“ஒங்கிட்ட எனக்கு தெரியாதது என்னடி இருக்கு?…” என்று கேட்கவும் சப்பென்று அவனின் வாயில் வலிக்காமல் அடித்தவள் அவனின் சரசத்தில்,
“இதெல்லா பேச்சாய்யா மாமோவ்? மொத பொறப்புடு. எஞ்சோலிய நா பக்க வேணாமா?…” என அவனை விரட்டுவதில் தான் குறியாக இருந்தாள் வெண்மணி.
“இன்னிக்கு விடுதன். ராத்திரி சேத்து புடிக்கிதன்…” என்று சொல்லிவிட்டு கிளம்ப வெண்மணி முகத்தில் அவன் புன்னகை ஒட்டிக்கொண்டது.
“ஆரு கூட போற வெண்மணி?…” என மீண்டும் தேனரசன் கேட்க அவன் உடை நேர்த்தியை கவனித்தவள் கேள்வியை கவனிக்கவில்லை.
“என்னன்னு கேட்ட மாமா?…” என்று விழிக்க,
“செரித்தன், டவுனுக்கு ஆரோட போறன்னன்?…”
“மயினியோட. அவியதேன் கூட வாராக…” என்று சொல்லிவிட்டாள் படக்கென்று.
“சேரி…” என்றவன் பணத்தை எடுத்து அவளுக்கு நீட்டினான்.
“ஒனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கடி. கயலு கேட்டாலும் வாங்கித்தா. இந்த கார்ட வெச்சிக்க. நம்பரு தெரியுமில்ல?…” என்றதும் தலையசைத்தாள் வெண்மணி.
“மருவிட்டு நிக்காம மனசு போல வாங்கிக்க…” என்றவன் வாசல் பக்கம் திரும்பிவிட்டு மீண்டும் உள்ளே வந்தான்.
“மதியத்துக்கு கெட்டி தாடி. அங்கினவே உண்கிக்கறேன்…” என தேனரசன் சொல்ல,
“யே மாமோவ், இங்கின வந்து…” என்றவள் பேச்சை விரல் கொண்டு நிறுத்தியவன்,
“நீயி இந்த வீட்டுக்கு வந்த பொறவு தனியா நா இங்கின இருந்ததில்ல பாரு. உண்க வந்தா ஒன்னிய தேடும். அதேன்…” என சிரிப்பில்லை போல அவன் சொல்லவும் அடுத்த நொடி வெண்மணி தேனரசனை கட்டிக்கொண்டாள்.
மீண்டும் மீண்டும் தேனரசன் வெண்மணியின் எண்ணிற்கு அழைக்க தொடர்பிலேயே இல்லை என்றது.
தேனரசன் மனதெல்லாம் படபடத்தது. அதற்குள் கயல்விழி, வைத்தியுடன் வீட்டிற்கு வந்துவிட விஷயம் சீனியம்மாள் வரை வந்துவிட்டது.
இரவு எட்டுமணி போல வெண்மணி வீட்டை அடையும்முன் தெரு முனையிலேயே தன் வீட்டின் முன் நின்றிருந்த கூட்டம் கண்டு யாருக்கு என்னவோ என பதட்டத்துடன் ஓட்டமும் நடையுமாக வந்தாள்.
வீட்டின் முன்னில் இருந்த மாடிப்படியில் தளர்ந்துபோய் அமர்ந்திருந்த தேனரசன் இருக்க சீனியம்மாவின் சத்தம் மகளை கண்டதும் தான் அடங்கியது.
அந்த நொடி தேனரசன் வெண்மணியை பார்த்த பார்வையில் தான் எத்தனை இளைப்பாறல்.
சீனியம்மாள் ஆக்ரோஷமாக நின்றிருக்க மற்ற அனைவருமே கண்ணீருடன் இருந்தனர்.
பொன்னி தேனரசனுக்கு அருகில் அமர்ந்து எங்கே மகனை குற்றம் சாட்டிவிடுவார்களோ என அவனின் கையை பிடித்தபடி அழுதுகொண்டிருந்தார்.
வெண்மணி யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. தாயை ஒற்றை பார்வை பார்த்தவள் தான்.
கையில் இருந்த பையில் இருந்து ஒன்றை எடுத்து தேனரசனிடம் நீட்ட எழுந்து நின்று அதனை பார்த்தவனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
இத்தனை தன்னை தவிக்கவிட்டவளை கன்னம் கன்னமாய் அறைந்து தள்ளும் வேகம் ஒருபுறமும், அவள் தன் மேல் கொண்ட பேரன்பினால் மூச்சுவிட முடியாமல் ஒருபுறமும் தத்தளித்து போனான் தேனரசன்.