“ஆமா தானே? சரியா தானே சொல்லிருக்கேன்?…” என்று அப்போதும் அலட்டிக்கொள்ளாமல் கேட்டுவைத்தான் குருஆர்யன்.
‘அட கேள்விக்கு பொறந்தவனே, உன் வாயில பதிலே வராதா?’ என்று நொந்துகொண்டது தான் மிச்சம்.
“சரிடா. ப்ரவன் தங்கச்சி தான் நதி. இப்ப அதுக்கு என்ன?…” என்றவன்,
“இங்க தான் வர போறேன்னா நான் வரும்போதே சொல்லியிருக்கலாமே?…” என்று கேட்டான் பரத்.
“உன்கிட்ட சொல்லி உன் கூடவே வந்து திரும்ப நான் போற இடத்துக்கு என்னை நீ வந்து ட்ராப் பண்ணுவியா?…”
“நல்ல கேள்வி. அடுத்த கேள்வி…” என்று மொத்தமாய் பணிந்துவிட்டான் பரத்.
“அளக்காத. வந்து பொண்ணு ரூம் எங்கன்னு காமி…” என்று ஆர்யா சொல்ல,
“இப்பவா?…” பரத் திகைத்தான்.
“அப்போ வேற எப்போ?…”
“மம்மீ…” என்று தலையை பிய்த்துக்கொண்டான் பரத்.
தன் அண்ணன் செய்வதை பார்த்தபடி அசராது அமர்ந்திருந்தவன் முகத்தில் சின்னதாய் புன்னகை மட்டுமே.
“என்னடா சிரிக்கிற?…” என்ற பரத்,
“வேலை நேரம் ஆரி. இப்பவே பார்க்கனுமா?…” என்று மீண்டும் கேட்டு தன் தம்பி பதில் சொல்லும் முன், இல்லை அடுத்த கேள்வி எழுப்பும் முன்,
“ஆமா, வா…” என்று எழுந்துகொண்டான்.
அதற்குள் வேறு ஒரு விஷயமாக பரத்தின் அறைக்கு வந்த மதுஸ்ரீ அங்கே குருஆர்யனை பார்த்து,
“வாட் எ சப்ரைஸ் ஆரி…” என்றாள் முகமெல்லாம் புன்னகையுடன்.
“நதியை பார்க்க வந்திருக்கான்…” என்று வேகமாய் பரத் சொல்ல,
“எனக்கு வாயில்லையா? நான் சொல்லமாட்டேனா?…” என்று அதற்கும் ஆர்யா தன் அண்ணனை சீண்டியபடி பார்த்தான்.
“அழுதுருவேன். அநியாயம் பண்ணாதடா…” என சொல்லிய பரத்,
“க்கா நீ நதியை பார்க்க கூட்டிட்டு போறியா?…” என்று கேட்க,
“நதியையா? இப்பவா?…” என அடுத்த கேள்வி மதுஸ்ரீ.
சுவற்றில் சாய்ந்து நின்ற ஆர்யா கைகள் இரண்டும் பேண்ட் பாக்கெட்டினுள் இருக்க தன் அண்ணனையும், அக்காவையும் துளைக்கும் பார்வை பார்த்தான்.
“ஆமாவாம். ஸாருக்கு பார்க்கனுமாம். நீ எதாச்சும் கேள்வி கேட்காம போ…” என்று வேறு பரத் சொல்ல,
“கேட்டா பதில் சொல்லிட்டு போறான். இதுக்கேன்டா இவ்வளோ பதறி பார்க்கற?…” என்ற மது,
“அப்பறம் ஆரி? கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டன்னு அம்மா சொன்னாங்க….” என கேட்டாள் மதுஸ்ரீ.
“எப்போ சொன்னாங்க?…” எதிர்கேள்வி தம்பியை அயர்ந்து பார்த்த பரத்,
“போச்சுடா…” என்று சொல்லிவிட்டு,
“பேசிட்டு போய் பாருங்க. நான் ரவுண்ட்ஸ் போகனும். வரேன்…” என நகர பார்த்தான்.
“யாரும் கூட்டிட்டு போகவேண்டாம். எந்த ரூம், எந்த ஃப்ளோர்?…” என்றான் குருஆர்யன்.
“சிக்ஸ்த் ஃப்ளோர். ரூம்க்கு மேல நதி நேம் போர்ட் இருக்கும். ஆனா பேஷன்ட் இருப்பாங்க…” என்றாள் மதுஸ்ரீ.
“ஆரி, நதிக்கிட்ட கொஞ்சம் தன்மையா பேசு. வீட்டுல பேசற மாதிரி எல்லாம் பேசிடாத. பார்த்து…” என பரத் சொல்லிவிட்டு எங்கே பிடித்து நிறுத்திவிடுவானோ என்று ஓட்டமெடுத்துவிட்டான்.
“இவன் ஏன் இப்படி ஓடறான்?…” என்று அடக்கமாட்டாமல் சிரித்த மதுஸ்ரீ,
“வந்ததும் அவனை மிரட்டிருக்க நீ. உன்னை என்னதான் பன்றது ஆரி?…” என்று சொல்லி,
“வா நான் வரேன்…” என்றாள்.
“ம்ஹூம், நான் பார்த்துப்பேன். அப்பறம், நீ இங்கயே வெய்ட் பண்ணு. நான் வந்து பேசறேன். கிளம்பிடாத க்கா…” என்று சொல்லிவிட்டு அறையை திறந்துகொண்டு செல்ல மதுஸ்ரீ தாய்க்கு அழைத்தாள்.
“என்னது அங்கையா? என்கிட்ட சொல்லவே இல்லையே? அவனை தனியா வேற பார்க்க அனுப்பினியா நீ? கூட போயிருக்க வேண்டாமா? அவகிட்ட என்ன பேச போறானோ?…” என்று தமயந்தி ஓயவில்லை.
“நீ சொல்லுக்கா, உன் மாமனார் திரும்ப எதுவும் பேசினாரா?…” என்று மதுவிடம் கேட்க,
“நிதீஷ் என்னவோ சொல்லிருப்பான் போல. நடந்ததுக்கு ஸாரி கேட்டு சுமூகமா பேசிட்டு வாங்கன்னு. அதனால இந்த வீக்கெண்ட் மாமா, அத்தை, பாக்கியம் சித்தி எல்லாரும் நதி அப்பாவை பார்க்க போகனும்ன்னு சொல்லிட்டிருந்தார். உன் விஷ்ணு மாமா போகவேண்டாம்ன்னு ஒரே சத்தம்…” என்றாள் மதுஸ்ரீ சங்கடத்துடன் கீதாவை பார்த்துக்கொண்டே.