வீட்டின் கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்த வெண்மணி தேனரசனை தேட உள்ளே அறைக்குள் கட்டிலில் படுத்திருந்தான் அவன்.
இன்னும் அவன் சீரான நிலைக்கு வரவில்லை என்பதை அவனின் ஏறி இறங்கிய நெஞ்சத்தை வைத்து கண்டுகொண்டவள் எதுவும் பேசாமல் வேறு புடவையை எடுத்தாள் உடை மாற்ற.
குளித்துவிட்டு வேறு புடவையில் வந்தவள் இன்னும் கணவன் அதே நிலையில் இருப்பதை கண்டு அருகே வந்தாள்.
தேனரசன் கண்ணை மறைத்து ஒரு கையை வைத்திருந்தவன் இன்னொரு கையால் பின்னந்தலைக்கு முட்டு கொடுத்திருந்தான்.
தான் கொண்டுவந்த பையில் இருந்த இன்னும் நான்கு சுருள்களை எடுத்து கட்டிலின் அருகிருந்த நாற்காலியில் வைத்தவள் அதற்குள் இருந்த பிரசாதத்தையும் எடுத்தாள்.
“எம்பிட்டு நேரம்ய்யா எங்கூட மல்லுக்கு நிப்ப? என்னமோ போ. ஒன்னியும் பேச வேணா நீயி…” என்றவள் அந்த பிரசாதத்தை அவனின் நெற்றியில் வைக்க போக படக்கென்று கையை பிடித்தவன்,
“போயிருடி, வெறியேறிரும் பாத்துக்கிடு…” என கையை தட்டிவிட,
“ஒவ்வெறிய வாசமின்னுக்க பேசினாவள, அவியட்ட காட்டத்தான? தலைய தொங்க போட்டு ஒக்காந்துருக்கியே? நா என்ன செத்தா போனன்? இந்தா நல்லாத்தான இருக்கன்…” என்ற நொடி அவளின் கன்னத்தில் அவன் அறைந்துவிட முறைப்பாய் பார்த்துக்கொண்டு நின்றாள் வெண்மணி.
“என்னிய கொன்னுட்டேல. செத்த நேரத்துல என்ன பாடு படுத்திட்டடி…” என்றவன் கண்கள் ரத்தம் பூண்டிருந்தது.
“சவட்டிட்டானுவ என்னிய. அம்மை ராசியில்ல, அய்யன் ராசியில்ல. இப்ப பொஞ்சாதி ராசியுமில்லன்னு பேசுதானுவ…” என்னும் போதே குரல் உடைந்து போனது அரசனுக்கு.
“நீயும் கேட்டுக்கிட்டு நின்னியாக்கும்? தூக்கி போட்டு வாயில மிதிக்க ஒங்காலுக்கு என்ன கோளாறாய்யா மாமோவ்?…” என்றாள் வெண்மணி.
“ஏன்டி பேச மாட்ட? போன போட்டு இந்தாருக்கன். வாரான்னு சொன்னா நாம்பாட்டுக்கு கம்மின்னிருப்பன். சொன்னியா நீயி?…” என அவன் இரைய கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை வெண்மணி.
“இத வெச்சிக்க சாமி…” என்றவள் விபூதியை நெற்றியில் இட வர,
“போங்கேன்ல. இருக்க வெலத்துக்கு ஒன்னிய என்ன செய்யிவேன்னே தெரில புள்ள. போடி…” என்று அவளை இன்னும் பிடித்து தள்ளியவன் கட்டிலில் படுத்துக்கொண்டான்.
எத்தனை தவித்திருப்பான் என அவனின் பேச்சிலேயே புரிந்துபோக மனது உருகி விட்டது வெண்மணிக்கு.
“ஒன்னிய…” என்று அவனின் முதுகோடு ஒட்டிக்கொண்டவள் அவன் விலகளை பொருட்படுத்தவில்லை.
தேனரசனுக்கு இன்னும் மனது சமாதானம் ஆகவில்லை. மற்றவர்கள் என்னவும் பேசி செல்லட்டும். ஆனால் எங்கே போகிறேன் என இவள் சொல்லியிருக்கவேண்டாமா என்று அத்தனை ஆதங்கம்.
“இங்காரு மாமா…” என அவனின் முகத்தை திருப்ப பார்க்க,
“போடி…” என்று தட்டிவிட்டான் தேனரசன்.
“எங்க போவ சொல்லுத? மறுக்கா எங்கையாச்சும் போவவா?…” என்ற கேள்வியில் வெடுக்கென திரும்பியவன் செய்த செயலில் வெண்மணி இதழ்கள் தீயாய் எரிந்துவிட்டது.
“மறுக்கா சொல்லுவன்ல…” என்றாள் வெண்மணி அசராமல்.
“ஏன்டி இப்பிடி இருக்க?…” என்றவன் தான் அவள் முன் இன்னும் தளர்ந்து போனான்.
“நல்லாத்தான இருக்கன்? ஒனக்கு நா போதுமாட்டில்லையோ?…” என அவனின் கன்னத்தை பிடித்து கிள்ள வலியை தாங்கிய விழிகள் அவளை சற்று அமைதியாக்கியது.
“வேலைய விட்டு வந்தாக்க இதெல்லா மாத்தமாட்டியா நீயி?…” என்று கேட்டு வம்பு செய்ய,
“சிமித்தர போடி நவுந்து. மனுசென் நெலம புரியாம…” என விலகிவிட்டான்.
“எங்கய்யா போவ சொல்லுத? வா சேந்து போவ…” என அவள் அவனை விடாமல் இழுக்க தள்ளுமுள்ளுவில் இருவரும் ஒரே சேர கீழே விழுந்தனர்.
“அடங்குதியா நீயி?…” என்றவன் முத்திரைகள் கட்டவிழுந்து மூச்சை இழுத்து பிடிக்க வைத்தான்.
அவனின் ஆனந்த ஆவேசத்தில் தொய்ந்து போனவள் இதழ்களுக்குள் நீர் வற்ற துவண்டு போனாள் வெண்மணி தேனரசனின் தீரா தவிப்பில்.
போர் முழக்கம் போலிருந்தது இருவரின் அணுகல்களும். நிமிடங்கள் கரைந்து உறைந்து கலந்து களைத்து விலக சிலநொடி ஆசுவாசத்தில் வெண்மணியின் முகம் பார்த்தான் தேனரசன்.
மெல்ல நகர்ந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொண்டவன் அவளையும் சேர்த்து இழுத்துக்கொள்ள அவனின் மேல் சாய்ந்தாள் வெண்மணி.
கலைந்திருந்த கூந்தலை மென்மையாக கோதி ஒதுக்கிவிட்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து,