“சொல்லுத்தா, எம்புருசென மருமவேன்னு சொல்லிருவியா நீயி?..” என்று வெண்மணி கேட்டதும் புடவை தலைப்பை உதறிக்கொண்டு எழுந்து நின்றுவிட்டார் சீனியம்மாள்.
“என்னத்துக்குங்கேன்? என்னிய கேட்டுத்தன் அவென கெட்டுனியா நீயி? ஒங்கப்பாருதன் ஏங்கிட்ட கேட்டாவலா? ஒருத்தவியளும் மதியாமத்தான செஞ்சீய. எவ்வாயில இருந்து ஒருநாத்து கூட அத சொல்லமாட்டன்…”
“இப்ப சொல்லுவத்தா, ஏனா ஒணக்கையா ஒனக்கு அள்ளி வெச்ச அம்பிட்டும் எம்புருசென் காசுங்கேன். இது எல்லா அவக சம்பாதனையில நடந்த விசேசங்கேன். இப்ப பேசு, நா கேக்கன்…” என்று கை கட்டி வெண்மணி நிற்க சீனியம்மாள் இதனை எதிர்பார்க்கவில்லை.
பொன்னியை திரும்பி பார்க்க அவரும் ஆமாம் என்று தலையை அசைத்து ஆமோதித்தார்.
சீனியம்மாள் பேச்சற்று மகளை பார்க்க பல்லை கடித்துக்கொண்டு நின்றவள் முகத்தில் சொல்லொண்ணா வேதனை.
“இந்த இப்ப ஆருடி ஒன்னிய சொல்ல சொன்னா?…” என தேனரசன் வந்துவிட்டான்.
“ஒம்ம வாய பொத்திட்டு கம்மின்னு போயிரும். நல்லா வருது…” என்று சொல்லி,
“சொல்லுத்தா, இந்தா நிக்காக எம்புருசென். கூப்புடு மருமவேன்னு…” என தேனரசனின் கைக்குள் தன் கையை கோர்த்தவள் சீனியம்மாள் முன் நின்றுவிட இன்னும் அதிர்ச்சியானார் அவர்.
“என்னடி செய்யித? கைய விடு…” என்று உருவிக்கொள்ள பார்த்தான் தேனரசன்.
“யோவ் மாமோவ், நவுண்ட நேத்திக்கி அந்த கெழவி முன்னுக்கா ஆனதுதன். பாத்துக்கிடு…” என மிரட்ட வேறு செய்ய வாயில் கை வைக்காத குறையாக தேனரசன் மனைவியால் பேச்சற்று நின்றான்.
“வம்பு பண்ணாதடி. அவம்பாதம் புடிச்சவளே. விடுங்கேம்ல…” என கையை உருவ பார்க்க உடும்பு பிடியாக இருந்தது.
“மாட்டன்ய்யா. இப்ப எனக்கு இங்கினவே நாயத்த கேட்டே ஆவனும்…” என்ற வெண்மணி,
“சொல்லுத்தா. எம்பிட்டு பேசுன? இப்ப எங்க போய் பூட்டிக்கிச்சு ஒ பேச்செல்லா?…” என்று வரிந்துகட்டிக்கொண்டு நின்றாள்.
“பொன்னியாத்தா இந்தம்மா சொல்லறச்சவே கொமட்டுல இடிச்சி சொல்லைத்தான? அம்பிட்டுக்கும் வெறுவாய மெல்லுவியோ? ஒனக்கு பொறவிருக்கு…” என அவரையும் பிடித்து எகிறியவள்,