“என்னை பார்த்ததும் டென்ஷனான மாதிரி இருந்ததே?…” என்றான் அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து அவளை பார்த்து.
“ஓஹ், அது உங்களை பார்த்த டென்ஷன் இல்லை. பேஷண்ட் சரியா கோ-ஆப்ரேட் பண்ணனுமேன்னு தான்…” என்று இலகுவாய் சொல்ல ஆர்யனின் விழிகள் அவளின் முகத்தில் ஆராய்ச்சியாய் பதிந்தது.
“என்ன விஷயம்? சொல்லுங்க…” என்றாள் நனியிதழ்.
இப்போதும் அந்த அறைக்குள் அவள் குரல் அத்தனை மெலியதாய் கேட்க குருஆர்யன் மனதிலோ அவளிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாததை எண்ணி ஒரு கேள்வி.
“கல்யாணத்துக்கு ஓகே சொன்னதா அப்பா சொன்னாங்க…” என்று சொல்லவும் இப்போது அந்த நொடி நனியிதழ் முகத்தில் அந்த மாறுதல்.
“ஓஹ், நான்னு தெரிஞ்சும் எப்படி ஓகே சொன்ன?…” என கேட்டவனை விழி உயர்த்தி பார்த்தவள்,
“நீங்கன்னா என்ன? ஏன் சொல்லக்கூடாது?…” என்று அவனை அதிரவைத்தாள் நனியிதழ்.
“நான்னா?…” என்றவனுக்கு திகைக்க தான் முடிந்ததே தவிர சட்டென வார்த்தை எழும்பவில்லை.
எதிர்கேள்வி கேட்டே பழக்கப்பட்டவனை இப்போது அவள் ஒருநொடியில் நிறுத்தி வைக்க ‘ஹைய்யோடா’ என்றானது குருஆர்யனுக்கு.
சில நொடிகள் மௌனத்தில் கரைய, தான் பேச வந்ததை ஆரம்பிக்க நினைத்தான் குருஆர்யன்.
“ஓகே, நான் சொல்லவந்ததை சொல்லிடறேன். நான் பேசின பின்னாடி உனக்கு அதுல ஆட்சேபனை இருந்தா நான் வேண்டாம்ன்னு தோணினா வீட்டுல சொல்லிரு. அப்படியே ஸ்டாப்…” என்றவனை இடைமறித்து,
“இன்னும் சொல்லவே இல்லை. இவ்வளோ பூடகம் தேவையா?…” என்றாள் அவனுக்கு கொஞ்சமும் அசராமல்.
‘இவளை’ என்று நனியிதழ் பேச்சில் உண்மைக்கும் டென்ஷனாகிவிட்டான் குருஆர்யன்.
“வெல், எனக்கு இந்த கல்யாணத்துல சில கண்டிஷன்ஸ் இருக்கு…” என்று வரவழைத்துக்கொண்ட பொறுமையுடன் ஆரம்பித்தான்.
“ஹ்ம்ம்…”
“பர்ஸ்ட் கண்டிஷன். முதல்ல என்கிட்ட இப்படி வாய்க்குள்ளையே பேசக்கூடாது. சத்தமா பேசனும், கேள்வி கேட்டா திரும்ப கேட்கிற மாதிரி இல்லாம பதில் உடனே வரனும்…” என்று சொல்ல,
“இப்பவும் நான் பேசறது கேட்கலையா?…” என்றாள் அவள் அவனிடம் கேள்வியாக.
அதற்கு பதில் சொல்லாமல் ஒரு பார்வை மட்டுமே பார்க்க தலையசைத்தாள் நனியிதழ்.
“கல்யாணத்துக்கப்பறம் என்னை இங்க வாங்க, அங்க போகனும்ன்னு இழுத்து பிடிக்க கூடாது. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது. உனக்கு ஒரு விஷயம் செய்யனும்ன்னா தாராளமா செய். அது உன் சுதந்திரம். அதுல என்னைக்கும் நான் தலையிடமாட்டேன்…”
“ஓஹ், ஓகே…” என்றாள் அலட்டிக்கொள்ளாமல்.
“என்னோட பேஷன் என்னன்னு தெரியும். நான் ஒரு டைரக்டர். சினி பீல்ட். சில நேரம் நிறைய காசிப்ஸ், நிறைய ரூமர்ஸ் வரும்…” என்றதும் நனியிதழ் சிரிப்பை அடக்க முயன்று லேசாய் தலையை குனிந்துகொண்டாள்.
‘இவனுக்கு யாரோடையும் வந்துட்டாலும்?’ என தோன்றிய எண்ணம் அவள் இதழில் புன்னகையாய் விரிய செய்ய,
“என்ன சிரிக்கிற?…” என்றவனின் கேள்வியில்,
“இல்லையே…” என்றாள் உடனே சிரிப்பை விழுங்கியபடி.
ஆனாலும் அந்த கண்கள் குறும்பாய் சிரிப்பதை காண்பித்து கொடுக்க ஆர்யனின் மனது அதனை உள்வாங்கியபடி அடுத்தது எடுத்துக்கொடுத்தது.
“அதனால அது எல்லாத்தையும் மண்டையில ஏத்தக்கூடாது. முக்கியமா உன்னோட விளையாட்டுத்தனமான விஷயங்களுக்கு என்னை இழுக்கவேக்கூடாது. அம்மா சொன்னாங்க, அப்பா சொன்னாங்கன்னு ஒன்னொண்ணுக்கும் என்னை கால் பண்ணி நச்சரிக்கக்கூடாது…” என்று வரிசையாய் அவன் அடுக்கிக்கொண்டே சென்றான்.
“இன்னும் இருக்கா?…” என்றவள் கை கடிகாரத்தை பார்க்கவும், அவளை முறைத்தவன்,
“நிஜமாவே இந்த கல்யாணத்துல உனக்கு ஓகே வா?…” என்றான் இன்னும் நம்பமுடியாமல்.
“என்னோட சம்மதத்தை நான் நேத்தே சொல்லிட்டேன். இன்னும் வேற என்ன வேணும்?…” என்றாள்.
“கொஞ்சம் முன்னாடி தான் சொன்னேன். என்கிட்ட பேசும்போது சத்தமா பேசுன்னு…” என்று சொல்ல,
“எனக்கு இந்த கண்டிஷன்ஸ் மட்டும் தானே தவிர மத்தபடி பிரச்சனை இல்லை. கல்யாணம், ப்ராப்பர் ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப் லைஃப் எல்லாமே தான். புரியுதா?…” என்றும் விளக்கி அவளை ஆழமாய் பார்த்தான்.
“உன் நம்பர்ல இருந்து எனக்கொரு ரிங் குடு. உன் நம்பர் சேவ் பண்ணிக்கறேன்…” என்று இயல்பாக சொல்ல,