“இன்னும் கொஞ்சம் நெய் விட சொல்லட்டுமா?…” தெளியாத முகத்துடன் தமயந்தி கேட்க, நனியிதழ் கவனித்துவிடாதவாறு மதுஸ்ரீ வாய் பொத்தி சிரித்தாள்.
“நெய் போதும் அத்தை. இனிப்பு பத்தலைன்னு நேத்து சொன்னாங்க. அதை மட்டும் பார்த்துப்போம்…” என்றவள்,
“அண்ணி எனக்கு போதும்ன்னு தோணுது. நீங்களும் டேஸ்ட் பாருங்க…” என்றாள் ஒரு ஸ்பூனில் சர்க்கரை பொங்கலை எடுத்து மதுவுக்கு நீட்டியபடி.
“இப்படியே இதோட பாதி பொங்கலை நானும், கீதாவும் தான் காலி பண்ணியிருக்கோம். உன் புருஷனுக்கு கொஞ்சம் மிஞ்சட்டும்மா நதி….” என்று மது சொல்ல,
“என்ன இப்போ? இதுக்கு ஒரு கிண்டலா? கல்யாணம் ஆனா நமக்கு தெரிஞ்சதை புருஷனுக்கு செஞ்சு குடுக்க ஆசைப்படுவோம் தானே? அதான். நேத்து கேட்டாங்களேன்னு இப்ப நானே செய்யறேன்…” என்று தோளை குலுக்கிவிட்டு மீண்டும் பொங்கலை கிளறினாள் நனியிதழ்.
“போதும் நதி. ஏற்கனவே பொங்கல் குழைஞ்சு போச்சு. இன்னும் கிண்டினா அல்வா தான். நீ பொங்கல் குடுக்கறியா? அல்வாவா?…” என்றாள் கீதா சிரிப்புடன்.
“அல்வாவா இருந்தாலும் இப்ப என்ன?…” நனியிதழ் அதனையும் புன்னகையுடன் சொல்ல,
“அதானே ஏற்கனவே அம்மாவுக்கு ஆரி அல்வா குடுத்தாச்சே…” மதுஸ்ரீக்கு தமயந்தி முகத்தை பார்க்க பார்க்க சிரிப்பு அடங்கவில்லை.
“எப்போ? நான் கவனிக்கலையே?…” நனியிதழ் அத்தனை சீரியஸாக கேட்க,
“நீ போய் ஆரி வந்தாச்சான்னு பாரு. எல்லாரும் சாப்பிட வர சொல்லனும்…” என்று முதலில் அவளை அனுப்பிவைத்தாள் கீதா.
“ஹ்ம்ம், நானும் அப்படியே அப்பாவுக்கு ஒரு கால் பண்ணிட்டு வரேன். எப்போ கிளம்பறோம்ன்னு சொல்ல சொன்னாங்க. இங்க ப்ரேக்பாஸ்ட் முடிஞ்சதும் கிளம்பனும்ல. சொல்லிட்டு வரேன்…” என்று கையை கழுவிவிட்டு வெளியேறினாள் நனியிதழ்.
“இப்ப சொல்லுங்க. என்ன விஷயம்?…” என்று கீதா மதுவிட கேட்க,
“அங்க உன் மாமியாரை கேளு. பாரு, இடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நிக்கிறதை?…” என மது கூற,
“ம்மா, நீங்க அம்மா இல்லாம அர்னால்டா? சும்மா தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி…” என்று மது சத்தமாகவே சிரித்தாள்.
“ஏன் சொல்லமாட்ட? உன் தம்பி மாதிரி ஒருத்தனை பெத்தா வேற என்ன செய்ய?…” என்று தமயந்தி மூக்கை உறிந்துகொள்ள,
“அட அண்ணி, என்னன்னு தான் சொல்லுங்களேன். என்னாச்சு அத்தைக்கு?…” கீதா மதுவை தன் புறம் திருப்பினாள்.
“நதி வந்து ஆரிக்கு சர்க்கரை பொங்கல் செய்யனும்ன்னு கேட்டதுல இருந்தே இப்படித்தான் ப்யூஸ் போன மாதிரி இருக்காங்க அம்மா…” மது கிண்டல் பேச,
“அதுக்கு ஏன் ப்யூஸ் போகனும்?…” கீதாவிற்கு இன்னும் விளங்கவில்லை.
“சரியா போச்சு. ஆரி பொங்கலே சாப்பிடமாட்டான். இதுல சர்க்கரை பொங்கல் வேறையா? அதான் அம்மா அதிர்ச்சில இருக்காங்க…” என்ற மதுஸ்ரீ,
“இந்த வீட்டுக்கு வந்து இவ்வளோ நாளாச்சு. இன்னுமா உனக்கு தெரியாது?…” என கீதாவையும் கேலி பேச,
“என் புருஷனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா நீங்க கேட்கலாம். ஆரிக்கு பிடிக்காததை, பிடிச்சதை நான் தெரிஞ்சு என்ன பண்ண போறேன்?…” என்றாள் அதே கேலியுடன்.
“கீதா மது சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னா…” என தமயந்தி சட்டென பதட்டமாய்.
“நான் எதுவும் சொல்லலையேத்தை. உங்களுக்கு என் டென்ஷன் வேறையா?…” என்ற கீதா,
“ஏன் அண்ணி, நான் சரியா தானே சொன்னேன்?…” என்று மதுவிடமும் கேட்க,
“உன் சமத்தை அந்த வளர்ந்தவனுக்கும் சொல்லிக்குடு. பிழைச்சுப்பான்…” என்றாள் மதுஸ்ரீ புன்னகை மாறாமல்.
‘புரிதல்கள் இருக்குமிடத்தில் விளக்கங்களுக்கு ஏது அவசியம்?’ என்பதை போலிருந்தது அவர்களின் உறவுமுறை.
“ஹ்ம்ம்…” என பெருமூச்சுடன் தமயந்தி நிற்க,
“எதுக்கு இவ்வளோ பெரிய பெருமூச்சு? ஒரு விஷுவல் ட்ரீட் இப்ப நடக்க போகுது? நீங்க ரிவெஞ்ச் எடுக்கவேண்டிய நேரம் த்தை இது. பார்ப்போம் உங்க பிள்ளை என்னதான் பன்றார்ன்னு…” என கீதா சொல்ல,
“ம்மா, இன்னைக்கு எப்படி சாப்பிடறான்னு நாமளும் பார்க்க தான போறோம். கோவில் பிரசாதம், சாப்பிடுடான்னு எவ்வளோ தடவை சொல்லியிருப்பீங்க? தொட்டு பார்த்திருப்பானா அவன்? வரட்டும்…” என்றாள் மது.
பசி வேறு வயிற்றை கிள்ளியது. இதில் பொங்கலின் வாசம் அவனை இழுத்துக்கொண்டிருக்க தலையை ஆட்டியபடி,
“தாயே….” என பார்த்தான் தமயந்தியை.
“அஞ்சு நிமிஷம் இரேன்டா. சேர்ந்து சாப்பிட்டு கிளம்புவோம்…” தமயந்தியும் சொல்ல,
“பெத்தமனசு பித்தத்திலும் பித்தமாடா பாட்டை உடனே சேஞ்ச் பன்றேன்…” என்று முறைத்தவன்,
“மாமா, வட்ட கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவாம்…” என்று விஷ்ணுவிடம் திரும்பி ராகம் பாடினான் பரத்.
“பொங்கல் இங்க இல்லையின்னு சொன்னாங்க. அதானடா?…” என்றான் விஷ்ணு அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“அதே தான்…” கீதாவும் கேலியில் இறங்க,
“யூ டூ வொய்ப்?…” என பல்லை கடித்தான் பரத்.
“மாமாவுக்கு பசிக்குதுன்னா சாப்பாடு வைக்கலாமே? அண்ணா வரப்போ வரட்டும். அதெல்லாம் எதுவும் நினைச்சுக்கமாட்டான்…” என்றாள் நனியிதழ் அங்கே நடக்கும் விஷயம் புரியாமல்.
“இங்க ஒரு வலை விரிச்சிருக்கோம். சிக்குதா இல்லையான்னு பார்க்க வெய்ட் பண்ணினா நீ மொத்தமா பாய சுருட்டிட்டு கிளம்புன்ற?…” என்று கீதா நனியிதழிடம் சொல்ல,
“நதி அத்தை பேசறாங்க…” என்றாள் அனுஷா தன் போனை நீட்டி.
“போ, போய் பேசிட்டு வா…” என்று மது சொல்ல நகர்ந்தாள் நனியிதழ்.
“என்ன வலை? யாருக்கு வலை?…” என்று விஷ்ணு கேட்க கீதா நடந்ததை சொல்ல,
“நேத்தே தெரியாதா உங்களுக்கு?…” என்றான் விஷ்ணு.
“ம்ஹூம். நதி சொல்லலை. காலையில அவ வந்து பொங்கல் செய்ய போறேன்னு சொல்லவும் தான் விஷயமே தெரியும். இதுல இனிப்பு பத்தலைன்னு சொல்லிருக்கான் ஆரி. வரட்டும்…” என மதுஸ்ரீ.
“இந்த ஆப்பரேஷனுக்காக இன்னிக்கு நான் விரதமே இருக்கேன்…” பரத் குதூகலமாய் ஒப்புக்கொண்டான்.
“அவன் ஒருத்தனை சிக்க வைக்க எவ்வளோ ஆர்வம் எல்லாருக்கும்? என்ன நடக்க போகுதோ?…” விஷ்ணு சொல்ல,
“பெட், இன்னைக்கு ஆரி அண்ணா சாப்பிடமாட்டாங்க…” அனுஷா பந்தயத்திற்கு தயாரானாள்.
“அதே பெட். கண்டிப்பா சாப்பிடுவான். என்ன பரத்?…” மது அவனிடம் கேட்க,
“யார் ஜெயிச்சா என்ன? தோத்தா என்ன? இன்னைக்கு அவன் முகம் போற போக்கை பார்க்கனும்….” என்று பரத் தனி வழியில் சென்றான்.
தமயந்தி அனைத்து உணவு வகைகளும் வந்துவிட்டதா என சரிபார்த்துவிட்டு வர ப்ரவனும் வந்துவிட்டான்.
அவன் வந்திருப்பதாக குருமூர்த்தியிடம் தமயந்தி சொல்லவும் ஆர்யாவுடனான பேச்சை நிறுத்திவிட்டு அவர் வெளியே வர உடன் குருஆர்யனும் வந்தான்.
“வாங்க…” என்ற ஆர்யா ப்ரவனை வரவேற்று விசாரித்து பேசிக்கொண்டிருக்க,