அழகான விடியற்காலை. எழுந்ததும் வழக்கமான வேலைகள் இழுத்துக்கொள்ளாமல் அவனை நிறுத்தி நிதானமாக அருகில் சயனிதிருந்தவளை இருந்தவளை பார்க்க வைத்தது.
ஓவியமாய் தன்னசைவிலேயே விழித்துவிட்டவளை ரசிக்க வைத்தது. தொடுகையில் சிலிர்க்க வைத்தது.
“எந்திக்காமாட்டுல அம்புடல? என்ன மாமோவ்? வெளில போவத்தானா? இல்ல இங்கினவே மறுக்கா மொடக்கவா?…” என நமுட்டு சிரிப்புடன் கேட்டவளின் கன்னத்தை பிடித்து கிள்ளியவன்,
“எந்திடி சிமித்தர. செத்த நேரத்துல சின்னம்மா வந்துரும். மொத போயி ஒஞ்சோலிய முடி…” என்று அவளை தள்ளிக்கொண்டு அறைக்குள் சென்றான்.
அறையில் கட்டிலை மலர்களால் அலங்கரித்திருக்க கீழே ஜமுக்காளமும் அவர்களுக்கு பூக்களை நிரப்பியபடி பல்லை காட்டியது.
இருவரின் முகத்திலும் ரகசிய புன்னகை வெட்கத்துடன் வந்து அமர்ந்துகொள்ள கைகள் பின்னிக்கொண்டது.
“நல்லாருக்குல?…”
“ஹ்ம்ம்…” என்றான் தேனரசன்.
“மணமா இருக்குல…”
“ஆமாடி…”
“அப்ப செத்தநேரத்துக்கு இங்கின படுத்து எந்திக்கேம்ய்யா…” என்றாள் வெண்மணி கட்டிலை நோக்கி சென்று.
“யாத்தே இன்னிக்கு வெளியேத்தமிருக்காது போலுக்க?…” என்றான் அரசன் அவளை பிடித்து இழுத்து நிறுத்தி.
“அட என்ன நீயி? ஒஞ்சவடாலுத்தனத்த காட்டாம பம்முற? அவியளும் பாவந்தான மாமோவ்…”
“ஆருடி?…”
“அதேன் குறுக்கொடிய பூவா தூவுனாவல. அவியளுக்காவாது…” என்று வெண்மணி சிரிக்க,
“ஒன்னிய….” என அவளை கையில் தூக்கியவன் கொண்டு விட்டான் குளியலறையில்.
உள்ளே கதவை அடைத்துக்கொண்டதும் அரசனின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
வெட்கச்சிரிப்புடன் ஏற்கனவே கலைந்த தலையை கைகளால் கலைத்தபடி அங்கிருந்த அலங்காரத்தை பார்த்துவிட்டு கை தூக்கி முறித்துக்கொண்டான்.
கண்ணாடியில் முகத்தை சரி பார்த்தவன் தன்னை தலையை எல்லாம் செய்துவிட்டு வெளியே வந்தான்.
வெண்மணி குளித்து வரும்முன் கூடத்தில் ஊஞ்சலை சுற்றி என எல்லா இடத்தையும் சுத்தம் செய்தவன் பின்பக்கம் சென்று தானும் குளித்துவிட்டு வந்து தார்சாவில் விளக்கை போட்டு கதவை திறக்க வாசல் தெளித்து கோலமிட்டிருந்தது.
எப்போதும் சின்னதாக கோலம் போடும் பொன்னி அன்று வண்ணங்களால் பெரிதாய் கோலம் போட்டிருந்தார்.
வாசல் கூட்டி தெளிப்பது எல்லாம் அதுவரை தேனரசனின் பணியாக மட்டுமே இருந்தது.
என்றும் அதனை அவன் விட்டதில்லை. என் வீடு தான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிடுவான்.
கோலம் மட்டும் சின்னதாக நாலு கம்பியை இழுத்துவிடுவார் பொன்னி. வெறும் வாசலாக இருக்க கூடாது என்று அதற்கும் அவனிடம் மல்லுக்கு நிற்பார்.
விசேஷம் என்றால் மட்டுமே வாசலில் கோலம் பெரிதாய் களை கட்டும். இப்போதும் விஷேசம் தானே என்றது அவன் மனது.
“மாமோவ் நீய எங்கிருக்கீய?…” என வெண்மணியின் குரல் வெளிவாசல் வரை கேட்க அவளின் சத்தத்தில் பதறி திரும்பிய தேனரசன் உள்ளே வரும்முன் பொன்னியும் வந்திருந்தார்.
“எதுக்குடி கத்துற இந்நேரத்துக்கு?….” என்று அதட்டிக்கொண்டே உள்ளே வர,
“காலம்பற என்னலே அவகூட வம்பாடு?…” என்றார் பொன்னி.
“பொன்னியாத்தா வெல்லம் போட்ட டீத்தண்ணியா?….” என வாசம் பிடித்து சொல்லவும் அவளின் பாவனையில் தேனரசன் முகம் புன்னகை கொஞ்ச,
“ஆமாமா, மொத இத குடிச்சு போட்டு பட்டு சீலய கெட்டிக்க. பூவ குடுத்தனுப்புதேன். ரெண்டுபேருமா கோயிலுக்கு போய்ட்டு வாங்க…” என்றார்.
“நா ஊத்தி தாரன் சின்னம்மோவ்…” என தூக்குவாளியை வாங்கிக்கொண்டான் தேனரசன்.
“சேரி சேரி நேரமாவுது. நா போயி காலேல சாப்பாட்டுக்கு செய்யிதேன்…” என்று சொல்லிவிட்டு நகரவும் வெண்மணி அதனை எடுத்துக்கொண்டு அடுக்களை சென்றாள்.
பெரிதாய் அவ்வளவு பாத்திரபண்டங்கள் எதுவுமில்லை. அவன் புழங்கும் அளவிற்கு அளவாக தான் இருந்தது.
“என்ன சிமித்தர? என்னமாச்சு வாங்கனுமா?…” என கேட்டான் தேனரசன் அவள் விழிகளை சுழற்றி பார்ப்பதை கண்டு.
“லோட்டாவ எங்கய்யா கவுத்திருக்க? கண்ணுக்கு அம்புடல?…” என தேட அது இன்னொரு பாத்திரத்தின் அடியில் இருந்தது.
“இங்கனருந்து லவட்டிட்டு போயிருவாவளோ? ஒளிச்சி வெச்சிருக்கீய?…” என வாயடிக்க தேனரசன் முகமெல்லாம் புன்னகை தான்.
இத்தனை பேசும் அவளுக்கு பதில் சொல்ல கூட முடியாத அளவிற்கு ஒரு மகிழ்ச்சி மனமெங்கும் பிராவகம் எடுத்தது.
“பல்ல காட்டாம கேட்டதுக்கு சொல்லத்தான?…” என்று அவள் டீயை ஊற்றி அவனிடம் தந்துவிட்டு குடுகுடுவென ஊஞ்சலுக்கு ஓடினாள்.
“இப்பத்தேன் சந்தோசமாட்டிருக்கு…” என்றும் சொல்ல தேனரசனின் இதழ்விரியா புன்னகை ஆர்ப்பாட்டமாக பெரிதாகியது.
“ஒனக்கென்ன பொறந்து வளந்தது எல்லா இந்த ஊஞ்சலோட? எனக்கு? எவ்வீட்டுல எங்கம்மை இருக்கே?…” என்றவள்,
“இந்நேரத்துக்கே என்னத்துக்கு அது கைய புடிச்சி இழுத்துக்கிட்டு…” என்று சொல்லி தன் வாயில் அடித்துக்கொண்டு,
“இங்க வா மாமோவ்…” என அழைத்தான் வெண்மணி.
அவளருகே சென்றமர்ந்தவன் அமைதியில் என்ன உணர்ந்தாளோ? டீயை குடிக்காமல் அவனையே பார்க்க,
“எம்மொகரையில என்னடி எழுதி ஒட்டியிருக்கு?…” என்றான் அவளின் தோளில் இடித்து.
“நெறைய இருக்கே? ஒழுங்கா காட்டு. படிச்சு சொல்லுதன்…” என்று சொல்ல தலையசைப்புடன் அழகான புன்னகை.
தேனரசன் மௌனமாக தேனீரை பருக எதுவும் சொல்வானா இல்லையா என அவனின் முகத்தையே பார்த்துகொண்டிருந்தாள் வெண்மணி.
“என்னடி?…” என அவன் அடக்கமாட்டாமல் சிரித்து,
“குடி. பொறப்படனுமில்ல…” என்றான்.
“எங்கைக்கு?…” என திருதிருத்து,
“ஆமால. ஆமா ஆமா…” என தெளிந்து கூற,
“வாயிதன். நெனப்பு எங்க சுத்துது?….” என அவளின் தலையில் வலிக்காமல் குட்டி தம்ளரை அவளின் இதழருகே கொண்டு சென்றான்.
“இரு வாரன்…” என டீயை ஒரே மடக்கில் வாயில் சரித்தவள் அவன் குடிக்க காத்திருந்து முடித்ததும் உள்ளே எடுத்து சென்று வைத்துவிட்டு வந்ததும்,
“இந்தாய்யா நானும் பாக்குதன், நேத்தைக்கும் வண்டில ஏற சொல்லி அதட்டுதீய, ஒன்னொண்ணுக்கும் அதட்டுதீய. எனக்கு கேட்ட கிறுக்காகிபோடும். பொறவு…”
“பொறவு…” என புருவம் உயர்த்தியவன் இழுப்பில் அவனின் தோள் சாய்ந்தாள் வெண்மணி.
“சிமித்தர, ஒனக்கு தெரியுமாடி, இன்னிக்குத்தன் விடியுங்காட்டி இன்னொருத்தவக இந்த வீட்டுக்குள்ள இருக்காவ….” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ஒனக்கென்னய்யா ஆச்சு? இம்பிட்டு நெளியுத?…” என அவனின் இடுப்பில் வேறு கிள்ளிவைக்க,
“ஒக்காருடி போவம்…” என வண்டியை கிளப்பினான் தேனரசன்.
“யே இந்த முடுக்குல வளையுத? அடுத்த முடுக்கு வளைய வேண்டி தான? கூறு இருக்காயா? வண்டிய எம்புட்டு ஆட்டுது பாரு. எடுபட்டபய ரோட்டுல மனுசமக்க செவனேன்னு போவ ஆவுதா?…” என கவர்மெண்டை வேறு வசைபாட தேனரசன் நமுட்டு சிரிப்புடன் சென்றான்.
மோட்டார்சைக்கிள் தவராசனின் வீட்டு வாசலில் சென்று நின்றதும் வெண்மணி இறங்கி நின்றாள்.