“எந்தி மாமா போவம். நா சொன்னன்ல இவிய நம்ம வாச தேடி வரட்டும். ஒனக்கெதுக்குங்கேன்…” என வெண்மணி சொல்ல,
“நேத்திக்கி வந்தவென் ஒனக்கு பெருசா போயிட்டானா?….” என சீனியம்மாள் மகளிடம் பாய,
“ஆமாங்கேன். ஒனக்கு ஒம்புருசென் பெருசுனா எனக்கு எம்புருசென் பெருசுதன்…” என்றவள்,
“என்னப்பு நா சொல்லுதது?….” என தவராசனிடமும் கேட்க,
“ஆமா, பொறவு. செரியா சொன்ன தாயி…” என்றார் அவரும் மகளை மெச்சியவராக.
“கேட்டுகிடுங்க….” என்றவள்,
“மாமோவ்…” என்று சொல்லி பார்க்கவும் அவனும் தலையசைத்து அவளுடன் நிலைவாசல் அருகில் வந்தான்.
“ஒழுக்கத்த பேசமின்ன மொத அது நம்ம பேச்சில, வார்த்தேல இருக்கனும். மொத அத படிச்சிக்கிடுங்க. இல்லாங்காட்டி எம்புட்டு பெரிய ராணியா இருந்தாலும் எனக்கு மட்டந்தேன். எம்பொண்டாட்டிகான்டி இப்ப போறன்…” என்று சொல்ல,
“அதெல்லாம் ஒங்களுக்குண்ணே. இதத்தேன் ஒரு கண்ணுல வெண்ணையும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும்ன்னு சொல்லுவாவ…” என்று அவன் சொல்ல ‘என்ன நடக்கிறதென?’ சீனியம்மாள் இளைய மகளை பார்த்தார்.