லேசாய் குளியலை போட்டுவிட்டு வேகவேகமாய் வந்தவள் எண்ணெயை இதமாய் சூடு செய்து எடுத்து வந்து குருஆர்யன் தோளில் பூசி நீவி விட அந்த சூழ்நிலையில் அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“வலிக்கலையா? சிரிக்கறீங்க?…”
“ம்ஹூம், ஒரு காமெடி ஸீன் நினைச்சு பார்த்தேன். அதுல சந்தனம். இங்க எண்ணெய்…”
“எனக்கென்ன அவசியம்? எனக்கு எந்த ஸீனும் தோணலை…” என்று தேய்த்துமுடித்து கட்டிலைவிட்டு எழுந்துகொள்ள,
“எங்க போற இதழ்? முடிஞ்சதா? இன்னும் வலிக்கிற மாதிரி இருக்கே?…” என்றான் அவளை ஒரு கையால் இழுத்து நிறுத்தி.
“வேறெங்க? லொக்கேஷன் பார்க்கத்தான்…” என்று நகைப்புடன் சொல்லியவள் அவனின் பதிலை எதிர்பார்க்க அப்பட்டமான முறைப்பு தான் ஆர்யாவின் முகத்தில்.
“ஐ மீன், நான் அந்த மீனிங்ல சொல்லலை. எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. அதான் தெரியாத இடத்தை சுத்தி பார்க்கலாமேன்னு சொன்னேன். அந்த லொகேஷன்…” என்றவள் நக்கலில் இன்னுமே முறைத்து தலையணையை தூக்கி அவள் மீது வீச,
“நீங்க சொன்னா நாங்க கேட்டுக்கனும். நான் சொன்னா கேட்க முடியாதோ?…” என்றவள் தன் மேல் விழுந்ததை அவனிடமே திருப்பி வீச என்று சிலபல நொடிகள் விளையாட்டில் செல்ல தலையணை படுக்கை விரிப்புகள் இங்குமங்குமாய் கலைய கைவிலங்குகள் மீண்டும் வலுவானது.
“திரும்ப குளிக்கனும்…” என்று அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள் நனியிதழ்.
“அது எதுக்கு திரும்ப திரும்ப? தண்ணி வேஸ்ட். அங்கங்க தண்ணிக்கு எவ்வளோ பஞ்சம். நீ இப்படி சமுதாய பொறுப்பே இல்லாம இருந்தா எப்படி? சொஸைட்டியை யார் காப்பாத்த?…” என்றவன் மீண்டும் குறும்புடன் மனைவியின் அணைப்பிற்குள் அடங்க பார்க்க,
“அவ்வ்வா, உங்கட்ட பேச முடியுமா?…” என்றவள் தன் வாயில் கைவைத்து சொல்ல,
“தணிகாச்சலம் திரும்ப வரார். கூடவே நிதீஷ் வரதா சொல்றாங்க….” என்றான் ப்ரவன்.
“ஓஹ், வரட்டும். அதனால என்ன?…” என்று சாதாரணம் போல குருஆர்யன் கூறினாலும் இதை சொல்லும்பொழுதே அவனின் பற்கள் நறநறத்தது.
“ஒன்னும் இல்லை தான். இருந்தாலும்…”
“இருந்தாலும், இல்லைன்னாலும் இப்ப அது ஒரு விஷயமே இல்லை. நான் வீடியோ முடிச்சிட்டு சொல்றேன்…” என்று அழைப்பை துண்டித்தான்.
அங்கே ப்ரவனுக்கு தான் டென்ஷன். இதனை ஆரம்பித்திருக்கவே கூடாதோ என்று.
‘இவரை பத்தி தெரிஞ்சும் போய் சொன்னேன் பாரு’ என்று தலையில் அடித்துக்கொண்டான்.
ப்ரவனிடம் பேசி முடித்த குருஆர்யன் பாதுகாப்பிற்கு வந்திருப்பவர்களிடம் கேமராவை வாங்கி வைக்கும்படி சொல்லிவிட்டு வந்து அமர்ந்திருக்க நனியிதழ் குளித்து முடித்து புடவையில் வந்துநின்றாள்.
“என்னாச்சு திரும்ப கை எதுவும் வலிக்குதா? உக்கார்ந்துட்டீங்க?…” என்று அவனின் தோளை தொட,