சிபிரஞ்சன் தமிழ்நாட்டிற்கு செல்வதாகக் கூறியதும் அத்துணை நேரம் இருந்த சலிப்பெல்லாம் மறைந்து, “நிஜமாவா சிபி…?” என்று ஆச்சர்யம் காட்டியவன், “தமிழ்நாட்டுல எந்த இடத்தில லேண்ட் பாத்திருக்க?” என்று மிகவும் ஆவலாகவே வினவினான் ஸ்ரீரஞ்சன்.
அதில் மீண்டும் அவனை யோசனையாகப் பார்த்தவன், “நியர் பை திண்டுக்கல் டிஸ்ட்ரிக் ஸ்ரீ. இதுல வீடியோஸ் அண்ட் போட்டோஸ் இருக்கு. பாரு.” என்று தன் மடிக்கணினியை சகோதரன் புறம் நகர்த்தியவன் மற்றயவர்களின் புறம் திரும்பி, அவன் இல்லாத சமயத்தில் அலுவல்களை எப்படிக் கையாள வேண்டும் என்று ஓரிரு வார்த்தைகளும் கூறி முடித்தான்.
அதைக்கேட்டு, “நீங்க இருந்தாலும் இல்லைனாலும் எங்களோட முழு எஃபர்ட் நம்ம எஸ் ஆர் என் டிசைனர்ஸ்சுக்கு நாங்க கொடுப்போம் சார்.” என்று பணியாளர் ஒருவர் சொல்ல…
இன்னொருவரோ, “நம்மளோட நியூ பிரான்ச் முயற்சியும் பெரிய சக்ஸஸ் ஆக வாழ்த்துக்கள் சார்.” என்க, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் அவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதில் சினேகமாக புன்னகைத்துக் கொண்டவனும், அவர்களுக்கு நன்றியும் கூறி அனுப்பி வைக்க, அவர்களைத் தொடர்ந்த மதுரிமாவும் எழுந்து கொண்டாள்.
அவள் எழவும், “வெயிட் ரீமா.” என்று மீண்டும் அவளை அமரச் செய்தவன், அங்கிருந்த சுதிருக்குக் கண்காட்ட…
அவனோ மறு பேச்சைப் பேசாது அறையை விட்டு வெளியேறியவன் கதவையும் இறுக மூடிச் சென்று தன் விசுவாசத்தைக் காண்பித்தான்.
சுதிர் வெளியேறிச் சென்றதும் மீண்டும் மதுரிமாவை ஒரு நொடி நோக்கிவிட்டு ஸ்ரீரஞ்சனின் புறம் திரும்பியவன், “வாட் இஸ் த பிராப்லம் ஸ்ரீ?” என்று நேரடியாக விஷயத்திற்கே வந்திருந்தான்.
அதுவரை பெயருக்கு மடிக்கணினியில் பார்வையைப் பதித்தபடி, தீவிர சிந்தனையில் இருந்தவனும் சகோதரனின் கேள்வியில் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்து, “எஸ் சிபி பிராப்லம் தான்…” என்று தொடங்கியவன், “நீ ஆல்ரெடி கெஸ் பண்ணிருப்பன்னு நினைக்கிறேன். ரீமா அண்ட் ஐ ஹேவ் பீன் டேட்டிங் ஃபார் பியூ மந்த்ஸ். ஷி செட் தட் இன் ஹெர் ஹவுஸ். தே வாண்ட் டு மீட் மீ.” என்று ரீமாவைப் பார்த்தவாறே சொல்ல…
அதைக்கேட்டு லேசான புன்னகையை தவழவிட்டு, “கங்க்ராட்ஸ் ஸ்ரீ… கங்க்ராட்ஸ் ரீமா.” என்றவன், பின்பு தாடையைத் தடவியவாறு “இதுல என்ன பிராப்லம் ஸ்ரீ? ஒருவேளை நான் இப்போ சொன்னதை சொல்றியா?” என்று நொடிநேரம் சிந்தித்தவன்,
“நீ ஃபர்ஸ்ட் ரீமாவோட போய்ட்டு வா. நீங்க ரிட்டர்ன் ஆன அப்றம் வேணா நான் போய் ஒர்க் பாத்துக்கறேன்.” என்று மகிழ்ச்சியாகவே கூறி சகோதரனின் முகத்தை ஏறிட்டான் சிபிரஞ்சன்.
ஆனால் சகோதரனின் முகத்தில் வந்து போன மகிழ்ச்சியில் பாதிகூட சம்பந்தப்பட்டவனின் முகத்தில் தென்படாததோடு, “ந்நோ சிபி. எனக்கு இந்த வில்லேஜ் சர்ரௌண்டிங்க் எல்லாம் செட்டே ஆகாதுன்னு உனக்கே தெரியும்லடா. அதனால ஐ கேனாட் ஈவன் கோ டு ரீமா சிபி.” என்று மறுப்பாகத் தலையை அசைத்தவனிடம்,
“பட் யூ கேனாட் அவொய்ட் திஸ் ஜர்னி ஸ்ரீ. மேரேஜ் இஸ் மோஸ்ட் இம்போர்ட்டண்ட் பார்ட் ஆஃப் தி லைஃப்.” என்றான் சிபிரஞ்சன்.
சிபியின் அந்த வார்த்தையில் அவளையும் அறியாமல் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த ரீமாவிற்கு அவன் மீதான நன்மதிப்பு சற்றே கூடியது போல் இருக்க…
“ஐ அண்டர்ஸ்டாண்ட் சிபி…” என்று அவஸ்தையாக உடன்பிறப்பைப் பார்த்த ஸ்ரீயோ, “மேரேஜ் வெரி இம்போர்ட்டண்ட்னு தெரிஞ்சதால தான் நான் போக யோசிக்கிறேன்.” என்று வேறு கூறினான்.
அதில் சிபியோ புரியாத பார்வை பார்க்க…
“எஸ் சிபி. நான் கிராமத்துக்குப் போனாலும் நிச்சயம் ரீமாவோட பேமிலி மெம்பர்ஸ என்னால இம்ப்ரெஸ் பண்ண முடியும்னு தோணலை. எங்க, யார்கிட்ட, எப்படி பேசணும், நடந்துக்கணும் எதுவும் எனக்குத் தெரியாது. அதுவும் வில்லேஜ் பீப்பில்ஸ்.” என்று உதட்டைச் சுழித்தவனை அவளோ உக்கிரமாக முறைத்தாள்.
அதைக்கண்டு, “சாரி பேபி…” என்று கண்ணைச் சுருக்கியவன், “அதனால தான் அவங்களை எல்லாம் இங்க வரவைக்கலாம்னு நான் ரீமாகிட்ட சொன்னேன். ஆனா அவ என்ன புரிஞ்சிக்கவே இல்லை.” என்று அவள் மேலே பழியை போட்டான்.
அதைக்கேட்டு ஒருநொடி சிபியை நோக்கி விட்டு ஸ்ரீரஞ்சனையும் பார்த்தவள், “ஸ்ரீ… புரிஞ்சிக்க வேண்டியது நீங்கதான். நேத்து நம்ம லவ்வை சொன்னதுக்கே பாட்டி இப்போ வரை என்னோட சரியா பேசக்கூட மாட்டிறாங்க. ஆனாலும் எனக்காக இறங்கி வந்து உங்களை கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க. அப்டி இருக்கப்போ நான் அவங்களை இங்க எப்டி வரவைக்க முடியும் ஸ்ரீ?” என்றவள், “அத்தோட பையன் வந்து பொண்ணு வீட்ல பேசுறது தான் எங்க ஊர்பக்கம் மரியாதையா நினைப்பாங்க.” என்று அவள் நிலையும் தெளிவாகவே எடுத்துரைத்தாள்.
படிக்கும் சமயங்களில் ஓரிரு முறை தந்தையோடு தமிழ்நாட்டு விசேஷங்களுக்கு சென்று வந்திருந்த சிபிரஞ்சனுக்கு பெண்ணவளின் கூற்று முற்றிலும் சரியாகவே பட்டது.
“எஸ் ஸ்ரீ… ரீமா சொல்ற போல நீ அங்க போய் பேசறது தான் சரியா இருக்கும்.” என்று சகோதரனை சமாதானம் செய்யத் தொடங்கியவனின் பேச்சை, “அந்த பேசுறது தான் எனக்கு வராதுன்னு சொல்றேனே சிபி.” என்று நிறுத்தியவன், “சைல்ட் வுட்ல இருந்து எல்லா விஷயத்துலையும் நான் உன்னத்தான்டா ஃபாலோ பண்ணி வளந்துருக்கேன். கொஞ்சம் முன்ன நான் பேசினத எல்லாம் கேட்டு ரீமாவே என்மேல ஆங்ரியா இருக்கா” என்று தன்னையே முறைத்திருந்த மதுரிமாவைப் பார்த்தவன், “இவகிட்ட பேசுன போல அங்கயும் போய் சொதப்பி வச்சா, அப்றம் ரீமாவே என்ன வேணாம்னு சொல்லிடுவாடா” என்று உள்ளே போன குரலில் கூறிக்கொண்டே வந்தவன், “சோ…” என்று தயங்கி நிறுத்த…
“சோ வாட் ஸ்ரீ…? வாட் டு டூ?” என்று உந்தினான் அவனையே பார்த்திருந்த சிபிரஞ்சன்.
அத்துணை நேரம் அவனது பேச்சை அசூசையாக கேட்டிருந்த மதுரிமாவும் தன் காதலன் ஏதோ மாற்று வழி கண்டு விட்டான் போல என்று அவனை ஆர்வமாகப் பார்க்க…
அவளிடம் ஒரு கெஞ்சல் பார்வையை செலுத்திவிட்டு சகோதரனிடம் திரும்பியவன், “செய்யப் போறேன் இல்ல சிபி. நீதான் செய்யப்போற.” என்று புதிர் போட்டான்.
அதில் கடுப்பாகிய சிபியும், “ஸ்ரீ … சொல்றத கொஞ்சம் ஸ்ட்ரைட்டா சொல்லு. ஐ டூ நாட் அண்டர்ஸ்டாண்ட்.” என்று அதட்டியவனிடம், “நீ ஆல்ரெடி தமிழ்நாட்டுக்குப் போறீல. அப்டியே எனக்கு பதிலா ரீமா கூடவும் போய் அவங்க பேமிலி மெம்பர்ஸ எல்லாம் மீட் பண்ணி எங்க மேரேஜ்கும் சம்மதம் வாங்கிட்டு வந்துடுடா. ப்ளீஸ்டா… நாம ட்வின்ஸ்னால யாருக்கும் எந்த டவுட்டும் வராது சிபி.” என்று சகோதரனின் கையைப் பற்றிக் கெஞ்சியவனின் கூற்றில் ஏகத்துக்கும் அதிர்ச்சியாகிய சிபிரஞ்சனும் மதுரிமாவும் அன்னிச்சையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், “ஸ்ரீ ஏன் இப்டி உளர்றீங்க?” என்றும் “ஆர் யூ மேட் ஸ்ரீ?” என்றும் ஒருசேர கத்தி இருந்தார்கள்.
கூடவே, “ஸ்ரீ… நீ… என்ன பேசிட்டு இருக்கன்னு புரிஞ்சு தான் பேசுறியா? திஸ் இஸ் எ கிரைம் ஸ்ரீ. ஐ வில் டெபனட்லி நாட்… டூ… திஸ்” என்று கடுமையாகக் கூறி அவன் கையையும் உதறி இருந்தான் சிபிரஞ்சன்.
ஆனால் அவர்களின் கத்தலை எல்லாம் அசட்டை செய்த ஸ்ரீரஞ்சனோ, “அய்யோ… எனக்கு பைத்தியமும் இல்ல. நான் உளறவும் இல்ல. ரெண்டு பேரும் நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்களேன்? ஒரு டூ டேஸ் எனக்குப் பதிலா நீ ஸ்ரீரஞ்சனா போறதுல என்ன கிரைம் இருக்கு சிபி? ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.” என்ற ஸ்ரீரஞ்சனின் பேச்சில் மதுரிமா முழுக்க முழுக்க புரிந்து கொண்டது என்னவோ, ‘அவள் மேல் வைத்த காதலுக்காக அவனுடைய சிறிதளவு வசதியைக் கூட விட்டுத்தர அவளுடைய காதலன் இம்மியும் தயாராக இல்லை’ என்பது மட்டுமே.
புரிந்து கொண்ட அவ்விஷயத்தில் அத்துணை தினங்கள் கற்கண்டு போல் இனித்த காதல் இக்கணம் எட்டிக்காயாய்க் கசக்க, “ரீமா…” என்று அவளிடமும் ஏதோ கூற வந்தவனை கைநீட்டித் தடுத்தவள், “போதும் ஸ்ரீ… நீங்க என்னோட கிராமத்துக்கு வரலைன்னாலும் பரவாயில்லை. உங்களோட முட்டாள் தனமான பேச்சை மட்டும் இத்தோட நிறுத்திக்கோங்க.” என்று சீறலாகவே மொழிந்தவள் சிபியிடம் திரும்பி, “சாரி சார்…” என்று மட்டும் கூறிவிட்டு நொடியும் நில்லாது அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
அவள் செல்லவும், “ரீமா லிஸன் டு மீ” என்று அவள் பின்னோடே செல்ல முயன்றவனை, “ஸ்ரீ… ” என்று தடுத்து இருந்த சிபி, “நாட் ஒன்லி ரீமா ஸ்ரீ. நோ ஒன் வில் அக்ஸப்ட் வாட் யு சைடு.” என…
சகோதரனை சோகமாகப் பார்த்தவன், “பட் ஐ டிட் நாட் லைக் டு கோ டு தி வில்லேஜ். ஐ கேன் நாட் ஸ்பென்ட் டைம் வித் தி வில்லேஜ் பீப்பில்ஸ்.” என்று முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கூறினான் ஸ்ரீரஞ்சன்.
அதைக் கேட்டு, “இதெல்லாம் அவளை லவ் பண்றதுக்கு முன்னவே நீ யோசிச்சிருக்கணும் ஸ்ரீ. அவகிட்ட ப்ரப்போஸ் பண்ணும் போது அவ வில்லேஜ் கேர்ள்னு தெரியலையா?” என்று கடுமையாகவே கேட்டவனுக்கு உடன்பிறந்தோனின் அந்தப் பேச்சு சிறிதான சினத்தையும் தூண்டி இருந்தது.
ஆனால் அவன் கூற்றிற்கு, “எஸ் சிபி… நான் முன்னவே யோசிச்சிருக்கணும் தான்.” என்று ஆமோதிப்பாய் தலையை அசைத்தவன், “ஆனா ரீமாவைப் போல ஒரு கியூட் அண்ட் பிரட்டி கேர்ள்ள பாத்தபின்ன யாரா இருந்தாலும் எதைப் பத்தியும் யோசிக்க மாட்டாங்க. ஐ லவ் தட் கேர்ள் சிபி.” என்று முகம் பிரகாசிக்க சொன்னவனின் கூற்றில் அவன் மீது துளிர்த்த கோபம் சட்டென்று புன்னகையாக மாறி இருந்தது சிபிரஞ்சனிற்கு.
சிறுவயதில் இருந்தே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று நகரத்து வாழ்க்கைக்கு பழகிவிட்ட சகோதரன் திடீரென கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லவும் பீதியாகி விட்டான் போல என்று மேலும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டவன், “லைஃப் இஸ் எ ஸ்ட்ரேஞ்ட் கேம் ஸ்ரீ. எதையும் விட்டுக் கொடுக்காம அதுல வின் பண்ண முடியாது. பொறுமையா உக்காந்து யோசிச்சுப் பாரு. உன்னோட பேச்சு எவ்ளோ செல்பிஷ்னு உனக்கே புரியும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத.” என்று கூறியவன், “லேண்ட் போட்டோஸ் பாத்தியா? பிடிச்சிருக்கா?” என்று தொழில் விஷயம் பேசி அவன் சிந்தையும் திசை திருப்பினான்.
சகோதரன் முயற்சி புரிந்து,
“ம்ம்ம், குட் லேண்ட் சிபி” என்று புன்னகைத்துக் கொண்டவனும், “என்ன பிரைஸ். பைனல் பண்ணிட்டியா?. எப்போ ஒர்க் ஸ்டார்ட் பண்றோம்?” என்று அவனோடு ஐக்கியம் ஆகினான்.
அதன் பின்னான நேரங்கள் அப்படியே கழிய, ஒரே அலுவலகத்தில் இருந்தாலும் ஸ்ரீயும் ரீமாவும் மட்டும் ஒருவரிடம் ஒருவர் பேசுவதற்குக் கூட முயற்சிக்காது அலுவலக வேலையிலும் மற்றவர் பற்றிய யோசனையிலும் நிமிடங்களை நகர்த்தினர்.
அவர்களை கவனித்து இருந்தாலும் ஒரு காதலர்களுக்கு இடையில் மூன்றாம் மனிதனான தான் இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாது என்று தன் அலுவலில் மூழ்கிவிட்ட சிபிரஞ்சன், அன்று மாலை கிளம்பும் சமயம் பத்து நாட்கள் விடுப்புக் கேட்டு தன் முன்னே வந்து நின்ற மதுரிமாவிடம், “அவசரப்பட்டு தனியா கிளம்பிடாத ரீமா. டூ டேஸ் வெயிட் பண்ணு ஸ்ரீகிட்ட பேசியிருக்கேன்.” என்று மட்டும் சொன்னான்.
அதைக்கேட்டு, “ஸ்ரீ இல்லாம ஊருக்கு போனா என்னோட அத்தை பையனை எனக்கு என்கேஜ் பண்ணிடுவாங்க சார். அதுக்காகவாவது நான் வெயிட் பண்ணிதான் ஆகணும்.” என்று சோகையாக புன்னகைத்தவள், “தேங்க்ஸ் சிபிசார்.” என்றுவிட்டு வெளியேற…
அவளையே பார்த்து இருந்த சிபிரஞ்சனுக்கு ரீமாவின் விஷயத்தில் ஸ்ரீ சற்று விரைவாக முடிவெடுத்தால் தேவலாம் என்றே தோன்றினாலும், வழக்கமான தோள் குலுக்கலோடு அதை ஒதுக்கி தன் பணியில் மூழ்கிப் போனான் சிபிரஞ்சன்.
ஆனால் அவன் அறையில் இருந்து வெளியேறியவளுக்கோ, “தன் காதலன் தனக்காக ஒரு விஷயம் செய்வதற்குக் கூட அவன் சகோதரனின் உதவி தேவைப்படுகிறதே. இவனோடான வாழ்வு தனக்கு எப்படி அமையுமோ?” என்ற இமாலையக் கேள்வி அவள் கண்முன்னே நாட்டியம் ஆட,
அடுத்து வந்த இரு நாட்களும் அலுவலுக்குக் கூடச் செல்லாது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவளுக்கு தன் ஊரிலிருந்து வந்த அழைப்புகளுக்கு பதில் கூறுவதே பெரிய சாதனையாக இருந்தது.
மதுரிமா தன் காதலனிடம் கோபித்துக் கொண்டு வந்து இன்றோடு மூன்று நாட்கள் கடந்திருக்க, அந்த மூன்று நாட்களும் , “ஹாய் பேபி, குட் நைட் ஸ்வீட் ஹார்ட். லவ் யூ மை டியர்” என்று வெறுமனே வந்து குவியும் ஆடவனின் குறுஞ்செய்திகளில் மென்மேலும் கடுப்பாகியவள், இனியும் அமைதியாக இருந்தால் சரிவராது என்று எண்ணி அன்று மாலையே ஸ்ரீரஞ்சனுக்கு அழைப்பை விடுக்க, அதை ஏற்றது என்னவோ சிபிரஞ்சன் தான்.
அழைப்பை ஏற்றதும்,
“ஸ்ரீ… ஹேட் ஆன் ஆக்சிடேன்ட் ரீமா…” என்றவன், ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கு வருமாறும் கூறிவிட்டு அலைபேசியை அணைக்க, அதைக் கேட்டவளுக்கோ நெஞ்சில் நீரே வற்றிப் போனது.
என்ன தான் அவன் மீது அளவு கடந்த கோபத்தில் இருந்தாலும் காதலனுக்கு விபத்து என்று கேள்விப்பட்டவுடன், கைகால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்க, அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் தோழியிடம் விஷயத்தைக் கூறி, வாடகை வாகனத்தை வரவழைத்தவள் அடுத்த அரைமணி நேரத்தில் சிபிரஞ்சன் கூறிய மருத்துவமனைக்குள்ளும் நுழைந்திருந்தாள்.
நுழைந்த வேகத்தில், “ஸ்ரீ…” என்று காதலனிடம் ஓடியவள் அங்கிருந்த சிபிரஞ்சனைக் கூட பொருட்படுத்தாது அவன் கைகளையும் பற்றிக் கொண்டு, “என்னாச்சு ஸ்ரீ?. எப்டி ஆக்சிடண்ட் ஆச்சு? பாத்து வண்டி ஓட்ட மாட்டிங்களா?” என்று விசும்பலாக வினவ…
அதைப் பார்த்திருந்த சிபிரஞ்சனுக்கு அவள் மீதான நல்லெண்ணம் மென்மேலும் வலுக்கத் தொடங்கியது.
அதில் கண்ணை எட்டாத முறுவல் ஒன்றைப் பூத்தவன், லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டே அவர்களை நெருங்க…
அதற்குள், “எனக்கு ஒன்னும் இல்லை ஸ்வீட் ஹார்ட். ஜஸ்ட் சின்ன பிராக்ச்சர் தான். ஒன் மந்த் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு டாக்டர் இப்போதான் சொன்னாங்க.” என்று அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான் ஸ்ரீரஞ்சன்.
அவன் கூற்றில் சற்றே தெளிந்தவள் அப்பொழுது தான் சிபிரஞ்சனையும் கவனித்து மெல்ல அவனை விட்டு விலகி நிற்க, “சிபி… நீயாவது எடுத்து சொல்லுடா. ரீமா ரொம்ப பயந்துட்டா.” என்று சகோதரனையும் துணைக்கு அழைத்தவனின் பேச்சில்,
“நீ இவ்ளோ பயப்புடற அளவு பிக் பிராக்சர் இல்லை ரீமா. சின்ன ஸ்கிப்தான்.” என்று மட்டும் கூறியவன், தன் கையிலிருந்த மாத்திரையும் ஸ்ரீரஞ்சனிடம் கொடுத்து விழுங்கச் செய்தான்.
ஆண்கள் இருவரும் பெரிய விபத்து இல்லை என்று கூறியப் பின்னரே நன்றாக முகம் தெளிந்து இயல்பாகியவள் எப்படி விபத்து ஆனது என்று ஸ்ரீரஞ்சனிடம் கேட்டுக் கொண்டிருக்க, ஓரிரு வார்த்தைகளில் அவளுக்கு பதில் உரைத்தவன் தனக்கு இருபுறமும் நின்ற இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, “இப்போவாவாது நான் சொன்னதுக்கு ரெண்டு பேரும் ஒத்துப்பீங்க தான?” என்றான்.
சிறிய அளவே ஆனாலும் அவனுக்கு விபத்தாகி விட்ட பதட்டத்தில் இருந்த இருவருக்குமே அவன் எதைக் கேட்கிறான் என்று புரியவே இல்லை.
அவர்களின் புரியாத பாவத்தைப் பார்த்து அவனே தொடர்ந்தவன்,
“இந்தக் கட்டுப் போட்ட காலை வச்சிட்டு என்னால கன்ஃபார்மா வில்லேஜ்கு போக முடியாது. ப்ளீஸ் இப்போவாவது அண்டர்ஸ்டாண்ட் பண்ணுங்க. எனக்காக ரெண்டு பேரும் வில்லேஜ்கு போய்ட்டு வாங்க.” என்று கேட்டப் பின்னர்தான் அவர்களுக்கு சில தினங்கள் முன்னர் நடந்த உரையாடல்கள் ஞாபகம் வந்து ஸ்ரீயின் தற்போதைய கூற்றில் பெரிதான அதிர்வும் தோன்றியது.
அவ்வதிர்வில் அன்று போலவே இன்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, முதலில் சுதாரித்துக் கொண்ட மதுரிமா, “இல்லை ஸ்ரீ. இப்படி ஒரு நிலைமைல நீங்களே வர்றேன்னு சொன்னாலும் நான் உங்களை கூட்டிட்டு போக மாட்டேன்.” என்றவள், “உங்களுக்கு ஆக்சிடண்ட் ஆகிடுச்சுனு எங்க வீட்ல சொல்லி இந்த ட்ரிப்பை தள்ளி வச்சிக்கலாம் ஸ்ரீ. நீங்க எதையும் திங்க் பண்ணி வொர்ரி பண்ணிக்க வேண்டாம்.” என…
“அய்யோ ரீமா. அப்டிலாம் எதுவும் பண்ணிடாத.” என்று ஏகமாய் அலறியவன், “உங்க பாட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, நம்ம லவ்வ அக்ஸப்ட் பண்ணினதே பெரிய விஷயம்னு நீதான சொன்ன ரீமா. இப்போ நீ மட்டும் ஊருக்குப் போனா, அவங்க அகைன் உனக்கு வேற ஆஃபர் பாக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?” என்று பெண்ணவளை பேசவிடாது செய்தவன், “சிபி ப்ளீஸ்டா. உன்னால மட்டும் தான் இப்போ எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். இந்த சந்தர்ப்பத்தை இழந்துட்டா அப்றம் நான் ரீமாவையும் இழந்துடுவனோன்னு எனக்கு பயமா இருக்கு. எனக்காக இந்த ஹெல்ப் பண்ணு சிபி. ப்ளீஸ்.” என்று அன்று போலவே மீண்டும் கெஞ்சலில் இறங்கியவனைப் பார்த்து… அழுவதா சிரிப்பதா என்று புரியாது விழி பிதுங்கி நின்றனர் மதுரிமாவும் சிபிரஞ்சனும்.
‘விபத்தாகி நடக்க இயலாது இருக்கும் இந்த சமயத்தில் கூட, தன்னோடான திருமண பந்தத்தை உறுதி செய்ய நினைக்கிறானே தன் காதலன். என் மீது இத்துணை காதலா இவனுக்கு?’ என்று எண்ணிய பெண்ணவள் பேச மொழியில்லாது நிற்க,
‘அவன் கூறியது போல் ரீமாவின் பாட்டி அவளுக்கு வேறு மணம் பேசி விட்டால் தன் சகோதரன் சிறந்த வாழ்க்கைத் துணையை இழந்து விடுவானே.’ என்ற நல்லெண்ணமோ சிபியையும் மௌனியாக்கி நிறுத்தி இருந்தது.
அவர்களின் மௌனத்தையே தனக்கு சாதகமாக எடுத்து, அடுத்து வந்த நாட்களும் அதுபோலவே பேசி அவர்கள் மனதை கரைக்க முயன்றவன் மருத்துவமனையில் இருந்து வீடு செல்லும் அன்றும், “ஜஸ்ட் ஒரு பிரண்ட்ஸ் போல நீயும் ரீமாவும் வில்லேஜ்க்கு போய் மேரேஜ்கு ஓகே வாங்கிட்டு வர்றதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க. கால்ல பிராக்ச்சர் இல்லன்னா நானே போகலாம்னு தான இருந்தேன். ஆனா அந்த காட்கே நான் போறது பிடிக்கல போல?” என்று ஏதேதோ புலம்பியபடி வீட்டிற்குக் கிளம்புவதற்காக பொருள்கள் அனைத்தும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த சிபிரஞ்சனையும் மதுரிமாவையும் சேர்த்தே நோக்கியவன், “உப்பில்லாத ஒரு விஷயத்துக்காக ஒரு நொண்டிப் பையனை இவ்ளோ கெஞ்ச விடுறது உங்களுக்கே நல்லா இருக்கா?.” என்றும் கேட்க…
அதைக்கேட்டு, “ஸ்ரீ…” என்று இருவருமே ஒருசேர அதட்டி இருந்தார்கள்.
அந்த அதட்டலிலே அவர்களின் பாசத்தை உணர்ந்து கொண்டவன், “சும்மா என்மேல பாசம் இருக்க போல கத்தாத சிபி. உண்மையிலே என் லைஃப் பெட்டரா இருக்கணும் நினைச்சா ப்ளீஸ் எனக்காக இதைப் பண்ணு.” என்று மீண்டும் சகோதரனின் கையைப் பற்ற…
சிறு பிள்ளை போல் பிடிவாதம் பிடிக்கும் சகோதரனையும், அவன் கூற்றை ஏற்கவும் இயலாது, மறுக்கவும் தோணாது அவஸ்தையாக தன் முகம் பார்த்த பெண்ணவளின் முகத்தையும் நொடிகள் சில ஆழ்ந்து பார்த்தவன், “ரீமாவுக்கு எந்த அப்ஜக்சனும் இல்லின்னா ஐம் கோயிங் வித் ஹெர் ஸ்ரீ.” என்று மட்டும் கூறிவிட்டு விறுவிறுவென்று அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.
சிபிரஞ்சன் திடீரென இப்படிக் கூறிச் செல்வான் என்று எதிர்பாராது அதிர்ந்த முகத்தோடு தன்னை ஏறிட்ட மதுரிமாவிடமும் தங்களின் சிறந்த வாழ்க்கைக்காக மட்டுமே இந்தப் பயணம் என்று கெஞ்சி, கொஞ்சி சம்மதிக்க வைத்தவன் அவர்கள் இருவரையும் மதுரை செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பியப் பின்னரே ஆசுவாச மூச்சை இழுத்து விட்டான் ஸ்ரீரஞ்சன்.
இப்பயணம் தங்கள் மூவரின் வாழ்க்கைப் பயணத்தையே எங்கு சென்று சேர்க்கப் போகிறது என்பதனை அறியாமல்.