வீட்டிற்கு வந்த சிரஞ்சீவி நுழையும்போது கல்கி மட்டுமே ஹாலில் இருந்தாள். நேரம் பத்து ஆகியிருக்க தையல் நாயகி உறங்கப்போய்விட்டார். கல்கி ஹாலில் என்னவோ புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தாள்.
உள்ளே நுழைந்தவன் “உங்கப்பாவை பஸ்ல ஏத்தி விட்டாச்சு கல்கி” என்று சொன்னான்.
“ம்ம், தெரியும். அப்பா கால் பண்ணிட்டாங்க”
“அது என்ன உங்கப்பா? மாமான்னு சொன்னா தேஞ்சிடுவீங்களோ?” என்றாள் கொஞ்சம் கோபமான குரலில்.
“ப்ச், உன் அப்பாவை உன் அப்பான்னு சொல்றதுல என்ன தப்பு?” என்றான் அவனும் எரிச்சலாக.
“ஜர்னலிஸ்ட் மேடம் எனக்கு சாப்பிட என்ன பிடிக்கும்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?” என்று சிரித்தபடி சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.
அவனுக்கு முன் தட்டை வைத்தவள் சூடாய் சாதம் பரிமாறினாள். அவனிடம் குழம்பை நகர்த்தி வைத்தவள் சின்ன கிண்ணத்தில் வெங்காயத்தை தயிருடன் கலந்து வைக்க, அவன் விழிகள் வியப்பில் இன்னும் விரிந்தன.
என்னவோ கல்கி அவனை அசத்திக் கொண்டே இருந்தாள்.
——————————————————-
“குழம்பு நல்லாயிருக்கு, உங்கம்மா கிட்ட சொல்லிடு” என்றவாறே அவன் உண்ண கல்கி பேசாமல் அவனை பார்க்க அவள் பார்வையில் தலையை உலுக்கியவன்
“அத்தம்மா கிட்ட சொல்லிடும்மா ஓகேவா?” என்று சிரித்தான்.