ப்ரகா வந்து என்னவென்று விசாரிக்க இயலருவி திருதிருத்தாள்.
“ஏன் இப்படி முழிக்குற?” என்று அருவியிடம் கேட்க
இரணியன் வேகமாக,”ம்ம்ம் ஃபர்ஸ்ட் நைட் இன்றைக்குதானே வைப்பீங்கனு கேட்கிறா, பதில் சொல்லிட்டுப் போ. எனக்கு வேலை இருக்கு” என்றபடி போய்விட்டான்.
இயலருவிக்கோ ஆத்திரம் தாளவில்லை.
‘சரியான அரக்கன்,அதான் அந்தப் பேரையே தூக்கி வச்சிருக்காங்க. மெண்டல் கேஸு. இப்ப இந்தக்கா என்ன சொல்லுமோ?’ என்று வதனியை பாவமாக பார்க்க
அவளோ அசட்டையாக,” உங்களுக்கு வேணும்னு நேரடியா சொல்லுங்க, அதுக்கு ஏன் பச்சை மண்ணை கோர்த்து விடுறீங்க?” என்று கூற,
இயலுக்கு ஹப்பாடா என்ற பெருமூச்செழுந்தது.
“சரி சொல்லேன். இதுக்கு மேல ஒரு பையன் எப்படித்தான் கேட்பான்?” என அதற்கும் வாயாடினான் மருத்துவச்சியின் மணாளன்.
‘அடேய் டேய்!’ என்று மனதில் அலறியே விட்டாள் அருவி.
“ஷார்ப்பா ஒன்பது மணி.”என்றவள், குழந்தை அழும் சத்தத்தில் அங்கிருந்து நகர்ந்தாள்.
“ஏன் இப்படி பண்றீங்க?” கோபத்துடன் அவள் முறைக்க, இரணியன் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.
“நான் இப்பவே கிளம்புறேன்.” என்றாள் எரிச்சலாக.
“போ!” என ஒற்றைவரியில் அவன் சொல்ல, மூக்கைச் சுரித்து முறைத்தவள் அப்படியே அமர்ந்து கொண்டாள்.
“போகலையா?” என்று கேட்டுச் சிரித்தவன் அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி,”ஆக்ஸுவலி இது ரொம்ப நல்லா இருக்கு. டீஸ் பண்றது கூட ஜாலியா தான் இருக்கு” என கண்சிமிட்டியபடி வெளியேறினான் அங்கிருந்து.
புதுவகை உணர்வு தான் அவனுக்கு. இது போல வம்பு செய்ய யாரிடமும் தோன்றியதில்லை அவனுக்கு. வதனியிடம் பாசமாகப் பேசி பழகுவானேத் தவிர, இது மாதிரி எல்லாம் கிண்டல் செய்ததில்லை. ஸ்வீகா பக்கமே திரும்பமாட்டான். ராஜியிடம் உடல் அளவில் உறவைத் தவிர அவளிடம் பெரிதாக பேச்சுவார்த்தை கிடையாது. அவளாக தான் தன் குடும்பநிலையை உரைத்திருந்தாள். ராஜி எப்போதும் அவன் உணர்வுகளை மதிப்பவள். அவன் தன்னை கட்டுப்படுத்த முயல்கிறான் என்று தெரிந்தாலே,’ நான் தாங்கிப்பேன். நீங்க கஷ்டப்படாதீங்க’என்று கூறிவிடுவாள். அதனாலேயே ராஜியைத் தவிர அவன் வேறு யாரையும் தேடியதில்லை. இந்த ஒரு காரணத்தினாலேயே இயல் தாலி கட்டச் சொல்லவும் மறுத்திடாமல் செய்துவிட்டான். உயிரோடிருந்தால் தன் மனைவியாக மட்டும் வாழட்டும் இல்லையேல் துன்பப்படாமல் போகட்டும் என்று தான் நினைத்தான்.
இப்போதும் இயலை காக்க வேண்டும் என்று திருமணம் செய்திருந்தாலும் பெரிதாய் அவளிடம் கவரப்படவில்லை அவன். ஆனால் இலகுவாய் இருக்கத் தோன்றியது அவளோடு.
இரவுப்பொழுது வந்து விடவேக் கூடாதென்று எத்தனை வேண்டியும் வந்துவிட்டது இரவு.
இயல் உள்ளூர பதறினாலும் அப்படியொன்றும் தடுமாறமாட்டான் என்று எண்ணினாள்.
‘அக்காவின் நினைவில் தான் இருப்பார். பாவம் அவருக்கும் இது வேதனை தானே!’ என தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டபடி அறைக்குள் நுழையப் போக, வதனி அவளைப் பார்த்தாள்.
“இயல்!” என்று அழைக்கையிலேயே,’ போச்சு !’என்று முனகிட
“உன் கிட்ட பேசிடணும்னு இருந்தேன், பட் முடியல. இதெல்லாம் நான் சொல்லி உனக்குத் தெரிஞ்சா எப்படி எடுத்துப்பனு தெரியல!” என பீடிகை போட
‘என்ன சொல்லப் போகிறாளோ?’ என்று திகிலுடன் தான் பார்த்தாள் இயல்.
அவள் பேசத் துவங்கும் முன்பே இரணியன் வெளியே வந்து விட்டான்.
“பசங்களை பார்க்காம இங்க என்னப் பண்ற?” என வதனியை அதட்டியவன், இயலைப் பார்த்து,’ உள்ளே போ’ என சைகை காட்ட அவள் உள்ளே சென்று விட்டாள் வேகமாக .
“இல்ல டயர்டா இருக்கு நா… நான் தூங்கணும்” என்று சொல்ல
“ஆமா ஆமா செஞ்ச வேலைக்கு டயர்டா தான் இருக்கும், அடச்சீ எழுந்திரு “என்றதும்,” நீங்க என்னை ரொம்ப இன்சல்ட் பண்றீங்க” என்றாள் கோபத்துடன்.
“சும்மா கத்தக்கூடாது எனக்குப் பிடிக்காது. மார்னிங் ஒரு நாலுமணிக்கா ஃப்ளைட் ,அதனால மூணு மணிக்கு எல்லாம் ரெடியா இரு” என்றவாறு அறையினுள் இருந்த இன்னொரு அறையைத் திறந்து,” தூங்கி ஃப்ரெஷா எழுந்திரு” என்று உள்ளே நுழைய இயல் நிம்மதியாக மீண்டும் படுத்துவிட்டாள் .
*************
மகளை தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த மகிழன், வதனியை கண்கள் சுருக்கி முறைத்தான்.
“அழுதாளா…? இப்ப தானே தூங்க வச்சேன்.” என்றபடி வாங்க செல்ல
குழந்தையைத் தர மறுத்தவன்,” போய்ப் படு” என்றான் அதட்டலாக.
“இல்ல பாப்பா… நான்..”
“போய் படு ப்ரகல்யா, ஒரு தடவை சொன்னாப் புரியாதா உனக்கு” என்று சத்தமிடவும் திக்கென்று ஆனது வதனிக்கு.
“லூசு இங்கே வா!” என அழைக்க, இன்னுமே கோபம் ஏறியது அவளுக்கு.
வேகமாக அவனைத் தாண்டி செல்ல முயல, அவள் கைப்பிடித்து இழுத்து தன் மேல் சரித்தபடி,”கொஞ்ச நேரம் முன்னாடி நீ பண்ணப்போன காரியத்துக்கு உன்னைத் திட்டாம தூக்கி வச்சுக் கொஞ்சவா?” என அவளின் மூக்குரசினான்.
“இப்பவும் கொஞ்சிட்டுத் தான் இருக்கீங்க”என்றாள் அவன் விழி பார்த்து.
“இழுத்துப் பிடிச்சு கோபப்பட்டாலும் கொஞ்ச நேரம் கூட தாங்க மாட்டேங்கிது. என்றவன், “ப்ருஹா, நான் ஒண்ணு சொல்லுவேன் கவனமா கேட்கணும். கேட்ப தானே?” என்று கேட்க
“ம்ம்ம்” என்று முகத்தாடையை அவன் நெஞ்சில் அழுத்திக் கொண்டாள்.
“இரணி விஷயத்தில் நீ எதுவும் இயல் கிட்ட பேச வேண்டாம் சரியா.?”
“அதை இரணி பார்த்துப்பான். இப்போ நான் எப்படின்னு வேற யாராவது உன் கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணா உனக்குப் பிடிக்குமா என்ன…?”
“இல்ல தான் ஆனா…!”
“என்னைப் பத்தி தப்பு தவறா சொன்னா, நீ அவங்க பேச்சைக் கேட்டு என்னை விலக்கி வைப்பியா நீ…?”
“அச்சோ! அது எப்படி முடியும். உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்றாள் பளிச்சென்று.
“மக்குப் பொண்ணே, அதே மாதிரி தான் இயலுக்கும், இரணி பத்தி அவளே தெரிஞ்சுக்கட்டும். அதுவும் பர்ஸனல் விஷயங்களை அவளே தான் தெரிஞ்சுக்கணும். மூணாவது மனுஷங்க மூலமா தெரிஞ்சுக்க கூடாது.”என்றான் அவளுக்குப் புரியும்படி.
“அப்ப நான் மூணாவது மனுஷியா?”என்று ஆரம்பத்துடன் கேட்க,”புருஷன் பொண்டாட்டி கொள்ள யாராயிருந்தாலும் மூன்றாவது மனுஷங்க தான். அவங்க வாழ்க்கையில் தலையிட யாருக்கும் அனுமதியும் உரிமையும் கிடையாது.”என்றான் தெளிவாக
வதனிக்கு புரிவது போல் இருந்தாலும் முகம் தெளியவில்லை.
“நான் சொல்றது புரியுதா இல்லையா ப்ருஹா?!”என்று அதட்ட
“புரியுது. இனிமே பேசல சாரி” என்றாள் முகத்தை சுருக்கிக் கொண்டு
“சரி கோபமா பேசினதுக்கு சாரி” என்றான்.
“அதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல, ஏன் திட்டினீங்க?” என்று கேட்கவும்
“மேடமுக்கு அவ்வளவு சொல்லியும் புரியலையே அதான் திட்டிட்டேன்” என்றான் சிரிப்புடன்.
“முன்ன எல்லாம் யாராவது திட்டினா அது ஒரு விஷயமாகவே இருக்காது. ஆனா நீங்க ஏதாவது சொன்னா எனக்கு கஷ்டமா இருக்கு” என்றாள் அவன் மீது சாய்ந்தபடி
“அதெல்லாம் உரிமையும் உள்ளவங்க திட்டினா அப்படித்தான் இருக்கும் பொண்ணே!” என்றான்.
“இப்ப கோபம் போச்சா?”என்று சலுகையாக அவன் மீது தலைவைத்துக் கொள்ள
“அதெல்லாம் வந்தா தானே?” என்றபடி இறுக அணைத்துக் கொள்ள அதன்பின் நிகழ்ந்ததெல்லாம் காதலின் உச்சம்.
********
மரகதநாயகிக்கு உறக்கமே வரவில்லை. எது நடக்கவேண்டாம் என எண்ணினாரோ அது நடந்து விட்டதே என்ற கவலை ஆட்டிவைத்தது.
‘அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்?’ என்று காத்திருக்கும் ஜீவன். அது இப்போது நடைபெறாமல் போனதில் அத்தனை வருத்தம் அவருக்கு.
“என்னடி பார்க்கிற… பழைய மரகதநாயகி வெளியே வந்தா இங்க இருக்க எவனும் தாங்க மாட்டான். பார்த்துக்கிறேன் என் பிறந்த வீட்டில் எவ எவளோ வந்து ஆட்சி பண்ணுவாளா… விட்டுடுவேனா இந்த நாயகி” என்று உரைக்க ஸ்வீகாவின் உறக்கம் காணாமல் போனது.
மரகதநாயகி உறங்கியிருக்க வெளியே வந்தாள் ஸ்வீகா.
வாசலில் நாற்காலியைப் போட்டு அமர்ந்திருக்க, மூன்று மணிவாக்கில் எல்லாம் இரணியனும், இயலும் கிளம்பி வெளியே வந்திருந்தனர்.