Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 10 (2)
Post Views:
7,025
“என்ன சொல்லுத? பைய பேசாம சத்தமா சொல்லுடி…” என்று சன்னமாக சிரிக்க,
“சோத்துக்கு உப்பில்லையாம்? ஏன் மாமா என்னத்துக்கு இந்த சங்கிலில பூவ சுத்திருக்காவ?….” என்றவள் தன் பதட்டத்தை தணிக்க பேச்சை மாற்றினாள்.
அதனை தேனரசனும் புரிந்துகொள்ள சின்ன சிரிப்புடன் தானும் எழுந்துகொள்ள வெண்மணி கைகள் ஊஞ்சல் சங்கிலியில் சுற்றியிருந்த பூக்களை அலுங்காமல் சரத்தோடு பிரித்தது.
“என்னத்துக்கு இப்ப பூவ எடுக்கற?…” என்றவன் பேச்சுக்குரல் அவளருகே கேட்க,
“சங்கிலிய பாக்கத்தன். நெம்ப நேரமா நானும் இதுல வந்து ஒக்கார பாத்தா ஆளுக வாராக, போறாக. அதேன்…” என திரும்பாமல் பதில் கூற அவளிடமிருந்து தேனரசன் தள்ளி நின்றுகொண்டான்.
அவளின் அருகாமையை விட அவனின் தூரம் வெண்மணியை பெரிதும் இம்சித்தது.
தன்னை தான் பார்க்கிறான். பார்வையால் துளைக்கிறான். உயிருக்குள் நுழைகிறான் என அவளால் உணர முடிந்தது.
“இந்த மனுசென…” என கன்னகதுப்புகள் பற்களுக்கிடையே உள்ளிழுக்க இதழ்களை மடித்துக்கொண்டாள்.
“இப்ப வெறும் சங்கிலிதன் இருக்கு சிமித்திர…” என்ற பேச்சில் சிலிர்த்துக்கொண்டவள்,
“யோவ் எம்பிட்டு நேரத்துக்கு பாத்துக்கிட்டே இருப்ப?…” என கேட்டுவிட்டாள் தேனரசனை பார்த்து.
என்னவோ கேட்க நினைத்து எப்படியோ கேட்டு வைக்க வெட்கம் மென்று தின்றது வெண்மணியை.
“சேரி பொறவு என்ன செய்யவாம்?…” என தேனரசன் புன்னகையுடன் கேட்க,
“யாத்தே…” என்றவள் வந்து தன்னை துளைக்கும் அவனின் கண்களை தன் கையால் மூடிக்கொண்டவள் கைகள் அவனிடையை சுற்றிக்கொள்ள அவளறியாமல் அவனோடு இந்த நெருக்கம்.
தன் செயலை அடுத்த நொடி உணர்ந்து விலகும் முன் படர்ந்த கைகள் படர்ந்தன தாம். விலக விடவில்லை அரசன்.
“யே சிமித்திர என்னடி கப்புன்னு பத்த வச்சிட்ட?…” என இன்னும் தெளியாத மயக்கத்துடன் அவன் கேட்கவும்,
“ஒங்கூட சடவா இருக்கனுமின்னு நெனச்சன். ஆனா இங்கின…” என வார்த்தைகள் தடுமாற இதயங்களும் இடறியது.
அவளை தீண்டிவிட தேனரசனின் இதழ்கள் நச்சரிக்க விழிகளை தாழ்த்தியிருந்தவள் பார்வைக்கு தவித்தான் தேனரசன்.
“நிமிருடி. என்னிய பாரு…” என முகத்தை நிமிர்த்த அவனின் தோளில் முகத்தை மறைத்திருந்தவள் நிமிர்ந்தாள் இல்லை.
“மாமோவ் சொல்லு. இப்ப கேட்பம்…” என சீண்டினான்.
“கம்மின்னிருய்யா…”
“சீனி மவளே, இனிப்பியோ?…” என மெல்ல அவன் இதழ்கள் வெண்மணியின் கன்னத்தை பதம் பார்க்க முற்றுகை இட்டதில் மீசை முற்கள் அவளை இம்சித்தது.
சிந்திய முத்தங்கள் ஒன்றாய் சிலிர்த்து சேர, கோர்க்க இயலாத மாலையாய் மாறி முத்தமாலை பூண்டிருந்தது.
கோடி கோடியாய் கொட்டி தீர்க்க சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் கட்டவிழும் தருணம் வெண்மணியின் பிடிமானம் தளர்ந்தது.
“மாமோவ்…” என அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள்,
“செத்த நேரம் கம்மின்னிருய்யா…” என்றாள்.
“நீயி தான பாத்துக்கிட்டே இருக்கன்ன? அதேன்…” என்றவனின் வாயை கைகொண்டு பூட்டு போட்டுவிட்டவள் விழிகள் பெரிதாய் விரிந்தது.
“ஒ மென்னிய நிமுக்க போறன் பாரு. என்னேனொன்னு இருக்கு. செத்த நேரத்துக்கு எங்கூட சண்ட கட்டு சாமி…”
“சேரி…” என மீண்டும் அவளை அணைத்து அவளை நெகிழ்த்த தன் கைகள் கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள் வெண்மணி.
அணுவணுவாய் உயிரை சுண்டி இழுக்கும் அவ்வுணர்வுகளை தாளமாட்டாமல் அவனிடம் கலங்கி நின்றாள் வெண்மணி.
“சேரி ஒன்னியும் செய்யல. வேற என்ன செய்யுதது சொல்லு?…” என மெல்ல அவளை விடுவித்து ஊஞ்சலில் சென்று அமர்ந்துகொண்டவன் பார்வை அவளை தான் வட்டமிட்டது.
“என்னிய பாக்காம இரேன்…” என்றவளுக்கு அவனுடன் சென்று அமரவும் ஆசை. செல்ல நாணம் விடவில்லை.
இத்தனை வெட்கம் தனக்கு வரும் என அவளே உணராத ஒன்று. இப்போது இயல்பு தொலைத்து வார்த்தைகள் தடுமாற நின்றிருந்தாள்.
“இங்கின வந்து ஒக்காரு…” என தன்னருகில் இடத்தை தேனரசன் காண்பிக்க இருவருக்கும் அன்றைய பேருந்து நாள் நினைவு.
தேனரசன் ஊஞ்சலாடியபடியே அவளிடம் லயிக்க வெண்மணியின் பார்வை புன்சிரிப்புடன் அந்நினைவில் லயித்தது.
“நெசத்துக்கே ஒன்னிய என்னன்னு கெட்டினேனோ?…” என்று அவனிடம் கேள்வி எழுப்ப தேனரசன் சிரிப்பில் வசீகரத்தையும் தாண்டிய ஒரு ஆர்ப்பரிப்பு.
“நீதேன் சொல்லேம். கேப்பம்…” என்றான் அவன் ரசனை கொஞ்ச.
“எங்கப்பாருக்கிட்ட எங்கலியாணத்துக்கு நவநட்டு வேணா. ஊஞ்ச மட்டும் கேட்டன். அதுவும் இந்த ஊஞ்ச மாரிக்கே வேணுமின்னு நின்னேன். எங்கப்பாரும் செரின்னாவ. ஊஞ்ச செஞ்சாவலா என்னன்னு தெரியல. ஆனா அம்புட்டு ஆசப்பட்டு கேட்டன். அப்பருந்தே இந்த ஊஞ்ச மேல ஒரு கண்ணு….”
வெண்மணி ஊஞ்சல் ஆசையை சொல்லவும் தேனரசனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“அப்பைக்கு ஊஞ்ச மேல. இப்ப?…” என புருவம் உயர்த்தினான் அரசன்.
“இப்பவும் ஊஞ்சமேல மட்டுந்தேன் ஆச…” என வெண்மணி உதட்டை சுளிக்க,
“சுழிக்கிக்க போவுதுடி. பொறவு நாந்தன் அதவும் பாக்கனும்…”
“ஒன்னிய ஆருய்யா பாக்க சொன்னா?…” என வெண்மணி தூணை பிடித்து, அசைந்து, சுற்றி வந்து நின்று தன்னை நிதானப்படுத்த முயன்றுகொண்டே பேச தேனரசனுக்கும் புரிந்தது.
“நா பாக்காம சீனியாத்தா வந்து பாக்குமாக்கும்?…” என சிரிப்புடன் தலையசைத்தவன்,
“என்னன்னு ஒங்கம்மைய அங்கின அம்புட்டு ஏசிப்புட்ட? அம்புட்டு தெகிரியம்…”
“பொறவு, இத பேச தெகிரியம் தனியா வேணுமாட்டிருக்கோ? போயா யோவ். எங்கம்மை தாலிய தூக்கவும் அங்கின என்னிய தூக்கி தோள்ல போட்டுட்டு வருவன்னு பாத்தா அண்டாக்குண்டாவாட்டம் அசையாம நிக்கித நீயி…” என்று வம்பு பேசினாள்.
முந்தைய நாள் இதனை இருவருமே எதிர்பார்க்கவில்லை. இன்றோ இருவரின் எண்ணங்களும் இங்கே ஒன்றாக சங்கமித்துக்கொண்டிருக்க உணர்வுகளும் அதற்கு காத்திருந்தது.
ஊஞ்சலை தன் கைகொண்டு தட்டியவனை இமைகள் கவிழ்ந்து நிமிர பார்த்தவள் அவன் மௌனத்தில் தானும் மௌனமானாள்.
“சேரி, ஒன்னோட ஆசய யே வேணாங்குவானே? தூக்கிருதன்…” என சொல்லி எழுந்தவன் வேஷ்டியை மடித்து கட்ட,
“யோவ் மாமோவ்…” என வெண்மணி திகைத்து பார்த்த நொடி அவளை தன் தோளில் கொடியாய் படரவிட்டிருந்தான்.
“யோவ் எறக்கி விடுய்யா….” என வெண்மணி துள்ள,
“ஒனக்கென்ன ஒ அம்மை மின்னுக்க நா தூக்கல. அம்பிட்டுத்தான…” தேனரசனும் வம்பு பேச,
“ஆமா, அதேன் ஆவலயில்ல. எறக்கி விடுய்யா. கூசுது…” என்றவள் உடலை வளைத்து இன்னும் சிலிர்த்தாள்.
“உசுப்பேத்தாம செத்த கம்மின்னிருடி…” என்றவன் வாசல் பக்கம் செல்ல கூடத்தின் கதவை திறந்தான்.
“யோவ் என்ன செய்யுத?…” என முரண்டாய் அவனிடமிருந்து வெண்மணி இறங்கிக்கொள்ள,
“சிமித்திர இப்ப மாரிக்கே மறுக்கா எறங்குடி…” என மீண்டும் தூக்க பார்த்தான் மயக்கத்துடன்.
“மாமா, என்னய்யா ஆச்சு? என்னத்துக்கு கதவ தெறந்த…” என்றவள் புடவையை நன்றாக சரி செய்ய அந்த அவகாசத்தில் தேனரசன் முகத்தில் கள்ளப்புன்னகை.
“ஒன்னோட ஆசய நெறவேத்தத்தன் போவலாமின்னு…”
“எங்க?…”
“ஒங்கம்மை வீட்டுக்கு….”
“இந்நேரத்துக்கா?…”
“பொறவு, இப்பிடியே எந்தோள்ல துண்டாட்டம் கெடப்பியாம். போயி காமிச்சிட்டு வாரன்…”
“ஒனக்கு கோட்டிதேன். இல்லாங்காட்டி என்னிய இந்நேரத்துக்கு பதற வெப்பியா நீயி?…” என்றவள்,
“என்னிய தூக்கிட்டு போயி நீயி படங்காமிச்சா எங்கம்மைக்கு நெஞ்சுவலியே வந்துரும். பொறவு வைத்தியத்துக்குத்தேன் போவனும். இங்கின ஒன்னும் சோலியாவாது…” என்று சொல்லிவிட்டு அவனின் சிரிப்பில் நாக்கை கடித்துகொண்டவள்,
“ஒங்கிட்ட எவ்வாயி நிக்கிதா பாரேன்…” என்று சொல்ல அந்த முன்னறை இருளில் நிலவாய் அவள் முகம் மின்னியது.
வெட்கத்தில் அவளின் பெரிய விழிகள் அவனை முழுதாய் ஏறிடமுடியாமல் இங்குமங்குமாய் நர்த்தனமாட தேனரசன் முத்தம் வெண்மணி விழிகளில் சரணடைந்தது.
“என்ன கண்ணுடி ஒன்னோடது…” என்றவன் கூடத்தின் விளக்கையும் அணைத்தான்.
இருவரின் பேச்சுக்களும் நிறுத்தற்குறியில் சிக்கிக்கொள்ள உணர்வுகள் ஊஞ்சலாட துவங்கியது.
கன்னூஞ்சலில் சாய்ந்தவர்கள் நெஞ்சங்கள் ஒன்றையொன்று பின்னிக்கொள்ள சங்கிலிகளில் சப்தம் ஸ்வரங்கலாய் இசைத்தது.
“மாமோவ், உள்ள ஜமுக்காளத்த விரிச்சிருக்காக….” வெட்கத்தின் இடையில் உளறலாக வெண்மணியின் குரல்.
“ஊஞ்சல்ல எடமிருக்கு சிமித்திர…” என்றவன் வார்த்தைகள் அவளுக்குள் இடம்பெயர விழி மூடி அவனை அணைத்துக்கொண்டாள் வெண்மணி.
ஊஞ்சலின் வெட்கச்சத்தமோ சங்கிலிகள் கூட அங்கே முத்திரை பதித்துக்கொண்டது.
இரு உயிர்கள் உருகிய நிமிடம் உலகம் உறைந்துபோக இரவுகள் தீரா மயக்கத்தில்.
விழி சாய்ந்து உணரும் புது அனுபவம், நக கண்களின் ஸ்பரிசம் நாணங்களை கடக்க செய்தது.
தேனரசன் தேனீயாய் வெண்மணியை வட்டமிட ரீங்காரங்கள் சுகராகம் பாடியது.
விடியும் வரை விலகாமல் அரசனும், அவன் அன்பிற்கினியவளும் மிச்சமின்றி உணர்வுகளை பரிமாறிக்கொண்டனர்.
ஒருவரின் அணைப்பில் ஒருவரிருக்க இருவரையும் அரவணைத்து ஊஞ்சல் மென்காற்றில் கன்னூஞ்சல் பாடியது.
வாழ்வின் முழுமையை முழுதாய் சுவைத்துவிட்டவனாய் மலர்ந்த முகத்துடன் தன்பக்கம் சாய்ந்திருந்தவள் முகம் வருடினான்.
“சிமித்திர, ஏட்டி ஒன்னிய நல்லா பாத்துக்குவேந்தான நானு?…” என்றவன் மென் புன்னகையில்,
“அப்ப இப்ப வரைக்கி பாக்கலையாய்யா?…” என்றவளின் கிண்டலில் முழுதாய் தொலைந்து வெட்கம் கொண்டவன் முகம் அவளின் முகத்தோடு இழைந்தது.
“வாயிடி ஒனக்கு, இந்த வாயி இல்லன்னா?…”
“சீனியாத்தாவ கெட்டி ஆள ஆவுமாக்கும்?…” என கண்சிமிட்டினாள் வெண்மணி.
“இனி என்னிய கெட்டுவியாம், ஆளுவியாம். செரியா…” என அணைத்துக்கொள்ள,
“ம்க்கும் வேற வேல சோலி இல்ல பாரு…” என்றவள் கைகளும் அவளரசனை வளைத்துக்கொண்டது காந்தமாக.
மீண்டும் சத்தங்களின் அரிதாரங்கள் விடியும்வரை சிணுங்கல்களாக அந்த வீட்டை இதமாய், இம்சையாய், இன்பமாய் ஆட்சி செய்த துவங்கியது.
அவர்களின் இசைவிற்கேற்ப தாலாட்டாய் அசைந்தாடிய ஊஞ்சல் கவிதையாய்.
Advertising
Advertising