உணவகத்தில் இருந்து திரும்பி காரை அடைந்ததும் மதுவை உள்ளே அமரவைத்தவன் அங்கிருந்து பிரிந்து சென்ற கிளைசாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திவிட்டு கண்களை மூட சொல்லி மதுவின் இடக்கரத்தில் அவளுக்காக வாங்கிய கடிகாரத்தை கட்டிவிடவும் பெற்றோருக்கு இரண்டாம் பட்சமாகி போன தன்னை தன் நலனை முதன்மைபடுத்தி நாளை வரவிருக்கும் பிறந்தாநாளுக்கான கொண்டாட்டத்தை இன்றே துவங்கியவனின் செயல்களில் முழுதாய் வீழ்ந்து போனாள் மதுவர்த்தினி.
அவன் அன்பில் நெகிழ்ந்திருந்தவள் கடிகாரத்தை தடவி பார்த்தவாறே, “உனக்கு நான் முக்கியமா ரகு..? எனக்காக எதுவும் செய்வியா..?” என்றாள்.
“இதென்ன கேள்வி வனிம்மா..? என் உயிர் மூச்சே நீதான்! என்றவன் அவள் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து என் இதயம் துடிக்கிறதே உனக்காக மட்டும் தான் தெரியுமா..? நீ இல்லன்னா நான் இல்ல, நீ இல்லாத இத்தனை நாள்ல உன்னை பார்க்காம, உன்கூட பேசாம நான் உயிர் வாழ்ந்ததே உன்னை இன்னைக்கு பார்ப்பேங்கிற நம்பிக்கையில தான்..” என்று கேட்க மதுவிற்கு அவன் அன்பில் நெஞ்சம் ததும்பியது.
“உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு வனிக்குட்டி” என்றவன் தன் சட்டையின் முதலிரண்டு பட்டனை கழற்றி, தன் நெஞ்சில் இருக்கும் அவள் பெயரை காண்பிக்க, மதுவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.
மெதுவாய் தன் பெயரை வருடியவள், “ரொம்ப வலிச்சதா ரகு..?” என்றாள் கண்ணீரோடு..
“உன்னை பார்க்காம இருந்த வலியை விட இது ஒண்ணும் பெருசா தெரியலை வனிக்குட்டி.. உனக்கு பிடிச்சிருக்கா..?”
“என்ன சொல்ற வனிம்மா..?” என்றவன் தன் மகிழ்ச்சியை மறைத்து முகத்தில் திகைப்பை காண்பித்தான்.
“ஆமா எனக்கு இவ்ளோ கிஃப்ட் கொடுத்த உனக்கு என் பார்த்டேக்கு நான் கொடுக்குற ரிட்டர்ன் கிஃப்ட்… பிடிச்சிருக்கா ரகு..?” என்றவளின் கண்களில் கண்ணீரின் வரத்து அதிகரிக்க அவள் விரல்கள் இன்னுமே தன் பெயரை அழுத்தமாக வருடியது.
“என்ன பெருசா ஆகிடபோகுது..? அதெல்லாம் ஒன்னும் ஆகாது அவங்க நியாபகத்துல நான் இருந்தா தானே..?” என்று கசந்த புன்னகையோடு அவனை பார்த்தவள், “இல்ல ரகு நான் நிஜமாதான் சொல்றேன் எனக்கு அவங்க யாரும் வேண்டாம் நீ மட்டும் போதும்.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் உன்னைவிட என்னை யாரும் நல்லா பார்த்துக்கமுடியாது” என்றவளுக்கு தன்னை அழைத்து வருவதற்கு கூட உடன் வராதவர்கள் இனியும் தனக்காக பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணம் மேலோங்க, இனியும் தன்னை புறக்கணிப்பவர்களுக்காக தேடி வரும் ரகுவின் அன்பை இழப்பதற்கு மது தயாராக இல்லை.
அவள் வார்த்தைகளை கேட்ட ரகுவின் மனம் ‘தான் எண்ணி வந்த காரியம் இத்தனை எளிதாக முடியும் என்று எதிர்பாரா சந்தோஷத்தில் துள்ளி குதித்தது’ அதை தட்டிவைத்தவன் மதுவின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு கலங்கிய விழிகளோடு, “எனக்கு என்ன சொல்றதுனே தெரியல வனிக்குட்டி. எங்க நீ என்னை மறந்துட்டியோன்னு பயந்து போயிருந்தேன் இப்ப அப்படியே மனசு லேசாகி பறக்கிற மாதிரி இருக்கு..” என்று புன்னகைத்தவன், “அப்போ நாம நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்றான்.
“ஹ்ம்ம் பண்ணிக்கலாம் ரகு..”
“அப்போ அதுக்கான ஏற்பாட்டை பார்க்கட்டா..? நாம இப்படியே என் ஃபிரெண்ட் வீட்டுக்கு போகலாமா..?” என்றவனுக்கு மதுவின் இத்தனை துரிதமான மனமாற்றம் ஆச்சர்யமே..!! நிச்சயம் அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று எண்ணியிருந்தவனுக்கு பெரும் கொண்டாட்டம்.
“சரி வனிக்குட்டி ஒரு நிமிஷம் இருங்க வந்துடுறேன்” என்று உணவகத்தின் மறுபுறத்திற்கு சென்ற ரகு திரும்பும் போது அவன் இரு கரங்களிலும் பழச்சாறு.
மது காரிலிருந்து இறங்கி அவனுக்காக காத்திருக்க, “என்ன வனிம்மா இது எதுக்கு இறங்கினீங்க..? ரொம்ப வெயிலா இருக்கு நீங்க உட்கார்ந்து ஜூஸ் குடிங்க நான் பணம் கொடுத்துட்டு வந்துடுறேன்..” என்ற ரகு கார் கதவை திறந்துவிட்டு அவளிடம் ஜூசை கொடுத்தான்.
“ரகு உன்கிட்ட பணம் இருக்கா..?” என்றவாறே மது தன் பையை திறக்கவும் அவளை தடுத்தவன்,
“மூச்! உங்க பிறந்தநாளை கொண்டாட இரண்டு மாசமா பணம் சேர்த்துட்டு இருக்கேன். போதலையா என் தலையை அடமானம் வச்சாவது உங்களுக்கு பிடிச்சதை வாங்கி கொடுப்பேன்… நீங்க என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க”
“தேங்க்ஸ் ரகு.. நீயும் குடிச்சுட்டு போய் பணம் கொடு” என்று பழச்சாறை பெற்று மது பருக ஆரம்பித்தாள் அதை கண்களில் குரூர திருப்தியோடு பார்த்துக்கொண்டிருந்தான் ரகு. அவனின் நீண்ட நாள் திட்டம் கைகூடும் நேரம் நெருங்கி விட்டதே அதன் களிப்பு இருக்கத்தானே செய்யும்..!
அன்று நண்பர்களிடம் விட்ட சவாலை நிறைவேற்ற காதல் எனும் ஆயுதம் மட்டுமே போதாது என்பதை அவன் உணர்த்த நொடி மது ரகுவை அறைந்த தினம். அன்றே அவளை கசக்கி முகர்ந்துவிடும் எண்ணம் எழுந்தாலும் அதற்கான நேரம் அதுவல்ல என்று முடிவெடுத்தவனின் உள்ளமோ நீறுபூத்த நெருப்பாய் அழன்று கொண்டிருந்தது. இப்போது அவன் எண்ணம் கூடிவர அவளுக்கு சந்தேகம் வராத வகையில் காய் நகர்த்தி இத்தனை தூரம் அழைத்து வந்துவிட்டான்.
அவளை பார்த்துக்கொண்டே ஜூசை பருகியவன் அவளிடமிருந்து க்ளாஸை வாங்கிக்கொண்டு “நான் பணம் கொடுத்துட்டு வந்துடுறேன் வனிம்மா” என்று கிளம்பினான்.
கிளாசை கொடுத்தவன் ஐநூறு ரூபாய் நோட்டை நீட்ட கடைக்காரர் “ஸார் வரவங்க எல்லாம் ஐநூறு ரூபாயா நீட்டினா எப்படி..? சில்லறை இல்லை நீங்களே வாங்கிட்டு வாங்க..” என்றிட சலித்துகொண்ட ரகு பக்கத்தில் இருந்த பேக்கிரிக்குள் நுழைந்தவன் கண்ணில் பட்ட கர்ணாவிடம், “ஹலோ ப்ரோ ஐநூறுக்கு சில்லறை கிடைக்குமா..?” என்றான்.
“என்ன மச்சான் கிளம்பலாமா..?” என்று வந்த பிரேமிடம், “ஹ்ம்ம் போலாம்டா” என்ற கர்ணாவும் ஐந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவசரமாக ரகுவிடம் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
***********************
இங்கு காரில் அமர்ந்திருந்த மது ரகுவின் அன்பில் நெக்குருகி போன மது பெற்றவர்கள் மற்றும் ரகு இருவரின் அன்பையும் மனத்தராசில் வைத்து எடை போட்டவளுக்கு இறுதியில் ரகுவுடனான தன் வாழ்வு மட்டுமே தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பது புரிபட., அதன்பிறகு அவனுடனான திருமண வாழ்வு குறித்து கனவு காண ஆரம்பித்துவிட்டாள். ஆனால் அதை கலைப்பது போல அவன் கைபேசி சப்தமிட்டது..
டிரைவர் சீட்டில் ரகுவின் கைப்பேசியை கண்டு, ‘இது எப்படி இங்க..?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டவள் கண்ணாடி வழியே ரகுவை தேட மறுபடி அழைப்பு. அவசர அழைப்பாக இருக்க போகிறது என்று மது ஏற்று காதில் வைத்து “ஹலோ” எனும் முன்னமே, “மச்சான் நம்ம ப்ளான்ல சின்ன சேன்ஜ்” என்ற காளியிடம் இருந்து கைபேசியை வாங்கிக்கொண்ட அவன் கூட்டாளி,
“டேய் ரகு ஒருபக்கம் போலீஸ் பயம் இருந்தாலும் நீ ஆசை காட்டிட்டு போயிட்டதால நம்ம பசங்க இன்னைக்கே மது வேணும்னு சொல்றாங்க.. நீ அரக்கோணத்துல தானே இருக்க அங்க என் மாமா வீடு இருக்கு அவர்கிட்ட பேசிட்டேன் நைட் ஷிப்ட் போறதால சாவி பக்கத்து வீட்ல கொடுக்குறேன் சொல்லிட்டாங்க அவர் வரதுக்கு நாளைக்கு மதியமாகிடும் நீ பட்சிய அங்க தூக்கிட்டு வந்துடு.. நாம அனுபவிச்ச பிறகு தொழில்ல இறக்கிடலாம்..” என்று சொல்லிகொண்டிருக்க கைபேசியை வாங்கிய காளி,
“மச்சான் அவங்கப்பன் அண்ணனுங்களுக்கு சந்தேகம் வந்துடாதே.. மதுக்கு உன்மேல எதுவும் சந்தேகம் இல்லையே..? நடுவுல சொதப்பிடாம சொன்ன மாதிரி செய்..! எதுக்கும் நாம ஏற்கனவே முடிவு பண்ணின மாதிரி அவளுக்கு மயக்கமருந்து கொடுத்தே கூட்டிட்டு வா” என்று பேசிமுடிக்க.., கண்களிலிருந்து வழிந்த நீரோடு வாயை பொத்தி அவர்கள் பேச்சை கேட்டு முடித்தவள் முழுதாக உடைந்த போது அங்கே வந்து சேர்ந்திருந்தான் ரகு.
கதவை திறந்து உள்ளே அமர்ந்த ரகு, மது அழுது கொண்டிருப்பதை கண்டு, “என்னாச்சு வனிம்மா, ஏன் அழறீங்க..?” என்று கேட்ட மறுநொடியே அவனை ஓங்கி அறைந்தவள், “ராஸ்கல்! எவனோ காளி ஃபோன் பண்ணி என்னை.. எனக்கு.. என்னை என்னடா பண்ண போற ..?” என்று அவன் சட்டையை பிடித்து மீண்டும் ஓங்கி அறைய முற்பட பழச்சாறை முழுதாக குடித்து விட்டிருந்ததில் அவளிடம் லேசான தடுமாற்றம்..!
அவளுக்கு தெரிந்துவிட்டதை கண்டுகொண்டவன் ‘முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு?’ என்று முடிவு செய்து “யார் மேலடி கை வச்ச..?” என்று தன்னை மீண்டும் அறைய முற்பட்ட அவள் கையை பிடித்து வளைத்தவன் கைபேசியை அங்கேயே விட்டு சென்ற தன் மடத்தனத்திற்கும் சேர்த்து ஓங்கி மதுவை அறைந்தான்.
அதில் சுழன்று மதுவர்த்தினி காரின் கதவில் சாய அவளை இழுத்து மீண்டும் அறைந்தவன் “ஆமாடி அவன் சொன்ன மாதிரி உன்னை விற்க போறேன் என்ன பண்ணிடுவ..? என்று மீண்டும் அறைந்தவன் அவள் தலைமுடியை பற்றி இழுத்து,
“ஏன்டி ஒரு முத்தம் கொடுத்ததுக்கு அடிப்பியா நீ..? என்ன தைரியம் இருந்தா ஒரு பொட்டச்சி என்மேல கை வைப்ப..? இன்னைக்கு உனக்கு இந்த ரகு யாருன்னு காட்றேன்டி” என்று அவள் ஷாலை இழுத்து போட அதை கூட கிரகிக்கும் நிலையில் இல்லாத மது மயங்கி அவன் கைகளிலேயே சரிந்திருந்தாள். ஆம் நொடிக்கு நொடி மனமாற்றம் கொள்பவள் மீது நம்பிக்கை இல்லாதவன் அவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தது போல ஜூஸில் மயக்கமருந்து கொடுத்திருந்தான். அதன் வீரியத்தில் மது மயங்கியிருந்தாள்.
கண்கள் சொருக தலையை அவன்புறம் சரித்து நினைவிழந்தவளை தூக்கிகொண்டு காரின் பின்னிருகைக்கு சென்று அவளை சரித்தவன் காரின் அனைத்து கண்ணாடிகளை ஏற்றிவிட்டுமயங்கி கிடந்தவளின் முகத்தை பற்றி “ஏன்டி எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை கரெக்ட் பண்ணவன் ஒரு கிஸ் குடுத்தா நீ என்ன கரைஞ்சா போய்டுவ..? அதுக்கு ஆம்பளைய கைநீட்டி அடிப்பியா..? மனசுல பெரிய பத்தினின்னு நினைப்பாடி உனக்கு..?” என்று கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவள் இருகன்னங்களிலும் அடித்து கொண்டிருந்தவன் அவள் துப்பட்டாவை இழுத்து கீழே போட்டுவிட்டு,
“எங்கே உன்னால முடிஞ்சா இப்போ அடி பார்க்கலாம்..?” என்று அவள் நெற்றி, கன்னம் என்று முகம் முழுக்க ஆவேசமாக முத்தமிட அன்று அவன் ஒரு முத்தத்தை ஏற்கமுடியாமல் தகித்து அறைந்தவள் இன்று எதையும் எதிர்க்க முடியாமல் கிடந்தாள்.
“ஒரு முத்தத்துக்கு அடிப்பன்னா இப்போ மொத்தத்தையும் முடிக்க போறேன் என்ன பண்ற பாக்கலாம்..?” என்றவாறு தன் சட்டை பொத்தான்களை கழற்றியவன் அதை இருக்கையில் போட்டுவிட்டு அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்.
அதேவேளை யாரோ கண்ணாடியை தட்டும் ஒலி கேட்கவும் அதை அலட்சியம் செய்துவிட்டு முதல்முறை அவள் இதழ்களை இணையும் வேகத்தோடு மீண்டும் குனிந்தான்.. ஆனால் அதற்குள் மீண்டும் கண்ணாடியை யாரோ தட்ட ‘ப்ச்’ என்று சலித்து கொண்டவன் அவசரமாய் சட்டையை அணிந்துகொண்டு வெளியில் வந்தான்.
காரை சுற்றிக்கொண்டு வந்தவன் தனக்கு முதுகு காட்டி கார் கண்ணாடியில் இருகரம் பதித்து உள்ளே பார்த்து கொண்டிருந்தவனிடம் “டேய் யார்ரா நீ..? அங்க என்ன பார்க்கிற..?” என்று கேட்ட மறுநொடியே ‘அம்மாஆ..’ என்ற அலறலோடு கீழே விழுந்திருந்தான்.
கண்களில் பொறி பறக்க இடக்கன்னத்தை பிடித்துகொண்டு தன்னை அடித்தது யார்..? என்று ரகு பார்க்க அங்கே விழிகள் சிவக்க கை முஷ்டிகள் இறுக நின்று கொண்டிருந்தான் சதீஷ்.
“சார்” என்று ரகு திகைப்போடு எழுந்து நிற்க.. “கதவை திறடா” என்று சதீஷ் உறுமியதில் உடனே தன் சட்டைப்பையில் இருந்த கார் சாவியை எடுத்து ரகு அன்லாக் செய்யவும், பாய்ந்து கதவை திறந்த சதீஷ் மதுவை அவசரமாக ஆராய்ந்தான்.
ரகுவிடம் மதுவை அழைத்துவரும் பொறுப்பை கொடுத்துவிட்டு இருமகன்களுடன் மருத்துவ மாநாட்டிற்கு சென்ற ஏகாம்பரம் மாநாடு முடிவடையவும் தன் நண்பனை பார்த்து விட்டு செல்லலாம் என்று சொல்லவும் சதீஷ் ப்ரியாவிற்க்கு பிரசவம் நெருங்குவதால் இதற்குமேல் தாமதிக்க முடியாது என்று முதலில் கிளம்பி வந்துவிட்டான்.
மதிய உணவை முடித்த சதீஷ் கழிவறையை உபயோகிக்க வேண்டி உணவகத்தின் பின்புறம் வந்தவனுக்கு முக்கிய அழைப்பு வரவும் பேசிக்கொண்டே அங்கு பிரிந்து சென்ற சாலையில் நடந்தவனின் கண்ணில்பட்டது அவர்களின் கார். முதலில் அவர்களுடையதாய் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தவன்மனம் ‘ஏதோ சரியில்லை’ என்று அடித்து கூற உடனே நம்பர் பிளேட்டை பார்த்ததில் அது தங்களின் வாகனம் என்று ஊர்ஜிதமாகியது.
உடனே அங்கு சென்றவன் கார் கண்ணாடிகள் அனைத்தும் ஏற்றப்பட்டிருக்கவும் தான் கதவை தட்டினான். அது உடனே திறக்கப்படாமல் இருக்கவும் கார் கண்ணாடியில் கண் பதித்து உற்று பார்த்தவன் உடனே ரகுவை வெளியில் வர செய்திருந்தான்.
பின்னிருக்கையில் கேசம் கலைந்த நிலையில், முகம் கன்றி, ரகுவின் கைவிரல் தடம் பதித்து சிவந்து வீங்கி போன கன்னமுமாக இருந்தவளின் முகம் சதீஷின் கண்களில் பதியவில்லை.
அதற்கு மாறாக மது அணிந்திருந்த ஆடை தாறுமாறாக விலகிய நிலையில் கிடந்ததை கண்டதும் கண்களில் வலியோடு அங்கிருந்த துப்பட்டாவை எடுத்து மதுவை போர்த்தி கதவடைத்தான்.
இங்கு சதீஷை எதிர்பார்க்காத ரகு ‘அடுத்து என்ன செய்வது..?’ என்று புரியாமல் நின்றிருந்தவன் சதீஷ் கதவடைக்கவும் தான் அங்கிருப்பது நல்லதல்ல என்று புரிந்து கிளம்ப எத்தனித்த நொடி அவன் மீது சட்டென பாய்ந்த சதீஷ் “பொறுக்கி நாயே உன்னை நம்பி அனுப்பினோமே.. இப்படி ஒரு காரியத்தை செய்ய பார்த்திருக்கியே..” என்றவாறே அவன் முகத்தில் ஓங்கி அறைய ரகு மூக்குடைந்து ரத்தம் பீறிட கிழே விழுந்தான்.
அவன் சட்டையை பற்றி தூக்கி நிறுத்திய சதீஷ் “நன்றிகெட்ட நாயே! உனக்கு போய் சோறு போட்டு சொந்த புள்ள மாதிரி எங்கப்பா பார்த்தாரே எங்களுக்கு எப்படிடா உன்னால துரோகம் செய்ய முடிஞ்சது.. அவளை இப்படி அலங்கோலம் பண்ணி வச்சிருக்கியே..? சொல்லுடா என் தங்கச்சி உனக்கு என்ன பண்ணினா..?” என்றவன் மது கிடந்த நிலையை வைத்து தானாகவே தப்பர்த்தம் கற்ப்பித்து கொண்டவன் ரகுவை கொல்லும் வெறியோடு அவன் வயிற்றில் எட்டி உதைத்தான்.
தடுமாறி எழுந்த ரகு இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு, “சோறு என்ன சும்மா போட்டுட்டீங்களா..? எப்பபாரு எல்லாரும் இதையே சொல்லிட்டு வந்துடுறீங்க .. டேய் நாயை விட கேவலமா வேலை வாங்கிட்டு என்னை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு..?” என்றவன் தன் கைபேசியை எடுத்து மதுவும் அவனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி,
“உன் தங்கச்சி என்ன பண்ணலை..? இங்க பாரு நானும் உன் தங்கச்சியும் லவ் பண்றோம்” என்று சொல்ல சதிஷுக்கு மற்றொரு அதிர்ச்சி. நம்பமுடியாமல் ரகுவின் கைபேசியை பார்த்தவன் தங்கை அவனுக்கு கேக் ஊட்டுவது போல, அவன் தோள் சாய்ந்திருப்பது போல, ரகு அவள் தோளை அணைத்திருப்பது போல என்றிருந்த புகைப்படங்களை அதற்கு மேல் பார்க்க விரும்பாமல் கைபேசியை தூக்கிபோட்டு உடைத்தான்.
“இதை தூக்கி போட்டு உடைக்கலாம் ஆனா உன் தங்கச்சி மனசுல இருந்து என்னை எப்படி தூக்கி போடுவீங்க..? அவளுக்கு உங்களோட இருக்க பிடிக்கல என்னோட வரேன்னு சொன்னவ சீக்கிரம் என்னை கட்டிக்க சொல்லி சொன்னா நான்தான் தள்ளி போட்டுட்டு வந்தேன்.. ஆனா அவளுக்கு கல்யாணம் வரைகூட தாக்குபிடிக்க முடியாதளவு அவசரம் நான் என்ன செய்ய..?” என்று சிரித்தவனை அடுத்து பேசவிடாத சதீஷ் ஆவேசம் தீரும் வகையில் மூர்கத்தனமாக அடித்து நொறுக்கியிருந்தான்.