“சரிங்க மேம்…” என்று மீண்டும் மீண்டும் அந்த பெண் பேச,
“ப்ச், இந்த மாடுலேஷன் இல்லை. நான் சொல்றேன் பாருங்க…” என்று லக்ஷ்மி பேசி காண்பிக்க,
“அதுதானே மேம் இது…” என்று வாழைப்பழ காமெடி ஆனது அந்த நிகழ்வு.
“சீரியஸான ஸீனுக்கு சிரிச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு உங்களோட டயலாக் டெலிவரியும், முகபாவனையும்…” என்று சொல்லிக்கொடுத்து ஓய்ந்து தான் போனாள் லக்ஷ்மி.
கிட்டத்தட்ட ஒருமணி நேரமாகியிருந்தது. இன்னும் அந்த பெண்ணின் பேச்சில் எதிர்பார்த்த உணர்வு வரவில்லை.
பேச்சு சரியாக இருந்தால் முகபாவனையில் கவனமில்லை. முகபாவனை வந்திருந்தால் பேச்சில் கவனமில்லை.
இப்படி ஒன்றை ஒன்று தொடாமல் நேரமும் சென்றுகொண்டிருக்க லக்ஷ்மிக்கு பொறுமை கரைந்தது.
அவளளவிற்கு அந்த படப்பிடிப்பு குழுவில் யாரும் பொறுமைசாலி இல்லை. அவளுக்கே மூச்சு வாங்கியது.
“எனக்கே ரெஸ்ட் வேணும் போல. நீ ரெஸ்ட் எடுத்துக்கோம்மா வரேன்….” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள் லக்ஷ்மி.
தண்ணீரை பருகியபடி இருந்தவள் முகத்தை டிஷ்யூவினால் துடைத்துவிட்டு மீண்டும் அந்த பெண்ணை அழைத்து பேச சொல்ல,
அங்கே என்ன நடக்க போகிறதென லக்ஷ்மி மட்டுமல்ல, ஆனந்தும் யூகித்துவிட்டான்.
லக்ஷ்மியிடம் இருந்து அவன் எதிர்பார்த்த அனைத்தும் கிடைத்தது. தலையசைத்துவிட்டு,
“வா…” என்று சொல்லியவன் ஆனந்திடம் கையசைத்து மற்றவர்கள் பக்கம் காண்பித்து செல்ல,
‘வாயை திறக்காம தலையாட்டினா கூட நாமளா புரிஞ்சுக்கனும் எல்லாம்’ என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவன் மற்றவர்களை எல்லாம் அனுப்ப அனைவரும் கிளம்பினார்கள் ஒருசிலரை தவிர.
கதாநாயகி கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தாள். செல்லவும் மனமின்றி அங்கேயே நிற்க,
“கால் பன்றோம் மேம்…” என்றான் ஆனந்த்.
வளர்ந்து வரும் நாயகி அவள். இரு படங்கள் மட்டுமே கொடுத்திருக்க சில மாதங்களாய் அடுத்த பட வாய்ப்புக்காக காத்திருந்தவளுக்கு குருஆர்யனின் படத்திற்கு அழைப்பு.
“ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்க தான் வர சொல்லியிருக்காங்க…” என்று அவளின் தாய் சொன்னாலும்,
“என்னோட பெர்பாமென்ஸ்க்கு கண்டிப்பா ஓகே சொல்லிடுவாங்க. என்ன கேரக்ட்டரா இருந்தாலும் நடிப்பேன். அவர் படத்துல சின்ன ஸீன் வந்தாலும் போதும்…” என்று கிளம்பி வந்திருந்தாள்.
ஆம் கதாநாயகி என்றே சொல்லாமல் தான் வரவழைத்திருந்தனர். முதலில் மேக்கப் போடப்பட்டு சில புகைப்படங்கள் எடுத்திருக்க ஒவ்வொன்றையும் பார்த்தனர்.
அடுத்ததாக நாயகி கதாபாத்திரத்தின் வார்த்தையாடல்கள் அவளுக்கு பேச தரப்பட்டது.
ஓரளவு திருப்தி வரும் வகையில் தான் அவளும் நடித்திருக்க இப்போது இது என்ன சோதனை என்றானது.
தன்னுடன் சேர்ந்து நின்ற அந்த தோழி பெண்ணின் மேல் அத்தனை கோபம் வேறு.
ஆனந்தும் அழைப்பதாக சொல்ல அங்கிருந்து அரைமனதுடன் தான் கிளம்பினாள் அவளுமே.
“என்ன ஸார் லக்ஷ்மி மேம் தான் ஹீரோயின் போல?…” என்ற மற்ற உதவி இயக்குனர்கள் சற்றே கேலியுடன் கேட்க,
“வாய மூடுங்கடா குரங்குகளா. அவருக்கு கேட்டா கடிச்சிருவார். பேசிட்டு சொல்லட்டும்…” என்று வெளியில் நின்றிருக்க கண்ணாடி தடுப்பின் அந்த பக்கம் லக்ஷ்மி யோசனையுடன் இருந்தாள்.
“யூர் விஷ். நான் போர்ஸ் பண்ணலை லக்ஷ்மி. முதல்ல உன்னோட பொறுமையை செக் பண்ண தான் வெய்ட் பண்ணேன். நீ எப்படி ஆர்ட்டிஸ்ட்கிட்ட வேலை வாங்கறன்னு பார்க்க. ஆனா உன்னோட நடிப்பு, சொன்னதும் நடிச்சு காமிச்ச அந்த காண்பிடன்ட் எனக்கு பிடிச்சது…” என்றான் குருஆர்யன்.
“நான் டைரக்டராகறது தான் என் ஆம்பிஷன் ஸார்…” என்று தயக்கத்துடன் லக்ஷ்மி சொல்ல,
“ஸோ வாட்? நடிச்சா படம் டைரக்ட் பண்ண கூடாதுன்னு இருக்கா என்ன? ஓகே நான் சொல்றதை சொல்லிட்டேன். நல்ல பாத்திரம். ரொம்ப வேல்யூ இருக்கும். உனக்கு நான் இந்த கேரெக்டர் பத்தி சொல்லனும்ன்னு இல்லை…” என்றவன்,
“உன்னோட முடிவை நீ நாளைக்கு சொன்னாலும் போதும். நீ நடிக்க வேண்டாம்ன்னு நினைச்சா எனக்கு அஸிஸ்ட் பண்ணிட்டு இரு. அந்த கேரேக்டருக்கு வேற பொண்ணை தேடனும் நான்…” என்றான்.
அவனின் பேச்சில் லக்ஷ்மி குழம்பி போய் அமர்ந்திருக்க அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை குருஆர்யன்.
“ஓகே நான் கிளம்பறேன்…” என்று வெளியே வந்தவன்,
“நைட் வரேன் பாய்ஸ். லொகேஷன் செட்டிங் டிஸ்கஷன் இருக்கு…” என்று மற்றவர்களை அதற்கு இப்போதே தயாராய் இருக்கும்படி சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
“எங்க ஸார்?…” என ஆனந்த் கேட்க,
“வீட்டுக்கு…” என்றவன் தனது போனில் வந்திருந்த குறுஞ்செய்திகளை பார்த்தபடி இருந்தான்.
“ஸார் இன்னைக்கு ஆர்ட் டைரக்டரை மீட் பன்றதா தானே ப்ளான்?…” என்று ஆனந்த் கேட்க,
“ஆபீஸ்ல நான் சொல்லும் போது உன் காதை எங்க வச்சிருந்த மேன்?…” என்றதும் ஆனந்த் திகைக்க,
“நைட்க்கு ப்ரோக்ராம் சேஞ்ச் பண்ணியாச்சு. அவர் வந்திருவார்…” என்று சொல்லவும் ஆனந்த் அடுத்து அமைதியாகிவிட்டான்.
வீடு சென்றதும் அவன் பார்த்தது அனுஷாவை தான். தமயந்தி மகளிடம் பேசிக்கொண்டே அவளுக்கு உணவை ஊட்ட,
“இவ்வளோ நேரமா சாப்பிடாம இருந்த நீ?…” என்றான் அவன்.
இந்தநேரத்தில் அவனின் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை. வந்ததும் கேட்க,
“இன்னைக்கு அனுவை அவ வீட்டுல கொண்டு போய் விடனும் ஆரி. அதான் கிளம்பிட்டிருக்கோம்…” தமயந்தி சொல்ல,
“ஆமா, மாப்பிள்ளை போன் பண்ணி வர சொன்னார்…” என்று சொல்ல,
“ஓகே, உடம்பை பார்த்துக்கோ. எதை சாப்பிடனுமோ அதை மட்டும் எடுத்துக்கோ. சும்மா சின்ன பிள்ளை மாதிரி எதையும் இழுத்து வச்சுக்காத. உன் கஷ்டத்தை பார்க்கிற எங்களுக்கும் கஷ்டம்ன்னாலும் உன் வலியை நாங்க வாங்கிக்க முடியாது. புரியுதா?…” என்றொரு அறிவுரை.
“ஓகே ண்ணா…” என்று தலையை மட்டும் அவள் ஆட்ட,
“சரி சாப்பிடு…” என நகர போனவனை,
“சாப்பிட்டியா ஆரி? இல்லைன்னா குடிக்க எதுவும் தரவா?…” என நிறுத்தி கேட்டார் தமயந்தி.
“ப்ச், போய் ப்ரஷப்பாகிட்டு வரேன்…” என்று மாடிக்கு சென்றுவிட்டான்.
“என்னம்மா அண்ணா சின்னமாமாவை பார்க்க வரலையா?…” என அனுஷா தாயிடம் கேட்க,
“கேட்டா எனக்கு வேலை இல்லையான்னு கேட்பான். தேவையா நமக்கு? கிளம்பும்போது அவன்கிட்ட பேச்சு வாங்காத நீ. அவனுக்கா தோணினா….” என்றவர்,
“அதெல்லாம் எங்க தோணும்? இந்த கேமராவை பிடி, அந்த கோணத்துல நில்லு, கட், ஷாட் ரெடி, பேக்கப் தான் எல்லாம்…” என்று அங்கலாய்த்தபடி மகளுக்கு ஊட்டி முடித்தார்.
“இங்க பாரு அனு, அங்கயும் போய்ட்டு இப்படி ஒருத்தர் உனக்கு ஊட்டனும்ன்னு எதிர்பார்க்கக்கூடாது. ஏற்கனவே சூட்டு உடம்பு உனக்கு. அதிக சூடு சேர்க்கற எதையும் சாப்பிடாம இரு….”
“கண்டிப்பா சாப்பிடமாட்டேன். ஹப்பா அன்னைக்கு என்ன ஒரு வலி…” என்றவளுக்கு இப்போதே பிரசவம் குறித்து அச்சம்.
“ப்ச், அதை எல்லாம் யோசிக்க கூடாது. ஆரி சொன்னதும் ஞாபகம் இருக்கட்டும். உடம்பை பார்த்துக்கோ…” என்று மகளுக்கான அறிமுறைகளை அள்ளி தெளித்தபடி இருந்தார்.
“மது அக்கா நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்கா மாமாவை பார்க்க. நீங்களும் வரீங்களா?…”
“அட என்ன நீ? சின்ன பிள்ளையா? அதான் இன்னைக்கு உன்னை கொண்டுபோய் விட வரேனே? அப்பறம் என்ன அனு? சும்மா சும்மா கூப்பிட்டுட்டு இருக்க? இன்னும் கொஞ்ச நாள் தான். ஏழாம் மாசம் வளைகாப்பு போட்டு இங்க கூட்டிட்டு வந்திருவோம்ல…” என்று சொல்ல அனுஷாவின் முகம் தெளிந்தது.