“ஸ்ஸ்ஸப்பா ,அந்தப் பொண்ணு பயந்து போய் முழிக்குது . உள்ளே கூட்டிட்டுப் போ பொண்ணே” என்றதும் ப்ரகா புன்னகையுடன் அவளை அழைத்துச் சென்றாள்.
“முதல்ல சாப்பிடுங்க டாக்டர்” என்று உணவைப் பரிமாறினாள் வதனி.
“எனக்குப் போதுமே” என்று தயங்கியவளிடம், மறுத்த வதனி மீண்டும் இட்லியை தட்டில் வைத்தாள்.
அவள் உணவை உண்டு முடித்ததும்,” இரணி கட்டாயத்தாலி கட்டினாரா என்ன?” என்று பட்டென்று வதனி கேட்டுவிட
“அச்சோ இல்லக்கா… அது வந்து. சூழ்நிலை அப்படி அமைஞ்சிடுச்சு ப்ளீஸ் இதை நீங்க அவங்க கிட்டக் கேளுங்களேன்” என்று இறைஞ்சுதலாக சொல்ல
“சரி சரி நான் பேசிக்கிறேன்.” என்று வதனி அதற்குமேல் வேறெதுவும் கேட்டிடவில்லை.
இயலருவிக்கோ,’ இதிலிருந்து எப்படி வெளியே வரப் போகிறோம்’என்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.
***********
மரகதநாயகி எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்க, அவரெதிரில் இருந்தவரோ விரல்களை எண்ணி எதையோ யோசித்து தன் கையிலிருந்த நோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஜோதிடரின் முகம் சுருங்கி யோசனையில் மூழ்கியது.
“என்ன சாமி எதுவும் பிரச்சினையா?” என்று கேட்க
“அதெல்லாம் இல்ல ஆனா…” என அவர் இழுக்க
“என்ன இருந்தாலும் சொல்லிடுங்க சாமி” என்று எதிர்பார்ப்புடன் மரகதம் கேட்க
“உங்கப் பொண்ணு ஜாதகப்படி ரெண்டாந்தாரமா போனா அமோகமா இருப்பா. முதல் தாரமா போனா கொஞ்சம் சுபிக்ஷம் இல்லாம இருப்பா. நீங்க சொல்றதைப் பார்த்தா பையனுக்கு இது முதல் திருமணம்’னு நினைக்கிறேன். அது அவ்வளவு உவப்பா இருக்காதுங்களே!”என்றார்.
“நீங்க எதுக்கும் பையன் பொண்ணு ஜாதகத்தைப் பொருத்தம் பாருங்க சாமி” என்று மீண்டும் சொல்ல
“சரி” என்றவர் இரணியன் ஜாதகத்தைக் கணிக்க அதிர்வாய் மீண்டும் மரகதத்தைப் பார்த்துவிட்டு,”இந்த ஜாதகனுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு இருக்கணுமே?” என்றார்.
மரகதநாயகிக்கு அதிர்ச்சியாய் இருக்க,” நல்லாப் பார்த்துச் சொல்லுங்க சாமி. மருமகனுக்கு கல்யாணம் இன்னும் நடக்கலையே” என்று திரும்பவும் கூறிட
‘ஒரு வேளை நமக்குத் தெரியாமல் திருமணத்தை முடித்திருப்பானோ? அதனால் தான் திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறானோ?’ என்றெல்லாம் யோசனையில் மூழ்கியவர்,’எதுவாகினும்
அவனிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வோம்’ என முடிவெடுத்து வீட்டிற்குச் சென்றார் .
ஒரு வாரம் காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்திருக்க, இரணியன் வந்து சேர்ந்திருந்தான்.
“உள்ளே இருக்காங்க”என்றவன்,” ப்ராப்ளம் முடிஞ்சுதா?” எனவும் கேட்டுக் கொண்டான்.
“முடிஞ்சது.அமவுன்ட் தான் ஜாஸ்தி வாங்கிட்டான், கிட்டத்தட்ட ஐம்பது எல்” என்றான் சற்று கடுப்பாக
“எதுக்குடா அவ்வளவு…?”
“பின்ன ரெண்டு மர்டர் ஆச்சே… அவங்க ஆளுகளை விட்டுச் செய்யவும் இவ்வளவு ஆகிடுச்சு. குளிச்சிட்டு வர்றேன். இல்ல பசங்களை தூக்க முடியாது.” என்றபடி வேகமாக தன்னறை புகுந்து குளித்துவிட்டு வந்தான்.
“யாரா இருந்தாலும் உள்ள வாங்க. பேபீஸ் எல்லாம் டாக்டர் கூட பிஸியா இருக்காங்க, என்னடா பட்டூஸ்?” என்று ராகமாய் இழுத்துச் சொன்னது வேறு யாருமல்ல இயலருவியே தான்.
இரணியன் செருமவும், படபடவென்று எழுந்து கொண்டாள்.
“இல்லை அது வந்து…” என்று தயங்கியவளிடம்,” உட்காருங்க டாக்டர் “என்றான் மெத்தையை தட்டி.
“ஆல் ஓகே !”என்றதும்,” ம்ம்ம்” என்று தலையாட்டி வைத்தாள்.
“வாயை கடன் கொடுத்துட்டியா…?”
“என்னது…?”
“இல்ல வாய்கொள்ளாம பேசுவ இப்ப ஒரு வார்த்தை பதிலா வருதே ,அதான் யார்கிட்டயும் கொடுத்துட்டியோனு கேட்டேன். “என்றான் நக்கலாக.
“அதெல்லாம் இல்ல.”என்றவள்,” எங்க வீட்டில்…” என இழுத்தாள் தயக்கத்துடன்.
“ஹான் கேட்கலை!” என்றான் தன் காதை இழுத்துக் காட்டியபடி.
“ப்ப்ச் ,எங்கப்பாவை கேட்கிறேன் “என்றாள்.
“அவனா… அவன் இந்நேரம் ராஜி கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருப்பான் ஐ திங்க்..” என்று இலகுவாய் சொல்ல, அவனை விழிவிரிய பார்த்தாள்,’ கொன்னுட்டிங்களா?’ என்ற ரீதியில்.
“எஸ் ஒரு அடி அடிச்சேன் செத்துட்டான்.அவனுக்குப் பயந்து வாழ்ந்திருக்கீங்களே” என்று ஏளனத்துடன் உரைத்திட
“பயந்து… ஹ்ம்ம்,அவர் தான் எங்களுக்கு எமன்னு தெரியாதே!” என்றாள் பெருமூச்செறிந்து.
“தட்ஸ் ஓகே” எனும்போதே வதனி வந்து விட்டாள்.
“வாங்க சார்… ஒரு வழியா வழி தெரிஞ்சுடுச்சுப் போல” என்று நக்கலாக கேட்க
“அதெல்லாம் தெரியும். “என்றவனோ குழந்தைகளோடு ஐக்கியமாகி விட்டான்.
“நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சீக்கிரம் வாங்க “என்று வதனி வெளியேற அவளை நூல் பிடித்தாற்போல இயலருவியும் நகர, அவளின் கையைப் பிடித்து தடுத்தான் இரணியன்.
“ஹைதராபாத்ல ஹாஸ்பிடல்ல வேலை வாங்கி இருக்கேன். நீ அங்கே போ. உனக்கான செக்யூரிட்டி தங்கவசதி எல்லாம் அங்கே கிடைக்கும். சென்னைக்கு இப்போதைக்கு போக வேணாம் உன் அக்காங்க கிட்டயும் எந்த கான்டாக்டும் வச்சுக்க வேண்டாம். ஏதாவது தேவைனா எனக்கு கூப்பிடு. இதுல நியூ மொபைல், தேவையான பணம்,கார்ட் எல்லாம் இருக்கு. ட்ரெஸ் வேணும்னா இங்கேயே பர்ச்சேஸ் பண்ணிடு அழைச்சுட்டுப் போறேன். சமைக்கிற தேவை இருக்காது. ஹோம் மேட் ஃபுட் தான் அதனால பயமில்லை. தென் ஃப்யூச்சர்ல யாரையாவது பிடிச்சிருந்தாலோ அல்லது வேற யாராச்சும் லவ் பண்ணாலோ எனக்கு கன்ஃபார்ம் பண்ணு. கேரக்டர் பார்த்து நானே மேரேஜ் பண்ணி வைக்கிறேன். தென் வேற ஏதாவது விட்டுட்டுடேனா ?”என்று அவளிடம் கேட்டு வைத்தான்.
“வேற எதுவும் இல்லை. எல்லாம் சொல்லிட்டீங்க.”என்றாள்.
“ஓகே தென் ஃபைன், போய் சாப்பிடு கிளம்புவோம்” என்றான்.
“இப்பவேவா…?”என்றாள் அதிர்ச்சியாக.
“எஸ் அஃப்கோர்ஸ்.”என்றவன் ,”அப்புறம் போகும் போது அந்த ரோப்பை கழற்றித் தந்துட்டுப் போ” என்றான்.
‘சரி’ என்று தலையாட்டியவள் ,”ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
“இங்க யார் கிட்டயும் என்ன நடந்ததுனு உளறி வைக்கலையே..?” என கேட்க
“இல்லை எதுவும் சொல்லலை” என்றவள் வதனி திருமணம் ஆனது பற்றி விசாரித்ததைக் கூறினாள்.
“அது சமாளிச்சுக்கலாம் பிரச்சினை இல்லை. ஓகே நீ போ” என்றதும் அவள் சென்றுவிட்டாள்.
இயலருவி வெளியேறியதும் மகிழன் உள்ளே வந்தான்.
“இப்போ எதுக்கு அந்தப் பொண்ணை போக சொல்ற நீ. ரணி அவளை நீ மேரேஜ் பண்ணி இருக்க புரியுதா?” என அதட்ட
“ப்ப்ச். மகி அவ பாதுகாப்புக்காக தாலி கட்டினேன். மத்தபடி அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது. தென் எனக்கு ஈடுகொடுக்க முடியாது அவளால,புரிஞ்சுக்கோ. “
“அப்போ உனக்குப் பிடிக்கும் தானே?” என்று அவனை மடக்க
“டேய் இடியட்! அவ என்னை அவளோட அக்கா லவ்வர்னு நினைச்சுட்டு இருக்கா. அவளை இழந்துட்டதால நான் ஃபீலிங்ல இருக்கிறதா நினைக்கிறா. மத்தபடி எதுவும் இல்லை சரியா. நான் மேரேஜ் மெட்டீரியல் கிடையாது மகி புரியுதா உனக்கு?” என்றான் அலுப்பாக
“இதையே எத்தனை நாள் தான் சொல்லிட்டு இருப்ப . தேனு யோகா பண்ணா எல்லாம் சரி ஆகிடும்னு சொல்லி இருக்கா. நீ நாளையில் இருந்து பிருந்தாவனம் போற. ஆமா இந்த ஒரு வாரத்தில் வேற எந்த எண்ணமாவது வந்ததா உனக்கு ட்ரஹ் எடுத்தியா குடிச்சியா வேற பொண்ணு…?”
“ஹேய் லூசா நீ…? ராஜியைத் தவிர வேறெந்தப் பொண்ணு கிட்ட நான் போனேன். ரெண்டு மூணு அட்டெம்ட் கூட பண்ணேன் பட் செட் ஆகலை. ராஜி தான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட். ஆனா சரக்கடிச்சேன். டெய்லி நாலு பாட்டில் போச்சு உள்ள. அது தேவையா இருந்தது “என்றான் அசட்டையாக.
“ஓஓஓ அப்போ சார் அதனால தான் அவளுக்கு இறுதி காரியம் செஞ்சிருக்கீங்க. பட் அவ உன்னை மட்டும் தான்..” எனும் போதே முறைத்தவன்
“மெண்டல் மாதிரி பேசின பல்லை கழட்டிடுவேன். அவளை வேறெங்கேயும் அனுப்பக் கூடாது’னு அந்த ப்ரோக்கருக்கு லம்பா ஒரு அமவுன்ட் செட்டில் பண்ணினேன். ராஜி வேற எங்கேயும் போகவும் இல்லை.”என்றான்.
“சரிடா. இப்போ இந்தப் பொண்ணு கழுத்தில் தாலி கட்டி இருக்க வேற எந்த மாதிரி வேணும்னாலும் அவளை ஷேவ் பண்ணி இருக்கலாமே,ஏன் தாலி கட்டின ?”என்று மகிழன் கேட்க
“அடேய்… இவனை “என்று சிரித்தபடி,” ஏதாவது ரீசன் கிடைக்காதானு விசாரிக்கிற?” என்றான்.
“பதில் சொல்லுடா, மழுப்பாத” என்று அதட்ட
“அவளை அவங்கப்பன் அந்த ப்ரோக்கர் கிட்ட விலைபேசி வித்துட்டான். அந்த ப்ரோக்கர் அவனே எனக்கு கால் பண்ணினான். அக்கா போனா என்ன சார் தங்கச்சி தொழிலுக்கு வந்துட்டா பார்க்கறீங்களானு கேட்க, எனக்கு யார்னே ஸ்ட்ரைக் ஆகலை. யார்டானு விசாரிச்சா ராஜியோட சிஸ்டர்னு சொல்ல எனக்கு இவ மேல சரியான ஆத்திரம் டாக்டருக்கு படிச்சுட்டு அங்கே என்ன செய்றானு. அப்புறம் விசாரிச்சா அவங்கப்பனே வித்துட்டான்னு சொல்றான். “
“அந்தப் பொண்ணுக்கு தெரியுமா தெரியாதா…?”
“தெரியல அவளுக்கு, பேக்கு மாதிரி சூட்கேஸோட நிக்கிறா. போய் கேட்கவும் அப்பா வெளியூர் போகலாம்னு சொன்னாரு வந்துட்டேன்றா.”
“அடக்கடவுளே…!”
“என்ன கடவுளோ… அவ அப்பன் என்னடான்னா தொழில் பாக்கட்டும் அப்படி எல்லாம் அவளை விடமுடியாது இதுல தான் நல்ல காசுன்றான் எங்கிட்டயே. நாலு அறை விடவும் கைகலப்பு ஆகிடுச்சு. போலீஸ் வந்து நான் அவளை கடத்திட்டதா ப்ளேம் பண்றானுக. வேற வழியில்லாம லவ்வர்னு சொல்லி தப்பிக்க நினைக்க அந்த போலீஸ்காரன் தாலி கட்டினா தான் ஆச்சுன்னவும் கட்டிட்டேன். அப்புறம் தான் உன் கூட அனுப்பிட்டு அவனுகளை முடிச்சேன்.”என்றான் இலகுவாக