“அதனால என்ன? கல்யாணத்துல பார்த்துப்போம்…” என்று நனியிதழ் சொல்ல,
“உனக்கு அண்ணி நான். ஞாபகமிருக்கா மேடம்? என்னை விட்டுட்டு நதியோட போற நீ?…” கீதா அனுஷாவை வம்பிழுக்க அதில் அனுஷா திகைத்து,
“அதில்லைண்ணி. இன்னைக்கு தான் உங்க தங்கச்சியை பார்த்தேனா?…” என்று திணறினாள் அனுஷா.
“அடடா, இதென்னடா இப்படி பயப்படறீங்க? ஹலோ அண்ணி, நீங்களும் கீதாக்காவுக்கு அண்ணி தான். அவங்க அண்ணனை தானே கல்யாணம் செஞ்சுக்க போறீங்க? பதிலுக்கு கேட்க வேண்டாமா?…” என்றாள் சிரிப்புடன் கண்சிமிட்டி நனியிதழ்.
“நீ என்ன அவளுக்கு பாயின்ட் எடுத்து குடுக்கற?…” என்று கீதா தங்கையுடன் மல்லுக்கு நிற்க,
“நீங்க வேற வீட்டுக்கு போயிருவீங்க. என்னனாலும் நாளைக்கு என் அண்ணி தானே எனக்கு சப்போர்ட் பண்ணனும். பாவம் இவ்வளோ அப்பாவின்னா அவங்களை நான் தானே பார்த்துக்கனும்…” என்று நனியிதழும் பேச கீதாவின் கலாட்டாவில் இன்னும் அனுஷா தெளியவில்லை.
“போச்சு போ. விளையாட்டுக்கு சொன்னேன்ம்மா. இதுக்கென்ன கோவம்? சும்மா தான் கேலி பண்ணேன். இப்படியெல்லாம் இருந்தா ப்ரவன் ஏப்பம் விட்டுட்டு போயிருவான்…” என்ற கீதா,
“எனக்கென்னமோ தோணுது, ப்ரப்போஸ் பண்ணி மிரட்டி ஓகே சொல்ல வச்சிட்டானோ அந்த ராஸ்கல்?…” என்று கேட்க,
“அதெல்லாம் மிரட்டலை. நல்லா தான் பேசினாங்க…” அனுஷாவின் முகத்தில் வெட்கக்கோடுகள்.
“இது பார்க்க எப்படி இருக்கு? க்யூட்ல…” என்றாள் நனியிதழ்.
“அங்க ரெண்டுபேருமா பேசிட்டிருக்கீங்க? என்னம்மா நதி நீ அமைதியா சிரிச்சிட்டே நிக்கிற?…” என்றார் தமயந்தி மூன்று பெண்களையும் திரும்பி பார்த்து.
ஆம், பேச்சில் கீதா, அனுஷா இருவரின் குரல்கள் தான் சத்தமாக கேட்க, நனியிதழ் குரல் அருகில் நின்றவர்களுக்கு மட்டுமே ஒலித்தது.
அத்தனை மென்மையாக மெலிதாக இருக்க சற்று தள்ளியிருந்தவர்களுக்கு காதில் விழவில்லை.
“நதியும் பேசிட்டு தான் இருக்கா. அவ குரலே அப்படித்தான். மெதுவா தான் பேசுவா. ஆனா கலகலப்பான பொண்ணு…” என்றார் சுஜாதா.
“சரிங்க சம்பந்தி. நாங்க கிளம்பறோம். பார்த்துக்கோங்க…” என்ற தமயந்தி மகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
பரத் நரசிம்மனை பார்த்துவிட்டு மீண்டும் பரிசோதனைகளை எல்லாம் முடித்துவிட்டு மறுநாள் வீட்டிற்கு அனுப்பினான்.
“கவனமா பார்த்துக்கோ கீதா. வீட்டுல சொல்லிரு. மைல்டான அட்டாக் சிம்டம்ப்ஸ் தான். காட்ஸ் கிரேஸ்…” என்று அவரின் பரிசோதனை செய்த அறிக்கைகளை காண்பித்து சொல்ல, நனியிதழ் இதனை எதிர்பார்க்கவில்லை.
“இன்னும் கவனமா பார்த்துக்கலாம் நதி. நீ வொர்ரி பண்ணாதடா…” என்று அவளை தேற்றியிருந்தாள் கீதா.
கலங்கும் கண்களை துடைத்தபடி தலையசைத்துவிட்டு கிளம்பினாள் நனியிதழ். வீட்டில் நரசிம்மனுக்கு எதுவும் சொல்லப்படவில்லை.
ஆனால் மனிதர் மகளின் கவலை முகம் கண்டே கண்டுகொண்டிருந்தார். மெலிதான புன்னகையும்.
“வயசாகுதுலம்மா நதி. எல்லாத்தையும் நாம ஏத்துக்க தான் வேணும். விதிக்கப்பட்டது தானே நடக்கும்? அப்பா எங்க இருந்தாலும் உன் கூடவே இருப்பேன். உன் அம்மா மாதிரி…” என்றார் அவர்.
சொல்லும்பொழுதே குரல் தழுதழுக்க உடைந்துவிடாமல் இருக்க இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டனர்.
“சின்ன பிள்ளையை அழவிட்டுட்டு. என்ன இதெல்லாம்? கீதா டாக்டர் தானே நீ? சொல்லமாட்டியா? நல்லா ஆரோக்கியமா உடம்பையும், சந்தோஷமா மனசையும் வச்சுக்கிட்டாலே நூறு வயசு வாழலாம்…” என்று சுஜாதா நரசிம்மனை பிடிபிடியென்று பிடித்துவிட்டார்.
என்றைக்கும் ஒற்றை வார்த்தையில் அடக்கியாளும் நரசிம்மன் ஒன்றும் சொல்லாமல் உறைந்துவிட்ட புன்னகையுடனே ஸ்ரீநிவாசனின் கையை ஒருபுறமும், மகள் கையை ஒருபுறமும் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
அவர்களை தங்களுடனே இருக்கும்படி ஸ்ரீநிவாசன் சொல்ல முழுமூச்சாய் மறுத்துவிட்டார் நரசிம்மன்.
“வருவேன். எங்க போயிட போறேன். எனக்கு நீ தான இருக்க? ரிட்டயர்டாகிட்டு வரேன். வந்த பின்னாடி போன்னு சொல்லிருவியா நீ?…” என்றார் சிரிப்புடன் நரசிம்மன்.
“இல்லப்பா, நான் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். என் கூடவே இரு…” என்றார் பதறி போய் ஸ்ரீநிவாசன்.
“இன்னும் சின்ன புள்ளையாவே இருக்க நீ…” என்றார் நரசிம்மன் ஸ்ரீநிவாசனின் கன்னத்தை தட்டி சிரித்தபடி.
இருவரின் பிணைப்பையும் கண்டு பிள்ளைகளின் மனம் கலங்க, சுஜாதாவிற்கு அழுகை முட்டியது.
நரசிம்மன் ஸ்ரீநிவாசனுக்கு எத்தனை முக்கியமென்பதை திருமணம் செய்துகொண்டு வந்த நாளிலிருந்தே பார்க்கிறாரே.
அவரின் தைரியம், நம்பிக்கை, ஊன்றுகோல் எல்லாம் நரசிம்மன் தான். இருவரும் இப்படி என எத்தனையோ சொல்லிவிட்டாலும் எந்த சொல்லுக்குள்ளும் அடங்காத உறவு அது.
நனியிதழ் முகத்தில் அமைதியை, வேதனையை தாண்டிய ஒரு பயம் அப்பிக்கிடக்க,
“டேய் குட்டிப்பொண்ணு. இப்படியா நிக்கிறது? வா, வா. நாம வேற வேலையை பார்ப்போம். அண்ணனை, தம்பியை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்?…” என்று கீதாவுடன் சேர்ந்து அவளை அழைத்து சென்றுவிட்டான் ப்ரவன்.
அங்கே தான் அந்த வாரம் முழுவதும் இருந்தனர். இன்னும் இருநாளில் தக்கலை கிளம்ப வேண்டும்.
அன்று சபிதாவுடன் வாய்ஸ் டெஸ்ட்டிற்கு ப்ரவனின் டிவி சேனலுக்கு வந்திருந்தாள் நனியிதழ்.
“செலெக்ட் ஆகிடுவேனா நதி?…” என ஆயிரமாவது முறையாக கேட்டுவிட்டாள் சபிதா.
“எப்படித்தான் உனக்கு இப்படி ஆசையோ? செய்தி வாசிக்கனும், ஆங்கர் ஆகனும்ன்னு. என்னவோ போ. ஒழுங்கா பேசினாலே போதும். சிபாரிசு எல்லாம் செய்ய முடியாது. ப்ரவன் அண்ணா என் காதை திருகிருவாங்க. வேக்கென்ட் இருக்குன்னு தெரிஞ்சது. உனக்கு சொன்னேன். அவ்வளோ தான்…” என்றாள் நனியிதழ்.
“இப்படி கழட்டி விடறியே?…”
“சரி புலம்பாத. பதட்டமில்லாம பேசு. உச்சரிப்பு கரெக்ட்டா இருக்கட்டும். கிடைக்கிறதும், கிடைக்காததும் ரெண்டாவது. பெஸ்ட் ஆஃப் லக்…” என்று கைகுலுக்கியவள்,
“சின்ன ஷாப்பிங் இருக்கு. நான் ஸ்கூட்டியை எடுத்துட்டு போறேன். நீ முடிக்கிறதுக்குள்ள வந்திடறேன்…” என்று சொல்லி சபிதாவை அனுப்பிவிட்டு ஸ்கூட்டியை திருப்பினாள் நதி.
மூன்று வளைவுகள் தாண்டி வெளியே வர வரும்பொழுது உள்ளே வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் உழற்றலால் தடுமாறி அங்கிருந்த உயர்ரக காரின் மேல் மோதிவிட்டாள் நனியிதழ்.
“ஓஹ் ஷிட்…” என்றபடி தன்னையும் ஸ்திரப்படுத்தும் முன் தானும் விழுந்திருக்க எழும்பொழுதே,
“இடியட்…” என்றவனின் சத்தத்தில் உடல் தூக்கிப்போட திரும்பினாள் நனியிதழ்.
“கண்ணை என்ன பின்னாடியா வச்சிருக்க? இந்த காரோட வேல்யூ தெரியுமா?…” என்று கத்தியிருந்தான் குருஆர்யன்.
இன்னும் நனியிதழ் யாரென்று அவனுக்கும் தெரியவில்லை. தெரிந்துகொள்ள நேரமும் வாய்க்கவில்லை.
இதனை எதிர்பார்த்திராதவள் உடலெல்லாம் நடுக்கம் பரவ, கூடுதலாய் அவன் பேசிய வார்த்தையில் சுருக்கென்ற வேதனை.
“நான் நான் வேணும்னு…” என்றவள் குரல் இன்னும் உள்ளடங்கி போக பேசமுடியவில்லை.
“வாட் என்ன? என்ன சொன்ன?…” என்றவனின் ஏக வசன பேச்சுக்களும், தன் யாரென்று தெரியாதிருக்கையில் அவன் விளித்த ஒருமையும் அவளின் தார்மீக கோபத்தை பற்றவைத்தது.
“எக்ஸ்ட்ரீம்லி ஸாரி. இது தெரியாம தான் நடந்திருச்சு…” என்றவள் குரல் வேறு அதிக சத்தத்தில் வருவேனா என்று சண்டித்தனம் செய்ய,
“என்ன? என்ன சொன்ன?…” என்றான் குருஆர்யன் இன்னும் அருகில் வந்து.
அதற்குள் அங்கே நின்றிருந்த பணியாளர்கள் வேறு வந்துவிட, ஆர்யாவின் உதவியாளனும் வந்துவிட அனைவரும் பார்க்கையில்,
“தெரியாம நடந்திருச்சு ஸார். இந்த டேமேஜுக்கு நானே பொறுப்பேத்து…” என்றவள் முடிக்கும் முன்,
“எவ்வளோன்னு சொன்னா செஞ்சிட போறியா? காரோட ரேட் என்ன தெரியுமா? முதல்ல ஒழுங்கா வண்டியை ஓட்ட பழகு….” என்றவனின் இளக்காரமான பேச்சில் வெகுண்டுவிட்டாள்.
“லீவ் இட். போகட்டும் விடுங்க…” என்று அங்கிருந்தவர்களை பார்த்து எள்ளலாய் சொல்லி, நனியிதழையும் அவளருகில் கீழே விழுந்திருந்த ஸ்கூட்டியையும் ஒருபார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றான் குருஆர்யன்.
அத்தனைபேரின் முன்னால் அவன் செய்த அவமரியாதையும் தாங்கி நனியிதழ் நின்றதென்னவோ சில நொடிகள் தான்.
கண்ணில் பொங்கி நின்ற நீரை துடைத்துவிட்டு தனது அலைபேசியில் அங்கே தனக்கு தெரிந்த மெக்கானிக் ஒருவருக்கு அழைத்து ஆர்யாவின் காரில் விழுந்திருந்த பகுதியை காண்பித்து எவ்வளவு செலவாகும் என்று கேட்க நிம்மதியானது.
தொகை நிச்சயம் அவளால் கொடுக்க முடிந்தது தான். மீண்டும் நரசிம்மனுக்கு அழைத்து குருஆர்யனை சொல்லாமல் தான் ஒரு வாகனத்தை கவனக்குறைவால் சேதப்படுத்தியதாக சொல்லி பணம் தர போவதாகவும் கூற,
“அப்பா வரவாடா…” என்றார் நரசிம்மன்.
“பிரச்சனை இல்லைப்பா. தப்பு என் பக்கம். அதுக்கு பணம் குடுக்கனும் தானே?…” என்று சொல்லியவள் தொகையை சொல்லி,
அருகில் இருந்த வங்கிக்கு சென்றவள் பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த கட்டிடத்திற்கு வந்ததும் ப்ரவனுக்கு அழைத்தாள்.
“ண்ணா என்ன பன்றீங்க?…” என கேட்க,
“இங்க ஆர்யன் வந்திருக்கார் நதி. பேசிட்டிருக்கேன். கிளம்பிட்டியா, இங்க தான் இருக்கியா?…”
“ஹ்ம்ம், நான் வரேன்…” என்று சொல்லியவள் மேலே செல்ல அதற்குள் ப்ரவனின் மேனேஜர் கீழே வந்துவிட்டார் நனியிதழை அழைக்க.
ப்ரவனும், ஆர்யாவும் பேசிக்கொண்டிருக்க மேனேஜரை அறை வாசலிலேயே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
“இவ தான் என் தங்கச்சி நதி…” என ப்ரவன் சொல்லவும் ஆர்யா திரும்பி பார்க்க அவன் விழிகளில் திடுக்கிடல்.
“ஹாய்…” என்று முகத்தில் சிரிப்பின்றி அவனிடத்தில் சொல்லியவள் தனது ஹேண்ட்பேக்கில் இருந்த பணத்தை எடுத்து ஆர்யாவின் முன்னே வைத்துவிட்டு அடுத்த அதிர்வை ஆர்யா வெளிப்படுத்திய நேரம்,