வைரமும் கடையை அடைத்து வந்துவிட்டார் பேரப்பிள்ளைகளுடன். அவர்களை விளையாடவிட்டுவிட்டு வந்தவர் கறிவிருந்து பற்றி பேச்சை துவங்க,
“என்னத்துக்கு தனித்தனியா போட்டுக்கிட்டு? ஒத்த விருந்தாவே போடத்தான?…” என்றான் தேனரசன்.
“அதுவுஞ்சேரித்தன்…” என்றார் தவராசன்.
அந்த யோசனை உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான வரவு செலவுகளை பேச ஆரம்பித்தனர் அப்போதே.
சமைக்கும் ஆட்களை வரவழைத்து விருந்திற்கு என்ன வேண்டும், எவ்வளவு என எல்லாம் கேட்டவர்கள் ஊரை அழைக்க வேண்டும் என்று சொல்லி முடிவெடுத்திருக்க எல்லாவற்றிலும் பார்வையாளனானான் தேனரசன்.
மாலை ஆகிவிட்டது எல்லாம் பேசி ஏற்பாடு செய்து முடிக்க. வரவு செலவு கணக்கு புத்தகத்தை வாங்கி பார்த்தவன் பணம் எவ்வளவு என்பதையும் கவனித்துக்கொண்டான்.
அதன் பின்னரே தவராசன் மாணிக்கத்துடன் கிளம்பி செல்ல வைத்தி கயலை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வேலையாக கிளம்பினான்.
“அங்கன இருந்தா அம்மை ஒன்னயே ஏசியே நோவடிக்கும். என்னத்துக்கு? நா போறப்ப வந்து கூட்டுக்கறேன்…” என்று சென்றுவிட்டான்.
பொன்னியும் குழலியும் மறுநாள் குலதெய்வம் கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்லவேண்டும் என பூஜை பொருட்கள் வாங்க கிளம்பி சென்றனர்.
தேனரசன் வீட்டில் வெண்மணியும், கயலும் மட்டுமே தார்சாவில் வந்து அமர்ந்தனர்.
“பாத்துட்டா போவுது, வாங்க மயினி…” என்றவள் மாடி வீட்டின் சாவியை எடுத்துக்கொண்டாள்.
தார்சாவில் இருந்தும் மாடிக்கான படி இருக்க உள்ளிருந்தே சென்றனர். கதவை திறந்தவள் இன்னொரு சாவியால் அடுத்த கதவையும் திறந்தாள்.
“என்னடி எந்த தொறவான்னு அம்புடலையோ?…” கயல் கேலியாய் கேட்க,
“ம்க்கும், நானே இப்பத்தன் வாரன். எனக்கென தெரியுமாக்கும்?….” என்றவள் ஒருவழியாக கதவை திறந்து உள்ளே செல்ல கீழ் வீட்டை போல அங்கேயும் விஸ்தாரமாக இருந்தது அந்த வீடு.
“பொறவு என்ன செய்யல நீயி? நேத்திக்கி என்னன்னா மஞ்சக்கவுற கொண்டாரீய? இன்னிக்கி ஆலாத்தி எடுக்க வாரீக. அம்மையா கண்டு அஞ்சுததே இல்லல்ல?….” என வெண்மணி சிரிக்க,
வெண்மணி உணர்வுகளின் பிடியில் நின்றிருந்தாள். அவனின் இந்த பாரிமாணம் இன்னும் கவர்ந்தது.
“எல்லா செத்து வெச்சதுதன். ஒத்த மனுசெனுக்கு எம்பிட்டு ஆவ போவுது செலவு. அதேன் இப்ப வாங்கமுடியுதப்ப வாங்கனுமில்ல. எம்பொண்டாட்டி மருவாதி எனக்கு முக்கியந்தான…” என பொன்னியிடம் சொல்ல வெண்மணி அவனின் கையை பிடித்து இறுக்கிக்கொண்டாள்.
“சேரி சேரி நாளைக்கி பேசுவம்…” என்று குழலி அவர்களை அழைத்துக்கொண்டு,
“கதவ சாத்திக்கிடத்தான?….” என்று சத்தமா சொல்லி செல்ல சிரிப்புடன் தேனரசன் சென்று கதவை சாற்றிவிட்டு வந்தான்.
“யோவ் மாமா, இன்னுமேட்டு உண்கலய்யா…” என்ற வெண்மணியின் குரல் அவனின் கன்னத்தில் பட்டு உரச,
“சின்னம்மோவ் மச்சிப்படில வெச்சிரும்டி. பொறவு உண்கிப்பம்…” என்று அவள் மேல் உரச இதமான நெருப்பொன்று கணப்பாய் சூழ்ந்துகொண்டது அவர்களை.