி” என்று கத்த மகேன் விரக்தியாக பார்த்தவன் காவல்துறையில் தகவல் சொல்லி விட்டான்.
“தம்பி வேண்டாம் தம்பி ஏதோ தெரியாம பண்ணிட்டா” என்று தருணியின் அம்மா கெஞ்ச,
” குடும்பத்தோட உள்ள தூக்கி வச்சிடுவேன். பொண்ணா இவ. அரக்கி. அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன், ச்சீ உன் முகத்தில் முழிச்சா கூட பாவம் “என்று கத்தி விட்டு மருத்துவமனைக்கு சுமித்ராவுடன் சென்று விட்டான்.
“அவன் வந்து சொல்லி தான் தெரியும் தருணியை அரெஸ்ட் பண்ணியாச்சுனு.” என்று முடித்தான் மகிழன்.
“உயிரோட ஏன் விட்ட….?” முகத்தில் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இரணியன் கேட்க
“உயிரை மட்டும் விட்டு வைக்க சொன்னேன் .”என்றான் பதிலுக்கு.
“நான் எடுத்திடுறேன். “என்று முடித்தான் இரணியன்.
“ப்ம்ச் வேணாம். அவளே சூசைட் பண்ணிப்பா. நாம பசங்க கூட இருக்கணும்” என்ற மகிழன்,” நீ இப்படி இருக்காதடா “என்றான்.
“ம்ஹூம் ட்ரை பண்ணிட்டேன் முடியலை. தாத்தா சொன்னப்பவே அந்தாளை விட்டு விலகி இருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். இப்போ அது இல்லாம இருக்க முடியலை “என்றான்.
“பேசாம கல்யாணம் பண்ணிக்கோ யூ கேன் மேனேஜ். “
“கஷ்டம் மகி. வர்ற பொண்ணு எனக்கு ஈடு கொடுக்கணும். அவளால முடியலைன்னா அவ வாழ்க்கை நரகம் ஆகிடும். அந்த நேரத்தில் நான் மிருகம் மாதிரி நடந்துக்கிறேன், எனக்கேத் தெரியுது. வெளியே வரவே பிடிக்கலை. சண்முகவேல் மாதிரி ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு. பார்க்கிற பொண்ணு மேல எல்லாம் பாஞ்சு அது போல உனக்குப் புரியுதா? நான் என்ன சொல்ல வர்றேன்னு …”என்று தவிப்பாய் கேட்டான்.
“டேய் லூசுத்தனமா பேசாதே. இப்போ நான் இல்லையா…? நானும் அவனோட ஜீன் தானே. நான் நல்லா தானே இருக்கேன். நீ எதுக்கும் ஒரு சைக்கார்டிஸ்டை கன்சல்ட் பண்ணு. இல்ல நானே அழைச்சுட்டுப் போறேன்” என்று மகிழன் முடிவாய் சொல்ல
“கன்சல்ட் பண்ணி இருக்க மாட்டேன்னு நினைச்சியா?, ஒண்ணும் வேலைக்காகலை “என்றான் அலுப்பாக.
மகிழனின் தோள் மீது சாய்ந்தவன்,” உன்னைப் போல குடும்பம் ,பொண்டாட்டி, குழந்தைனு வாழத் தோணுதுடா மகிழா. ஆனா அந்தாளை மாதிரியே அடிச்சு துன்புறுத்தி ஏதாவது கொடுமை பண்ணிடுவேனோன்ற பயம் இருக்கு. அவ கூட லைஃப் லீட் பண்ணும் போது வேற பொண்ணை தேடிடுவேனோன்னு மனசு பீதியாகுது. இதோ இப்போ டெய்லி ஒரு பொண்ணை தேடுறேனே அதுபோல” என்று தன் மனதை மறையாமல் சொல்லி விட்டான்.
“எந்தப் பொண்ணைப் பார்த்தாலுமா உனக்குத் தோணுது, அந்த பரதேசி மாதிரி” என மனம் தாளாமல் மகிழ் கேட்டுவிட
“ப்ம்ச் தெரியல… பட் இந்த உணர்வை கட்டுப்படுத்த முடியல.” என்றான்.
“தம்பி பாப்பா கண்ணு முழிச்சிடுச்சு. உங்களைத் தான் தேடுது” என்றதும் இருவருமே அங்கே விரைந்திருந்தனர்.
உதடுகள் காய்ந்து போய் இருக்க, லேசாக வெடித்து இருந்ததில் ரத்தம் வேறு வந்தது.
“ரத்தம் வருது. டாக்டரை கூப்பிடுங்க.” என்று இரணியன் அரற்ற,” தம்பி தண்ணி இல்லாம அப்படி இருக்கு இதோ இப்படி பண்ணா சரி ஆகிடும் என்று மூடியில் தண்ணீர் ஊற்றி பஞ்சில் நனைத்து வதனியின் உதட்டில் தடவி விட்டார் நாகலெட்சுமி.
“ப்ம்ச் இதெப்படி பத்தும்? குடிக்க தண்ணி குடுங்க.” என அதற்கும் கத்த
“டேய்! தண்ணி தரக் கூடாதுடா.” என மகிழன் சொல்ல
“எந்த மென்டல் அப்படி சொன்னது. தண்ணிக் குடிக்காம எப்படி இருப்பா. நீயெல்லாம் என்ன ஹஸ்பண்ட்?” என அவனுக்கும் திட்டு விழுந்தது.
அதற்குள் மருத்துவர் வந்துவிட ,”ஏன் சத்தம் போட்டுட்டே இருக்கீங்க. அவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகாதா?” என்று முறைத்தாள் அதே மருத்துவப்பெண்.
“தண்ணி தராம அவளுக்கு ஏதாவது வந்தா. என்ன ஹாஸ்பிடல் இது. ஒரு ரெஸ்பான்ஸ் இல்லாம…” என திட்ட
“சார், இவரை முதல்ல வெளியே போகச் சொல்லுங்க.”என சொல்லிவிட்டாள் கடுப்பாக
“ஸ்ஸ்ஸ், டோன்ட் டாக் இப்ப தண்ணி தரமுடியுமா முடியாதா?” மல்லுக்கு நின்றான் அவளிடத்தில்.
“சார் தண்ணி அதிகம் தரக் கூடாது. உள்ளே போட்டுருக்க தையல்ல புண் ஆறாது அப்புறம். தண்ணி தாகமெல்லாம் எடுக்காது நீங்க சத்தம் போடாதீங்க கொஞ்சம் வெளியே இருங்க “என்று செவிலிப்பெண் சொல்ல
“ப்ம்ச்!” என்று அங்கேயே நின்று கொண்டான் இரணியன்.
“ரணி வாடா.”என மகிழன் வெளியே இழுத்து வர மருத்துவரை முறைத்தபடி வெளியே வந்தான்.
‘சரியான காட்டான் போல ‘என்று முனகியபடி வதனியை பரிசோதித்தாள்.
“நாளைக்கு தண்ணி குடுங்க. இந்த பாட்டில் சலைன் முடிஞ்சதும் எடுத்திடலாம் போதும்”என்று கூறியபடி,” அவர் யார் உங்களுக்கு ?”என்று கேட்டாள்.
“என் அப்பா!” என்று ப்ரகா சொல்ல
“இவ்வளவு யங்கான அப்பாவா?!” என்று சிரிக்க
“என் ஹஸ்பண்டோட தம்பி. எனக்கு அப்பா மாதிரி”
“டாட் லிட்டில் ப்ரின்சஸ் தான். அதான் அராஜகம் பண்றாரு”என்றபடி போய்விட்டாள்.
மகிழன் உள்ளே நுழைந்ததும் நாகரீகம் கருதி நாகலெட்சுமி வெளியே வந்துவிட்டார்.
இரணியன் குழந்தைகளை பார்க்க கிளம்பி விட்டான்.
மகிழன் ப்ரகா இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் வருடியபடி இருந்தனர்.
“மகிழா…!”மெல்லிய குரலில் அழைத்திட தலையை தாங்கியபடி அமர்ந்து விட்டான் அவன்.
“உன் முன்னாடி தைரியமா இருக்கிறது போல நடிக்கக் கூட முடியலடி.” வலிநிறைந்த வார்த்தைகள் அவை. கடந்து வரக்கூடாத தூரத்தை கடந்து வந்த தாக்கம் அவனுள் சுழன்றடித்தது.