கல்கி அப்படி தன்னைப் பார்த்து சொல்லிவிடவும் வரப்ரசாத்தினால் அவளின் வார்த்தைகளை ஏற்கமுடியவில்லை. தங்கள் வீட்டில் வந்து இருக்கிறாள், அதுவும் ஊரில் உறவுகளை விட்டு என்ற காரணத்தால் அவளை மிகவும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்ற கர்வத்தில் இருந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் பிடிக்கவே இல்லை.
அப்படி என்ன நான் இவளிடம் போலிஸாக நடக்கிறேன் என்ற எண்ணமே. இதே வெளியாட்கள் என்றால் ஆம் நான் போலீஸ் அப்படித்தான் இருப்பேன் என்றிருப்பான் கர்வத்துடன்!
ஆனால் உறவாய் நினைக்கும் கல்கியிடம் இதனை கொஞ்சம் எதிர்ப்பார்க்கவில்லை அவன். உறவுதான்! கல்கியின் வீட்டாள்கள் எப்படியோ, கல்கியையும் தையல் நாயகியையும் அவன் மனம் இத்தனை நாளில் உறவாய் ஏற்றுக் கொண்டது உண்மைதான்.
“அப்படி என்ன நான் உங்கிட்ட போலீஸா பிஹேவ் பண்ணினேன், டெல் மீ?” என்றான் அவனது அக்மார்க் அதிகார குரலில்.
“இதோ! இதான் சொல்றேன். எப்படி பேசுறீங்க நீங்க? யுனிஃபார்ம் போட்டுட்டு இப்படி அதட்டி கேள்வி கேட்டா எனக்குன்னு இல்லை யாருக்கா இருந்தாலும் இப்படித்தான் ஃபீல் ஆகும்” என்றாள் கல்கி. கல்கியின் குரல் உயர்ந்திருக்க தையல் நாயகிக்கு பேத்தியின் சத்தம் டீவியை விட அதிகமாய் இருக்க கடுப்புடன் இவள் பக்கம் பார்த்தவர்
“என்னடி பேரன்ட்ட என்ன சத்தமா பேசுற?” என்று அதட்டினார்.
கல்கி பேசும் முன் வரப்ரசாத்தோ, “ஒன்னுமில்ல நீங்க சீரியல் பாருங்க” என்று அவரிடம் சத்தமாய் சொல்லியவன் சத்தம் கேட்டு கிச்சனில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த வசந்தி அக்காவிடம்
“அக்கா, எனக்கு பசிக்குது. காஃபி தரீங்களா?” என்று கேட்ட கல்கியிடம்
“பசிக்குதுன்னு சொல்லி காஃபி குடிப்பியா? பத்து நிமிஷம் இரு. உப்புமா செய்றேன்” என்றார் வசந்தி. கல்கி குளித்து உடைமாற்றி வர வசந்தி அக்கா உப்புமா தயார் செய்து வைத்திருக்க இவள் அதை தட்டில் போட
“என்னவோ போ, இரண்டு பேரும் காரமா சாப்பிட்டு சாப்பிட்டு காரமாவே கத்திட்டு இருக்கீங்க?” என்று வசந்தி சொல்ல
“நானா கத்துறேன்? உங்கத்தம்பிதானே என்னை வந்ததும் வராததுமா கேள்வி கேட்டார். இரண்டு மணி நேரத்துல எங்க ஊர்ல அடுத்த மாவட்டமே போயிடலாம். இங்க நாலு தெரு தாண்ட முடியல, பழைய புக்ஸே அவ்வளவு விலை சொல்றாங்க. பாதி புக்ஸ் கிடைக்கவே இல்லை. தெரியாத ஊர்ல அலைஞ்சு திரிஞ்சு வர லேட் ஆச்சு, அதுக்குள்ள அவர் விசாரணையை ஆரம்பிச்சிட்டார்” என்று புலம்பினாள் கல்கி.
“என்ன கல்கி நீ? தெரியாத ஊர்ல எங்காச்சும் மாட்டியோப்பியோன்னுதானே தம்பி அக்கறையா விசாரிக்குது. அது புரியாம தம்பிட்ட சத்தமா பேசுற நீ” என்று வசந்தி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே
“அவளை சும்மா விடாதடி பார்வதி, அவதான் உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்குக் காரணம்”
“அந்த பொசுக்கேட்ட பயலையும் சேர்த்து அடி” என்ற சத்தம் வர வசந்தியும் கல்கியும் கிச்சனில் இருந்து எட்டி பார்க்க ஹாலில் டீவியைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தார் தையல் நாயகி.
“இவங்கதானா?” என்று வசந்தி சிரிக்க
“எங்கப்பத்தா அப்படிதான், டீவியில வரவங்களை எல்லாம் வைச்சு செய்யும். நேர்ல இவங்களாம் மாட்டினாங்க சட்னி. அப்படி பேசும் அப்பத்தா” கல்கி சிரித்தபடி சொல்ல
“வயசானவங்கனா அப்படித்தான், என் மாமியாரும் இப்படிதான்” என்றார் வசந்தி.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, தையல் நாயகியின் சத்தம் கேட்டு வரப்ரசாத் தனது அறைக்கதவைத் திறந்து பார்க்க தையல் நாயகி டீவியிடம் பேசிக்கொண்டிருக்க, அதை சிரிப்புடன் பார்த்தவன் அங்கிருந்தே
“வசந்திக்கா, ஒரு டீ” என்றான்.
“வரேன் தம்பி” என்று வசந்தி குரல் கொடுத்துவிட்டு அவனுக்கு பாலைக் கொதிக்க வைத்தார். வேலை செய்துகொண்டே
“நீ வரலன்னு டென்ஷன்ல தம்பி டீ கூட குடிக்காம வாசலையே பார்த்துட்டு இருந்துச்சு, நீ அவரைப் பேசுற பாப்பா” என்றார்.
“உங்க தம்பி தங்க கம்பின்னு ஒத்துக்கிறேன், நீங்க முதல்ல டீயைக் கொண்டு போங்க க்கா” என்றாள் கல்கி. கல்கி உண்டு முடித்து அவன் அறைக்குப் போனாள்.
அவன் அறைக்குள் நுழைய, அங்கிருக்கும் நாற்காலியில் அவன் உட்கார்ந்திருக்க, இவளைப் பார்த்தவன்
“எங்க உன்னோட எவிடன்ஸ் எல்லாம் காட்டு” என்றான். குரலில் நக்கல் நிரம்பி வழிந்தது.
கல்கி உடனே வேகவேகமாய் அறைக்குள் வந்தவள் பையையும் வாங்கிய புத்தங்களையும் எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்று அங்கிருந்த மேஜையில் எல்லாம் வைத்தாள். அவள் செயலின் வேகமே அவளின் கோபத்தை சொல்ல கிண்டல் பார்வை வரப்ரசாத்திடம்.
“பாருங்க, வாங்கின புக்ஸ். பில் எல்லாம்” என்றதும்
“பார்க்கிறேன் நான். நீ ப்ர்ஸ்ட் உட்காரு, அப்புறம் என்னை கைதி மாதிரி விசாரிக்கிறேன்னு சொல்லுவ” என்றான் கிண்டலாக.
“உட்கார்ந்தாலும் அதேதான்” உர்ரென்று சொல்லிவிட்டு அங்கிருக்கும் இன்னொரு நாற்காலியில் கல்கி உட்கார்ந்தாள்.
“இரண்டு புக்ஸ் வாங்க நாலு மணி நேரம்? ஹ்ம்ம்?” என்று அவளைக் கேள்வியாய்ப் பார்க்க, அந்த பார்வை பாவையைப் பற்றி எரிய செய்தது. என்னமோ அவள் பொய் சொல்லுவது போல் அல்லவா அவன் பார்வை தன்னைப் பார்க்கிறது? என்று நினைத்தாள்.
“ஆமா, செகண்ட் ஹாண்ட் புக்ஸே அவ்வளவு ரேட் சொல்றாங்க, ஒரு செம்க்கு அவ்வளவு செலவு பண்ண முடியுமா? எல்லா கடையிலும் அதே ரேட் சொல்றாங்க. இதுல நான் பாரீஸ், மூர் மார்க்கெட்னு அலைஞ்சேன். நான் என்ன இங்கேயேவா பொறந்து வளர்ந்தேன். எல்லாம் தேடித்தானே கண்டுபிடிக்கனும். என் காலேஜ்ல இருந்து அங்க போறதுக்கே ஒன் ஹவர் மேல ஆச்சு தெரியுமா?” என்றாள் மூச்சு வாங்க.
“நோ எக்ஸ்ப்ளனேஷன்ஸ், ஐ ட்ரஸ்ட் யூ கல்கி” என்றான் மிக மிக பொறுமையாக. கல்கியின் குரலுக்கு அப்படியே எதிர்பதமாய் அவனின் குரல்.
அந்த குரலை விட அவன் வார்த்தைகள் கல்கியை அவனைப் பார்க்க வைக்க
“அப்புறம் ஏன் எங்கொயரி பண்றீங்க?” என்றாள் முறைத்தபடி.
“ஓஹ், இதுவும் எங்கொயரி லிஸ்டா?” என்றான் சிரிப்புடன்.
“அப்படித்தான் இருக்கு. அன்னிக்கும் அப்படித்தான் மாத்திரை போட்டாச்சா கேட்டீங்க, போட்டேன் சொன்னாலும் நம்பாம செக் பண்றீங்க. இன்னிக்கும் இதை எல்லாம் பார்த்த பின்னாடிதானே நம்புறீங்க” கல்கி கோபத்தில் பொங்க
“ரிலாக்ஸ்! மாத்திரை போடாம இருந்தா உனக்குப் ஃபீவர் குறையாது. சின்ன பிள்ளை ஏமாத்திடுவியோன்னு கேட்டேன். அது மட்டுமில்லாம அன்னிக்குக் கல்கியை எனக்குத் தெரியாது”
“இன்னிக்கு மட்டும் என்னைத் தெரியுமா?” என்று கேட்டாள் கல்கி.
“அப்கோர்ஸ்! ஏன் தெரியாது? கல்கி தேவையில்லாம பொய் பேசமாட்டா. அதுவும் அவளை நம்புறவங்களை ஏமாத்த மாட்டா. நியாயமான விஷயத்தை மத்தவங்க ஒத்துக்கலன்னா மட்டும்தான் மறைக்கறதோ பொய் சொல்றதோ செய்வா. அவளோட பக்க நியாயத்தைப் புரிஞ்சிக்கிறவங்க கிட்ட கல்கிக்கு ஒளிவு மறைவே கிடையாது” என்று அவளைப் பற்றி சொல்ல ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பெண்.
“ரைட் தானே?” என்று அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி வரப்ரசாத் கேட்க அவள் தலையாட்டவும்
“நேனு எஸ்பி ம்மா” என்றான் பெருமையாக.
“அதேதான் நானும் சொல்றேன் பாருங்க போலீஸ் மாதிரி எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க” என்றாள் கல்கி.
” ஏன்ட்டீம்மா இதுக்கும் போலீஸா? சரி லெட் இட் பீ கல்கி” என்றவன்
“உன்னை ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?” என்று கேட்டவன்
“புக்ஸ் எல்லாம் இப்படி அலைஞ்சு வாங்க வேண்டாம், ஒரு செம்க்கு செலவும் இவ்வளவு செய்ய வேண்டாம். உன்னோட சீனியர்ஸ்ட்ட பேசு, அவங்க கிட்ட புக்ஸ் வாங்கு, இல்லையா லைப்ரரில உன் சிலபஸ்ல உள்ள டாபிக்ஸ் மட்டும் ஃபோட்டோ காப்பி எடு. ரொம்ப அவசியமான புக்ஸ் மட்டும் வாங்கிக்கோ செகண்ட் ஹாண்ட் புக்ஸ் அமெசான் மாதிரி ஆன்லைன் வெப்சைட்ஸ் ல கூட அவைலபிள். ஸோ தேவையில்லாத டென்ஷன் வேண்டாம். புரிஞ்சதா?” என்று அவளிடம் கேட்க, அவளோ யோசனையாய் அவனைப் பார்த்தான்.
“நீ வெளியே போக வேண்டாம்னு எல்லாம் நான் சொல்லல, இப்படி புக்ஸ் வாங்க அலைஞ்சு டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம். அந்த டைம்ல நீ வேற எதாவது விஷயத்துல உன் டைம் யூஸ்புல்லா ஸ்பெண்ட் செய்யலாம். ஃப்ரஸ்ட் செம்ல இப்படிதான் ஆர்வமா புக்ஸ் வாங்கத்தோணும். நாங்களும் அதெல்லாம் செஞ்சிருக்கோம். உன்னோட புக் லிஸ்ட் கொடு நான் எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு பார்க்குறேன்” என்று சிரஞ்சீவி சொல்ல
“நீங்க கரெக்டா சொன்னீங்க, ஸோ ஒத்துக்கிட்டேன். எனக்கு எப்பவும் சண்டை போடனும்னு ஆசையா என்ன?” என்றாள் கல்கி ரோஷமாக.
“இல்லையா பின்ன?”
“எஸ்பி ஸார், நல்லா உங்க போலீஸ் மூளையை யூஸ் பண்ணுங்க, எல்லா டைமும் நீங்கதான் சண்டை போட்டு இருக்கீங்க. நான் இல்லை” என்றதும் அவனும் யோசிக்க அதுதான் உண்மையும் கூட, கல்கி எதாவது பேசினாலும் இவன் பேச துவங்கவும்தான் அது பெரும் சண்டையாகிப் போயிருக்கிறது.
“அது என்னோட அம்மாவைப் பேசினா எனக்குக் கோபம் வராதா?” என்றவனின் பேச்சில் மெல்ல கோபம் எட்டிப்பார்த்தது,
“இப்பவும் நீங்கதான் கோபமா பேசுறீங்க?” கல்கி அவனை குற்றம் சாட்டவும்
“லிஸன் கல்கி, எது நடந்திருந்தாலும் அதெல்லாம் முடிஞ்சு போனது. அதுக்காக நீ அம்மாவைப் பேசினா எனக்குக் கோபம் வராதா சொல்லு?” என்று அவளிடம் நேருக்கு நேராய்க் கேட்க அவள் கோபமாய் அவனைப் பார்த்தாள்.
“இப்போ நான் போலீஸ் டிரஸ் எல்லாம் போடல, உன்னோட அத்தை பையனா பேசுறேன். ஹானஸ்டா பதில் சொல்லு! உங்கப்பா நினைச்சிருந்தா உன்னையும் உன்னோட அக்காவையும் படிக்க வைச்சிருக்கலாமா இல்லையா?” என்று கேட்க
“ம்ம், வைச்சிருக்கலாம். ஆனா அத்தையால..” என்று ஆரம்பித்தவளைக் கை காட்டி நிறுத்தினான்.
“கல்கி! உன்னோட அப்பா மேல கூட தப்பு இருக்கு. உன்னால அக்செப்ட் செய்ய முடியல, அது மாதிரிதான் எனக்கும். அம்மா உன்னோட அப்பா கிட்ட சொல்லி இருக்கலாம், அவங்க சிட்டிவேஷன் சொல்லாம போய்ட்டாங்க. ஜென்ட்ஸ்க்கு சரிசமமா உட்கார கூடாதுன்னு சொல்ற ஃபேமிலில லவ் பண்றேன் சொன்னா ஒத்துக்குவாங்களா கல்கி?”
“ஒத்துக்கமாட்டாங்கன்னா ஏன் லவ் செய்யனும்?” பட்டென கேள்வி கேட்டாள் கல்கி.
“லவ் எல்லாம் தானா வரது. கோவம், பசி மாதிரி தட்ஸ் எ ஃபீல். யூ காண்ட் கன்ட்ரோல். நாளைக்கு உனக்கும் கூட வரலாம்” என்றான் அவன்.
“எனக்கெல்லாம் லவ் ஒன்னும் வராது” என்றாள் கல்கி அவசரமாக.
“வந்தாலும் தப்பில்லை”
“அதான் வராது சொல்றேன்ல” என்றாள் கடுப்பாக.
“நீ ஏன் டென்ஷன் ஆகுற, உன்னை லவ் பண்ணினா அந்த பையன்தான் டென்ஷன் ஆகனும்” என்று சொன்னது பின்னாளில் அப்படியே பலிக்கும் என அறியாது போனான் அவன்.
“ரொம்ப பேசுறீங்க நீங்க”
“உன்னை விடவா?” என்றவன்
“ஓகே லீவ் தட், என்னோட அம்மாவைப் பேசினா எனக்கு சுத்தமா பிடிக்காது கல்கி. உனக்கும் உன்னோட அப்பா அம்மாவைப் பேசினா கோபம் வரும்தானே? எங்க அம்மா செஞ்சது உங்க பாயிண்ட் ஆஃப் வியுல தப்புன்னா அதுக்கு உங்களை தண்டிச்சது யாரோட தப்பு? கண்டிப்பா என்னோட அம்மாவோடது இல்லை. நம்ம பசங்கன்னு உன்னோட அப்பா உனக்கு சப்போர்ட்டீவா இருந்திருக்கும். அதை விட்டு அடுத்தவங்களை ப்ளேம் பண்றது ரொம்ப தப்பு” என்றதும் அதுவும் கூட ஒருவகையில் சரிதான் என்பதால் கல்கி அமைதி காத்தாள்.
“உங்க மேல அவங்க தேவையில்லாம திணிச்ச அத்தனைக் கட்டுப்பாட்டுக்கும் என்னோட அம்மாவைக் காரணம் சொல்றது எந்த வகையில நியாயம் சொல்லு? சமமா உட்காரக் கூட ரூல்ஸ் போடுறாங்க, அதையெல்லாம் உன்னோட அப்பா கேட்காம இருக்கார்னா அவருக்குள்ள ஒரு டாமினேட்டீங் மெண்டாலிட்டி இருக்குன்னுதான் அர்த்தம். இதுக்கும் என்னோட அம்மாவை குறை சொல்லுவியா நீ?”
“ஊர்ல எங்கம்மா லவ் மேரேஜ் பண்ணினபோது நிறைய பேசினாங்க சொன்ன இல்லையா? இப்போ நீ படிக்க வந்திருக்க கேர்ள்ஸ் எல்லாம் டீச்சிங்கோ இல்லை வேற டிகிரி தான் படிக்கனும்னு இன்னமும் சிலர் சொல்றாங்க, கேட்டா சேஃப்டின்னு. அதையெல்லாம் நீ காதுல வாங்குறியா இல்லைதானே?” என்றதும் தயலின் தலை தானாய் அசைந்தது.
“எஸ், அது மாதிரி எங்கம்மா அவங்க லைஃப் சூஸ் பண்ணினாங்க, உனக்குப் பிடிச்ச படிப்பை நீ சூஸ் பண்ணிட்ட. உனக்கு படிப்பு மேல காதல், என்னோட அம்மாவுக்கு எங்கப்பா மேல காதல். அது எப்படி தப்பு சொல்லுவ கல்கி?” என்று அவளைக் கேட்க மங்கை இதழில் மென்னகை.
“என்ன சிரிக்கிற? சொல்லு?” அவன் கேட்க
“நீங்க எஸ்பியாகுறதுக்குப் பதில் லாயர் ஆகியிருக்கலாம். நல்லா கன்வீன்ஸ் பண்றீங்க” என்றாள் கிண்டலாக.
“கல்கி கன்வீன்ஸ் ஆகியாச்சா என்ன?” என்று அவனும் புன்னகையுடன் கேட்க
“கன்வீன்ஸ் ஆகிட்டேன்னா தெரியல, ஆனா அத்தையை பேச மாட்டேன்” என்றாள்.
“இது என்ன பதில்?”
“உங்களுக்கு சிலதெல்லாம் புரியல, புரியவைக்கவும் முடியாது. சின்ன வயசுல இருந்தே இருக்க கோவம், ஒரு நிமிஷத்துல போகாது. பட் ஒரு விஷயம் ஒத்துப்பேன், தாத்தாவும் அப்பத்தாவும் எவ்வளவு ஸ்டீரிக்டா இருந்திருந்தாலும் அப்பா எங்களுக்கு சப்போர்ட்டா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். அதனால உங்க சைட் ஒத்துக்கிறேன்”
“தேங்க்ஸ்” என்றான் புன்னகையுடன்.
“இப்படியே பேசுங்க. இதான் நல்லாயிருக்கு” கல்கி சொல்ல
“எப்பவும் இப்படித்தானே பேசுறேன்”
“இல்லை, ஸ்டீரிக்டா பேசுவீங்க. எனக்கு ஜூனியர் சற்குணப்பாண்டியன் கிட்ட மாட்டிக்கிட்டோமோன்னு இருக்கும்” என்றதும்
“தாத்தா ரொம்ப ஸ்டீரிக்டோ?”
“ஸ்டீரிக்டோ ஸ்ட்ரீக்ட், சத்தமா பேசக்கூடாது, சிரிக்க கூடாது. ஒரு சாங்க் ஓடினா டான்ஸ் கூட ஆடக் கூடாது..” என்று அவள் நீளமாய் சொல்லிக் கொண்டே போக
“ஏன்ட்டிம்மா அவ்வளவு கஷ்டமா?” சிரஞ்சீவி அவள் பேச்சிலும் அதன் பாவனையிலும் சிரித்தபடி கேட்க
“ம்ம், ஒரு நாள் சற்குணப்பாண்டியன் பேத்தியா இருந்தா தெரியும், இல்லைன்னா சற்குணப்பாண்டியன் பேத்தி கூட இருந்தா தெரியும் கஷ்டமா இல்லையான்னு” முறைப்பாய் சொன்னாள் கல்கி.
“ஆப்ஷன் பி கஷ்டம்தான்” என்றதும் கல்கி ஒரு நொடி புரியாது பார்த்தவள் புரிந்தவுடன் அவனை முறைக்க, அதற்குள் வசந்தி அறை வாயிலில் நின்று
“தம்பி, சமையல் முடிஞ்சது. நான் கிளம்புறேன்” என்றார்.
“ஓகேக்கா, கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க இன்னும் முறைத்து நின்றாள்.
“ஜஸ்ட் கிட்டிங்” என்ற சிரஞ்சீவி
“உனக்கு என்ன வேணும்னாலும் முதல்ல என்னைக் கேளு, சுதந்திரமா செயல்படுறது தப்பில்லை. அதே நேரம் தெரிஞ்சவங்க கிட்ட ஹெல்ப் கேட்கலாம் என்ன புரிஞ்சதா?” என்று கேட்க
“நீங்க இது மாதிரி நார்மலா பேசியிருந்தா நான் கேட்டிருப்பேன். நீங்க எப்பவும் டென்ஷன் பண்ணினா எப்படி கேட்க தோணும்? ” என்றாள் கல்கி.
“ஓகே, லீவ் இட். இனிமே எதுனாலும் என்னைக் கேளு. அம்மாவைத் திட்டாம இருந்தா நான் ஏன் டென்ஷன் ஆகப்போறேன்? ப்ரண்ட்ஸ் ஆகிடலாமா?” என்று அவளைப் பார்த்து சினேகப்புன்னகை செய்ய
“என்னோட ப்ரண்ட்னா வாடா போடான்னு சொல்லுவேன், ஓகேவா?” என்று கல்கி குறும்பாய்க் கேட்க
அன்றைய இரவுக்குப் பின் சிரஞ்சீவி கல்கியிடம் தேவையில்லாமல் அவன் அம்மாவின் கதையைப் பேசுவதில்லை. கல்கியும் அப்படியே!
இரண்டு நாட்கள் போயிருக்கும். இருவரும் தனித்தனியே வழக்கம்போல் வாக்கிங் சென்று வந்திருக்க, சிரஞ்சீவி ஆங்கிலப்பத்திரிக்கையை எடுத்து வாசித்தபடி டீவியில் ஜெமினி மியுசிக்கில் வைத்தான். கல்கி வசந்தி கொடுத்த காஃபியைப் பருகியபடி சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள்.
‘ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மா தரகனி பருவம்மா
தரலிரா தரலிரா..’ என்று எஸ்பிபி உருகிப் பாடிக்கொண்டிருந்தார். சிரஞ்சீவியும் பாடலை முணுமுணுத்தபடி செய்தித்தாளில் கவனம் வைத்தான்.
“அது என்ன தமிழ்தானே உங்க தாய்மொழி? தெலுங்கு பாட்டு கேட்கிறீங்க” கல்கி அவனிடம் கேட்க
“ஏன் தெலுங்கு பாட்டு கேட்க கூடாதா? என்னோட அப்பாவோட மொழி அது. தமிழ் எனக்கு எப்படியோ தெலுங்கும் அப்படிதான். என்ன அம்மாவைத் தவிர எங்கிட்ட தமிழ்ல்ல பேச முன்னாடி ஆள் இல்லை, ஸோ தெலுங்கு ரொம்ப ஈசியா வரும். இங்க காலேஜ் சேர்ந்த பின்னாடிதான் நானே தமிழ் நல்லா பேசுறேன்” என்றவன்
“அது மாதிரி இசைக்கு மொழி கிடையாது. நீயும் இந்த பாட்டைக் கேளு. உனக்கும் புரியும்” என்றவன் மீண்டும் செய்தித்தாளில் கவனம் வைத்தான்.
“எங்க புரியுது? எனக்குப் புரியல” என்று கல்கி சொல்ல
“நீ ஏன் அர்த்தம் தெரியனும் நினைக்கிற? இசை புரியனும் கிடையாது. உணரனும்! எஸ்பிபி வாய்ஸ்லேயே அந்த ஃபீலிங்க்ஸ் கடத்தியிருப்பார்” என்றான் சிலாகித்தபடி.
“ம்ம்” என்று அந்த பாடலை கவனித்தவள்
“ப்ரியத்தம்மான்னுதானே மாமா சொல்வாங்க” என்று யோசனையாய சிரஞ்சீவியிடம் கேட்க
அப்பாவைப் பற்றி அவள் பேச அவன் முகத்தில் இன்னும் மஞ்சிமம் கூடிப்போனது.
“ஓஹ், அப்போ கரெக்ட்டாதான் மாமா சொல்றாங்க” கல்கி சொல்லவும் அவன் மென்னகை இன்னும் விரிந்தது. கல்கி அவன் படிக்கும் செய்தித்தாளைப் பார்த்துவிட்டு
“நானும் பேப்பர் படிக்கனும், எனக்குத் தமிழ் பேப்பர் வாங்கித் தரீங்களா?” என்று கேட்டாள்.
“ஏன் இதையே படி”
“இல்லை, எனக்கு இது புரியல. நானும் இதை சும்மா புரட்டிப் பார்த்தேன். இஸ் வாஸ் தட் தேர் தவிர எந்த வார்த்தையும் தெரியல, கஷ்டமா இருக்கு. ஒவ்வொருவாட்டியும் டிக்ஷனரி தேட வேண்டியிருக்கு. நியூஸ்தானே எந்த மொழில படிச்சா என்ன?” என்றாள்.
“அப்படி கிடையாது கல்கி! நீ ஜர்னலிஸம் படிக்குற. இந்த பேப்பரோட ஸ்டாண்டர்ட் ரொம்ப நல்லா இருக்கும். ஒரு ஜர்னலிஸ்டோட வேலை ஜஸ்ட் நியூஸை சொல்றதுல இல்லை, இட்ஸ் மோர் தன் தட். நான் பார்த்திருக்கேன் ரிஜினல் நியூஸ் பேப்பர்ஸ்ல நிறைய க்ரைம் நீயுஸ் அப்படித்தான் கவர் பண்ணுவாங்க. இது நேஷனல் நியூஸ்பேப்பர், நிறைய ஜர்னலிஸ்ட் அவங்க ஒபினியன்ஸ் எழுதுவாங்க, எடிட்டோரியல்ஸ் இருக்கும். இதான் உனக்கு யூஸ் ஆகும். நீயும் இனிமே இதையே படி” என்றான் வரப்ரசாத்.
“எனக்கு இங்கிலிஷ் வர்ட்ஸ்க்கு அர்த்தமே தெரிலயே”
“தெரியலன்னா தெரிஞ்சிக்கோ தட்ஸ் இட்! கூகுள் கிட்ட கேட்டா எல்லா வொர்ட்ஸ்கும் மீனிங் தெரிஞ்சிடும். உனக்கு ஒன்னு சொல்லவா இப்ப கூட இந்த பேப்பர்ல சில வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியல, ஆனா படிக்க படிக்க நமக்கு அந்த நியூஸை வைச்சே அந்த வார்த்தையோட அர்த்தம் புரியும். இந்த பேப்பர் படிக்கிறவங்கள 99% பேருக்கு எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியறது கிடையாது. அதான் உண்மை. உனக்கு ரொம்ப டிடர்மினேஷன் ஜாஸ்தி கல்கி, யூ கேன்” என்றான் புன்னகையுடன்.
அந்த ஊக்குவிக்கும் வார்த்தைகள் உள்ளம் சேர உவகை சேர்ந்தது அவளிடத்தில். உள்ளத்து உவகை அப்படியே வஞ்சியின் வதனத்தில் பிரதிபலிக்க
“என்ன பார்க்கிற?” என்றான் அவள் பார்வையைக் கண்டவன்.
“இல்லை, நீங்க சிடுமூஞ்சி சிங்காரம் நினைச்சேன், ஸ்வீட் சிங்காரமா கூட இருக்கீங்க” என்றதும் கையில் இருந்த பேப்பரை வைத்து அவள் கையிலே அடி போட்டான் சிரஞ்சீவி வரப்ரசாத்.
“கல்லு மண்ணுன்னு நேம் வைச்சிட்டு என்னைக் கிண்டல் பண்ற” என்றான் பல்லைக் கடித்தபடி. நிச்சயம் முன்பு போல் பெருங்கோபம் எல்லாம் அவனிடம் இல்லை.
“அதை வைச்ச உங்க மாவய்யாட்ட கேளு, இப்போ டியுட்டிக்கு டைம் ஆயி போயிந்தி. நீ காலேஜ் கிளம்பு. ஃப்ரீ டைம்ல பேப்பர் படி” என்று சொல்லி அவன் கிளம்பிப்போனான்.
கல்கி சென்னை வந்து ஒருமாதம் ஓடிப்போனது. மாதம் கடக்க கல்கிக்கும் வரப்ரசாத்திற்கும் ஒரு மெல்லிய நட்பு ஓடியது. ஆனால் என்ன இருவரும் எல்லாவற்றிலும் சரிக்கு சரியாய் நின்றனர்.
அவன் எகிறினால் அவளும் எகிறினாள்.! அவன் இரங்கினால் இவளும் இரங்கினாள்.! அதனை புரிந்த சிரஞ்சீவி கல்கியிடம் மிகுதியான கண்டிப்புக் காட்டாது முடிந்தவரையில் கனிவாகவே நடக்க, கல்கியும் அப்படியே நடந்தாள்.
அந்த மாத இறுதியில் மகளைக் காண வந்தார் உதயமூர்த்தி.