“சேரி இனிமே நீ வாரவரைக்கி நா போவல எங்கயும். குளுந்துச்சா?….” என்று சொல்லி அண்ணனை பார்க்க,
“செரித்தா அந்த பையில பட்டு சீல நாலு எடுத்தாந்தேன். ஒனக்கு புடிச்சத எடுத்துக்க…” என்று சொல்லவும் கயல் அந்த துணிப்பையை கொண்டுவந்து வெண்மணியிடம் வைத்தாள்.
“நீக்க பாத்துட்டீயளா மயினி?…” என கேட்டுக்கொண்டே நான்கையும் எடுத்து வெளியே வைத்தவள் அந்த அட்டை பெட்டியை திறக்கும் முன்,
“நா வாரன். இரு இரு…” என அவசரமாக கையை கழுவிவிட்டு ஓடி வந்தாள் செண்பகம்.
“பரிச்சக்கி இன்னும் மாசம் கெடக்குத்தா. போதுமாட்டிருக்கா?….” என பொன்னியின் உயரத்திற்கு குனிந்து பார்த்து தலை சாய்த்து தேனரசன் புன்னகைக்கவும் பொன்னியின் கலங்கிய கண்கள் லேசாய் சிரித்தது.
“இப்பிடி சிரிச்சாப்புல போ…” என்று சொல்லிவிட்டு வீட்டை திறந்து உள்ளே வந்தவன் வேலையில் ஆழ்ந்துவிட்டான்.
பத்து மணிக்குள் வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பியவன் நெல்லை நூலகத்திற்குள் நுழைந்துகொண்டான்.
அன்றைய பொழுது நூலகத்தில் தான் அவனுக்கு கழிந்தது. இந்த முறை அரசாங்க தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவதில் மட்டுமே அவனின் முனைப்பு மொத்தமும்.