இதுவே முன்பென்றால் நடந்திருப்பதே வேறு. சட்டென்று கோபத்தில் பொங்கிவிடுவான்.
இப்போது அவன் நடந்துகொண்டதும், கோபத்தை அடக்கிக்கொண்டு மனைவியை தேடி சென்றதும் உள்ளூர அப்படி ஒரு மகிழ்ச்சியை தந்திருந்தது.
“விடுங்க மாமா. இதுல என்ன இருக்கு? சும்மா ஒரு ஃபன்க்கு பண்ணினது. என்னதான் இருந்தாலும் பெர்பெக்ட் ஹஸ்பன்ட் அப்படின்னு அவார்ட் குடுக்கலாம் ஆரிக்கு…” என்றாள் கீதா அந்த இடத்தை இலகுவாக்கும் பொருட்டு.
“இதுமட்டுமில்லை. இங்க பெட்டிங் எல்லாம் போச்சு. அனுஷாவும், மது அண்ணியும் பெட் கட்டினாங்க. ஆரி சாப்பிடுவாரா, மாட்டாரான்னு. எல்லாத்துக்கும் மேல என் வீட்டுக்காரருக்கு அந்த நிமிஷம் ஆரி எப்படி திணறி போறாருன்னு பார்க்கனுமாம். பெரிய மோட்சம் கிடைக்கும் போல?…”
கீதா பரத்தின் தோளில் கிள்ளியபடி விஷயத்தை சொல்ல ப்ரவன் சத்தமாய் சிரிக்க,
“என்ன இருக்காம்? பாராசிட்டமாலும், சிட்ரிசினுமா?…” என்று அதற்கும் கேலி பேசினாள் கீதா.
“என்ன தமயா, அமைதியா இருக்க?…” என்று கேட்ட குருமூர்த்தி,
“இந்தளவுக்காவது அவன் நதிகிட்ட ஒத்து போறானேன்னு சந்தோஷப்படு….” என்று சொல்ல,
“நான் அதை யோசிக்கலை…” என்றார் தீவிர சிந்தனையுடன் தமயந்தி.
“நான் அம்மா. அதானே?…” என்று மது கேலி பேச,
“ப்ச், பேசாத நீ…” என்று மகளை அதட்டியவர்,
“இனிமே நதிக்கிட்ட சொல்லி ஆரி எதெல்லாம் சாப்பிட மாட்டானோ அதயெல்லாம் செய்ய வச்சு சாப்பிட வச்சிடனும். அதத்தான் யோசிக்கிறேன்…”
“சரியா போச்சு. ம்மா நீங்க கவனிச்சீங்க தானே? ஆரி சாப்பிட முடியாம இருக்கறதை பார்த்து அவ எல்லாம் எடுத்து வாய்ல போட்டுட்டு போய்ட்டா. அதெல்லாம் நடக்காது…” என்று மது பேச,
“சரி, முதல்ல அவங்களை வர சொல்லு. எதுவுமே சாப்பிடாம போய்ட்டாங்க…” என்றார் குருமூர்த்தி.
“எல்லாமே நல்லநேரம் தான். அவங்க ரெண்டுபேரும் விட்டுக்குடுக்காம இருக்காங்க. இதைவிட என்ன வேணும்? வரட்டும். வெய்ட் பண்ணுவோம்…” என்றான் ப்ரவன் புன்னகையுடன்.
மாடிக்கு சென்ற குருஆர்யன் பார்த்தது அங்கே சோபாவில் தலையை தாங்கியபடி சம்மணமிட்டு அமர்ந்திருந்த நனியிதழை தான்.
பொத்தென்று அவளருகில் அவன் அமர அவனின் வரவை கவனிக்காதவள் அதிர்வுடன் நிமிர்ந்தாள்.
“என்ன உடனே வந்துட்டீங்க?…” என்று அவனிடம் கேட்க,
“ஏன் வரக்கூடாதா?…” என்றான் சாவகாசமாக.
அவள் முகத்தில் கவலையும், வருத்தமும் போட்டி போட்டுக்கொண்டிருக்க குரலுமே என்னவோ போலிருந்தது.
“ப்ச், கையை எடு. நேரா உட்கார்…” என்று சொல்லி அவளை தனக்கு ஏதுவாய் அமரவைத்தவன்,
“வெய்ட்…” என்று சொல்லி எழுந்து சென்று கதவை பூட்டிவிட்டு வந்து அவள் மடியில் தலையை சாய்த்தான்.
“ஹ்ம்ம், அப்பறம்?…” என்று குருஆர்யன் கேட்க,
“என்ன அப்பறம்? சாப்பிடாம வந்துட்டீங்க நீங்க…”
“சாப்பிட்டேனே? நீ தான் பார்த்தியே?…”
“ப்ச், அது சாப்பாடா?…” என்று அவள் ஆயாசத்துடன் கேட்க,
“பொங்கல்….” என்றான் முறைப்புடன்.
குருஆர்யன் சொல்லவும் சிலநொடிகள் நனியிதழ் மௌனம் சாதிக்க அவளின் கையை எடுத்து தன் சிகைக்குள் நுழைத்தான்.
“சூடாகிருச்சு. ஃப்யூ மினிட்ஸ்…” என்று சொல்லி கண்ணை மூடிக்கொள்ள,
“எனக்கு தெரியாது உங்களுக்கு பிடிக்காதுன்னு. யாரும் சொல்லவும் இல்லை…” மெல்லிய குரலில் நனியிதழ் அவன் தலை கோதியபடி முணுமுணுக்க,
“என்கிட்ட கேட்கவேண்டியது தானே?…” என்றான் மீண்டும் விழி திறந்து.
“நேத்து நீங்க பிடிவாதமா சாப்பிட்டதால உங்களுக்கு புடிச்சதுன்னு நினைச்சேன். அதான் சமைச்சேன்…” என்று சொல்லியவளை ஒற்றை கையால் அவள் பின்னங்கழுத்தில் கைகொடுத்து தன் முகம் நோக்கி இழுத்தான்.
“பிடிவாதமா நிறைய பண்ணுவேன். என்ன வேணா செய்வியா நீ? ஒருவார்த்தை கேட்கமாட்டியா? அவ்வளோ பேரும் என்னை கேலியா பார்க்கற மாதிரி…” என்றவன் அவள் விழிகளின் அசைவில் அமைதியானான்.
“கழுத்து வலிக்குது…” என அவன் கையை விலக்க பார்க்க மெல்ல விடுவித்தவன்,
“ம்ஹூம். பசியெல்லாம் போயிருச்சு. என்னவோ தப்பு பண்ணி உங்களை எல்லார் முன்னாடி விட்டுட்ட மாதிரி ஆகிடுச்சு. நான் இதை எதிர்பார்க்கலை…”
“ப்ச், விடு…” என்றான் இலகுவாய்.
“உங்களை யார் நேத்து அப்படி சாப்பிட சொன்னது?…”
“அதெல்லாம் கல்யாணம் ஆன புதுசல அப்படித்தான். கொஞ்சம் ரொமான்ஸ் ட்ரை பண்ணலாம்ன்னு பார்த்தேன். ஆனா ஒன்னு, நீ பொங்கல் வைக்கலை. அதுக்கு பதிலா என்னை தூக்கி அடுப்புல வச்சிட்ட….” என்றதும் பக்கென்று சிரித்தவள் அவனின் மீசையை பிடித்து வலிக்க இழுத்தாள்.
“அவ்வளோ பேரும் சிரிக்கவா செஞ்சாங்க. பேசிக்கறேன்…” என்றும் சொல்ல நனியிதழ் முகத்தில் சிரிப்பு பொங்கி ததும்ப கீதா அழைத்துவிட்டாள் தங்கைக்கு.
“அக்கா கூப்பிடறாங்க. கிளம்பனும் போல…” என்று சொல்ல,
“என்கிட்ட குடு…” என்றவன் அதனை கட் செய்து பரத்திற்கு அழைத்தான்.
“சொல்லு நதி…” என அவன் கேட்கவும்,
“டேய் அண்ணா…” என்றான் குருஆர்யன்.
“எதே அண்ணாவா?…” பரத் ஆணியடித்ததை போல நின்றுவிட்டான் தம்பியின் அழைப்பில்.
“அண்ணான்றானே? என்னன்னு தெரியலையே?…” என்று ஆச்சரியமும், அதிர்ச்சியுமாய் சத்தமாய் பரத் சொல்ல மது, கீதா, விஷ்ணு, தமயந்தி, அனுஷா அனைவரும் பரத்தை சூழ்ந்தனர்.
ப்ரவன் சிரிப்புடன் இதனை பார்க்க, குருமூர்த்தி தலையில் தட்டிக்கொண்டார் இவர்களின் அலப்பறையில்.
“ப்ச், அந்த ஆராய்ச்சி எல்லாம் அப்பறம் வச்சுக்கோ. இங்க எனக்கு பொங்கல் சாப்பிட்டதால ஒரே தலைவலி. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். புரியுதா?…” என்று குருஆர்யன் சொல்ல,
“அதை ஏன்டா என்கிட்ட சொல்ற?…” என பரத்.
“நீ தான் விவரமா பேசுவியே. என் மாமனாருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிரு…” என்று உத்தரவிட,
“என்ன நானா?…”
“ஆமா. இல்லைன்னா எல்லாரும் கிளம்புங்க. நானும் என் வொய்பும் சேர்ந்து அப்பறமா வரோம்…” என்று சொல்லி குருஆர்யன் அழைப்பை துண்டித்துவிட,
“என்னால முடியாது. என்னை என்னன்னு நினைச்சிட்டு இருக்க? எல்லாம் உன் இஷ்டமா? வேணும்னா நீயே உன் மாமனாருக்கு சொல்லு. வொய் மீ?…” என்று இங்கே அவன் குதிக்க,
“தம்பி போன் வயரு பிஞ்சு போச்சு…” என்றான் விஷ்ணு அவனின் தோள் தட்டி.
“போச்சா?…” என்று பரத் விளக்கெண்ணெய் குடித்ததை போல முழிக்க,
“நீ கவலையே படாத பரத். அக்கா நீ பேசினதை வீடியோ எடுத்து வச்சிருக்கேன். ஆரிக்கு அனுப்பிருவோம்…” என்றாள் மதுஸ்ரீ கண்சிமிட்டி.
“எனக்கும் சென்ட் பண்ணுங்க அண்ணி. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸா வச்சிக்கறேன். இந்த மாதிரி வரலாற்று அதியசத்தை எல்லாம் நாம பதிவு பண்ணியே ஆகனும்…” என்று கீதா ஒருபக்கம் கேலி பேச,
“மம்மீ…” என்றான் தமயந்தியிடம் பரத்.
“நான் கூட நிஜமாவே ஆரிக்கிட்ட பேசினன்னு நினைச்சேன்டா பரத்…” என்றார் தமயந்தி பெருமூச்சுடன்.
அத்தனை கலாட்டாக்கள் கீழே நடக்க அனைத்திற்கும் காரணமானவன் பொங்கலின் நிறைகுறைகளை மனைவியிடம் அவசர ஆலோசனையில் நிவர்த்தி செய்துகொண்டிருந்தான்.
“அவ்வளோ பேரும் கீழே வெய்ட் பன்றாங்க. என்ன செய்யறீங்க?…” என்றவளின் பிடிவாதம் அவனுக்கு மேல் விஞ்சி நின்றது.
மிச்ச சொச்சங்களை அள்ளி சிந்தாமல் சிதறாமல் அணைத்து களைத்து அலும்புடன் வாங்கி கோர்த்து சேர்த்துக்கொண்டு, அரைமணி நேரத்தில் இருவரும் கீழே வந்து சேர்ந்தனர் புதுமண தம்பதிகளாய் முகத்தில் ஒளிரும் நிறைவுடன்.