“செரின்னு இருந்து அனுப்பிட்டு அவக பொறப்படவும் நாங்க இங்கிட்டு வந்தம்…”
“ம்ம்ம்…” என்றார் அதற்கும்.
இப்படியாக அவர் வெறும் சத்தம் மட்டும் கொடுக்க அதற்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தவள் வெண்மணி செய்த அலப்பரையையும் சொல்ல மெல்லிய கீற்றாய் சீனியம்மாள் முகத்தில் புன்னகை தெரிந்தது.
கண்ணீர் எதனால் என்று தெரியாதது போல அவரின் கண்கள் கலங்கி நீர் வழிந்தது.
“நா வேணா உரிக்கிதன் த்தே…” என்று வெங்காயத்தை வாங்க பார்க்க,
“வேணாம்டி…” என்று சற்றே சத்தமாய் சொல்லிவிட்டார்.
இந்த குரலுமே கேட்டு எத்தனை நாளாகி போனது. கயல்விழிக்கு அதுவே சந்தோஷத்தை தர மேலும் பேசிக்கொண்டிருந்தாள்.
“இந்நேரத்துக்கு மணி அடுப்ப பத்த வெச்சிருப்பா…” என்றும் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் பேச்சில் எல்லாம் வெண்மணி தான் நிறைந்திருந்தாள்.