பொன்னி அவர்களை தாண்டிக்கொண்டு வீட்டினுள் சென்றுவிட இருவரின் குரலும் கிசுகிசுப்பாக ஒட்டிக்கொண்டது.
“ஒங்கிட்ட கேட்டன்ல. எந்தப்புத்தன்…” என்றவன் சிரிப்பில் அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளியவள்,
“என்ன மனசுய்யா ஒனக்கு?…” என சில்லாகித்தாள்.
“நீதன் சொல்லன்…” என தேனரசனும் வெளியேயும் உள்ளேயும் பார்த்துகொண்டு கேட்க,
“ஊருக்கு சொல்ல வேணா சேரி. எங்கய்யனுக்கு ஏம் சொல்ல வேணாமின்ன மாமோவ்?…”
“ஒருத்தருக்கு தெரிஞ்சாக்குல தொட்டு தொட்டு ஒத்த ஒத்தவியளுக்கா போவும். கடேசில காச வாங்கிட்டுத்தன் சின்னய்யா விசேசத்த நடத்தி வெச்சாருனு ஒரு வார்த்த வந்துரும்டி….”
“நீயா நெனைக்கிதியா?…” என்று வெண்மணி கேட்க,
“நெசத்த சொல்லுதேன்…”
“என்ன நெசத்த கண்ட? ஒன்னிய என்ன பேச்சு பேசுது அந்த கெழவி. ஒருநா இருக்கு அதுக்கு….” என வெண்மணி வாசலை பார்த்தாள்.
வெளியே திண்ணையில் அமர்ந்து இன்னும் இங்கேயே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த அந்த பெண்மணியை முறைத்தபடி சொல்ல,
“அவகலாம் ஒரு ஆளுன்னு மதிப்பியா நீயி?…” என சிரித்தான் தேனரசன்.
“என்ன மனுசென் நீயி? ஒன்னிய ஏசுதாவ…”
“அம்புட்டுத்தான? விடுடி…” என்று இலகுவாய் தேனரசன் சொல்ல,
“சேரி அத விடுதன். இதுக்கு சொல்லுய்யா. என்னத்துக்கு காசு தந்தத சொல்ல வேணாமின்னு சொல்லுத நீயி? எங்கைய்யன், அண்ணங்கிட்ட கூட சொல்ல வேணாமா? எங்கைம்மை பேசும்ய்யா…”
வெண்மணிக்கு இது அவனின் சம்பாத்தியத்தில் நடத்தப்படும் விருந்து என பறைசாட்டிவிடும் வேகம்.
அவனின் காசில் தான் இந்த விருந்தே என ஊரினர் முன்னிலையில் அவனை தூக்கி நிறுத்திவிட வேண்டும் என்ற பேராசை.
அதற்கு இப்படி முட்டுக்கட்டையாக இருக்கிறானே என கணவனை முறைத்துக்கொண்டு அவள் நிற்க,
“ஒனக்கு தெரியாதுடி இவிய பேச்சு எல்லா….” என்றான் அப்போதும் வெண்மணியின் முறைப்பை கண்டுகொண்டே.
“ஏனா என்னியவே எங்கய்யனுக்கு என்னிய பெத்தவ பெக்கலன்னு பேசி அவர கொன்னவக. இத பேச மாட்டாவலா?….” என கேட்டுவிட அவள் கேள்விப்பட்டது தான் என்றாலும் அவன் வாயால் இதனை கேட்கையில் மனதெல்லாம் ரணமாய் எரிந்தது வெண்மணிக்கு.
இத்தனையை தாங்கி நிற்பவனை அணைத்து தன் அரவணைப்பில் நிறுத்தவேண்டும் என நினைத்தவள் கைகள் மேல் எழும்பவில்லை.
ஆனால் அவளை பாதித்துவிட்டதில் கண்கள் கசிய அதனை பார்த்த தேனரசன் முகத்தில் மெல்லிய புன்முறுவல்.
“இந்தா ச்சீ, என்னத்துக்குடி கண்ண கசக்குத?….” என்று அவளின் கன்னம் பற்றி பெருவிரலால் விழிநீர் வடியாமல் தாங்கிக்கொண்டான்.
அவனின் சிரிப்பில் வீட்டிற்குள் இருந்தவர்கள் அனைவரும் தார்சாவிற்கு வர வெண்மணியின் கண்ணீருடனான முகமும், தேனரசனின் பொங்கும் சிரிப்பும் என அவர்களுக்கு புரியவே இல்லை.
“என்னலே என்னத்துக்கு அழுவறா?….” என பொன்னி பதறி வர,
“இன்னொரு ஊஞ்ச மச்சிவீட்டுக்கு வேணுமின்னு கேக்குதாத்தா. ஒடனே ஆவற சோலியா?…” என தேனரசன் அதனை சமாளித்து பேச வெண்மணியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு புன்னகைத்தாள்.
“அம்புட்டுத்தானா? நா செய்ய சொல்லிட்டன் தாயி. நாலு நாள்ல கொண்டாரேன்னு சொன்னியான். மறுக்க இப்பவே கேக்குத்தன்…” என்ற தவராசன் உடனே அவனுக்கு அழைக்க போனுடன் உள்ளே செல்ல மற்றவர்களும் சென்றனர்.
“இனிமேட்டு அழு. பேசிக்கிடுதேன். உள்ள வா…” என தேனரசன் திரும்ப,
“நில்லு மாமோவ்…” என்ற வெண்மணி மீண்டும் வெளியே பார்க்க அந்த பெண்மணி இங்கே தான் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.
“என்னடி?…” என்றவன் அவளின் பார்வையின் தீவிரத்தையும் பார்ப்பவரையும் பார்த்துவிட்டு திரும்ப அவனின் சட்டையை பிடித்து முகத்தை நெருங்கியிருந்தாள் வெண்மணி.
“அடியேய்…” என சொல்லும் முன் அவனின் கன்னத்தில் முத்தம் வைத்தவள் அந்த பெண்மணியை பார்க்க நெஞ்சு அடைத்துவிட்டதை போலானது அவருக்கு.
அப்படியே அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்து எழுந்து நின்றுவிட அவரிடம் வெண்மணி சைகையில்,
“இன்னொன்னு குடுக்கவா?…” என்று வாயசைத்து கையை காண்பித்து கேட்க அவர் தலையில் அடித்தபடி ஓட்டமும், நடையுமாக வீட்டிற்கு ஓடிவிட்டார்.
“அவம்பாதம் பண்ணுதடி. அவிய எப்பிடி போனா என்ன?…” என தேனரசன் கேட்க,
“ஒனக்கு வேணாமின்னா திருப்பி தரத்தான. அம்பிட்டு அலுத்துக்கிட்டு என்னத்துக்கு வெச்சிக்குத? மறுக்கா குடுய்யா…” என்று தன் கன்னத்தை காண்பிக்க,