அவன் கைகளைப் பார்த்தவள் ,”ஓஓஓ ட்ரிங்க் பண்ணனும் இப்போ, அதான் இவ்வளவு நெர்வஸா என்னை விரட்டுறீங்க அப்படித்தானே ?!”என்று முறைத்துக் கொண்டு நிற்க
‘இவ வேற நேரம் காலம் தெரியாம…’என முனகியபடி,” மிஸ் இயலருவி. ப்ளீஸ் கிளம்புங்க. நான் யார் கிட்டயும் இவ்வளவு பேசினதில்லை, கெஞ்சினதில்லை. ஸோ கெட் அவுட். இல்ல நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்பேற்க முடியாது” என்றான் தன் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி.
“என்ன செய்வீங்க ஹான்?!. சரியான குடிகாரன் உன்னைப் போய் என் அக்கா லவ் பண்ணி இருக்காளே” என்று அவள் பேசிக் கொண்டே செல்ல, அவன் பொறுமை காற்றில் பறந்து விட்டிருந்தது.
அருகிலிருந்த பூச்சாடியை தூக்கி சுவற்றில் அடித்தவன், அவளைப் பிடித்து தன்னருகே நெருக்கமாக இழுத்து விட்டான்.
“இதோப்பார் என்னால ஓரளவு தான் சொல்ல முடியும், ஐ கான்ட் கன்ட்ரோல் மை எமோஷன்ஸ் ஸோ இப்படி வந்து பேசிட்டு நிற்காத போன்னா போயிடு” என்றான் கோபமாய்.
“இட்ஸ் ஹர்டிங்!” என்று கையை விலக்க முற்பட இரணியன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழந்து கொண்டிருந்தான்.
“விடுங்க ப்ளீஸ் கை வலிக்குது” என்று கண்கள் கலங்கி உதடு கடித்தபடி அவள் நிற்க,
“டோன்ட் க்ரை இடியட்.” என்றவன் அதிகப்படியான கோபத்துடன் கடித்த கீழிதழை விலக்கி விட்டு,” திஸ் இஸ் யுவர் லாஸ்ட் வார்னிங், என் கிட்ட இனி பேச முயற்சி பண்ணாத”என்று விலகிச் சென்று விட்டான் .
“இவர் என்ன ரொம்ப ஓவராப் பண்றார்?” என முணுமுணுத்தவள் அங்கிருந்து சென்று விட்டாள்.
**********
சுமித்ராதேவி கோபத்துடன் அமர்ந்திருக்க, மகேந்திரன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
“மகேன் நீ இப்படி செய்வனு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை” என்றார் சத்தமாக.
“இதோப் பாரு சுமித்ரா உன் கிட்ட ஆரம்பத்திலேயே நான் சொல்லிட்டேன், அந்தச் சொத்து வேணாம்னு… ஆனா நீதான் பிடிவாதமா நின்ன. சரின்னு சம்மதிச்சு வாங்கியாச்சு . இப்போ இரணியன் இது செல்லாது’னு சொல்லிட்டான். அவன் சொல்றது உண்மை தானே?, சண்முகவேலுக்கு அவனும் தானே வாரிசு அவனுக்கு கொடுக்க விருப்பம் இல்லை அதான் மறுத்துட்டான் இதுல சங்கடப்பட எதுவுமில்லை. எங்களுக்கு எங்க சம்பாத்தியம் போதும்” என்று முடித்து விட்டார் விஷ்வநாதன்.
மகேந்திரனோ,”தருணியை டிவோர்ஸ் பண்ணப் போறேன். அப்ளை பண்ணிட்டேன், கேஸ் முடியறவரை இங்கே… அப்புறம் பிரபு சிங்கப்பூர் கூப்பிடுறான். அங்கே போகலாம்னு நினைக்கிறேன்.”என்றதும் சுமித்ரா மறுப்பேதும் சொல்லவில்லை.
“அதுவும் நல்லது தான். நான் அவனை ஒதுக்கி வச்சேன்னு உன் வாழ்க்கையில் அவளைக் கொண்டுவந்து உன்னை சந்தோஷமா வாழவிடாம பண்ணிட்டான்.” என்றார் குற்றச்சாட்டு போல
“ம்மா… அவருக்கு மட்டும் தெரியுமா தருணி இப்படி மாறுவான்னு …?சும்மா குத்தம் சொல்ல பேசாதீங்க” என்றான் எரிச்சலாக
“ஆமா குத்தம் சொல்றேன். அவன் குழந்தை பொண்டாட்டி’னு சந்தோஷமா இருக்கான். ஆனா நீ… இனிமே உனக்கேது வாழ்க்கை…?” என்றார் வருத்தமாக
“எனக்கேது வாழ்க்கையா…? நான் சொன்னேனா என் வாழ்க்கை போயிடுச்சுனு சிங்கப்பூர் போவேன், நல்லா செட்டில் ஆவேன் என் மனசுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிப்பேன், தருணியோட என் லைஃபும் முடிஞ்சுடுச்சா என்ன?” என்றவன்,” நீங்க எந்தப் பிரச்சினையும் பண்ணாம இருந்தா எங்க வாழ்க்கை பீஸ்ஃபுல்லாவே போகும்”என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தான் .
சுமித்ரா தயக்கமாய்,”அண்ணா இங்கே வர்றாரு !”என்று விஷ்வநாதனிடம் சொல்ல
“யாரு நம்பியா?” என்று கேட்க” ஆமாம்” என்றார் சங்கடமாக.
விஷ்வநாதன் முகம் யோசனையில் அமிழ்ந்தது.
*****/****
மகிழன் தன் மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவர் அங்கிருந்து சென்றதும் ப்ருஹாவை தன்பக்கமாய் இழுத்து இதழணைத்தவன் சற்று நேரம் கழித்து விடுவித்து ,”அடிக்கண்ணால் பார்த்த சேதாரம் அதிகமா இருக்கும் ஓகே!” என்று சொல்லியவன் நல்லப்பிள்ளையாக விலகி அமர்ந்து கொண்டான்.
‘அடப்பாவி !’என்ற ரீதியில் பார்த்து வைக்க இதழ்களை பார்வையில் காட்டி,” வாங்கிடுவ” என்று மிரட்ட அவளிடத்தில் புன்சிரிப்பு மட்டுமே.