ரகு தன்னை அழைத்து செல்ல வரவில்லை என்றதில் மதுவின் மனம் வெகுவாக சுணக்கம் கொள்ள வீடு வந்து சேர்ந்தவளுக்கு அவனிடம் பேசினால் மட்டுமே தன்னால் அடுத்து எதையும் செய்ய முடியும் என்ற நிலையில் அறையினுள் நுழைந்ததும் முதல் வேலையாக கைபேசியின் பாகங்களை ஒன்றிணைத்து சிம்மை பொருத்திரகுவிற்கு அழைத்துவிட்டாள்.
நண்பர்களுடன் இருந்த ரகு அவள் அழைப்பை கண்டு இதழ்கள் வளையஅதை ஏற்காமல் சைலென்ட்டில் போடவும் “என்ன மச்சி பேசலை” என்றான் காளி.
“இல்லடா அவ தேடினதும் நான் கிடைச்சுட்டா என் அருமை புரியாது கொஞ்ச நாள் என் ஏக்கத்துலயே கிடக்கட்டும் அப்பத்தான் என் திட்டம் ஈஸீயா நிறைவேரும்” என்று தன் திட்டத்தை நண்பர்களுக்கு விளக்கிட அவர்களோ அசந்து போய் அவனை பார்த்திருந்தனர்.
இங்கு பலமுறை அவனுக்கு அழைத்து தோற்று போன மதுஇறுதியாக கைபேசியை மெத்தையில் விட்டெறிந்துவிட்டு கண்ணீரோடு அமர்ந்தாள். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே சவீதா அவள் கதவை தட்டவும் கைபேசியை மறைத்துவிட்டு முகம் கழுவிவிட்டு கதவை திறந்தாள்.
அன்று மட்டுமல்ல அதன் பின்பான நாட்கள் ஏகாம்பரத்திடம் நன்மதிப்பை பெற சவிதா எந்நேரமும் மதுவுடனேஇருக்கவும் பெரிதாக ரகுவுடன் பேச முடியாமல் போனவள் அன்று காலை பள்ளி செல்லும் முன் மறக்காமல் ரகு சொல்லி கொடுத்தது போலவே கைபேசியை சென்னை எடுத்து செல்வதற்காக பிரித்து பெட்டியில் யாருக்கும் தெரியாத வகையில் பத்திரபடுத்தினாள்.
அன்றோடு மதுவின் இறுதி பரீட்சை முடியவும்அவளை பள்ளியில் இருந்து அழைத்து செல்ல ரகுவிற்கு பதில் மணி வந்திருந்தார்.
“ஏன் நீங்க வந்திருக்கீங்க..? ரகு எங்க மணிண்ணா..?”
“ஐயா ஏதோ வேலையா அனுப்பி இருக்கார்மா..”
“என்ன வேலைன்னு உங்களுக்கு தெரியுமா..?”
“தெரியலம்மா..”
‘அப்படி என்ன வேலையாக இருக்கும்‘ என்று யோசித்தவாறே வீட்டிற்கு வந்தவள் உடனே கைபேசியை எடுத்து ஒன்றிணைத்து ரகுவிற்கு அழைக்கவும் கதவு தட்டபடவும் சரியாக இருந்தது.உடனே கைபேசியை மறைத்தவள் சென்று கதவை திறக்க ஏகாம்பரமும் பார்வதியும் நின்றிருந்தனர்.
“அப்பா..”
“எக்ஸாம் எப்படி பண்ணின மதும்மாகண்டிப்பா சென்டம் வந்துடும் தானே.. இப்போதான் சிவா அங்கிள் கிட்ட சொல்லிட்டு இருந்தேன் ஆனா நீ ஒண்ணுமே சொல்லாம உள்ள வந்துடவும் கொஞ்சம் பதறிடுச்சு… நிச்சயம் வந்திடும் தானே..?”
“அப்பா லைட்டா தலைவலி இருந்தது அதான் நேரே இங்க வந்துட்டேன் ஸாரிப்பா எக்ஸாம் நல்லா பண்ணினேன் குவெஸ்டின் பேப்பர் ரொம்பவே ஈசியா இருந்தது கண்டிப்பா சென்டம் வந்துடும் நிச்சயம் ஸ்கூல் பர்ஸ்ட் வந்துடுவேன்ப்பா”
“என்னது ஸ்கூல்ஃபர்ஸ்ட்டா..? நான் நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவன்னுல நினைச்சுட்டு இருந்தேன்.. எங்க தப்பு நடந்தது” என்று மகளிடம் கேட்க, “அது வந்துப்பா..” என்று புரியாமல் மதுவர்த்தினி தயங்க,
“நோ நோ நோ… எனக்கு எந்த எக்ஸ்கியூஸும் வேண்டாம் இன்னொருமுறை இந்த தப்பு நடக்ககூடாது..நீட் எக்ஸாம்லஇந்தியா லெவெல்ல நீ முதலிடம் வரணும் அதுக்கு இப்போ நீ செய்த தப்பெல்லாம் என்னன்னு பார்த்து திருத்ததணும் வா வந்து உட்காரு” என்று மகளிடம் அமர்ந்து பேச தொடங்கியவர் இரண்டு மணி நேரங்களுக்கு பின்னர் கிளம்பவும் அறைக்கு வந்த பார்வதி,
“சரி சரி சீக்கிரம் வந்து சாப்பிடு மது இன்னும் ஒரு மணி நேரத்துல நாம கிளம்பனும் உன்னோட திங்க்ஸ் எல்லாம் ஒருமுறை சரி பார்த்துக்கோ” என்றார்.
“இல்லமா எனக்கு பசிக்கல நான் திங்க்ஸ் பேக் பண்றேன்” என்று அவள் பெட்டியை எடுத்து வைக்கவும்,
“ஏன் அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றாரு அவருக்கு உன்னை கண்டிக்க உரிமை இல்லையா என்ன..? அதுக்காக சாப்பாடு வேண்டாம் சொல்லுவியா..?” என்று கணவரின் முகம் சுணங்கி போனதில் எழுந்த வருத்தத்தோடு மகளை கடிந்தவர் அறையிலிருந்து வெளியேறி சமையலறைக்கு சென்று சவீதாவிற்கும் பேரனுக்கும்உணவு கொண்டு சென்றார்.
அவர்கள் குடும்பத்துடன் வெளியில் செல்லும் போது பெரும்பாலும் ரகு தான் காரை எடுப்பான் ஆனால் அவன் இல்லாமல் போகவும்பெரும்தவிப்புடன் கீழே இறங்கிய மதுவின் விழிகள் ரகுவை தேடி அலை பாய்ந்தது.அவன் எங்கும் இல்லாமல் போனதில் கண்களில் நிறைந்து விட்ட நீருடன் பார்வதி மற்றும் சவிதாவிற்கு நடுவில் அமர்ந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் சென்னையை நோக்கி புறப்பட்டது ஏகாம்பரத்தின் கார்.
*******************************
இன்றோடு மதுவர்த்தினி சென்னை நீட் கோச்சிங்ல்சேர்ந்து மூன்று வாரங்களை கடந்துவிட்டது.புது சூழல் அவளது மனக்காயத்தை ஓரளவு சற்று மட்டுபடுத்தி இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
விடுதியில்சேர்ந்த புதிதில் தினமும் யாருக்கும் தெரியாமல் மது ஃபோனில் ரகுவை தொடர்பு கொண்டாலும் அவள் அழைப்பை ஏற்காமல் முழுதாக தவிர்த்து அவளை தவிக்க வைத்திருந்தான் ரகு.
‘ஏன் ரகு இப்படி பண்ற..? உன்கூட பேசத்தானே ஃபோன் வாங்கி கொடுத்த இப்போ பேசாம போனா எப்படி..? எனக்கு ஃபோன் பண்ற அப்பா அம்மா எல்லாரும் என்னை எப்படி இருக்கன்னு கூட கேட்காம நல்லா படிக்கிறியா கண்டிப்பா இந்தியா லெவெல்ல மார்க் எடுக்கணும்னு பேசுறாங்க.. எனக்கு கஷ்டமா இருக்குடா‘ என்று மனதோடு அவனிடம் மன்றாடியவளின்தவிப்புகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டனர் அவளோடு தங்கியிருந்த ஷாலினியும், ஜீவிதாவும்.
மது ஹாஸ்டலில் சேர்ந்த அடுத்த நாள் தான் அவர்கள் இருவரும் பெற்றோருடன் விடுதிக்கு வந்திருந்தனர். மதுவின் அறையை இவர்களுக்கு ஒதுக்க சிரிப்பும் கலாட்டவுமாகலக்கேஜ்ஜோடு வந்தவர்கள் அறையில் மது சோகமே உருவாய் அமர்ந்திருப்பதை கண்டு ஒருவரை ஒருவர் சிலநொடி பார்த்துகொண்டனர்.
ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அந்த அறையின் வண்ணத்தை ஜீவியும் ஷாலுவும் நிறம் மாற்றியிருந்தனர்.
அவர்கள் வயதுக்கே உரிய கலகலப்பும் துடுக்கு தனத்தோடும் இருந்தவர்கள் மது ரகுவை பிரிந்த சோகத்தில் அவர்களுடன் பழக நேரமெடுத்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை.
அன்று இரவு உணவை முடித்து கொண்டு அறைக்கு திரும்பியவர்கள் மதுவை அவர்களுக்கு நடுவில் அமரவைத்து, “நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் என்ன நீ எப்போ பாரு உம்முன்னு ஏதோ பறி கொடுத்த மாதிரி இருக்க… வாட் இஸ் திஸ் மது? இது நம்ம லைஃப்போட அடுத்த phase ஒவ்வொரு நிமிஷமும் நாம சேமிக்க வேண்டிய நினைவுகள்…நாங்க இரண்டு பெரும் சைல்ட்ஹூட் பிரெண்ட்ஸ் இப்போ எங்க ரூம்மெட் ஆகிட்டதால உன்னையும் எங்க பிரெண்டா ஏத்துக்க முடிவு பண்ணிட்டோம்” என்று கூற மதுவின் இதழ்கள் தன்னால் புன்னகைத்தது.
“இதோபார் மது நாங்களும் தான் அப்பா அம்மாவைமிஸ் பண்றோம் அதுக்காக இப்படி சோகம் கொண்டாடினா ஆச்சா..? நாம இங்க எதுக்காக வந்திருக்கோமோ அதுல ஃபோகஸ் பண்ணினா வேற எதுவுமே பெருசா தெரியாது.. வீ ஆர் பியூச்சர் டாக்டர்ஸ் நம்மோட எமோஷன்ஸ் எப்பவும் நம்ம வேலைக்கு குறுக்க வரகூடாது அது நமக்கு மட்டுமில்ல நம்மை நம்பி வரக்கூடிய பேஷண்ட்ஸ்க்கும் ஆபத்து.., அதுக்கு இப்போ இருந்தே பழகிக்கணும்” என்று ஷாலினி கூற மது அவளை ஆச்சர்யமாக பார்த்தாள்.
“ஐ மீன் டாக்டருக்கு படிக்கறப்பவும் எமோஷன்ஸ் பேலன்ஸ் பண்ண தெரியனும்.. உன் அப்பா அம்மாவே தானே உன்னை அனுப்பியிருக்காங்க அவங்களும் உன்னை மிஸ் பண்ணுவாங்க அந்த வருத்தம் அவங்களுக்கு இருக்க கூடாதுன்னு நினைச்சா ஒழுங்கா ஸ்டடீஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணி நீட் க்ளீயர் பண்றது தான் புரியுதா..?” என்று முடிக்கவும்,
“இப்படியே சோகமா மூஞ்சு வச்சுக்காதா ஜஸ்ட் சியர் அப் மது” என்று அவளை ஜீவிதா கட்டிக்கொள்ளவும் அதுவரை அறையிலேயே முடங்கி இருந்தவளை படிக்கும் பொழுது மட்டுமல்லாமல் செல்லும் இடங்களுக்கெல்லாம் விடாமல் தங்களுடன் இழுத்து கொண்டு சென்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு புன்னகை முகமாய் வலம் வர தொடங்கினாள் மது… ஏனோ அவர்களுடனான உரையாடலில் அவள் சோகம் அத்துனையும் பின்னுக்கு தள்ளப்பட்டு புதிதாய் உற்சாகமும் உத்வேகமும் அவளை தொற்றிக்கொள்ள இப்போது அவர்களோடு சேர்ந்து ஆர்வமாக படிக்க தொடங்கினாள்.
ஆர்வம் என்பது படிப்பின் மீதா..? அல்லதுமருத்துவராக வேண்டும் என்ற குறிக்கோளுடனா..? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லுவாள்.. பின்னே தோழிகள் இருவரும் படிப்பின் மீது அத்தனை பற்றோடு இருந்ததில் மதுவுக்குமே படித்தாக வேண்டிய கட்டாயம்.. படித்தால் மட்டுமே உரையாடல்களில் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியும் அவர்களுடன் நேரம் செலவழிக்க முடியும் என்பதால் படிப்பின் மீது பிடிப்பின்றி இருந்தவள் இப்போது அவர்களுடன் இருக்கவே படிக்க தொடங்கியிருந்தாள்.
கண்ணில் தெரியாதது கருத்தில் பதியாமல் போகும் என்பதற்கு ஏற்ப அடுத்தடுத்த நாட்களில் ஷாலு மற்றும் ஜீவியுடனான நட்பில் ரகுவின் நினைவு மெல்ல அவளை விட்டு விலகிட இப்போதுரகுவின் நினைவு அவளை பெரிதாக வாட்டி வதைப்பதில்லை.
வரவிருக்கும் மதுவின் பிறந்த நாளுக்கு வீட்டிற்கு அழைத்து செல்ல இருப்பதாக பார்வதி கூறவும்அன்றைய இரவு தூங்கா இரவாய் போனது மதுவுக்கு. பல வாரங்களுக்கு பின் பெற்றவர்களை சந்திக்க போகிறோம் வீட்டில் எப்படி தன்னை வரவேற்ப்பார்கள், தான் இல்லாததில் தன் மீதான பாசம் அவர்களை தனக்காக ஏங்க வைத்திருக்குமா என்று பல கேள்விகளோடு புது சல்வார் அணிந்து ப்ரெத்யேகமாய் தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆரம்பித்தவள்குறித்த நேரத்தில் தன் பெட்டியோடு வரவேற்பறைக்கு வந்தாள்.
தந்தையின் வரவிற்காக காத்திருந்தவளுக்கு, பொறுப்பாளரிடம் பேசிகையெழுத்திடும் ரகுவை கண்டதும்ஒருநொடி தன் கண்களையே நம்பமுடியவில்லை. பின்னே எப்போது, எங்கு சென்றாலும் அவர்களை உரிய இடத்தில சேர்ப்பித்ததும் வாகனத்தின் அருகில் நிற்பவன்இன்று எப்படி இங்கு வரவேற்பறை வரை என்று எண்ணியவள், தந்தை எங்கே சென்றார் அவர் வரவில்லை என்றால் அண்ணன் யாராவது ஒருவர் வந்திருப்பார்களே..! என்றுகுழம்பி நின்றவளிடம் புன்னகையோடு வந்த ரகு‘தன்னை கண்டு அவள் குதுகளிப்பாள்’ என்று எண்ணியிருக்க அவள் பார்வை ரகுவை தாண்டி வெளியில் இருப்பதை கண்டவனுக்கு சுள்ளென்று கோபம் உச்சிக்கு ஏறியது..
ஆனாலும் அதை வெளிக்காட்டாமல், “எப்படி இருக்க வனிம்மா..?” என்று வாஞ்சையாக கேட்டவாறு அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டு முன்னே சென்றவன் மனம் எரிமலையாக தகித்திருந்தது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அவள் அழைப்பை எடுக்காமல் சந்திக்காமல் மதுவை அலைகழித்தது எல்லாமே தன்னை தனியே பார்க்கையில் உருகி கரைய வேண்டும் என்பதற்காக தான் ஆனால் அவன் எண்ணத்தை பொய்யாக்கிய மது அவன் கேள்விக்கு கூட பதிலளிக்காமல் இருப்பதை கண்டவனின் நிலையை வார்த்தை கொண்டு வர்ணிக்கவும் வேண்டுமா என்ன..?
தன்னிடம் ஒரு வார்த்தை விசாரிக்காது தந்தையை மது தேடிக்கொண்டிருக்க, “என்ன பார்க்கிற..?” என்றான்.
“என்ன ரகு நீ மட்டும் வந்திருக்க அப்பா, அண்ணா யாரும் வரலையா..? பக்கத்துல எங்கயாவது போயிருக்காங்களா..?” என்று சுற்றிலும் பார்வையை சுழலவிட..,
முகத்தில் இருந்த கடுமையை மறைத்து “அவங்க ஒரு முக்கியமான மெடிக்கல் கான்பிரன்ஸ்க்கு போயிருக்காங்க வனிக்குட்டி இன்னிக்கு நீயும் நானும் மட்டுமே” என்று கண்ணடித்தவாறே அவளுக்கு முன்புற கதவை திறந்து “ஏறு..”என்றான்.
ஆம் தன்னை அறைந்தவளுக்கு தக்க பாடம் புகட்டவும்தன்னை நண்பர்களிடம் நிரூபிக்கவும் சந்தர்ப்பம் எதிர்பார்த்து கொண்டிருந்தவனுக்கு கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த விதமாய் ஏகாம்பரமே மதுவைஅழைத்து வரச்சொல்லவும், அவன் எண்ணம் ஈடேறும் தருணத்தை யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அழகாய் திட்டமிட்டு மதுவை அழைக்க வந்துவிட்டான்.
*****************************
மதுவர்த்தினி அமரவுமே வரவழைத்து கொண்ட உற்சாகத்தோடு வாகனத்தை எடுத்தவன் வார்த்தைக்கு வார்த்தை ‘வனிகுட்டி, வனிம்மா’ என்று அவளை கொஞ்சியவாறேபேசிய போதும் பதிலுக்கு மதுவிடம் தான் அவன் எதிர்பார்த்த விளைவு இல்லாது போக அவள் மனமோ குடும்பத்தினரை அதிகமாக தேடியது..
‘தன்னைவிட கான்பிரன்ஸ் முக்கியமா..?’ என்று மனதினுள் கேட்டுகொண்டவளுக்கு சென்ற வாரம் ஷாலுவையும் ஜீவியையும் அழைத்து செல்ல அவள் பெற்றோர் வேலைக்கு லீவ் சொல்லிவிட்டு வந்தது.. அவளுக்கு பிடித்த உணவுகளை உண்ண கொடுத்து மதுவுடனும் மகிழ்ச்சியோடு பேசி சென்றது அனைத்தும் நினைவில் எழ அவளை அறியாமல் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
அப்பா இல்லையென்றாலும் குறைந்த பட்சம் அண்ணன்களில் யாரேனும் ஒருவரை அனுப்பியிருக்கலாம் இல்லையா..? டிரைவரோடு அவள் அன்னை பார்வதியாவது வந்திருக்கலாம் ஏன் ஒருவருமே தன்னை அழைக்க வரவில்லை..? என்ற கேள்வியையே மனம் முட்டி மோதியதில் ரகுவின் பேச்சு எங்கே அவள் காதில் விழுந்தது.
ஒரு கட்டத்தில் வாகனம் கிரீச்சிட்டு நிற்கும் ஒலியில் தன்னிலை மீண்டவள் “என்னாச்சு ரகு ஏன் வண்டியை நிறுத்திட்ட..?” என்றவளை திருப்பி கண்களை கைக்குட்டை கொண்டு ரகு கட்டவும்,
“என்ன பண்ற ரகு..?” என்று அவன் கையை பிடித்தவளிடம்,
“ஷ்ஷ் என் செல்ல வனிம்மாக்கு ஒரு சர்ப்ரைஸ் அதனால என்னோட அமைதியா வரணும்” என்றவன் காரை விட்டு இறங்கி அவளை வழி நடத்தி சென்றான்.
ஒருவழியாக பெற்றவர்களின் நினைவில் இருந்து விடுபட்டவளுக்கு இப்போது ரகுவின் அழைப்பு மனதில் பதியவும், “எங்க கூட்டிட்டு போற ரகு..? என்ன சர்ப்ரைஸ்..?” என்று ஆர்வமாக கேட்டவாறே மது அவனுடன் செல்ல குறிப்பிட்ட இடத்தில் அவள் கண்கட்டை நீக்கியவன் அவள் முன் மண்டியிட்டு பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை நீட்டினான்.
“என்ன இது..?” என்றவள் முகத்தில் ஆச்சர்யம், புன்னகை என்று கலவையான உணர்வுகளின் படையெடுப்பு..,
அவனையே மறந்திருந்த மதுவிற்கு தன்னை மறக்காது தனக்காக கொண்டாடுபவனின் அன்பில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க கண்கள் குளம் கட்டின. விழிநீர் அவனை மறைக்க புறங்கை கொண்டு நீரை துடைத்து, “தேங்க்ஸ்ரகு தேங்க் யூ ஸோ மச்!என் பிறந்தநாளுக்கான முதல் வாழ்த்து உன்னுடையதா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை” என்றவள் அப்போதுதான் சுற்றுப்புறத்தை உணர்ந்தாள்.
ஓஓஓவென்ற இரைச்சலும் முகத்தில் அறைந்த நீர் துளிகளும் உணர்த்தியது அவன் தன்னை தனக்கு பிடித்த நீர்வீழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளான் என்பதை. “என்ன ரகு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் கொடுக்குற..? என் பிரெண்ட்ஸ் கூட இப்படிதான்..” என்று அங்கேயே அவனுடன் சேர்ந்து கேக்கை ருசித்தவாறு விடுதி தோழிகளுடனான கதைகளை மது அவனிடம் பேச..
“என்னை மறந்துட்டியா வனிம்மா..?” என்ற ரகுவின் தழுதழுத்த குரலில் ஒருநொடி ‘அப்படிதானே’ என்று அவள் மனமே அவளை சாடியதில் மௌனித்தவள் மெல்ல குரலை செருமி,
“இல்ல ரகு உன்னை போய் எப்படி மறப்பேன்.. கொஞ்ச நாள் உனக்கு கால் பேச ட்ரை பண்ணேன் அப்புறம் படிக்கிறதுல பிசியாகிட்டதால பேச முடியலை… அப்போ இல்லைன்னா என்ன அதான் இப்போ பேசிட்டு இருக்கேனே” என்று அவள் படிப்பு குறித்து பேச எரிச்சலாக அவளை பார்த்திருந்த ரகு..,
“ஒரு ஃபோன் பேசிட்டு வரேன் வனிம்மா அதுவரை நீ சாப்ட்டுட்டு இரு” என்று விலகி சென்றவன் காளிக்கு அழைத்திட, எடுத்ததுமே “மச்சான் எங்க இருக்க..?” என்ற காளியின் குரலில் பதட்டம்..
“அரக்கோணம் தாண்டிட்டேன் ஏன்டா..?”
“டேய் நாம ப்ளான் பண்ணின இடத்துக்கு வராத போலீஸ்க்கு டவுட் வந்துடுச்சு”
“என்னடா சொல்றீங்க எங்க அம்மாக்கு மட்டும் தெரிஞ்சது அதுவே என்னை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடும்… நீங்க சொல்ற மாதிரி ரெண்டு நாள் இவளை எங்க வச்சிருக்க..?”
“உன் நல்லதுக்கு தான் மச்சி சொல்றோம் ஒரு ரெண்டு நாள் மட்டும் அவளை இப்படியே சமாளி..”
“என்னடா சொல்றீங்க..?” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே “யார் ரகு ஃபோன்ல நீ ரொம்ப டென்ஷனா இருக்க மாதிரி தெரியுது என்னாச்சு..?”
“ஒண்ணுமில்ல வனிம்மா அது எங்க குடிசை பக்கத்துல ஏதோ பிரச்சனையாம் அதை பேசிட்டு இருந்தேன் நீங்க வாங்க நாம போவோம்” என்றவன் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சற்று உள்புறம் இருந்த உணவகத்திற்கு அவளை அழைத்து சென்று ஒதுக்குபுறமாக இருந்த டேபிளை தேர்ந்தெடுத்து அவளுக்கு பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தவன், “வனிம்மா நீ கேட்டுட்டு இருந்த மாதிரியே சீக்கிரமே நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்றான்.
“கல்யாணமா..? என்ன ரகு திடீர்ன்னு”
“இல்ல வனிம்மா நீ இல்லாத இத்தனை நாளும் எனக்கு நரகமா இருந்தது எங்க உன் குரலை கேட்டா இன்னும் உடைஞ்சு போயிடுவேனோன்னு தான் உன்னோட ஃபோன் எடுக்கலை.. இதுக்கு மேலயும் என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியும்ன்னு தோணலை அதான் நாளைக்கு கோவில்ல நம்ம கல்யாணத்துக்கான ஏற்பாடு செய்திருக்கேன்.. கல்யாணம் பண்ணிகிட்டா நாம பிரியவே தேவையில்ல நீ என்கூடவே இருக்கலாம்”
“என்ன பேசுற வனிம்மா நீ அவங்களோட செல்ல பொண்ணு உன்னை போய் ஒரு டிரைவருக்கு கட்டி வைப்பாங்களா..? அதான் அவங்களுக்கு தெரியாம கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்றேன் அதைவிட இதுவரை உன்னோட எந்த ஆசையையும் மதிக்காதவங்களை நீ ஏன் மதிக்கணும்..? நாம லவ் பண்றது தெரிஞ்சதுன்னா என்னை கொலை பண்ண கூட தயங்க மாட்டாங்க”
“ரகு என்ன பேசுற..? எங்கப்பா அப்படியெல்லாம் கிடையாது” என்று அவள் குரல் உயர்த்த..,
“நிஜமா தான் வனிம்மா உன் அப்பாக்கு ஸ்டேடஸ் வெறின்னா உன் அண்ணன்களுக்கு ஜாதி வெறி நிச்சயம் நம்ம காதலை அவங்களால புரிஞ்சுக்க முடியாது ஒன்னு நாம சேர்ந்து இருக்கணும் இல்ல பிரிஞ்சிடனும் உன்னால என்னை பிரிய முடியுமா சொல்லு ?” என்று அவள் கைகளை பிடித்து கலங்கிய விழிகளுடன் ரகு கேட்கவும்,
“இல்ல கண்டிப்பா முடியாது” என்று அவளை மீறி வார்த்தைகள் வெளிவந்திருந்தது.
“இது போதும் வனிம்மா, உனக்காக எவ்ளோ வருஷம்னாலும் நான் காத்திருப்பேன்” என்றவன் அவள் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டான்.
***************************
“மச்சான் உண்மையாவாடா..?” என்று இன்னுமே கர்ணா சொன்னதை நம்பமுடியாமல் பிரேம் கேட்கவும்,
“நிஜமாதான்டா சொல்றேன் அந்த பிஏ வே நேத்து ஃபோன் பண்ணி வந்து பணத்தை வாங்கிட்டு போக சொன்னான்..”
“அதான்டா நம்ப முடியலை..? நாம அங்க போன பிறகு ஏதாவது பிரச்சனை கொடுப்பானோன்னு இருக்கு..”
“ப்ச் பிரேம் எலெக்ஷன் நெருங்கிட்டு இருக்கு இல்லையா அதனால நம்மள பகைச்சுக்க மாட்டானுங்க முடிஞ்சவரை இருக்கபிரச்சனையை மூடி மறைக்கத்தான் பார்ப்பானுங்க… போனமுறையே அவனுக்கு நாம யாருன்னு தெரிஞ்சிருக்கும் அதனால் எந்த வில்லங்கமும் வராது முதல்ல அந்த பணத்தை வாங்கிட்டு வந்து வீட்ல கொடுத்துடனும்…” என்றவாறே அங்கிருந்த பேக்கிரியின் முன் வண்டியை நிறுத்தியிருந்தான் கர்ணா.
“ஏன்டா கொடுக்குற…? அது உங்கப்பா உனக்காக கொடுத்து தானே உன்னோட உரிமையை ஏன்டா விட்டு கொடுக்குற..?” என்றவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் கடைக்கு சென்று இருவருக்குமான பப்ஸ் மற்றும் குளிர்பானத்தொடு வந்தவன்,
“பிடிடா..! எதுவா இருந்தாலும் சாப்ட்டு முடிச்சுட்டு கேள்வி கேளு பதில் சொல்றேன்” என்றவன் வேகமாக உண்ணவும்,
“ஏன் மச்சி சாப்பிடலையா..? திரும்ப பிரச்சனையா..?” என்றவாறே மேலும் கட்லெட், சான்ட்வெஜ் தண்ணீர் பாட்டில் என்று அவன் முன் அடுக்கவும் உண்டு முடித்து நிமிர்ந்தவன் “இப்பதான் வண்டி ஓட்ட முடியும் சரி வாடா கிளம்பலாம்” என்று கர்ணா எழுந்துகொள்ள பிரேமும் கைகழுவிவர சென்ற அதேநேரம் “ப்ரோ..” என்றழைத்து கர்ணா முன் நின்றான் ரகு.