“கயலு வா போயி எடுத்தாருவோம்…” என்று அவளை கூட்டிக்கொண்டார்.
செல்லும் பொழுதே விஷயத்தை தெரிந்துகொண்டவர் கண்ணெல்லாம் கலங்கி போனது.
“அதேன் மணி மொவமே வாட்டமா கெடக்கா? ஏந்தென் மயினிக்கு இம்பிட்டு கோவமோ?…” என விசும்பிக்கொண்டே தான் உணவுகளை எடுத்து வைத்தார்.
கயல்விழியும் வருத்தத்துடன் முதல்நாள் இரவு நடந்ததையும் சொல்ல குழலி தான் சமாதானம் செய்தாள்.
“விடுடி ஓ அயித்த பாசத்துல புழிஞ்சாக்குல சாறா ஆறு ஓட போவுது பாரு. போவியா. வா போயி நாள மறுநாத்து கறிசோறுக்கு என்ன செய்யுததுன்னு பாப்பம்…” என்று பாத்திரங்களை தூக்கிக்கொண்டு சென்றனர்.
வைத்தி, தவராசன் இருவரும் கதிருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க தேனரசன் அமைதியாக இருந்தான்.
அவனின் அமைதியில் சீனியம்மாவின் பேச்சுக்கள் எதுவும் மனதில் ஏற்றிக்கொண்டானோ என்று பயந்து வந்தது தவராசனுக்கு.
“அய்யா….” என அவனை அழைக்க,
“என்னங்க மாமோவ்…” என்றான் தேனரசனும்.
“வெசனப்படுதீயலோ?…”
“இல்லியே. நால்லாத்தான இருக்கன்…” என்றான் அவன்.
“இல்ல மொவமே வாட்டமாருக்காமாட்டிருக்கு. ஒன்னும் பேசலியா….” என்ற தவராசன்,
“அவ கொணந்தேன் தெரியுமில்ல. கொஞ்ச நாச்செண்டா(நாள் சென்றால்) அவளா வருவா பாருங்க…” என்றார்.