“வயசான காலத்துல வச்சு பார்க்க உனக்கென்ன கஷ்டம்? நீயா பார்க்கற? ஒரு வீட்டுக்குள்ள தானே இருக்கீங்க? என்னவோ தூக்கி சுமக்கற மாதிரி…” என அவளையும்,
“பொண்டாட்டி பேச்சை கேட்டு தாய், தகப்பனை அம்போன்னு விட எப்படித்தான் மனசு வருதோ போ? உன்னை நல்ல பையன்ல நினைச்சேன்? இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாது போல?…” என சிவநேயனையும் பேசிவிட்டு சென்றனர்.
மொத்தமாய் இறுகி போனான் சிவநேயன். அந்த ஊரில் அவனுக்கென்று இருந்த மதிப்பை அவனின் பெற்றோரே தரைமாட்டமாக்கி இருந்தனர்.
இரண்டாம் நாள் காலை தான் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் கமலாவை. வயதான காரணத்தினால் கூடுதல் கவனிப்பு வேறு அவருக்கு.
மருத்துவ அறிவுரையுடன், பெற்றோரை பார்த்துக்கொள்ள அறிவுரையும் அங்கே இலவசமாய் வழங்கப்பட்டது சிவநேயனுக்கும், கவிப்ரியாவுக்கும்.
வீட்டிற்கு வந்ததில் இருந்து கமலா முகத்தில் ஒருவித வெற்றிக்களிப்பு. அவர் அதனை காண்பிக்க கூடாதென்று இருந்தாலும் அந்த முகத்தில் அப்பட்டமாகவே தென்பட்டது.
முன்பை விட இன்னும் அதிகாரமாய் அவர் உடல்மொழியில் காண்பிக்க கவி எதுவும் பேசவில்லை.
சசிகலாவும், நிஷாவும் தான் அங்கிருந்து அவர்களை கவனித்துக்கொண்டனர். நிஷாவின் அமைதியை கண்ட கமலா,
“என்னடியம்மா உங்க வீட்டுல இருந்து ஒரு மனுச, மக்களும் போன போட்டு விசாரிக்கல. இம்புட்டுத்தான் சொந்தமாக்கும்?…” என்று பேச முடியாததிலும் நிஷாவை இழுத்து பிடித்து பேசி வைக்க,
“இப்ப எதுக்கு த்தை இந்த பேச்சு? நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்றாள் கவி.
எங்கே கமலா வாய் திறந்து பேசி நிஷாவும் பதிலடி கொடுத்து திரும்பவும் ஒரு பிரச்சனையா என பயந்து போனாள்.
“இப்ப பேசாம எப்ப கேட்க? இதுவே அவங்கம்மா செஞ்சு நான் கேட்காம இருப்பேனா?…” என்றதும் நிஷாவாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியவில்லை.
“எங்கம்மா ஏன் இந்த முடிவை எடுக்க போறாங்க? அவங்களுக்கு முதல்ல அவங்க பிள்ளைங்க நிம்மதி முக்கியம். அதை குலைக்கிற எந்த கேவலமான காரியத்தையும் செய்யமாட்டாங்க…” என மிக நிதானமாக முகத்தில் கோபத்தை காட்டாமல் அவள் சொல்ல,
“என்ன? நான் உயிருக்கு போராடி பிழைச்சு வந்தது உனக்கு கேவலமான காரியமா?…” என கமலா வெகுண்டார்.
“பிள்ளைங்களை மிரட்ட செய்ய எந்த காரியமும் கேவலம் தான். இதுவும் கூட மகா கேவலம்….” என்ற நிஷா,
“அப்பறம் இந்த விஷயத்தை நான் எங்க வீட்டுக்கு இன்னும் சொல்லலை. சொல்லவும் போறதில்லை. அதனால அவங்க கேட்கமாட்டாங்க. தெரிஞ்சா தானே கேட்பாங்க. நீங்க ஒன்னும் உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரலையே. பாவமேன்னு விசாரிக்க?…” என்று சொல்லியவள் அங்கிருந்து செல்ல,
“ஏய் நில்லுடி…” என்று வந்தார் கமலா.
மருத்துவமனையில் செய்த சிகிச்சையும், உடலின் மாற்றங்களும் அவரை சரியாக நடக்கவும் விடவில்லை.
“பார்த்துமா…” என வசந்தன் தாங்கிக்கொண்டார்.
“விடுங்க நீங்க. என் வீட்டுலையே இருந்துட்டு என்னையே என்ன பேச்சு பேசறா?…” என ஹாலுக்கு வந்துவிட சசிகலா என்னவோ என உள்ளிருந்து வேகமாய் வந்தார்.
“என்னாச்சு நிஷா?…” என மருமகளிடம் கேட்க,
“நிஷா எனக்காக நீ எதுவும் பேசாதயேன்…” என்றாள் கவி.
“யாரும் பேசவேண்டாம். இனி யாரும் பேசவும் கூடாது…” என்றபடி வந்துவிட்டான் சிவநேயன்.
அவனுமே அடுத்த அறையில் இதை எல்லாம் கேட்டபடி தான் இருந்தான். பொறுக்கமாட்டாமல் வெளியே வந்து பேசும்முன் நிஷாவே பேசி வந்துவிட சிவநேயனும் பேசிவிட்டான்.
“கவி, தன்ஷி இனி இவங்கக்கிட்ட எந்த பேச்சும் வச்சுக்க கூடாது. புரியுதா?…” என மனைவி, மகளிடம் சொல்ல,
“சிவா என்ன பேசற நீ? எங்ககிட்ட பேச கூடாதுன்னு சொல்ற?…” என கமலா கேட்க,
“ஆமா, பேசமாட்டாங்க. மீறி பேசி தான் ஆகனும்ன்னு நீங்க சொன்னா கண்டிப்பா நான் வெளில போய்டுவேன். யார் என்ன பேசினாலும் சரின்னு சொல்லி…” என்றான் அவன்.
நிஷாவும் சசிகலாவும் அமைதியாய் பார்க்க, கவிக்கு இன்னும் பதட்டம் மீண்டும் மாமியார் எதுவும் கலக்கம் செய்வாரோ என்று.
“என்னங்க நீங்க?…” என்றவளிடம்,
“நீ வாயை மூடுன்னு அன்னைக்கே சொல்லிட்டேன். பேசலைன்னா என் புருஷன் எதையும் கவனிக்கலைன்னு சொல்றது. பேசினா பேசாதீங்கன்னு சொல்றது….” என்று இரைந்தவன்,
“இங்க பாருங்க, நாங்க இங்க இருக்கனும்ன்னா என் பொண்ணோட நீங்க எந்தவித பேச்சுவார்த்தையும் வச்சுக்க வேண்டாம். அப்படி இல்லாம உரிமை, பாட்டி, பேத்தி, பால்டாயில், உயிருன்னு ஆரம்பிச்சீங்கன்னா திரும்ப நான் ஹாஸ்பிட்டலுக்கு கூட கூட்டிட்டு போகமாட்டேன். இங்க இருக்கவும் மாட்டேன்…” என்றான்.
“எனக்கு தெரியாதா உங்க நடிப்பு? மகன் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லைன்னு தான என்னை பயம்காட்ட இந்த நாடகத்தை நடத்தினீங்க? இந்தளவுக்கு கூட புரியாதவனா நான்? ஏற்கனவே அசிங்கப்பட்டாச்சு. அதனால இன்னொருதடவை எல்லாம் என்னை பாதிக்காது…” என்று எச்சரித்தவன்,
“இங்க பாரு கவி, பாவம் அது இதுன்னு எனக்கு தெரியாம எதாச்சும் பண்ணின அவ்வளோ தான். எத்தனை பட்டும் உனக்கு புத்தி வராதுன்னா இவங்களோடவே கிடன்னு நான் தனியா போயிருவேன். தன்ஷியை ஹாஸ்டல்ல சேர்த்திருவேன். புள்ளையோட எதிர்காலம் மட்டுமே முக்கியம்ன்னு நினைச்சா அதை செய்யவும் யோசிக்கமாட்டேன்…”
படபடவென பட்டாசாய் பொரிந்துவிட அதன் பின் கவியும், தன்ஷியும் அவர்கள் பக்கம் திரும்ப முடியுமா?
சசிகலாவிற்கு சம்பந்திகளை கண்டு பாவமாக இருந்தாலும் பெற்றோராய் இந்தளவிற்கு செய்வார்களா என்றிருந்தது.
அங்கிருக்கவும் சங்கடமாய் இருக்க நிஷாவை பார்த்தார் சசிகலா. அவரின் எண்ணம் புரிந்தவள்,
இருவரின் இணக்கத்தையும் பார்த்த கமலாவிற்கு வயிறு எரிந்தது. இப்படி இருக்கிறார்களே இவர்கள் என்று.
கவியிடம் கமலா என்னவோ கேட்க வர அவள் சிவநேயனின் பார்வைக்கு பயந்து அவர் புறம் திரும்பவே இல்லை.
ஆதித்தன் ஒருமணி நேரத்தில் வந்துவிட்டான் தன் குடும்பத்தை அழைத்து செல்வதற்காக.
சிவநேயன் மௌனமாய் கூடத்தில் அமர்ந்திருக்க ஆதித்தன் வந்ததும் தான் பெருமூச்சுடன் வரவேற்றான்.
“வா ஆதி…” என அமர சொல்லியவன் கவியை பார்க்க அவள் காபி எடுக்க உள்ளே சென்றாள்.
“நிஷா…” என்று மனைவியை அழைத்த ஆதித்தன்,
“நாங்க கிளம்பறோம் மாமா. என்ன அவசரம்ன்னாலும் கூப்பிடுங்க. உடனே வரோம். மனசை தளர விடாதீங்க…” என்றான் அவன்.
“ஓகே ஆதி. உன்னையும் எல்லாரையும் சிரமப்படுத்திட்டேன்…” என சிவநேயன் அவனின் கையை பிடித்துக்கொள்ள,
“ப்ச், அதெல்லாம் எதுவும் இல்லை. என்றவன் நிஷாவும், சசிகலாவும் அபியுடன் வந்து நிற்க,
“ரிஜிஸ்ட்ரேஷன் வேலைகள் இருக்கு மாமா. இல்லைன்னா கூட நிஷாவை கூட ரெண்டுநாள் இருக்க சொல்லிருப்பேன்…” என்றான் ஆதித்தன்.
“புரியுது ஆதி. அப்பறம் பணத்தை நாளைக்கே எடுத்துட்டு வரேன். இன்னைக்கு கொஞ்சம் சங்கட்டமா இருக்கு. குடுக்கும் போது சந்தோஷமா குடுத்தா தானே நல்லா இருக்கும்…” என்றான் சிவநேயன்.
“நீங்க நினைச்சதே எனக்கு சந்தோஷம் தான் மாமா…” என்றவன் கவி கொண்டுவந்த காபியை வாங்கிக்கொண்டான்.
“அப்பறம் இன்னொரு விஷயம், நான் பணத்தை வெளில ஏற்பாடு பண்ணிட்டேன்…” என இலகுவாக சொல்ல சிவநேயன் முகமே விழுந்துவிட்டது.
“என்ன ஆதி?…” என அவன் வருத்தத்துடன் கேட்க,
“இல்லை மாமா. நான் முதல்லையே சொன்னேன். நீங்க தான் வெளில வாங்க வேண்டாம்ன்னு சொன்னீங்க. அதனால சரின்னு சொன்னேன். உங்க பேச்சை தட்ட வேண்டாமேன்னு. ஆனா இதுக்கு மேலையும் வாங்க எனக்கு உடன்பாடு இல்லை…” என்று ஒரே மூச்சில் காபியை குடித்து முடித்தான்.
“என்னம்மா நிஷா? நீயாவது சொல்ல கூடாதா?…” என சிவநேயன் கேட்க,
“நான் சொல்லி தான் செய்யறாங்க ண்ணா. இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உறவுகளுக்குள்ள பணம் தான் பெரிய பிரச்சனையா வந்திருது. இருக்கிற பிரச்சனையே போதும்…” என்றாள் நிஷா.
“ஏன் நிஷா, என் தம்பிக்கு நான் இதை கூட செய்ய கூடாதா?…” என கவி வேகமாய் கேட்க,
“தாராளமா செய்யலாம். ஆனா தைரியமா செய்யனும். நீங்க அங்கிட்டும் பேச்சு வாங்கிட்டு, இங்கிட்டும் செய்யனும்ன்னு நினைக்கறீங்க அண்ணி. உங்களுக்கு வேணா சகிப்பு தன்மை இருக்கலாம். அதுக்காக நாங்களும் சகிச்சுக்க முடியாது இல்லையா?…” என சொல்லிவிட்டாள் அவள்.
“நிஷா…” என்ற ஆதித்தனின் ஒற்றை அழைப்பில் அவள் மௌனமாகி போக,
“உங்களுக்காக தான் நீங்க சங்கடப்படவேண்டாமேன்னு தான் நிஷா உங்ககிட்ட பணத்தை வாங்கிக்க சரின்னு சொல்ல சொன்னா. இப்ப இவ்வளோ தூரம் வந்த பின்னாடி அது நல்லா இருக்காது மாமா. எனக்கும் இஷ்டமில்லை…” என ஆதித்தன் சொல்ல,
“ஹ்ம்ம், புரியுது ஆதி…” என்றான் சிவநேயன்.
“என்னங்க நீங்களாவது சொல்லலாமே?…” என்ற கவியை பார்த்தவன்,
“நிஷா சொல்றதுல எந்த தப்பும் இல்லை. நீ வாங்கற பேச்சுவார்த்தை உனக்கு மட்டுமில்லை, உன் குடும்பத்துக்கும் சேர்த்து தான். எல்லாத்துக்கும் நீ சரின்னு போனா அவங்களும் போகனும்ன்னு என்ன அவசியம்? இதை விடு. உறவாவது நிலைக்கட்டும்…” என்று சொல்லிவிட்டான் சிவநேயன்.
“அம்புட்டு ரோஷம்ன்னா அப்போ சொத்தை பிரிச்சு குடுத்திட்டு மத்த வேலையை பார்க்க வேண்டியது தானே?…” என கமலா அப்போதும் அடங்காமல் பேச,
“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் சொத்து பிரிக்க முடியாது. எப்போ தரனுமோ அப்போ தான் தருவோம். இதுல நீங்க தலையிடாதீங்க….” என சொல்லிவிட்டான் ஆதித்தன் முகத்தில் அடித்ததை போல.
கவிப்ரியா மனத்தாங்கலுடன் தம்பியை, தம்பி மனைவியை பார்த்தாள். சசிகலாவிடமும் பேச முடியாது.
நிச்சயம் மருமகள் பக்கம் தான் அவர் நிற்பார். தன் வீட்டில் கூட தன் பேச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்ற ஆதங்கத்துடன் அவள் நிற்க,
“சரி கிளம்பறோம்…” என சொல்லிவிட்டு கிளம்பினான் ஆதித்தன்.
அடுத்த பத்து நாளில் அந்த சொத்து தன் குடும்பத்தின் முழு சம்மதத்துடன் நிஷா, அபியின் பெயரில் வாங்கப்பட்டது.