“என்ன வேணும்? என்ன தேடற?…” என்று காரை கிளப்பாமல் குருஆர்யன் கேட்க,
“இந்த பொங்கலை வைக்க ஏதாவது கவர், இல்லைன்னா பாக்ஸ் கிடைக்குமான்னு தான்…” என்று சொல்ல சட்டென காரை கிளப்பிவிட்டான்.
பின்பக்க இருக்கையில் எதுவும் தெரிகிறதா என்று தேடிக்கொண்டிருந்தவள் இதனை எதிர்பார்க்காததால் தடுமாறி அவன் மேல் சாய்ந்து விழுந்து தன்னிருக்கையில் அமர்ந்து நெஞ்சில் கைவைத்து அவனை பார்க்க,
“நீ தேடினதை கவனிக்கலை. அன்ட் இந்த கார்ல அப்படி எல்லாம் எதுவும் இருக்காது…” என எரிச்சல் மிகுந்த முகத்துடன் அவன் சொல்ல,
“பரவாயில்லை, கையிலையே வச்சுக்கறேன்..” என்றாள் நன்றாக அந்த இலையை சுருட்டி.
“இந்த பேப்பர் வேஸ்ட் பேப்பரா?…” என்று டேஷ்போர்டில் இருந்ததை காண்பிக்க,
“இப்ப என்ன? பொங்கல கைல வச்சிருக்க வேண்டாம்ன்னா என்கிட்டே குடு. எதுக்கு இதை பிளேஸ் பண்ண இடம் பார்த்து தத்தளிக்கிற?…” என்று பொறுமையற்ற குரலில் சொல்ல,
“நீங்க தான் கை கழுவலையே? வேண்டாம்ன்னு சொன்னீங்க?…”
“ஆமா, இப்பவும் அதான் சொல்றேன். கை கழுவலை. ஆனா பொங்கல் வேண்டாம்ன்னு சொல்லலை. ஏன் நீ தா?…” என்றான் விவரமாய்.
கேட்டமாதிரியும் இல்லை. கேட்காத மாதிரியும் இல்லை. ஆனால் வேண்டும். கண்டிப்பாக தந்து தான் ஆகவேண்டும் என்னும் பிடிவாதம் அந்த குரலில் அவசரமாய் ஒளிந்துகிடந்தது.
“ஊட்டி விட சொல்றீங்களா?…” வியப்பதை போல கிண்டலை மறைத்துக்கொண்டு நனியிதழ் அப்பாவியாய் கேட்க,
“ஆமா. என்னவாம்?…” என்றவன்,
“இன்னொரு முக்கியமான விஷயம். இப்படி இதழை விரிச்சு குவிக்காத இதழ். புரியுதா? பப்ளிக்ல செய்யக்கூடாது…” என்று கட்டளையிட,
“உங்க கண்டிஷன்ல இதுவும் சேர்த்தியா?…”
“இருக்கலாம். ஆட் பண்ணிக்கோ….”
“ஆனா இது கார்…”
“கார் என்ன வீட்டுக்குள்ளையா இருக்கு? ரோட்ல தான?…” என்றவன் தன் கைவிரல்களை விரித்து மடக்க,
“ஓகே…” என்றாள்.
“ஊட்டி விட வா?…” அவன் அடக்கப்பட்ட சந்தோஷத்துடன் மீசையை ஒரு விரலால் கீறியபடி அழைக்க,
“நீங்க என்ன குழந்தையா ஊட்டிவிட?…” என்றாள் கிண்டலாக.
“குழந்தைக்கு தான் ஊட்டனும்ன்னு சட்டமா என்ன? ஆபத்துக்கு பாவமில்லை….” என்றவனை அதற்கு மேலும் சோதிக்க விரும்பாமல்,
“ட்ரைவ் பன்றீங்களே?…” என்றாள் சிரிப்புடன்.
காரை அடுத்த இரண்டு நிமிடத்தில் அரவமற்ற இடம் பார்த்து நிறுத்தி தனக்கு பின்னால் வந்துகொண்டிருந்த மதுஸ்ரீயின் வாகனத்தை பார்த்து ஜன்னலை திறந்து,
‘இவங்க அராஜகம் இருக்கே? அப்பப்பா’ என்றவள் அவன் தன் பக்கம் திரும்பும் நேரம் முகத்தை சாதுவாக வைத்துக்கொண்டு,
“கார்ல தண்ணி இருக்கே. இந்தாங்க கை கழுவ….” என்று எடுத்து நீட்ட,
“சத்தியமா உன்னை இங்கயே எதாச்சும் செஞ்சுட போறேன் பாரு…” என்றவன் அவள் பக்கம் திரும்பி அமர்ந்து நனியிதழின் வலதுகையை பொங்கலில் அழுத்தி தன்னிதழ் அருகே கொண்டுவந்துவிட்டான்.
“பொங்கல் ஸ்வீட் தானே?…” என்று கண்களால் ருசித்தபடி கேட்க,
“சாப்பிட்டு பார்த்தா தானா தெரிஞ்சிட போறது?…” என்றாள் அவன் பார்வையின் பாஷையில்.
மெல்லமெல்ல பொங்கலோடு விரல்களையும் நிறுத்தி நிதானமாய் ருசி பார்த்தவன் மனதின் வெப்பம் குளிர ஆரம்பித்தது.
“பொங்கல்ல இன்னும் கொஞ்சம் இனிப்பு சேர்த்திருக்கலாம்…” என்றவன்,
“காலையில நான் சரியா சாப்பிட கூட இல்லை. தெரியுமா?…” என்று கேட்க,
“ஓஹ், நீங்க டயட்ல இருக்கீங்கன்னு நினைச்சேன்…”
“நினைச்சுட்டே இரு. வீட்டுக்கு வந்து நான் நனைக்கறேன் பாரு…” என்று சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.
வீட்டிற்கு வந்து சேரும் பொழுது நரசிம்மன், ஸ்ரீநிவாசன், சுஜாதா என அவர்கள் பக்க சொந்தங்களோடு அனைவரும் வந்திருந்தார்கள்.
“அப்பா…” என்று வேகமாய் உள்ளே நுழைந்தவள் அவரின் கையை பற்றி அவரருகில் அமர்ந்துகொண்டாள்.
“எப்படிம்மா இருக்க?…” என்று நரசிம்மன் மகளை நெகிழ்வாய் பார்த்து கேட்க,
“மாத்திரை போடற உடம்பு. அதுக்கே தானா தூக்கம் வந்திருமே…” என்று சொல்ல, குருஆர்யன் அனைவரையும் பார்த்து வாங்க என்று அழைத்ததோடு நனியிதழ் அருகில் அமர்ந்துகொண்டான்.
“ஆமா, கோவிலுக்கு தனியா போனன்னு சொன்னாங்க?…” வேண்டுமென்றே அவன் கேட்கட்டும் என்றே நரசிம்மன் கேட்க,
“தனியா என்ன தனியா? வீட்டுல இருந்து அம்மா, அப்பா அண்ணன்னு எல்லாரும் தான் போனாங்க…” அவரின் மாப்பிள்ளை விவரமாய் பதில் கூறினான்.
“அது நித்தைக்கும் போகலாம். இன்னிக்கு புருஷன் கூட தான போகனும். அது தான முறை?…” நரசிம்மன் விடவில்லை.
“அதான் போய்ட்டு வந்தாச்சே?…” குருஆர்யன் சாவகாசமாய் பதில் கூறினான்.
“அட இருங்கப்பா…” என்ற ஸ்ரீநிவாசன் சத்தத்தில் தான் அவர்கள் மட்டுமே அங்கே பேசிக்கொண்டிருக்க மற்ற அனைவரும் பீதியுடன் பார்த்துக்கொண்டிருக்க கண்டனர் இருவரும்.
“இப்ப எதுக்கு இவ்வளோ பயந்து பார்க்கறீங்க? மாமனார், மருமகன்னா இது கூட இல்லாமலா?…” என்று நரசிம்மன் சமாளித்துவிட்டார்.
சற்றுநேரத்தில் அந்த இடம் கொஞ்சம் கலகலப்பை கூட்ட விருந்து அமர்க்களப்பட்டது.
அனைவரும் உண்டு முடிக்க தான் அமரும்பொழுதே நனியிதழை உடன் அழைத்துக்கொண்டான்.
“சம்பிரதாயம்…” என்று நரசிம்மன் எதிரமர்ந்தவன் சொல்ல,
“ம்க்கும்…” என்றார் அவர்.
“என்ன, உங்கப்பாவை ரொம்ப சீண்டறேனோ?…” என உணவுக்கிடையில் அவளிடம் கேட்க,
இது எல்லாம் அவருக்கு பழக்கமில்லாதது. அவருக்கு தெரியாமல் கேட்க குருமூர்த்தி தான் கனிவுடன் பார்த்தார்.
“இங்க இந்தமாதிரி மாற்றங்கள் சகஜம் தான். நீங்க கவலைப்படாதீங்க…” என்று சொல்லி அனுப்பினார்.
அனைவரும் உறங்க செல்லவும் தங்கள் அறைக்குள் நனியிதழ் வர கட்டிலில் அமர்ந்திருந்தான் குருஆர்யன்.
“நீங்க கீழ தானே இருந்தீங்க? எப்போ வந்தீங்க?…” என்று இயல்பாய் கேட்டுக்கொண்டே வந்து இரவு உடையை எடுக்க,
“நான் வந்ததை கூட கவனிக்கலையா நீ?…” என்றான் அவளிடம்.
“கவனிக்கலைன்னு இல்லை. ஆனா பார்க்கலை…” என்று சொல்லும்பொழுதே குரல் உள்ளடங்கிவிட்டது.
“நீ கார்டன்ல அனுஷாவோட வாக்கிங்ல இருக்கும்போது வந்தேன். அதுக்குள்ள ஏன் உன் குட்டி வாய்ஸ் இன்னும் உள்ள போயிருச்சு?…” என சிரித்தவன் தன்னருகே கட்டிலை தட்டி காண்பித்து அழைக்க,
“என்ன கேட்க? நாளைக்கு குட்நைட் சொல்லிக்கலாம் தானே?…” என்றவன் கைகள் மொத்தமாய் அவளை எடுத்துக்கொள்ள நனியிதழ் மலர் அவன் பார்வையால், ஸ்பரிசத்தால், அணுகியலால் ஆராதிப்பை கொண்டாடியது.