அவளுடன் வந்த சுஜாதாவும் சிரிப்புடன் வந்து காலை உணவு அடங்கிய கூடையை வைத்துவிட்டு,
“எல்லாம் காரணமா தான் வந்திருக்கா அவ…” என்று புன்னகைத்தவர்,
“இப்ப டாக்டர் வந்தாங்களா? என்ன சொன்னாங்க?…” என்று நனியிதழிடம் கேட்க கீதா அங்கிருந்த கேஸ் ஷீட்டை எடுத்து பார்த்தாள்.
“நான் கேட்டதுக்கு இதுவா பதில்?…” என நனியிதழ் கேட்டாலும்,
“நைட் ட்யூட்டில இருந்த டாக்டர் மார்னிங் ரவுண்ட்ஸ் போகும் போது ஒரு விசிட் பார்த்துட்டு போயிருக்காங்க. பெட்டர்ன்னு சொன்னாங்க. மேபி நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு சொன்னாங்க…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், பிபி லெவல் எல்லாம் நார்மலுக்கு வந்திருக்கு. ட்ராவல், சரியா தூக்கமில்லை. அங்க ஊர்ல சாப்பிட்ட சாப்பாடு செரிக்கலை. அதான் இப்படி காம்ளிகேஷன். பயப்படவேண்டாம்…” என்றாள் கீதாவும்.
“சரி முதல்ல டிபனை குடு. எழுப்பு உன் அப்பாவை…” என்ற சுஜாதா உணவு அடங்கிய கூடையை பிரிக்க கீதாவும் அவருக்கு உதவினாள்.
கூடவே தன் கை கடிகாரத்தையும் பார்த்துக்கொள்ள சுஜாதாவிற்கு சிரிப்பு வந்தது.
“இங்க பார்த்து எடுத்து வை. அவங்க இப்பதான் கிளம்பியிருக்காங்கலாம்…” என்றார் அவர் கிண்டலாய்.
“ம்மா…” என்றவள் சிணுங்கலுடன் எடுத்து வைக்க நனியிதழ் ஒன்றும் புரியாமல் தகப்பனை எழுப்பி குளியலறை அழைத்து சென்றாள்.
“நானே நடந்துப்பேன் நதி…” என்று நரசிம்மன் சொன்னாலும் அவரின் கைகளை பிடித்திருந்தவள் விடவில்லை.
“இருக்கட்டும் ப்பா. இன்னும் உங்க கை நடுக்கம் எல்லாம் குறையலை. பிடிச்சுக்கோங்க. நாளைக்கு நீங்களே எழுந்து போவீங்களாம்…” என்று மென்னகையுடன் சொல்லி அழைத்து சென்று விட்டுவிட்டு வாசலில் நின்றாள்.
“வார்ட்பாய் யாரையாச்சும் வர சொல்லலாமே நதி?…” என்ற சுஜாதா,
“இந்த ப்ரவனுக்கு வேற இன்னைக்கு முக்கியமான வேலையா போச்சு…” என வருந்தினார்.
“ப்ச் ம்மா, நேத்து ஃபுல்லா பெரியப்பாவும், அண்ணாவும் இங்க தானே இருந்தாங்க. சும்மா பேசக்கூடாது. நாம இருக்கோமே? அதுவுமில்லாம பிரஷ் பண்ண தானே? அப்பா மேனேஜ் பண்ணிப்பாங்க…” என சொல்லியவள் மீண்டும் நரசிம்மன் வரவும் முகத்தை துடைத்துவிட்டு தலையை வாரிவிட்டு தள்ளி நின்று பார்க்க,
“போடா டேய்…” என்றார் சிரிப்புடன் நரசிம்மன்.
“போதும் போதும், முதல்ல சாப்பிடுங்க. அப்பறம் கொஞ்சிக்கலாம் மகளை…” என்றார் சுஜாதா.
“எனக்கு மட்டும் வச்சு, நீங்க எல்லாம் வாய் பார்த்துட்டு நிக்க போறீங்களா? எல்லாருக்கும் தான கொண்டு வந்திருப்பீங்க. எடுத்து வைங்கம்மா. ஒன்னொன்னும் சொல்லனும்…” என அதட்டலுடன் நரசிம்மன் சொல்ல,
“அதானே பார்த்தேன்…” என்ற சுஜாதா தங்களுக்குமே எடுத்து வைத்தார்.
“அது எப்படி சித்தப்பா, எங்களுக்கும் சேர்த்து தான் கொண்டுவந்திருப்போம்ன்னு கரெக்ட்டா சொன்னீங்க?…” கீதா கேட்கவும்,
“எல்லாம் ஒரே குட்டை மட்டைங்க தானே? தெரியும், தெரியும்…” என இட்லியை காரமில்லாத சாம்பாரில் தொட்டு உண்ண,
“இதுல ஒன்னும் குறையில்லை. பேசாம சாப்பிடுங்க…” என்ற சுஜாதா அனைவரின் உணவையும் கவனித்தார்.
“நதி, இன்னும் ஒன்னு வச்சுக்கோ…” என்று இட்லியை வைக்க போக,
“போதும் ம்மா. எனக்கு முடியலை…” என்றுவிட்டாள் அவள்.
“சாப்பிட முடியலை போல. விடுங்க. வீட்டுக்கு வரவும் சேர்ந்து கவனிச்சுப்போம்…” என்று சொல்லி கீதா சுஜாதாவை அமைதிப்படுத்த, அனைவரும் உணவை முடிக்கவும் ட்ரைவரை வர சொல்லி அந்த கூடையை கொடுத்தனுப்பினார் சுஜாதா.
“மாத்திரை எடுத்து குடு…” என நதியிடம் சொல்ல அவளும் எடுத்து தர,