“ம்க்கும், இருக்காதா? அதேன் நா வந்தேன்…” என்றவள் எழுந்து சென்று கருப்பட்டி காபி வைத்துக்கொண்டு வந்து தந்தாள் செண்பா.
அதுவரைக்கும் வாயும் ஓயவில்லை. தங்கையை பற்றி அத்தனை புகார் சொல்லியவள் இறுதியாக,
“பாத்துக்கிடு, இப்பவே இம்பிட்டு வவுச காட்டி பவுமானம் கூட்டுதவ நாளப்பின்ன அவென் அதிகாரியா வந்துட்டியான்னா நம்மள வந்து பாருன்னு நிப்பா. இதுக்குன்னே இந்த வேல அவேனுக்கு…” என்று அடுத்த வார்த்தை பேசும் முன் சூடாக கையில் இருந்த கருப்பட்டி காப்பியை வீசி எறிந்தார் சீனியம்மாள்.
“எந்திச்சு ஒவ்வீட்டுக்கு போடி மொத…” என்று வெடுக்கென சொல்லவும் செண்பகம் அதிர்ந்து பார்க்க,